search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அவினாசிலிங்கேசுவரர் கோவில்"

    • நேற்று முன்தினம் பெரிய தேர் வடம் பிடித்து இழுக்கப்பட்டது.
    • இன்று காலை அம்மன் தேட்ரோட்டம் நடைபெற்றது.

    அவினாசி:

    திருப்பூர் மாவட்டம் அவினாசியில் புகழ்பெற்ற கருணாம்பிகை உடனமர் அவினாசிலிங்கேசுவரர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் சித்திரை மாதம் தேர்த்திருவிழா நடைபெறும். அதேபோல் இந்த ஆண்டும் கடந்த 14-ந்தேதி கொடியேற்றத்துடன் தேர்த்திருவிழா தொடங்கியது.

    நேற்று முன்தினம் பெரிய தேர் வடம் பிடித்து இழுக்கப்பட்டது. பின்னர் அந்த தேர் வடக்கு ரத வீதி சந்திப்பில் நிறுத்தப்பட்டது.

    இதையடுத்து நேற்று 2-வது நாள் தேரோட்டம் நடந்தது. காலை 10 மணி அளவில் மீண்டும் திருத்தேர் வடம் பிடித்து இழுக்கப்பட்டு வடக்கு ரத வீதி, கிழக்குரத வீதி, கடைவீதி வழியாக மதியம் 2 மணி அளவில் நிலைக்கு வந்து சேர்ந்தது. அப்போது பக்தர்கள் கைதட்டி ஆரவாரம் செய்தனர். இதையடுத்து பக்தர்கள் ரதத்தின் மீது ஏறி சென்று சாமி தரிசனம் செய்தனர்.

    இன்று (செவ்வாய்க்கிழமை) காலை அம்மன் தேட்ரோட்டம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வடம் பிடித்து இழுத்தனர். முன்னதாக கருணாம்பிகை அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. மேலும் சிறிய தேர் வடம் பிடித்து நான்கு ரத வீதி வழியாக வலம் வந்து நிலையை அடைகிறது. இரவு 10 மணிக்கு வண்டித்தாரை நிகழ்ச்சி நடக்கிறது.

    நாளை (புதன்கிழமை) பரிவேட்டையும், 25-ந்தேதி தெப்பத்தேர் விழாவும், 26-ந்தேதி நடராஜ பெருமாள் மகா தரிசனம் நடக்கிறது. 27-ந்தேதி மஞ்சள் நீர் விழாவுடன் தேர்த்திருவிழா நிறைவுபெறுகிறது.

    • காசிக்கு நிகரான சிறப்பும் பெற்றது அவினாசிலிங்கேசுவரர் கோவில்.
    • காலை 10 மணிக்கு தேரோட்டம் தொடங்கியது.

    அவினாசி:

    கொங்கு ஏழு சிவாலயங்களில் முதன்மை பெற்றதும், காசிக்கு நிகரான சிறப்பும் பெற்ற திருப்பூர் மாவட்டம் அவினாசி அவினாசிலிங்கேசுவரர் கோவிலில் சித்திரை தேர் திருவிழா கடந்த 14-ந்தேதி கொடியேற்ற நிகழ்ச்சியுடன் தொடங்கியது.

    திருவிழாவையொட்டி 18-ந்தேதி இரவு பஞ்சமூர்த்திகள் 63 நாயன்மார்களுக்கு காட்சியளித்தனர். 19-ந்தேதி இரவு கற்பக விருட்சம் திருக்கல்யாணம் நடந்தது. 20-ந்தேதி காலை 6 மணிக்கு பூரம் நட்சத்திரத்தில் பஞ்ச மூர்த்திகளும் பெருமாளும் திருத்தேருக்கு எழுந்தருளும் வைபவம் நடைபெற்றது.

    இதைத்தொடர்ந்து நேற்று காலை 9.30 மணி அளவில் தேரில் இருந்து அருள்பாலித்த உற்சவமூர்த்திகளுக்கு சிறப்பு வழிபாடுகள் மற்றும் தீபாராதனைகள் நடந்தது. பின்னர் அதிர்வேட்டுகள் முழங்க காலை 10 மணிக்கு தேரோட்டம் தொடங்கியது.

    அப்போது அங்கு கூடியிருந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் பக்தி பரவசத்துடன் சிவ... சிவா... என்ற பக்திகோஷத்துடன் தேரை வடம் பிடித்து இழுத்தனர். பின்னர் தேர் நிலையிலிருந்து சிறிது தூரம் இழுத்து வடக்கு வீதி சந்திப்பில் நிறுத்தப்பட்டது.

    மீண்டும் இன்று (திங்கட்கிழமை) காலை 2-வது நாள் தேரோட்டம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர். பின்பு தேர் மாலையில் நிலை வந்து சேர உள்ளது. நாளை (செவ்வாய்க்கிழமை) சிறிய அம்மன் தேர் இழுக்கப்படுகிறது.

    • பஞ்ச மூர்த்திகளும் பெருமாளும் திருத்தேருக்கு எழுந்தருளும் வைபவம்.
    • ஆயிரக்கணக்கான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர்.

    அவினாசி:

    கொங்கு ஏழு சிவாலயங்களில் முதன்மை பெற்றதும், காசிக்கு நிகரான சிறப்பும் பெற்ற திருப்பூர் மாவட்டம் அவினாசி அவினாசிலிங்கேசுவரர் கோவிலில் ஆண்டு தோறும் சித்திரை மாதம் தேர் திருவிழா நடைபெறும்.

    அதேபோல் இந்த ஆண்டும் கடந்த 14-ந்தேதி கொடியேற்ற நிகழ்ச்சியுடன் தேர் திருவிழா தொடங்கியது. திருவிழாவையொட்டி 18-ந்தேதி இரவு பஞ்சமூர்த்திகள் 63 நாயன்மார்களுக்கு காட்சியளித்தனர். இதில் விநாயகர் பெருமான் மூசிக வாகனத்திலும், சோமஸ்கந்தர் ரிஷப வாகனத்திலும், கருணாம்பிகை அம்மன் காமதேனு வாகனத்திலும், சுப்பிரமணியர் மயில்வாகனத்திலும், பூமி நீளாதேவி கரி வரதராஜ பெருமாள் கருட வாகனத்திலும் எழுந்தருளினர்.

     நேற்று முன்தினம் இரவு கற்பக விருட்சம் திருக்கல்யாணம் நடந்தது. நேற்று காலை 6 மணிக்கு பூரம் நட்சத்திரத்தில் பஞ்ச மூர்த்திகளும் பெருமாளும் திருத்தேருக்கு எழுந்தருளும் வைபவம் நடைபெற்றது. இதையடுத்து தேரில் எழுந்தருளிய சுவாமியை பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று தரிசனம் செய்தனர்.

    இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை 9 மணி அளவில் சிகர நிகழ்ச்சியான பெரிய தேரோட்டம் நடைபெற்றது.சிவாச்சார்யர்கள், ஆன்மீக பெருமக்கள், பக்தர்கள் `அவிநாசியப்பா', `அரோகரா', `நமசிவாயா', சிவ... சிவ... என பக்தி கோஷமிட, சிவனடியார்கள் கைலாய வாத்தியம் முழங்க திருத்தேர் வடம் பிடித்து இழுக்கப்பட்டது. திருத்தேரில் சோமஸ்கந்தர்- உமாமகேஸ்வரி சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.

    திருப்பூர் மாவட்டம் மட்டுமின்றி கோவை, ஈரோடு உள்பட தமிழகத்தின் பல்வேறு இடங்களில் இருந்து வந்திருந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர்.

    கோவில் முகப்பில் இருந்து புறப்பட்ட தேரானது சிறிது தொலைவு இழுத்து செல்லப்பட்டு வடக்கு ரத வீதியில் நிலை நிறுத்தப்படுகிறது. தேரின் 2 பின் சக்கரங்களிலும் ராயம்பாளையம் மற்றும் புதுப்பாளையம் சன்னை மிராசுகள் சன்னை போட்டு தேரை நகர்த்தி கொடுத்தனர்.

    நாளை 22-ந் தேதி மீண்டும் காலை 9 மணிக்கு திருத்தேர் வடம் பிடித்து மாலை 4 மணி அளவில் நிலை வந்து சேர உள்ளது. 23-ந் தேதி அம்மன் தேரோட்டம் நடக்கிறது. 24-ந் தேதி மாலை வண்டித்தாரை, பரிவேட்டையும் 25-ந் தேதி தெப்ப தேர் உற்சவமும் நடக்கிறது. 26-ந் தேதி மகா தரிசன விழாவும், 27-ந் தேதி மஞ்சள் நீர் விழாவும் நடக்கிறது.

    அவினாசிலிங்கேஸ்வரர் கோவில் தேரோட்டம் கோவில் முகப்பில் உள்ள தேர் நிலையில் தொடங்கி ரத வீதிகள் வழியாக மீண்டும் நிலை வந்து சேரும் வகையில் இன்று முதல் 3 நாட்கள் நடத்தப்படுகிறது. 92 அடி உயரம், 400 டன் எடை கொண்ட இந்த தேர் திருவாரூர் மற்றும் ஸ்ரீவில்லிபுத்தூர் தேருக்கு அடுத்த படியாக தமிழகத்தின் 3-வது பெரிய தேர் ஆகும். எனவே தேரோட்டத்தில் கூட்ட நெரிசலை சமாளிக்க போலீசார் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

    முக்கிய இடங்களில் போக்கு வரத்து மாற்றம் செய்யப்பட்டு உள்ளது. மேலும் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. வெயிலின் தாக்கத்தால் ரத வீதிகளில் ஆங்காங்கே நீர்-மோர் வழங்கப்பட்டது.

    • காசிக்கு நிகரான கோவில் என்ற சிறப்பு பெற்றதாக விளங்குகிறது.
    • பஞ்சமுக 63 நாயன்மார்களுக்கு காட்சியளித்தல் வைபவம் நடந்தது.

    அவினாசி:

    திருப்பூர் மாவட்டம் அவினாசியில் உள்ள கருணாம்பிகை உடனமர் அவினாசி லிங்கேசுவரர் கோவில் கொங்கு ஏழு சிவாலயங்களில் முதன்மை பெற்றதாகவும், காசிக்கு நிகரான கோவில் என்ற சிறப்பு பெற்றதாக விளங்குகிறது. இக்கோவிலில் ஆண்டுதோறும் சித்திரை மாதம் தேர் திருவிழா நடைபெறும்.

    அதேபோல் இந்த ஆண்டும் கடந்த 14-ந்தேதி கொடியேற்ற நிகழ்சியுடன் தேர் திருவிழா தொடங்கியது. அதை தொடர்ந்து சூரிய சந்திர மண்டல காட்சிகள், பூதவாகனம், அன்னவாகனம், அதிகார நந்தி, கிளிவாகன காட்சிகள், புஷ்ப விமானம் கைலாச வாகன காட்சிகள் நடந்தன.

    நேற்று இரவு 10 மணியளவில் பஞ்சமுக 63 நாயன்மார்களுக்கு காட்சியளித்தல் வைபவம் நடந்தது. இதில் விநாயக பெருமான் மூசிக வாகனத்திலும், சோமஸ்கந்தர் ரிஷப வாகனத்திலும், கருணாம்பிகை அம்மன் காமதேனு வாகனத்திலும், சுப்பிரமணியர் மயில்வாகனத்திலும், பூமி நீளாதேவி கரி வரதராஜ பெருமாள் கருட வாகனத்திலும் எழுந்தருளி 63 நாயன்மார்களுக்கு காட்சி தந்த வைபவம் நடந்தது.

    அப்போது வானவேடிக்கை, அதிர் வேட்டுகள் முழங்க சிவகண பூத வாத்திய இசைக்கப்பட்டது. கோவிலில் இருந்து பஞ்சமூர்த்திகள் புறப்பட்டு கடைவீதி, மேற்குரத வீதி, வடக்கு வீதி கிழக்கு ரத வீதியாக வலம் வந்து பக்தர்களுக்கு காட்சி அளித்தார். இதில் திரளான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.

    சுவாமி திரு வீதி உலா வரும் வீதிகளில் வழி நெடுகிலும் மாவிலை தோரணங்கள் கட்டப்பட்டிருந்தன. இன்று (வெள்ளிக்கிழமை) இரவு கற்பக விருட்சம் திருக்கல்யாணம் காட்சிகள் நடக்கிறது. நாளை (சனிக்கிழமை) காலை 6 மணிக்கு பூரம் நட்சத்திரத்தில் பஞ்ச மூர்த்திகளும் பெருமாளும் திருத்தேருக்கு எழுந்தருளல் வைபவம் நடக்கிறது.

    21-ந் தேதி காலை 9 மணி அளவில் திருத்தேர் வடம் பிடித்து இழுக்கப்பட்டு சிறிது தொலைவு சென்றவுடன் நிறுத்தப்படுகிறது.

    22-ந் தேதி மீண்டும் காலை 9 மணிக்கு திருத்தேர் வடம் பிடித்து மாலை 4 மணி அளவில் நிலை வந்து சேர உள்ளது. 23-ந் தேதி அம்மன் தேர் இழுக்கப்படுகிறது. 24-ந் தேதி அன்று மாலை வண்டித்தாரை, பரிவேட்டையும், 25-ந் தேதிதெப்ப தேர் நிகழ்ச்சி நடக்கிறது.

    26-ந் தேதி மகா தரிசனம், 27-ந் தேதி மஞ்சள் நீர் விழாவும் நடக்கிறது. விழா ஏற்பாடுகளை அறங்காவலர் குழுவினர் மற்றும் கோவில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.

    • அவினாசியில் லிங்கேசுவரர் கோவில் உள்ளது.
    • வருகிற 2-ந்தேதி கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது.

    அவினாசி:

    திருப்பூர் மாவட்டம் அவினாசியில் கருணாம்பிகை உடனமர் அவினாசிலிங்கேசுவரர் கோவில் உள்ளது. இக்கோவில் கும்பாபிஷேகம் அடுத்த மாதம் (பிப்ரவரி) 2-ந் தேதி நடைபெற உள்ளது. அதற்காக கடந்த 6 மாதங்களாக கோவில் திருப்பணிகள் நடந்து வருகிறது.

    பணிகள் முடிவடைந்த நிலையில் வருகிற 2-ந்தேதி காலை 9.30 மணி முதல் 10.30 மணிக்குள் கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது.

    இதையொட்டி கும்பாபிஷேக விழா இன்று காலை மூத்தபிள்ளையார் வழிபாடு நிகழ்ச்சியுடன் தொடங்கியது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபட்டனர். மாலை 6 மணிக்கு நிலத்தேவர் வழிபாடு நடக்கிறது.

    29-ந் தேதி காலை 9 மணிக்கு வேள்விச்சாலை அழகு பெறச்செய்தல், மாலை 6 மணிக்கு திருக்குடங்களில் திருவருள் சக்திகளை ஏற்றி வைத்தல், 7 மணிக்கு திருக்குடங்கள் வேள்விச்சாலை எழுந்தருளல் மற்றும் முதல் கால வேள்வி பூஜை நடைபெறுகிறது.

    இரவு 9 மணிக்கு பேரொளி வழிபாடு மலர் போற்றுதல் ஆகியவையும் 30-ந் தேதி காலை 9 மணிக்கு இரண்டாம் கால வேள்வி பூஜையும், 10 மணிக்கு பரிவார தெய்வங்களுக்கு எண் வகை மருந்து சாத்துதல் நிகழ்ச்சியும், மாலை 6 மணிக்கு மூன்றாம் கால வேள்வி பூஜை மற்றும் அருட் பிரசாதம் வழங்குதல் நிகழ்ச்சி நடக்கிறது.

    31-ந் தேதி காலை 6 மணிக்கு 4-ம்கால பூஜையும், 10 மணிக்கு சாமிக்கு மருந்து சாத்துதல் நிகழ்ச்சியும் நடக்கிறது. அன்று மாலை 6 மணிக்கு 5-ம் கால வேள்வி பூஜையும், பிப்ரவரி மாதம் 1-ந் தேதி காலை 6 மணிக்கு 6-ம்கால வேள்வி பூஜையும், காலை 9 மணி முதல் 10.15 மணிக்கு அவினாசி அப்பர் துணை நிற்கும் தெய்வங்களுக்கு திருக்குட நன்னீராட்டு நிகழ்ச்சி நடக்கிறது. மாலை 6 மணி முதல் 9 மணிக்குள் 7-ம் கால பூஜையும் நடக்கிறது.

    2-ந்தேதி காலை 6 மணிக்கு 8-ம் கால பூஜையும், 8 மணிக்கு திருக்குடங்கள் ஞான உலா நிகழ்ச்சியும் நடக்கிறது. காலை 9.15 மணி முதல் 10.15 மணிக்கு கும்பாபிஷேகம் நடக்கிறது. மாலை 6 மணிக்கு திருக்கல்யாணமும், இரவு 8 மணிக்கு அவினாசியப்பருக்கும் ஐம்பெரும் தெய்வங்களுக்கும் திருவீதி உலா நடக்கிறது.

    • சித்திரை மாதம் தேர்த்திருவிழா வெகு விமரிசையாக நடைபெறும்.
    • 25-ந் தேதி கொடியேற்றத்துடன் தேர்த்திருவிழா தொடங்கியது.

     அவினாசி : 

    திருப்பூர் மாவட்டம் அவினாசியில் கொங்கு ஏழு சிவாலயங்களில் முதன்மை பெற்றதும், முதலை விழுங்கிய பாலகனை சுந்தரர்பதிகம்பாடி உயிருடன் மீட்டது போன்ற பல சிறப்புகள் பெற்றதாக அவினாசிலிங்கேசுவரர் கோவில் உள்ளது. இங்கு ஆண்டுதோறும் சித்திரை மாதம் தேர்த்திருவிழா வெகு விமரிசையாக நடைபெறும்.அதேபோல் இந்த ஆண்டும் கடந்த 25-ந் தேதி கொடியேற்றத்துடன் தேர்த்திருவிழா தொடங்கியது. 29-ந் தேதி பஞ்சமூர்த்திகள் புறப்பாடு, 63 நாயன்மார்களுக்கு காட்சியளித்தல் வைபவம் நடந்தது. இதையடுத்து 2 மற்றும் 3-ந் தேதி பெரிய தேர் இழுத்து நிலை சேர்க்கப்பட்டது. 4-ந் தேதி சிறிய (அம்மன்) தேர் இழுக்கப்பட்டது.

    நேற்று இரவு தெப்பத்தேர் பவனி நடந்தது. முன்னதாக சுவாமிக்கு சிறப்பு அபிஷேக அலங்கார ஆராதனை நடந்தது. பின்னர் சுவாமி திருவீதி உலா வந்து தெப்பக்குளத்தில் மலர்களால் அலங்கரிக்கப்பட்ட சப்பரத்தில் அலங்கார விளக்குகள் வெளிச்சத்தில் சந்திரசேகர் அம்பாள் சாமிகள் அமர்த்தப்பட்டனர். தெப்பக்குளத்தில் 5 முறை வலம் வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.விழாவை காண அவினாசி சுற்றுவட்டார பகுதி, மற்றும் பிற மாவட்டங்களில் இருந்தும் ஏராளமான பெண்கள் குழந்தைகள் உள்ளிட்டவர்கள் தெப்பக்குள படிக்கட்டு, மற்றும் மதில்சுவர் மீதும் அமர்ந்து கண்டுகளித்தனர்.இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடராஜர் தரிசனம் மற்றும் நாளை மஞ்சள் நீர் விழா நடைபெறுகிறது.

    • கோவில் கும்பாபிஷேகம் நடந்து 15 ஆண்டுகள் கடந்துவிட்டது.
    • 2 மாதமாக கோவில் நிர்வாகத்தினர் கும்பாபிஷேகம் நடத்துவதற்கான முயற்சி மேற்கொண்டுவருகின்றனர்.

    அவினாசி :

    திருப்பூர் மாவட்டம் அவினாசியில் கொங்கு ஏழு சிவாலயங்களில் முதன்மை பெற்றதும், காசிக்கு நிகரான கோவில் என்ற சிறப்பும், முதலையுண்ட பாலகனை சுந்தரர் பதிகம்பாடி மீட்டெடுத்த கோவில் என்ற பல சிறப்புகள் பெற்றது கருணாம்பிகை உடனமர் அவினாசிலிங்கேசுவரர் கோவில் ஆகும்.

    இவ்வாறு பல சிறப்பு வாய்ந்த இக்கோவிலுக்கு தமிழ்நாட்டில் உள்ள பல ஊர்களிலிருந்தும் பிற மாநிலங்களிலிருந்தும் ஏராளமான பக்தர்கள் இங்குசாமி தரிசனம் செய்ய வருகின்றனர். இந்தநிலையில் இக்கோவில் கும்பாபிஷேகம் நடந்து 15 ஆண்டுகள் கடந்துவிட்டது. இந்து ஆகமவிதிப்படி 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை கும்பாபிஷேகம் நடைபெறவேண்டும் என்பது நியதி. கடந்த 2 மாதமாக கோவில் நிர்வாகத்தினர் கும்பாபிஷேகம் நடத்துவதற்கான முயற்சி மேற்கொண்டுவருகின்றனர். எனவே கும்பாபிஷேகம் செய்வதற்கான பணிகள் தொடங்கி விரைவில் நடப்பதற்காக பொதுமக்கள் வளமாக வாழவும் கருணாம்பிகை அம்மன் சன்னதியில் நேற்று நவசக்தி அர்ச்சனை நடந்தது.

    இதில் கோவில் 9 சிவாச்சாரியார் ஒன்றிணைந்து வேத மந்திரங்கள் படித்து சகஸ்ரநாம அர்ச்சனை மற்றும் நவசக்தி அர்ச்சனை செய்தனர். இதில் அவினாசி சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த திரளான பக்தர்கள் பங்கேற்றனர். அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.

    • அமாவாசை தினத்தன்று பக்தர்களிடம் தனது இயக்கம் குறித்து விளக்கப் பாடம் நடத்துவது வழக்கம்.
    • இந்து முன்னணி அமைப்பை சேர்ந்த சிலர் பிரச்சாரம் செய்யக்கூடாது என வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர்.

    அவினாசி :

    பிரஜாபிதா பிரம்மகுமாரிகள் ஈஸ்வர்ய விஸ்வ வித்யாலயம் எனும் இயக்கம் ராஜஸ்தானை தலைமையிடமாக கொண்டு 185 நாடுகளில் இயங்கிவருகிறது. அவினாசி கிளை பிரம்மகுமாரிகள் இயக்கத்தினர் பிரதிமாதம் அமாவாசை தினத்தன்று அவினாசிலிங்கேசுவரர் கோவில் கலை அரங்கில் தனது இயக்கம் குறித்து பக்தர்களிடம் விளக்கப் பாடம் நடத்துவது வழக்கம்.

    ஆடி அமாவாசை தினமான நேற்று இவர்கள் கலை அரங்கில் வழக்கம்போல் பிரசங்கம் செய்துகொண்டிருந்தனர். அப்போது இந்து முன்னணி அமைப்பை சேர்ந்த சிலர் வந்து நீங்கள் யார் கிருஷ்துவ மதத்தை சேர்ந்தவர்களா இங்கு நீங்கள் பிரச்சாரம் செய்யக்கூடாது என வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். அப்போது இரு தரப்புக்கும் இடையே வாக்கு வாதம் ஏற்பட்டுள்ளது. தகவலறிந்து கோவில் செயல் அலுவலர் பெரியமருதுபாண்டி மற்றும் போலீசார் அங்கு வந்து விசாரித்தனர். பிரம்மகுமாரிகள் இயக்கத்தினர் தங்களது பிரசங்கம் செய்வது குறித்து கோவில் நிர்வாகத்திடம் அனுமதி பெற்றுள்ளதாக தெரிவித்தனர்.

    இதையடுத்து போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி அனைவரையும் சமரசம் செய்து அனுப்பி வைத்தனர். இந்த சம்பவத்தால் கோவில் வளாகத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

    ×