search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ரீத்தாபுரம்"

    • பயனற்ற இந்த தொட்டியின் மேல் பகுதியில் முழுவதுமாக காங்கிரீட் பெயர்ந்து ஆபத்தான நிலையில் காணப்பட்டது.
    • இந்த தொட்டியின் மைதானத்தில் அப்பகுதி சிறுவர்கள் விளையாடுவது வழக்கம்.

    கன்னியாகுமரி:

    குளச்சல் அருகே ரீத்தாபுரம் பேரூராட்சி 4-வது வார்டு பத்தறை காலனியில் கடந்த 35 வருடங்களுக்கு முன்பு குடிநீர் மேல்நிலைத்தொட்டி கட்டப்பட்டு அப்பகுதி பொதுமக்களுக்கு குடிநீர் வினியோகம் செய்யப்பட்டது. இந்நிலை யில் கடந்த சில வருடங் களுக்கு முன்பு தொட்டி பழுதடைந்தது.

    இதையடுத்து இந்த தொட்டியில் நீர் ஏற்றம் நிறுத்தப்பட்டது. இந்த குடிநீர் தொட்டிக்கு பதில் அருகில் வேறு குடிநீர் தொட்டி கட்டப்பட்டு குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. பயனற்ற இந்த தொட்டியின் மேல் பகுதியில் முழுவதுமாக காங்கிரீட் பெயர்ந்து ஆபத்தான நிலையில் காணப்பட்டது.

    இந்த தொட்டியின் மைதா னத்தில் அப்பகுதி சிறுவர்கள் விளையாடுவது வழக்கம்.இதனால் ஆபத்தான இந்த தொட்டியை இடித்து அகற்ற முன்னாள் கவுன்சிலர் ரவி மாவட்ட கலெக்டரிடம் மனு அளித்தார். மாவட்ட நிர்வாகம் பழுதடைந்த குடிநீர் தொட்டியை இடித்து அகற்ற ரீத்தாபுரம் பேரூராட்சி நிர்வாகத்திற்கு உத்தரவிட்டது.

    இதையடுத்து பேரூராட்சி செயல் அலுவலர் சுருளிவேல் முன்னிலையில் பேரூராட்சி பணியாளர்கள் ஆபத்தான குடிநீர் தொட்டியை ஜே.சி.பி. எந்திரம் மூலம் இடித்து அகற்றினர். அப்பகுதி சிறுவர்கள் மகிழ்ச்சியடைந்தனர்.

    ×