search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Chariots"

    • காசிக்கு நிகரான சிறப்பும் பெற்றது அவினாசிலிங்கேசுவரர் கோவில்.
    • காலை 10 மணிக்கு தேரோட்டம் தொடங்கியது.

    அவினாசி:

    கொங்கு ஏழு சிவாலயங்களில் முதன்மை பெற்றதும், காசிக்கு நிகரான சிறப்பும் பெற்ற திருப்பூர் மாவட்டம் அவினாசி அவினாசிலிங்கேசுவரர் கோவிலில் சித்திரை தேர் திருவிழா கடந்த 14-ந்தேதி கொடியேற்ற நிகழ்ச்சியுடன் தொடங்கியது.

    திருவிழாவையொட்டி 18-ந்தேதி இரவு பஞ்சமூர்த்திகள் 63 நாயன்மார்களுக்கு காட்சியளித்தனர். 19-ந்தேதி இரவு கற்பக விருட்சம் திருக்கல்யாணம் நடந்தது. 20-ந்தேதி காலை 6 மணிக்கு பூரம் நட்சத்திரத்தில் பஞ்ச மூர்த்திகளும் பெருமாளும் திருத்தேருக்கு எழுந்தருளும் வைபவம் நடைபெற்றது.

    இதைத்தொடர்ந்து நேற்று காலை 9.30 மணி அளவில் தேரில் இருந்து அருள்பாலித்த உற்சவமூர்த்திகளுக்கு சிறப்பு வழிபாடுகள் மற்றும் தீபாராதனைகள் நடந்தது. பின்னர் அதிர்வேட்டுகள் முழங்க காலை 10 மணிக்கு தேரோட்டம் தொடங்கியது.

    அப்போது அங்கு கூடியிருந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் பக்தி பரவசத்துடன் சிவ... சிவா... என்ற பக்திகோஷத்துடன் தேரை வடம் பிடித்து இழுத்தனர். பின்னர் தேர் நிலையிலிருந்து சிறிது தூரம் இழுத்து வடக்கு வீதி சந்திப்பில் நிறுத்தப்பட்டது.

    மீண்டும் இன்று (திங்கட்கிழமை) காலை 2-வது நாள் தேரோட்டம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர். பின்பு தேர் மாலையில் நிலை வந்து சேர உள்ளது. நாளை (செவ்வாய்க்கிழமை) சிறிய அம்மன் தேர் இழுக்கப்படுகிறது.

    • கார்த்திகை திருவிழா தேரோட்டம் நாளை நடைபெற உள்ளது.
    • சாலைகளில் இருந்த சிறிய பள்ளங்களை சிமெண்ட் கான்கீரிட் கொண்டு சீரமைத்தனர்.

    சுவாமிமலை:

    அறுபடை வீடுகளில் 4-ம் படை வீடான சுவாமிமலை சுவாமிநாதசாமி கோவிலில் கார்த்திகை திருவிழாவை முன்னிட்டு தேரோட்டம் நாளை (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற உள்ளது.

    இதனை முன்னிட்டு தஞ்சாவூர் மாவட்ட கலெக்டர் தீபக் ஜேக்கப் உத்தரவின்படி, தஞ்சாவூர் மண்டல பேரூராட்சிகளின் உதவி இயக்குநர் அறிவுரைபடி, சுவாமிமலை பேரூராட்சி செயல் அலுவலர் சரவணவேல் தலைமையில், பேரூராட்சி பணியாளர்கள் தேரோடும் வீதிகளை தூய்மை படுத்தும் பணியில் ஈடுபட்டனர்.

    தொடர்ந்து, சாலைகளில் இருந்த சிறிய பள்ளங்களை சிமெண்ட் கான்கீரிட் கொண்டு சீரமைத்தனர்.

    மேலும், இரும்பு தகடுகள் அமைத்தும் சரி செய்தனர்.

    இந்த பணிகளை பேரூராட்சி தலைவர் வைஜெயந்தி, துணைத்தலைவர் சங்கர் மற்றும் உறுப்பினர்கள் பார்வையிட்டனர்.

    • மின் அலங்கார ஓலை சப்பரத்தில் பஞ்சமூர்த்திகள் புறப்பாடு நடைபெற்றது.
    • நாகூர் வழியாக செல்லும் பஸ்கள் மாற்றுப்பாதை வழியாக இயக்கப்பட்டு வருகின்றன.

    நாகப்பட்டினம்:

    நாகை மாவட்டம் நாகூரில் புகழ்பெற்றதும், பழைமை வாய்ந்ததுமான நாகநாதர் ஆலயம் அமைந்துள்ளது. இராகு கேது பரிகார ஸ்தலமான இவ்வாலயத்தின் 27ம் ஆண்டு பிர்மோத்சசவ பெருவிழா கடந்த 24ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. இதனை அடுத்து தியாகேசப் பெருமாள் வசந்த மண்டபம் எழுந்தருளி குதிரை வாகனத்தில் வீதி உலாவும், மின் அலங்கார ஓலச் சப்பரத்தில் ரிஷபம் வாகன காசி பஞ்சமூர்த்திகள் புறப்பாடு நடைபெற்றது.

    இவ்விழாவின் முக்கிய நிகழ்ச்சியான் திருத்தேரோட்டம் நடைபெற்றது. திருத்தேரில் திருநாகவள்ளிஅம்மாள் சமேத நாகநாதசுவாமிகள் எழுந்தருளியதும், மாநில மீன் வளர்ச்சி கழக தலைவர் கௌதமன், நகர் மன்ற உறுப்பினர் மாரிமுத்து மற்றும் பக்தர்கள் தேரை வடம்பிடித்து இழுத்தனர். சிவ வாத்தியம், கேரளா மேளதாளங்கள் முழங்க திரளான பக்தர்கள் பங்கேற்று தேரை வடம் பிடித்து இழுத்தனர்.

    மேலும், திருத்தேரோட்டத்தை யொட்டி நாகையில் இருந்து நாகூர் வழியாக காரைக்கால் மற்றும் கும்பகோணம் செல்லும் பேருந்துகள் மாற்று பாதை வழியாக இயக்கப்பட்டு வருகின்றன.

    • திருவாதவூர் பிடாரி அம்மன் கோவில் ேதரோட்டம் நடந்தது.
    • பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர்.

    மேலூர்

    மதுரை மாவட்டம் மேலூர் அருகே உள்ளது திருவாதவூர். இங்கு மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு உட்பட்ட திருமறைநாதர்- வேதநாயகி அம்பாள் கோவில் உள்ளது. மாணிக்கவாசகர் பிறந்த ஊரான இங்கு ஒவ்வொரு ஆண்டும் வைகாசி மாதம் திருவிழா மிக சிறப்பாக நடைபெறும். இந்த ஆண்டுக்கான வைகாசி திருவிழாவையொட்டி பிடாரி அம்மன் கோவில் திருவிழா கடந்த 5-ந்தேதி முகூர்த்தக்கால் நடப்பட்டு கொடியேற்றத்துடன் தொடங்கியது. 11 நாட்கள் திருவிழா நடைபெற்று வந்த நிலையில் நேற்று பிடாரி அம்மன் சட்டத்தேரில் வீதி உலா வரும் நிகழ்ச்சி நடந்தது. பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர்.

    • 3-ந்தேதி சித்திரை தேரோட்டத்தை முன்னிட்டு தேரடி கருப்பண்ணசாமி கோவிலில் முகூர்த்தக்கால் நடும் நிகழ்ச்சி நடந்தது.
    • தேரோட்டத்திற்கான முன்னேற்பாடு பணிகள் தொடங்கின.

    மதுரை

    மதுரையில் பிரசித்தி பெற்ற மீனாட்சி அம்மன் கோவில் சித்திரை திருவிழா வருகிற 23-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. விழா நடக்கும் 10 நாட்கள் தினமும் காலை, மாலையில் மாசி வீதிகளில் சுவாமி-அம்பாள் வீதி உலா வருவார்கள். விழாவின் சிகர நிகழ்ச்சி யான திருக்கல்யாணம் மே 2-ந்தேதியும், தேரோட்டம் மே 3-ந்தேதியும் நடைபெறுகிறது. நான்கு மாசி வீதிகளில் நடக்கும் தேரோட்டத்தை காண மதுரை நகர் மற்றும் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த பல்லாயிரக்கணக்கானோர் குவிவார்கள்.

    தேரோட்டம் சிறப்பாக நடைபெற வேண்டும் என கருதி சித்திரை திருவிழா கொடியேற்றத்துக்கு முன்பு தேரடி வீதியில் உள்ள கருப்பண்ணசாமி கோவிலில் முகூர்த்தக்கால் நடும் நிகழ்ச்சி நடைபெறும். அதன்படி இன்று முகூர்த்தக்கால் நடப்பட்டது. இதில் மீனாட்சியம்மன் கோவில் சிவாச்சாரியார்கள் கலந்து கொண்டு சிறப்பு பூஜை நடத்தினர்.

    இந்த நிகழ்ச்சியில் கோவில் துணை ஆணையர் அருணாச்சலம் உள்பட பலர் கலந்துகொண்டனர். முகூர்த்தக்கால் நடப்பட்டதை தொடர்ந்து தேரோட்டத்திற்கான முன்னேற்பாடு பணிகள் தொடங்கின.

    • விருதுநகரில் சொக்கநாதர்-மீனாட்சி கோவில் தேரோட்டம் விமரிசையாக நடந்தது.
    • தெற்குரத வீதிகளில் தேர் அசைந்தாடி வந்தது கண்கொள்ளா காட்சியாக இருந்தது.

    விருதுநகர்

    விருதுநகரில் பழமை வாய்ந்த சொக்கநாதர்-மீனாட்சி அம்மன் கோவில் உள்ளது. இங்கு ஒவ்வொரு வருடமும் ஆவணி பெருந்திருவிழா விமரிசையாக நடைபெறும். அதன்படி இந்த ஆண்டுக்கான விழா கடந்த வாரம் கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழா தொடங்கிய நாள் முதல் தினமும் காலை, மாலை சுவாமி அம்பாளுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடந்து வீதிஉலா வந்தனர்.

    விழாவில் சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் இன்று நடந்தது. இதையொட்டி கோவிலில் சுவாமி- அம்பாளுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை நடந்தது. பின்னர் அலங்கரிக்கப்பட்ட திருத்தே ரில் சுவாமி-அம்பாள் எழுந்தருளினர். தொடர்ந்து பக்தி கோஷம் முழங்க பெண்கள் உள்பட திரளானோர் தேரை வடம்பிடித்து இழுத்தனர்.

    விருதுநகர் நகராட்சி தலைவர் மாதவன், துணைத்தலைவர் தனலட்சுமி, இந்து சமய உதவி ஆணையர் வளர்மதி, கோவில் அதிகாரி லட்சுமணன், முன்னாள் தக்கார் ரத்தினகுமார், நிர்வாக அறக்கட்டளை தலைவர் ராம்தாஸ் உள்ளிட்டோர் தேைர வடம்பிடித்து இழுத்தனர். பக்தர்கள் வெள்ளத்தில் மேலரதவீதி மெயின் பஜார், தெற்குரத வீதிகளில் தேர் அசைந்தாடி வந்தது கண்கொள்ளா காட்சியாக இருந்தது.

    இந்த நிகழ்ச்சியில் விருதுநகர் அ.தி.மு.க. செயலாளர் முகமது நயினார், முன்னாள் ஆவின் தலைவர் முகமது எகியா உள்ளிட்ட பல முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர். பாதுகாப்பு ஏற்பாடுகளை இன்ஸ்பெக்டர்கள் சித்ரகலா, மாரியப்பன் ஆகியோர் செய்திருந்தனர்.

    • ஆண்டாள் கோவில் தேரோட்டத்தை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்துக்கு 1-ந் தேதி உள்ளூர் விடுமுறை விடப்பட்டுள்ளது.
    • 2-வது சனிக்கிழமையான 13-ந் தேதியன்று பணிநாளாக அறிவிக்கப்பட்டு உத்தரவிடப்படுகிறது.

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள ஆண்டாள் கோவில் ஆடிப்பூரத்திருவிழா மிகவும் பிரசித்தி பெற்ற திருவிழாவாகும். இந்த திருவிழா கடந்த 24-ந்தேதி முதல் நடைபெற்று வருகிறது. இதில் வருகிற 1-ந் தேதி திருத்தேரோட்டம் நடைபெற உள்ளது.

    அதனை முன்னிட்டு, விருதுநகர் மாவட்டம் முழுவதும் உள்ளூர் விடுமுறையாக அறிவிக்கப்படுகிறது. அதனை ஈடுசெய்யும் விதமாக ஆகஸ்டு மாதத்தின் 2-வது சனிக்கிழமையான 13-ந்தேதியன்று பணிநாளாக அறிவிக்கப்பட்டு உத்தரவிடப்படுகிறது.

    மேற்கண்ட தகவலை மாவட்ட கலெக்டர் மேகநாதரெட்டி தெரிவித்துள்ளார்.

    ×