search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "earthqauke"

    • கடந்த சனிக்கிழமை சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது
    • சனிக்கிழமை நிலநடுக்கத்தில் 4 ஆயிரம் உயிரிழப்பு

    ஆப்கானிஸ்தானில் கடந்த சனிக்கிழமை சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இதில் சுமார் 4 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இதில் பெரும்பாலானோர் பெண்கள், குழந்தைகள் ஆவார்கள். மீட்புப்பணி இன்னும் முழுமையாக முடிவடையவில்லை.

    இந்த நிலையில் இன்று மீண்டும் சக்கி வாய்ந்த நிலநடுக்கும் ஏற்பட்டுள்ளது. ரிக்டர் அளவில் 6.1 ஆக பதிவாகியுள்ளது. உள்ளூர் நேரப்படி இன்று காலை 6.11 மணிக்கு நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த தகவலை அந்நாட்டு நில அதிர்வுக்கான தேசிய மையம் தெரிவித்துள்ளது. இன்றைய நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதம் குறித்த தகவல் உடனடியாக வெளியாகவில்லை.

    • நிலநடுக்கத்தால் சேதம் ஏற்பட்டதாக தகவல் ஏதும் இல்லை
    • இந்தோனேசியாவில் சுனாமி அச்சுறுத்தல் இல்லை

    பாகிஸ்தானில் இன்று காலை 5 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக நிலஅதிர்வு தேசிய மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலநடுக்கம் 170 ஆழத்தில் ஏற்பட்டதாகவும் தெரிவித்துள்ளது. இதனால் சேதம் ஏற்பட்டதாக தகவல் ஏதும் கிடைக்கவில்லை எனவும் தெரிவித்துள்ளது.

    அதேவேளையில் இந்தோனேசியாவில் 5.6 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ஜகர்த்தா நேரப்படி நள்ளிரவு 12.13 மணிக்கு (இந்திய நேரப்படி இன்று அதிகாலை 1.48) ஏற்பட்டுள்ளது. தனிம்பார் தீவு மாவட்டத்தின் வடமேற்கில் 207 கி.மீட்டர் தொலைவில் 131 கி.மீ. ஆழத்தில் இந்த நிலநடுக்கும் ஏற்பட்டுள்ளது.

    இதனால் சுனாமி அலை உருவாவதற்கான வாய்ப்புகள் இல்ல எனவும் தெரிவித்துள்ளது.

    • மத்திய ஜாவா மற்றும் கிழக்கு ஜாவாவிலும் வீடுகளும் கட்டிடங்களும் அதிர்ந்தன.
    • சுனாமி ஆபத்து இல்லை என அறிவிப்பு.

    இந்தோனேசியாவின் முக்கிய தீவான ஜாவாவின் சில பகுதிகளில் இன்று சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. யோக்யகர்த்தா மாகாணத்தின் பந்துல் ரீஜென்சியில் உள்ள பாம்பாங்லிபுரோவில் இருந்து தென்மேற்கே 84 கிலோமீட்டர் (52 மைல்) தொலைவில் 86 கிலோமீட்டர் (53.4 மைல்) ஆழத்தில் இந்த நிலநடுக்கம் மையம் கொண்டிருந்ததாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    யோககர்த்தாவின் சிறப்பு மாகாணத்திலும் அதன் அண்டை மாகாணங்களான மத்திய ஜாவா மற்றும் கிழக்கு ஜாவாவிலும் உள்ள வீடுகளும் கட்டிடங்களும் சில நொடிகள் அதிர்ந்ததால் மக்கள் பீதியடைந்தனர்.

    இந்தோனேசியாவின் வானிலை, தட்பவெப்பநிலை மற்றும் புவி இயற்பியல் நிறுவனம் நிலநடுக்கத்தால் சுனாமி ஆபத்து இல்லை என்று தெரிவித்தது.

    ×