search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஆபத்து"

    • மேட்டூர் வழித்தடத்தில் இயங்கும் ஒரு மினி பஸ் உடைந்த படிக்கட்டுகளுடன் இயங்கி வருகிறது.
    • கூட்டம் அதிகமாக இருக்கும் நிலையில் படிக்கட்டுகளில் பயணம் செய்ய வேண்டிய நிலை ஏற்படுகிறது.

    கடையம்:

    பாவூர்சத்திரத்திலிருந்து மேட்டூர் வழித்தடத்தில் இயங்கும் மினி பஸ் ஒன்று பராமரிப்பின்றி, உடைந்த நிலையில் உள்ள படிக்கட்டுகளு டன் ஆபத்தான நிலை யில் இயங்கி வருகிறது. சில மாதங்களாக இந்த நிலையிலே இயங்கி வருவதாக தெரிய வரு கிறது.

    பயணிகளின் கூட்டம் அதிகமாக இருக்கும் நிலையில் படிக்கட்டு களில் நின்றவாறு பயணம் செய்ய வேண்டிய நிலை ஏற்படு கிறது. இதனால் விபத்து ஏற்பட அதிக வாய்ப்புள்ளது. எனவே போக்குவரத்துதுறை அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • அங்கன்வாடி மையத்தில் பயின்று வரும் குழந்தைகள்அருகில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி கட்டிடத்தில் வரண்டாவில் உணவருந்தி வருகின்றனர்.
    • பழைய கட்டிடத்தை இடித்துவிட்டு புதிய அங்கன்வாடி கட்டிடம் கட்டி தர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    பேராவூரணி:

    தஞ்சாவூர் மாவட்டம் சேதுபாவாசத்திரம் அருகே மரக்காவலசை கிராமத்தில் அங்கன்வாடி மையத்தில் 20 குழந்தைகள் பயின்று வருகின்றனர்.

    இந்த அங்கன்வாடி மைய கட்டிடம் மேற்கூரைகள் பெயர்ந்து ஆபத்தான நிலையில் உள்ளது. கட்டிடத்தின் பல இடங்களில் பெயர்ந்து கம்பிகள் வெளியே தெரிகிறது. மழைக்காலங்களில் நீர் கசிவு ஏற்பட்டு தரையில் தண்ணீர் தேங்குகிறது.

    இதனால் இந்த கட்டிடத்தில் படிக்க வரும் குழந்தைகளுக்கு பாதுகாப்பு இல்லாத நிலை உள்ளது.

    தற்போது அங்கன்வாடி மையத்தில் பயின்று வரும் குழந்தைகள்அருகில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலை ப்பள்ளி கட்டிடத்தில் வரண்டாவில் உணவருந்தி வருகின்றனர்.

    மேலும் மழைக்காலங்களில் தங்குவதற்கு இடம் இல்லாமல் அவதிப்பட்டு வருகின்றனர்.

    எனவே உடனடியாக நடவடிக்கை எடுத்து பழைய கட்டிடத்தை இடித்துவிட்டு புதிய அங்கன்வாடி கட்டிடம் கட்டி தர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    அதே கிராமத்தைச் சேர்ந்த பன்னீர்செல்வம் கூறியதா வது, பழைய கட்டிடத்தை இடித்துவிட்டு புதிய அங்க ன்வாடி கட்டிடம் கட்டும் வரை மாற்று இடத்தில் அங்கன்வாடி செயல்பட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.

    • எல்.ஆா்.ஜி. மகளிா் கல்லூரியில் சட்ட விழிப்புணா்வு இணைய வழி குற்றங்களைத் தடுப்பது தொடா்பான சிறப்பு முகாம் நடைபெற்றது
    • இந்த நிகழ்ச்சியில் கல்லூரி முதல்வா் எழிலி வரவேற்றாா்

    திருப்பூர் :

    திருப்பூா் எல்.ஆா்.ஜி. மகளிா் கல்லூரியில்திருப்பூா் மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழு, திருப்பூா் தெற்கு காவல் துறை சாா்பில் சட்ட விழிப்புணா்வு, இணைய வழி குற்றங்களைத் தடுப்பது தொடா்பான சிறப்பு முகாம் நடைபெற்றது.இந்த நிகழ்ச்சியில் கல்லூரி முதல்வா் (பொறுப்பு)

    எழிலி வரவேற்றாா். சிறப்பு விருந்தினராகப் பங்கேற்ற கூடுதல் மாவட்ட உரிமையியல் நீதிபதி ஆதியன் பேசியதாவது:-

    மாணவிகள் அடிப்படை சட்டங்கள் மற்றும் பெண்களுக்கான சட்டங்கள் குறித்து தெரிந்து வைத்திருப்பது அவசியமாகும். மாணவிகளுக்கு விருப்பம் இல்லாத ஒரு செயலை செய்ய மற்றவா்கள் கட்டாயப்படுத்துவதுகூட குற்றம் என்று பகடிவதை சட்டம் சொல்கிறது. மாணவ, மாணவிகள் செல்போன்களையும், இணையதளங்களையும் படிப்பதற்காக மட்டுமே பயன்படுத்த வேண்டும். சமூக வலைதளங்களில் உள்ள ஆபத்துகளை உணராமல் அதற்கு அடிமையாகிவிடக்கூடாது என்றாா்.

    • பயனற்ற இந்த தொட்டியின் மேல் பகுதியில் முழுவதுமாக காங்கிரீட் பெயர்ந்து ஆபத்தான நிலையில் காணப்பட்டது.
    • இந்த தொட்டியின் மைதானத்தில் அப்பகுதி சிறுவர்கள் விளையாடுவது வழக்கம்.

    கன்னியாகுமரி:

    குளச்சல் அருகே ரீத்தாபுரம் பேரூராட்சி 4-வது வார்டு பத்தறை காலனியில் கடந்த 35 வருடங்களுக்கு முன்பு குடிநீர் மேல்நிலைத்தொட்டி கட்டப்பட்டு அப்பகுதி பொதுமக்களுக்கு குடிநீர் வினியோகம் செய்யப்பட்டது. இந்நிலை யில் கடந்த சில வருடங் களுக்கு முன்பு தொட்டி பழுதடைந்தது.

    இதையடுத்து இந்த தொட்டியில் நீர் ஏற்றம் நிறுத்தப்பட்டது. இந்த குடிநீர் தொட்டிக்கு பதில் அருகில் வேறு குடிநீர் தொட்டி கட்டப்பட்டு குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. பயனற்ற இந்த தொட்டியின் மேல் பகுதியில் முழுவதுமாக காங்கிரீட் பெயர்ந்து ஆபத்தான நிலையில் காணப்பட்டது.

    இந்த தொட்டியின் மைதா னத்தில் அப்பகுதி சிறுவர்கள் விளையாடுவது வழக்கம்.இதனால் ஆபத்தான இந்த தொட்டியை இடித்து அகற்ற முன்னாள் கவுன்சிலர் ரவி மாவட்ட கலெக்டரிடம் மனு அளித்தார். மாவட்ட நிர்வாகம் பழுதடைந்த குடிநீர் தொட்டியை இடித்து அகற்ற ரீத்தாபுரம் பேரூராட்சி நிர்வாகத்திற்கு உத்தரவிட்டது.

    இதையடுத்து பேரூராட்சி செயல் அலுவலர் சுருளிவேல் முன்னிலையில் பேரூராட்சி பணியாளர்கள் ஆபத்தான குடிநீர் தொட்டியை ஜே.சி.பி. எந்திரம் மூலம் இடித்து அகற்றினர். அப்பகுதி சிறுவர்கள் மகிழ்ச்சியடைந்தனர்.

    • மேலப்பெருமழை ஊராட்சியில் மின்கம்பிகள் சேதமடைந்து அறுந்து விழுந்தன.
    • கஜா புயலுக்கு பிறகு பாதிக்கப்பட்ட மின்கம்பிகளையும் போஸ்ட் மரங்களையும் மாற்ற வேண்டும்.

    திருத்துறைப்பூண்டி:

    திருத்துறைப்பூண்டி தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் துணை மின் நிலையத்துக்கு மேலப்பெருமழை ஊராட்சி மன்றத் தலைவர் ஜி.முருகானந்தம் மனு அளித்தார்.

    அதில் கூறியிருப்ப தாவது;-

    திருத்துறைப்பூண்டி தாலுக்கா மேலப்பெருமழை ஊராட்சியில் மின்கம்பிகள் சேதமடைந்து அறுந்து விழுந்தன.

    கஜா புயலுக்கு பிறகு பாதிக்கப்பட்ட மின்கம்பிகளையும் போஸ்ட் மரங்கள் மாற்ற வேண்டும் என்று திருத்துறைப்பூண்டி மின் வாரியத்தில் 2021 ஆம் ஆண்டு கோரிக்கை மனு அளித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

    மேலப்பெருமழை ஊராட்சி முழுவதும் மின் கம்பிகளும் போஸ்ட் மரங்கள் 25-க்கு மேல் மின் கம்பிகள் 9420 மீட்டர் கம்பிகள் பழுதடைந்துள்ளது.

    அந்த கம்பிகளை மாற்ற வேண்டும் .

    அப்படி செய்தால் மட்டுமே எந்த உயிர் சேதமும் ஏற்படுவதை தவிர்க்கலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • ஆலத்தூரில் இருந்து உயரழுத்த மற்றும் தாழ்வழுத்த மின்வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.
    • எந்நேரத்திலும் மின்கம்பம் சாய்ந்து விழுந்து விபத்துக்குள்ளாகும் நிலை உள்ளது.

    நாகப்பட்டினம்:

    நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியம் ஆலத்தூர் ஊராட்சி அம்பேத்கர் நகர் பகுதியில் 100-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். மேற்கண்ட பகுதிகளுக்கு ஆலத்தூரில் இருந்து உயரழுத்த மற்றும் தாழ்வழுத்த மின்வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.மேலும் மின்கம்பங்கள் குடிசை பகுதிகளுக்கு நடுவில் அமைக்கப்பட்டுள்ளது.

    இந்த நிலையில் அம்பேத்கர் நகரில் உள்ள மின்கம்பம் ஒன்று சிமெண்ட் காரைகள் பெயர்ந்து சேதம் அடைந்துள்ளது. இதனால் எந்நேரத்திலும் மின்கம்பம் சாய்ந்து விழுந்து விபத்துக்குள்ளாகும் நிலை உள்ளது. இதனால் அப்பகுதியில் வசிக்கும் மக்கள் அச்சம் தெரிவிக்கின்றனர்

    இது குறித்து சம்பந்தப்பட்ட மின்வாரியத்துறை அதிகாரிகளிடம் பலமுறை புகார் அளித்தும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என மக்கள் தெரிவித்தனர். எனவே உயிரிழப்பு ஏற்படும் முன் ஆபத்தான நிலையில் உள்ள மின்கம்பத்தை மாற்றி அமைக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • மின் கம்பத்தில் அடிப்பகுதியில் இருந்து மேல்பகுதி வரை உள்ள அனைத்து சிமெண்டுகளும் உடைந்து விழுந்து விட்டது.
    • வேகமாக காற்றுவீசும் போதுஇந்த மின்கம்பம் அங்கும் இங்கும் அசைகிறது.

    உடன்குடி:

    உடன்குடிஅருகே உள்ள கந்தபுரம் மேலத் தெருவில்உடையார் சுவாமி கோவில் செல்லும் வழியில் ஒரு மின்கம்பம் மிகவும் ஆபத்தான நிலைமையில் உள்ளது. அடிப்பகுதியில் இருந்து மேல்பகுதி வரை உள்ள அனைத்து சிமெண்டுகளும் உடைந்து விழுந்து விட்டது. மின் கம்பத்தில்உள்ளே உள்ள இரும்புகம்பிகள் எல்லாம் துருப்பிடித்த நிலையில் உள்ளது.

    வேகமாக காற்றுவீசும் போதுஇந்த மின்கம்பம் அங்கும் இங்கும் அசைகிறது. ஆபத்தான நிலையில் உள்ள இந்த மின்கம்பத்தை உடனடியாக மாற்ற வேண்டும் என இப்பகுதி மக்கள் கூறுகின்றனர்.

    • செல்லூர்-பந்தல்குடி சாலையில் ஆபத்தை ஏற்படுத்தும் பாதாள சாக்கடையால் பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.
    • நிரந்தர தீர்வுகாண வேண்டும் என்று பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் கோரிக்கை விடுத்தனர்.

    மதுரை

    மதுரை மாநகராட்சி 26-வது வார்டு செல்லூர்- பந்தல்குடி சாலையில் இருந்து நரிமேடு செல்லும் சாலையில் நீண்ட நாட்களாக திறந்த நிலையில் பாதாள சாக்கடை உள்ளது.

    அதிக வாகனங்கள் மற்றும் பள்ளிக்கு குழந்தை கள் செல்லும் சாலையில் திறந்த நிலையில் பாதாள சாக்கடை இருப்பது ஆபத்தை ஏற்படுத்தும்.

    தொடர்ந்து மழை பெய்து வருவதால் அப்பகுதி சாலைகள் மோசமாக இருப்பதால் சாலையில் தண்ணீர் தேங்கி விடுவதால் பாதாள சாக்கடை இருப்பது தெரியாது.

    மாநகராட்சியில் இருந்து அதில் தடுப்பு அமைக்கப்பட்டாலும் வாகனம் செல்ல வழியின்றி யாராவது அதை நகர்த்தி விட்டால் பாதசாரிகள் அல்லது பள்ளி மாணவர்கள் பாதாள சாக்கடையில் விழும் நிலை உள்ளது

    மாநகராட்சி நிர்வாகம் பாதாள சாக்கடை மூடி அமைப்பதற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்த பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.

    அரசரடியில் இருந்து காளவாசல் செல்லும் வழியில் எஸ்.எஸ்.காலனி வடக்கு வாசல் மெயின் ரோட்டில் சில நாட்களாக குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் வீணாகிறது.

    இந்த பகுதியில் சில வாரங்களுக்கு முன்புதான் அந்த தண்ணீர் குழாயில் ஏற்பட்ட உடைப்பை சரி செய்தனர். இதனால் 2 நாட்கள் போக்குவரத்து மாற்றி விடப்பட்டது. அதே இடத்தில் மீண்டும் உடைப்பு ஏற்பட்டு ஒரு வாரத்திற்கும் மேலாக தண்ணீர் வீணாகிறது.

    இதை மாநகராட்சி நிர்வாகம் சரி செய்து பெரிய அளவில் உடைப்பு ஏற்படும் முன்பு நிரந்தர தீர்வுகாண வேண்டும் என்று பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் கோரிக்கை விடுத்தனர்.

    • ஆபத்தில் சிக்கியுள்ளவர்களை எவ்வாறு காப்பாற்றுவது போன்ற பல்வேறு பாதுகாப்பு விழிப்புணர்வு ஒத்திகை மாணவர்களுக்கு செய்து விளக்கம் அளித்தனர்.
    • நிகழ்ச்சியில் பள்ளி தலைமை ஆசிரியர் அறிவுடைநம்பி அனைவரையும் வரவேற்றார்.

    சீர்காழி:

    மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி சபாநாயக முதலியார் இந்து மேல்நிலைப்பள்ளியில் மாணவ- மாணவிகளுக்கு தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் பாதுகாப்பு ஒத்திகை நிகழ்வு நடத்தினர்.

    அரக்கோணம் நான்காவது பட்டாலியனை சேர்ந்த தேசிய பேரிடர் மீட்பு குழுவைச் சேர்ந்த 20-க்கும் மேற்பட்ட வீரர்கள், குழு கமாண்டர் ராஜேஷ்குமார் மீனா, ராஜன் தலைமையில் பேரிடர் காலங்களில் எவ்வாறு தங்களை தாங்களே காத்துக் கொள்வது, ஆபத்தில் சிக்கியுள்ள மற்றவர்களை எவ்வாறு காப்பாற்றுவது போன்று பல்வேறு பாதுகாப்பு விழிப்புணர்வு ஒத்திகையை மாணவ-மாணவிகளுக்கு செய்து விளக்கம் அளித்தனர்.

    நகர மன்ற தலைவர் துர்கா பரமேஸ்வரி, அலுவலர் சுகுமாரன், பள்ளி உதவி தலைமை ஆசிரியர்கள் என்.துளசி ரங்கன், ஏ.வரதராஜன், வருவாய் ஆய்வாளர் சுகன்யா, சீர்காழி கிராம நிர்வாக அலுவலர் ஆனந்தன், சீர்காழி நகராட்சி மேல்நிலைப் பள்ளி ஆசிரியர்கள் நடேசன், ஜோதி, சாந்தி மற்றும் பலர் கலந்து கொண்டனர். முன்னதாக பள்ளி தலைமை ஆசிரியர் அறிவுடை நம்பி வரவேற்றார். உதவி தலைமை ஆசிரியர் முரளிதரன் தொகுத்து வழங்கினார்.

    • மக்கும் குப்பை மக்காத குப்பை குறித்த விழிப்புணர்வுகளை கலைக்குழுவினர் செய்து காண்பித்தனர்.
    • மக்காத குப்பையால் ஏற்படும் ஆபத்துகள் குறித்து எமன் வேடம் அணிந்த ஒருவர் செயல் விளக்கம் செய்து காண்பித்தார்.

    சீர்காழி:

    சீர்காழி நகராட்சி வளாகத்தில் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின் கீழ் மக்கும் குப்பை மக்காத குப்பை குறித்த கலை நிகழ்ச்சி நடைபெற்றது. நகர மன்ற தலைவர் துர்கா பரமேஸ்வரி ராஜசேகர் தலைமை வகித்தார். நகராட்சி ஆணையர் (பொ) ராஜகோபாலன், நகர் மன்றத் துணைத் தலைவர் சுப்பராயன், மேலாளர் காதர்கான், நகர்மன்ற உறுப்பினர்கள் முபாரக், பாஸ்கரன், ஜெயந்திபாபு, கஸ்தூரிபாய் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    இதில் மக்கும் குப்பை மக்காத குப்பை குறித்த விழிப்புணர்வுகளை கலைக்குழுவினர் செய்து காண்பித்தனர். மேலும் மக்காத குப்பையால் ஏற்படும் ஆபத்துகள் குறித்து எமன் வேடம் அணிந்த ஒருவர் செயல் விளக்கம் செய்து காண்பித்தார். முன்னதாக நகர்மன்றத் தலைவர் துர்கா ராஜசேகரன் சிறப்புரையாற்றினார். இதில் நகராட்சி பணியாளர்கள், மகளிர் குழுவினர், தூய்மை பணியாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    • அருப்புக்கோட்டையில் ஆபத்தான நிலையில் இயங்கும் அங்கன்வாடி மையங்கள் செயல்பட்டு வருகிறது.
    • டிரான்ஸ்பார்மர் அருகிலேயே அங்கன்வாடி மையம் உள்ளது.

    அருப்புக்கோட்டை

    விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் 5 வயதுக்கும் குறைவாக உள்ள குழந்தைகள் படிப்பதற்காக நகர் பகுதிகளில் 20-க்கும் மேற்பட்ட அங்கன்வாடி மையங்கள் இயங்கி வருகின்றன.

    சின்ன புளியம்பட்டி, காந்தி மைதானம், சின்னக்கடை தெரு போன்ற பகுதிகளில் இயங்கி வரும் அங்கன்வாடி மையங்களில் சுகாதாரமான காற்றோட்ட வசதி கட்டிடம் கிடையாது. டிரான்ஸ்பார்மர் அருகிலேயே அங்கன்வாடி மையம் உள்ளது இதனால் குழந்தைகள் வெளியில் விளையாட முடியாமல் ஆபத்தான சூழல் உள்ளது.

    குழந்தைகளுக்கு சரியான முறையில் கழிப்பறை வசதி இல்லை என பொதுமக்கள் மற்றும் பெற்றோர் புகார் தெரிவித்தனர். சில அங்கன்வாடி மைய கட்டிடம் விரிசல் அடைந்து சேதமடைந்துள்ளது. சிறு குழந்தைகள் நல்ல காற்றோட்ட வசதியுடன் கூடிய கட்டிடத்தில் படிக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்தனர்.

    ×