என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
விழிப்புணர்வு கலை நிகழ்ச்சி
- மக்கும் குப்பை மக்காத குப்பை குறித்த விழிப்புணர்வுகளை கலைக்குழுவினர் செய்து காண்பித்தனர்.
- மக்காத குப்பையால் ஏற்படும் ஆபத்துகள் குறித்து எமன் வேடம் அணிந்த ஒருவர் செயல் விளக்கம் செய்து காண்பித்தார்.
சீர்காழி:
சீர்காழி நகராட்சி வளாகத்தில் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின் கீழ் மக்கும் குப்பை மக்காத குப்பை குறித்த கலை நிகழ்ச்சி நடைபெற்றது. நகர மன்ற தலைவர் துர்கா பரமேஸ்வரி ராஜசேகர் தலைமை வகித்தார். நகராட்சி ஆணையர் (பொ) ராஜகோபாலன், நகர் மன்றத் துணைத் தலைவர் சுப்பராயன், மேலாளர் காதர்கான், நகர்மன்ற உறுப்பினர்கள் முபாரக், பாஸ்கரன், ஜெயந்திபாபு, கஸ்தூரிபாய் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இதில் மக்கும் குப்பை மக்காத குப்பை குறித்த விழிப்புணர்வுகளை கலைக்குழுவினர் செய்து காண்பித்தனர். மேலும் மக்காத குப்பையால் ஏற்படும் ஆபத்துகள் குறித்து எமன் வேடம் அணிந்த ஒருவர் செயல் விளக்கம் செய்து காண்பித்தார். முன்னதாக நகர்மன்றத் தலைவர் துர்கா ராஜசேகரன் சிறப்புரையாற்றினார். இதில் நகராட்சி பணியாளர்கள், மகளிர் குழுவினர், தூய்மை பணியாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்