search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பேரிடர் காலங்களில் காத்துக் கொள்வது குறித்த விழிப்புணர்வு ஒத்திகை
    X

    பேரிடர் மீட்பு குழுவினரின் பாதுகாப்பு ஒத்திகை நிகழ்வு நடந்தது.

    பேரிடர் காலங்களில் காத்துக் கொள்வது குறித்த விழிப்புணர்வு ஒத்திகை

    • ஆபத்தில் சிக்கியுள்ளவர்களை எவ்வாறு காப்பாற்றுவது போன்ற பல்வேறு பாதுகாப்பு விழிப்புணர்வு ஒத்திகை மாணவர்களுக்கு செய்து விளக்கம் அளித்தனர்.
    • நிகழ்ச்சியில் பள்ளி தலைமை ஆசிரியர் அறிவுடைநம்பி அனைவரையும் வரவேற்றார்.

    சீர்காழி:

    மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி சபாநாயக முதலியார் இந்து மேல்நிலைப்பள்ளியில் மாணவ- மாணவிகளுக்கு தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் பாதுகாப்பு ஒத்திகை நிகழ்வு நடத்தினர்.

    அரக்கோணம் நான்காவது பட்டாலியனை சேர்ந்த தேசிய பேரிடர் மீட்பு குழுவைச் சேர்ந்த 20-க்கும் மேற்பட்ட வீரர்கள், குழு கமாண்டர் ராஜேஷ்குமார் மீனா, ராஜன் தலைமையில் பேரிடர் காலங்களில் எவ்வாறு தங்களை தாங்களே காத்துக் கொள்வது, ஆபத்தில் சிக்கியுள்ள மற்றவர்களை எவ்வாறு காப்பாற்றுவது போன்று பல்வேறு பாதுகாப்பு விழிப்புணர்வு ஒத்திகையை மாணவ-மாணவிகளுக்கு செய்து விளக்கம் அளித்தனர்.

    நகர மன்ற தலைவர் துர்கா பரமேஸ்வரி, அலுவலர் சுகுமாரன், பள்ளி உதவி தலைமை ஆசிரியர்கள் என்.துளசி ரங்கன், ஏ.வரதராஜன், வருவாய் ஆய்வாளர் சுகன்யா, சீர்காழி கிராம நிர்வாக அலுவலர் ஆனந்தன், சீர்காழி நகராட்சி மேல்நிலைப் பள்ளி ஆசிரியர்கள் நடேசன், ஜோதி, சாந்தி மற்றும் பலர் கலந்து கொண்டனர். முன்னதாக பள்ளி தலைமை ஆசிரியர் அறிவுடை நம்பி வரவேற்றார். உதவி தலைமை ஆசிரியர் முரளிதரன் தொகுத்து வழங்கினார்.

    Next Story
    ×