search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சுவாமிமலையில் தேரோடும் வீதிகளை சீரமைக்கும் பணி
    X

    தேரோடும் வீதிகள் சீரமைக்கும் பணி நடைபெறுவதை அதிகாரிகள் பார்வையிட்டனர்.

    சுவாமிமலையில் தேரோடும் வீதிகளை சீரமைக்கும் பணி

    • கார்த்திகை திருவிழா தேரோட்டம் நாளை நடைபெற உள்ளது.
    • சாலைகளில் இருந்த சிறிய பள்ளங்களை சிமெண்ட் கான்கீரிட் கொண்டு சீரமைத்தனர்.

    சுவாமிமலை:

    அறுபடை வீடுகளில் 4-ம் படை வீடான சுவாமிமலை சுவாமிநாதசாமி கோவிலில் கார்த்திகை திருவிழாவை முன்னிட்டு தேரோட்டம் நாளை (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற உள்ளது.

    இதனை முன்னிட்டு தஞ்சாவூர் மாவட்ட கலெக்டர் தீபக் ஜேக்கப் உத்தரவின்படி, தஞ்சாவூர் மண்டல பேரூராட்சிகளின் உதவி இயக்குநர் அறிவுரைபடி, சுவாமிமலை பேரூராட்சி செயல் அலுவலர் சரவணவேல் தலைமையில், பேரூராட்சி பணியாளர்கள் தேரோடும் வீதிகளை தூய்மை படுத்தும் பணியில் ஈடுபட்டனர்.

    தொடர்ந்து, சாலைகளில் இருந்த சிறிய பள்ளங்களை சிமெண்ட் கான்கீரிட் கொண்டு சீரமைத்தனர்.

    மேலும், இரும்பு தகடுகள் அமைத்தும் சரி செய்தனர்.

    இந்த பணிகளை பேரூராட்சி தலைவர் வைஜெயந்தி, துணைத்தலைவர் சங்கர் மற்றும் உறுப்பினர்கள் பார்வையிட்டனர்.

    Next Story
    ×