அவினாசிலிங்கேசுவரர் கோவிலில் கும்பாபிஷேகம் நடைபெற நவசக்தி வழிபாடு

கோவில் கும்பாபிஷேகம் நடந்து 15 ஆண்டுகள் கடந்துவிட்டது. 2 மாதமாக கோவில் நிர்வாகத்தினர் கும்பாபிஷேகம் நடத்துவதற்கான முயற்சி மேற்கொண்டுவருகின்றனர்.
கோப்புபடம்.
கோப்புபடம்.
Published on

அவினாசி :

திருப்பூர் மாவட்டம் அவினாசியில் கொங்கு ஏழு சிவாலயங்களில் முதன்மை பெற்றதும், காசிக்கு நிகரான கோவில் என்ற சிறப்பும், முதலையுண்ட பாலகனை சுந்தரர் பதிகம்பாடி மீட்டெடுத்த கோவில் என்ற பல சிறப்புகள் பெற்றது கருணாம்பிகை உடனமர் அவினாசிலிங்கேசுவரர் கோவில் ஆகும்.

இவ்வாறு பல சிறப்பு வாய்ந்த இக்கோவிலுக்கு தமிழ்நாட்டில் உள்ள பல ஊர்களிலிருந்தும் பிற மாநிலங்களிலிருந்தும் ஏராளமான பக்தர்கள் இங்குசாமி தரிசனம் செய்ய வருகின்றனர். இந்தநிலையில் இக்கோவில் கும்பாபிஷேகம் நடந்து 15 ஆண்டுகள் கடந்துவிட்டது. இந்து ஆகமவிதிப்படி 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை கும்பாபிஷேகம் நடைபெறவேண்டும் என்பது நியதி. கடந்த 2 மாதமாக கோவில் நிர்வாகத்தினர் கும்பாபிஷேகம் நடத்துவதற்கான முயற்சி மேற்கொண்டுவருகின்றனர். எனவே கும்பாபிஷேகம் செய்வதற்கான பணிகள் தொடங்கி விரைவில் நடப்பதற்காக பொதுமக்கள் வளமாக வாழவும் கருணாம்பிகை அம்மன் சன்னதியில் நேற்று நவசக்தி அர்ச்சனை நடந்தது.

இதில் கோவில் 9 சிவாச்சாரியார் ஒன்றிணைந்து வேத மந்திரங்கள் படித்து சகஸ்ரநாம அர்ச்சனை மற்றும் நவசக்தி அர்ச்சனை செய்தனர். இதில் அவினாசி சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த திரளான பக்தர்கள் பங்கேற்றனர். அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.

X

Maalai Malar
www.maalaimalar.com