search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அழைப்பு"

    • 10 ஆயிரம் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு அளிக்கும் வகையில் திருச்சியில் டைடல் பார்க் வடிவமைப்பு தயாரிக்க நிறுவனங்களுக்கு அழைப்பு
    • 10 ஆயிரம் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு அளிக்கும் வகையில் திருச்சியில் டைடல் பார்க் வடிவமைப்பு தயாரிக்க நிறுவனங்களுக்கு அழைப்பு

    திருச்சி,

    தமிழகத்தின் மையப்பகு தியான திருச்சியில் எளிதாக தொடர்பு மற்றும் இணைப்பு போக்குவரத்து வசதிகள் குறைந்த செலவு ஆகியவறறின் அடிப்படையில் தகவல் தொழில் நுட்ப நிறுவனங்களை வளர்ந்துள்ளன. திருச்சியை பொருளாதார ரீதியாக வளர்ச்சியடைய செய்யும் வகையில் ரூ.600 ேகாடி மதிப்பீட்டில், எல்காட் மற்றும் டிட்கோ நிறுவனங்கள் இணைந்து நடத்தும் தகவல் தொழில்நுட்பம் மற்றும் மென் பொருள் நிறுவனங்கள் மையமான டைடல் பார்க் அமைக்கப்படும் என தமிழக பட்ஜெட்டில் அறிவிக்கப்ப ட்டது. இதைத் தொடர்ந்து திருச்சி யில் டைடல் ப ார்க் அமைக்க வாய்ப்புள்ள இடங்களை சென்னை டைடல் பார்க் நிறுவன அதிகாரிகள் குழுவி னர் பார்வையிட்டனர். அதன்பிறகு திருச்சி- மதுரை சாலையில் 14 ஏக்கர் நிலம் கேட்டு டைடல் பார்க் சார்பில், மாநகராட்சிக்கு கடிதம் அனுப்பப்பட்டது. அதன்பேரில் தற்போது பல்வேறு வளர்ச்சி திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டு வரும் பஞ்சப்பூரிலேயே மாநகராட்சி க்கு சொந்தமான 9 ஏக்கர் நிலத்தை வழங்க மாநகராட்சி கூட்டத்தில் ஒப்புதல் அளிக்க ப்பட்டது. இதைத் தொடர்ந்து, இப்ப ணியின் அடுத்த கட்டமாக 10 லட்சம் சதுர அடியில் டைடல் பார்க் அமைக்க முடிவு செய்யப்பட்டது. இந்த திட்ட வடிவமை ப்புக்கான நிறுவனத்தை தேர்வு செய்யும் பணியை டைடல் பார்க் நிறுவனம் தொடங்கியுள்ளது. இது குறித்து அந்த நிறுவன வட்டாரங்கள் தெரிவிக்கை யில், திருச்சியில் பஞ்சப்பூர் பகுதியில் 10 ஆயிரம் இளை ஞர்களுக்கு வேலை வாய்ப்பு அளிக்கும் வகையில் முதற்க ட்டமாக 5.5 லட்சம் சதுர அடியில் டைடல் பார்க் அமைக்க முடிவு செய்யப்பட்டு அதற்கான பணிகள் தொட ங்கி நடந்து வருகிறது.

    • தேசிய வேளாண் சந்தை திட்டத்தில் பதிவு செய்து விற்பனை செய்தால் அதிக வருவாய் கிடைக்க வாய்ப்புள்ளது.
    • நாட்டின் எந்த பகுதிகளில் இருந்தும் விளைபொருட்களை விற்பனை மற்றும் கொள்முதல் செய்து கொள்ளலாம்.

    திருப்பூர்,செப்.26-

    மின்னணு தேசிய வேளாண் சந்தை திட்டத்தின் கீழ் விளைபொருள்களை விற்பனை செய்வதற்கு பொங்கலூா் ஒழுங்குமுறை விற்பனைக்கூடம் விவசாயிகளுக்கு அழைப்பு விடுத்துள்ளது.

    இது குறித்து பொங்கலூா் ஒழுங்குமுறை விற்பனைக் கூட கண்காணிப்பாளா் அழகிரி சாந்தலிங்கம் செய்தியாளா்களிடம் கூறியதாவது:-

    விவசாயிகள் தங்களது விளைபொருட்களான மக்காச்சோளம், கம்பு, கேழ்வரகு, சோளம், கொப்பரை உள்ளிட்ட அனைத்து விளைபொருட்களையும் மின்னணு தேசிய வேளாண் சந்தை திட்டத்தில் பதிவு செய்து விற்பனை செய்தால் அதிக வருவாய் கிடைக்க வாய்ப்புள்ளது.ஏனெனில் இத்திட்டத்தின் மூலம் நாட்டின் எந்த பகுதிகளில் இருந்தும் விளைபொருட்களை விற்பனை மற்றும் கொள்முதல் செய்து கொள்ளலாம்.இதனால் விவசாயிகளுக்கு அதிக விலை கிடைக்க வாய்ப்புள்ளது.

    இது குறித்த கூடுதல் விவரங்களுக்கு 0421-2316076 என்ற எண்ணில் தொடா்புகொள்ளலாம் என்றாா்.

    • அரியலூரில் ஒருங்கிணைப்பாளர்கள் பணிகளுக்கு விண்ணப்பிக்க அழைப்பு விடுக்கப்பட்டு உள்ளது
    • மாவட்ட கலெக்டர் ஆனி மேரி ஸ்வர்ணா வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார்

    அரியலூர்,

    அரியலூர் மாவட்டம், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம், மாவட்ட இயக்க மேலாண்மை அலகின் மூலம் மீட்கப்பட்ட கொத்தடிமைக்களுக்கான மறுவாழ்வு திட்டத்தில் ஒப்பந்த அடிப்படையில் ஓராண்டுக்கு பணிபுரிந்திட 1 மாவட்ட திட்ட ஒருங்கிணைப்பாளர் மற்றும் 2 வட்டார ஒருங்கிணைப்பாளர் பணிக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.மாவட்ட ஒருங்கிணைப்பாளர் பணிக்கு இளங்கலை பட்டம் பெற்றவராக இருத்தல் வேண்டும். களப்பணியில் 3 முதல் 5 ஆண்டுகள் முன் அனுபவம் பெற்றவராக இருத்தல் வேண்டும். மக்கள் தொடர்பியல் மற்றும் பேச்சு ஆற்றல் உள்ளவராக இருத்தல் வேண்டும். அரியலூர் மாவட்டத்தை சேர்ந்தவராக இருத்தல் வேண்டும்.

    ஓட்டுநர் உரிமம் பெற்று இரு சக்கர வாகனம் வைத்திருத்தல் வேண்டும். மாத மதிப்பூதியமாக ரூ.15,000 மற்றும் பயணப்படி ரூ.5,000 வழங்கப்படும்.

    வட்டார ஒருங்கிணைப்பாளர் பணிக்கு மீட்கப்பட்ட கொத்தடிமையினராகவோ, பழங்குடியினரை சார்ந்தவராக இருத்தல் வேண்டும். குறைந்த பட்சம் 8 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவராக இருத்தல் வேண்டும்.மாத மதிப்பூதியமாக ரூ.3,000 மற்றும் பயணப்படி ரூ.1,000 வழங்கப்படும். விண்ணப்பங்கள் வெள்ளைத்தாளில் தட்டச்சு செய்தோ அல்லது கையெழுத்து பிரதியாகவோ இணை இயக்குநர் , திட்ட இயக்குநர், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம், மாவட்ட இயக்க மேலாண்மை அலகு, மாவட்ட ஆட்சியரகம், அரியலூர்- 621704, என்ற முகவரிக்கு 22ந்தேதி மாலை 5 மணிக்குள் நேரிலோ அல்லது அஞ்சல் மூலமாகவோ அனுப்பி வைக்க வேண்டும் என மாவட்ட கலெக்டர் ஆனி மேரி ஸ்வர்ணா தெரிவித்துள்ளார்.

    • கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டம் கரூர் மாவட்டத்தில் உதவி மையங்கள் அமைப்பு
    • பொதுமக்கள் பயன்படுத்திக்கொள்ள கலெக்டர் பிரபுசங்கர் அழைப்பு

    கரூர்,

    கரூர் மாவட்ட கலெக்டர் பிரபு சங்கர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம் தொடர்பான சந்தேகங்கள் மற்றும் விண்ணப்பத்தின் நிலை ஆகியவற்றினை பின்வரும் அலுவலகங்களில் வழங்கப்பட்டுள்ள தொலைபேசி எண்களை அழைத்து பொதுமக்கள் தெரிந்து கொள்ளலாம்.மாவட்ட ஆட்சியர் அலுவலகம் - 9489984960, கரூர் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகம்- 9489984961, குளித்தலை வருவாய் கோட்டாட்சியர் அலுவலகம்- 9489984962, கரூர் வட்டாட்சியர் அலுவலகம்- 9489984963, அரவக்குறிச்சி - 9489984964, மண்மங்கலம் - 9489984965-, புகளூர் - 9489984966, கிருஷ்ணராயபுரம் - 9489984967, குளித்தலை - 9489984968, கடவூர் - 9489984969.

    மேலும் சம்மந்தப்பட்ட வட்டாட்சியர் அலுவலகங்கள் மற்றும் இ-சேவை மையத்தில் தங்களது குடும்ப அட்டை எண்ணை அளித்து, தங்களின் விண்ணப்பத்தின் நிலையினை அறிந்து கொள்ளலாம். பொதுமக்கள் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்ட விண்ணப்பங்களின் பேரில் மேல்முறையீடு செய்ய விரும்பும் பட்சத்தில் தங்களது குடியிருப்புகளுக்கு அருகில் உள்ள இ-சேவை மையத்தின் வாயிலாக மேல்முறையீடு செய்து கொள்ளலாம். இதற்கு எவ்வித கட்டணம் செலுத்த வேண்டிய அவசியமில்லை. இச்சேவை முற்றிலும் இலவசமாக அளிக்கப்படுகிறது. மேலும் பொதுமக்கள் தங்கள் வீட்டில் இருந்தவாறே https://kmut.tn.gov.in என்ற இணையதளத்தில் தங்களது ஆதார் எண்ணை உட்செலுத்தி விண்ணப்பத்தின் நிலையினை தெரிந்து கொள்ளலாம். இதுமட்டுமின்றி முதல்வரின் முகவரி திட்டத்தின் இலவச அழைப்பேசி எண் 1100–ல் அழைத்து தங்களது கோரிக்கைகளை தெரிவித்து விபரங்களை அறிந்து கொள்ளலாம். கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் மேல்முறையீடு விண்ணப்பங்கள் அனைத்தும் இ-சேவை மையத்தில் இணையதளம் மூலமாக மட்டுமே மேற்கொள்ள இயலும். இச்சேவைகளை முற்றிலும் இலவசமாக வழங்க தமிழ்நாடு அரசின் ஆணையின்படி கரூர் மாவட்டத்தில் அனைத்து ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்று அவர் தெரிவித்துள்ளார்.

    • அரியலூர் மாவட்டத்தில் நடைபெறும் கடன் மேளாவில் கலந்து கொள்ள விவசாயிகள், பொதுமக்களுக்கு அைழப்பு
    • கூட்டுறவு வங்கிகளின் மூலம் வழங்கப்படும் தொழில் நுட்பச் சேவைகளை விளம்பர ப்படுத்துதல் போன்ற நடவடி க்கைகள் மேற்கொ ள்ளப்படுகிறது.

    அரியலூர் 

    அரியலூர் மாவட்டத்திலுள்ள 6 ஒன்றியங்களிலும் கடன் மேளா நடத்தப்படுகிறது என்று மண்டல இணைப் பதிவாளர் தீபாசங்கரி தெரிவித்துள்ளார்.

    மறைந்த முன்னாள் முதல்வர் மு.கருணாநிதி நுற்றாண்டு விழா கடந்த ஜூன் மாதம் முதல் கொண்டா டப்பட்டு வருகிறது. இதனை முன்னிட்டு கூட்டுறவு துறை சார்பில் கடன் மேளா நடத்தப்படுகிறது.

    அதன்படி இன்று(செப்.15) அரியலூர் மற்றும் திருமானூர் ஒன்றியங்களில் உள்ள 24 தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களிலும், செப்.22 ஆம் தேதி செந்துறை, ஜெய ங்கொண்டம், ஆண்டிமடம் மற்றும் தா.பழூர் ஒன்றிய ங்களில் உள்ள 40 தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களிலும் கடன் மேளாக்கள் நடைபெற்றது.

    இம்மேளாக்களில் வைப்புகள் திரட்டுதல், பயிர்க்கடன், சுய உதவிக் குழுக் கடன், கால்நடைப் பராமரிப்பு கடன், டாப்செட்கோ கடன். டாம்கோ கடன், தாட்கோ கடன், மாற்றுத்திறனாளி கடன், மத்திய காலக் கடன் மற்றும் தான்ய ஈட்டுக்கட ன்களு க்கான விண்ணப்ப ங்கள் விநியோகி த்தல், புதிய சேமிப்பு கணக்குகள் துவங்குதல், தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்களை பல்நோக்கு சேவை மையங்களாக மாற்றும் திட்டம் கடன் மூலம் வழங்கப்படும் சேவைகள் மற்றும் மத்திய கூட்டுறவு வங்கிகளின் மூலம் வழங்கப்படும் தொழில் நுட்பச் சேவைகளை விளம்பர ப்படுத்துதல் போன்ற நடவடி க்கைகள் மேற்கொ ள்ளப்படுகிறது.

    எனவே விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் இந்த கடன் மேளாவில் கலந்து கொண்டு பயன்பெறலாம் என தெரிவித்துள்ளார்.

    • இலவச முயல் வளர்ப்பு பயிற்சி நடைபெற உள்ளது
    • 12- ந் தேதி நடைபெறுகிறது

    பெரம்பலூர்:

    பெரம்பலூர் கால்நடை மருத்துவ பல்கலைக்கழக ஆராய்ச்சி மையத்தில் வரும் 12- ந் தேதி நடைபெறும் முயல் வளர்ப்பு குறித்த இலவச பயிற்சி முகாமில் கலந்து கொள்ள அழைப்பு விடுக்கப்பட்டு உள்ளது.

    இது குறித்து அம்மைய தலைவர் டாக்டர் சுரேஷ்கு மார் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், பெரம்ப லூர் அருகே செங்குணம் - கைகாட்டி எதிரே உள்ள கால்நடை மருத்துவ பல்க லைக்கழக ஆராய்ச்சி மைய த்தில் முயல் வளர்ப்பு குறி த்த இலவச நாள் பயிற்சி முகாம் வரும் 12-ந் தேதி நடைபெறுகிறது.

    இதில் முயல் இனங்கள் மற்றும் இனப்பெருக்க மேலாண்மை, தீவன மேலாண்மை, கொட்டகை அமைக்கும் முறை, பராமரி க்கும் முறை மற்றும் நோய்த்த டுப்பு முறைகள் குறித்து பயிற்சி அளிக்கப்பட உள்ளது.

    பயிற்சியில் சேர விரும்பு வோர் கால்நடை மருத்துவ பல்கலைக்கழக பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையத்தி ற்கு நேரிலோ அல்லது செல்பேசி எண்ணில் தொடர்பு கொண்டு பெயர் பதிவு செய்து பயிற்சி பெற்று பயன்பெறலாம். பயிற்சியில் கலந்து கொள்ள வரும் போது ஆதார் அட்டை நகல் எடுத்து வரவேண்டும் என தெரிவித்து உள்ளார்.

    • போட்டியில் பங்கேற்க வரும் போது ஆதாா் அட்டை கொண்டுவர வேண்டும்.
    • போட்டிகள் அனைத்தும் நாக்-அவுட் முறையில் நடத்தப்படும்.

    திருப்பூர்,ஆக.21-

    கோவை ஈஷா யோகா மையம், திருப்பூா் மாவட்ட அமெச்சூா் கபடி கழகம் சாா்பில் நடைபெற உள்ள மாவட்ட அளவிலான கபடிப் போட்டியில் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

    இது குறித்து திருப்பூா் மாவட்ட அமெச்சூா் கபடிக் கழகத்தின் செயலாளா் ஜெயசித்ரா ஏ.சண்முகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    கோவை ஈஷா யோக மையம், திருப்பூா் மாவட்ட அமெச்சூா் கபடிக்கழகம் சாா்பில் மாவட்ட அளவிலான கபடிப் போட்டி வருகிற 26-ந் தேதி காயத்ரி மஹாலில் நடைபெறுகிறது. இதில், திருப்பூா் மாவட்டத்தில் உள்ள ஆண்கள், பெண்கள் கபடி அணிகள் கீழ்க்கண்ட விதிகளின்படி பங்கேற்கலாம்.

    அகில இந்திய அமெச்சூா் கபடிக் கழகத்தின் விதிமுறைகளைப் பின்பற்றி நடைபெறும் போட்டியில் பங்கேற்க திருப்பூா் மாவட்டத்தில் வசிப்பவராக இருக்க வேண்டும். போட்டியில் பங்கேற்க வரும் போது ஆதாா் அட்டை கொண்டுவர வேண்டும். ஆண்கள் 85 கிலோவுக்கு மிகாமலும், பெண்கள் 75 கிலோவுக்கு மிகாமலும் இருக்க வேண்டும்.

    மத்திய, மாநில அரசு ஊழியா்கள், செட்டிங் அணி, நிறுவன அணிகள் பங்கேற்க இயலாது. போட்டிகள் அனைத்தும் நாக்-அவுட் முறையில் நடத்தப்படும். இதில், பங்கேற்கவுள்ள அணிகள் ஈஷா யோக மையத்தின் இணையதளத்தில் ஆகஸ்ட் 23 ந் தேதிக்குள் பதிவு செய்துகொள்ள வேண்டும்.

    ஆண்கள் பிரிவில் முதலிடத்தைப் பிடிக்கும் அணிக்கு ரூ.12 ஆயிரம் மற்றும் கோப்பை, 2-வது இடத்தைப் பிடிக்கும் அணிக்கு ரூ.8 ஆயிரம் மற்றும் கோப்பை, மூன்று மற்றும் நான்காவது இடங்களைப் பிடிக்கும் அணிகளுக்கு தலா ரூ.5 ஆயிரம் மற்றும் கோப்பை வழங்கப்படும்.

    பெண்கள் பிரிவில் முதலிடத்தைப் பிடிக்கும் அணிக்கு ரூ.10 ஆயிரம் மற்றும் கோப்பை, 2-வது இடத்தைப் பிடிக்கும் அணிக்கு ரூ.6 ஆயிரம் மற்றும் கோப்பை, 3 மற்றும் 4-வது இடங்களைப் பிடிக்கும் அணிகளுக்கு தலா ரூ.3 ஆயிரம் மற்றும் கோப்பை வழங்கப்படும்.

    இதில் சிறப்பாக விளையாடும் வீரா், வீராங்கனைகள் தலா 12 போ் தோ்வு குழுவினரால் திருப்பூா் மாவட்ட அணிக்கு தோ்வு செய்யப்படுவாா்கள். தோ்வு செய்யப்பட்ட வீரா், வீராங்கனைகளுக்கு பயிற்சி முகாம்கள் நடத்தி கோவையில் செப்டம்பா் 9, 10 ஆகிய தேதிகளில் நடைபெறவுள்ள மண்டல அளவிலான போட்டிக்கு மாவட்ட கபடிக் கழகத்தின் சாா்பில் அழைத்துச் செல்லப்படவுள்ளனா்.

    இது தொடா்பான கூடுதல் விவரங்களுக்கு 83000-30999 என்ற எண்ணைத் தொடா்பு கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • மதுரையில் அ.தி.மு.க எழுச்சி மாநாடு நாளை நடக்கிறது.
    • கோவையில் இருந்து 10 வாகனங்களில் பயணம்

    கோவை,

    கோவை புறநகர் அ.தி.மு.க சிறுபான்மை பிரிவு மாவட்டத் துணைத்தலைவர் செபி செபாஸ்டின் அறிக்கை ஒன்றை வெளியிட்டு உள்ளார். அதில் கூறப்பட்டு இருப்பதாவது:-

    மதுரையில் அ.தி.மு.க எழுச்சி மாநாடு நாளை நடக்கிறது. இதில் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் அனைவரும் திரளாக பங்கேற்று, கழக பொதுசெய லாளரும் முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி பழனிச்சாமியின் கரங்களை வலுப்படுத்த வேண்டும்.

    கோவை புறநகர் தெற்கு மாவட்ட செயலாளரும், எம்.எல்.ஏ.வுமான எஸ்.பி.வேலுமணி தலைமையில் மாவட்ட சிறுபான்மை பிரிவு சார்பில் கோவையில் இருந்து மதுரை மாநாட்டுக்கு செல்வதற்காக 10 வாகனங்கள் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளன.

    எனவே கழக நிர்வாகிகள் அனைவரும் அலைகடலென திரண்டு வந்து, மதுரை மாநாட்டை வரலாற்று வெற்றி பெற செய்ய வேண்டும். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.

    • அரியலூர் சுற்றுலாத் தொழில் நிறுவனங்கள் இணையதளத்தில் பதிவு செய்ய அழைப்பு
    • அரியலூர் மாவட்ட கலெக்டர் ஆனி மேரி சுவர்ணா அறிவிப்பு

    அரியலூர்,

    அரியலூர் மாவட்டத்தில் பதிவு செய்யாமல் இருக்கும் சுற்றுலா சார்ந்த நிறுவனங்கள் உடனடியாக இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டும் என மாவட்ட கலெக்டர் ஜா.ஆனிமேரி ஸ்வர்ணா தெரிவித்துள்ளார்.இதுகுறித்து அவர் தெரிவித்தது:உணவுடன் கூடிய உறைவிட வசதி, சாகச சுற்றுலா ஏற்பாடு, கேம்பிங் ஆப்ரேட்டர் மற்றும் கேரவன் ஆப்ரேட்டர் ஆகியவற்றை நடத்தும் நிறுவனங்கள் தமிழக அரசால் வெளியி டப்பட்டுள்ள வழிகாட்டி நெறிமுறைகளின்படி சுற்றுலாத்துறை இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டும். இது குறித்து அரசாணைகளும் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன.எனவே அரியலூர் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் மேற்கண்ட நிறு வனங்கள் சுற்றுலாத்துறை இணையத்தளத்தில் பதிவு செய்து கொள்ள வேண்டும்.மேலும், விவரங்களுக்கு அரியலூர் மாவட்ட கலெக்டர் 2 ஆவது தளத்தில் உள்ள மாவட்ட சுற்றுலா அலுவலகத்தை தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி 9787484754, 7397715685 என்ற எண்ணில் தொடர்புக் கொள்ளலாம்.

    • அரசு தொழிற் பயிற்சி நிலையங்களில் நேரடி மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது
    • முதலில் வருபவருக்கு முன்னுரிமை என்று அறிவிப்பு

    அரியலூர், 

    அரியலூர் மற்றும் ஆண்டிமடம் ஆகிய பகுதியிலுள்ள அரசு தொழிற் பயிற்சி நிலையங்களில் நேரடி மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது. ஏற்கனவே பயிற்சியாளர்கள் சேர்க்கை நடைபெற்றதில் மீதமுள்ள காலியிடங்களுக்கு மட்டும் இந்த நேரடி சேர்க்கை நடைபெறுகிறது. முதலில் வருபவருக்கு முன்னுரிமை அடிப்படையில் நேரடி சேர்க்கை நடைபெறுகிறது.கல்வித்தகுதி 8 ஆம் வகுப்பு தேர்ச்சி அல்லது பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். விண்ணப்பக் கட்டணமாக ரூ.50-ம், சேர்க்கை கட்டணமாக ஒரு ஆண்டு தொழிற்பிரிவு பயிற்சி கட்டணம் ரூ.185-ம், இரண்டாண்டு தொழிற்பிரிவு பயிற்சி கட்டணம் ரூ.195-ம் செலுத்த வேண்டும்.இணையதளம் வாயிலாக நேரடி சேர்க்கை வரும் 16-ந் தேி வரை நடைபெறுகிறது.

    • அரியலூர் மாவட்டத்தில் கல்வி உதவித்தொகை பெற விரும்புபவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டு உள்ளது
    • மாவட்ட கலெக்டர் ஆனிமேரி ஸ்வர்ணா வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு மூலம் அழைத்துள்ளார்

    அரியலூர், 

    அரியலூர் மாவட்ட கலெக்டர் ஆனி மேரி ஸ்வர்ணா வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்,அரியலூர் மாவட்டத்தில், பிரதம மந்திரி கல்வி உதவித் தொகை திட்டத்தில் பயன்பெற விரும்பும், இதர பிற்படுத்தப்பட்டோர், பொருளாதாரத்தில் பின்தங்கியவர்கள், சீர்மரபின பழங்குடியினத்தை சேர்ந்த 9, 10 ஆம் வகுப்பு பயிலும் மாணவ, மாணவிகளுக்கு ரூ.75 ஆயிரமும், 11, 12 ஆம் வகுப்பு மாணவ, மாணவிகளுக்கு ரூ.1 லட்சத்து 25 ஆயிரமும் கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது.அரியலூர் மாவட்டத்தை சேர்ந்த விண்ணப்பதாரர் இணையதள முகவரியில் பட்டியலிடப்பட்டுள்ள பள்ளிகளில் 9 அல்லது 11 ஆம் வகுப்பில் படித்துக்கொண்டு இருக்க வேண்டும்.விண்ணப்பதாரரின் பெற்றோர் அல்லது பாதுகாவலர்களின் ஆண்டு வருமானம் ரூ.2 லட்சத்து 50 ஆயிரத்துக்கு மிகாமல் இருக்க வேண்டும்.விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி ஆகஸ்ட் 10-ம் தேதி ஆகும். விண்ணப்பங்களை திருத்தம் செய்வதற்காக ஆகஸ்ட் 12 -ம் தேதி முதல் 16 ஆம் தேதி வரை கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.இதற்கான எழுத்து தேர்வு செப்டம்பர் மாதம் 29 ஆம் தேதி நடைபெறுகிறது. மாணவ,மாணவிகளின் செயல்பாட்டில் இருக்கும் செல்போண் எண், ஆதார் எண், ஆதார் இணைக்கப்பட்ட வங்கி கணக்கு எண், வருமான சான்றிதழ், சாதி சான்றிதழ் ஆகிய ஆவணங்களுடன் விண்ணப்பிக்க வேண்டும்.

    • ஆலோசனையில் அரசுக்கும், கட்சிக்கும் இடையே பாலமாக செயல்படும் வகையில் ஒருங்கிணைப்புகுழு அமைப்பது குறித்து விவாதிக்கப்படுகிறது.
    • அரசு வகுக்கும் திட்டங்களை கட்சியினர், மக்கள் பிரதிநிதிகள் மற்றும் அதிகாரிகள் மூலம் எப்படி மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும்.

    பெங்களூர்:

    கர்நாடகாவில் கடந்த மே மாதம் நடைபெற்ற சட்ட மன்றத் தேர்தலில் காங்கிரஸ் 135 இடங்களில் வெற்றி பெற்று சித்தராமையா முதலமைச்சராக பதவியேற்றார். அவருடன் துணை முதலமைச்சராக டி.கே.சிவக்குமார் மற்றும் 8 அமைச்சர்கள் பதவியேற்றனர். தொடர்ந்து அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்பட்டு மேலும் 24 பேர் அமைச்சர்களாக பதவியேற்றனர்.

    அமைச்சர் பதவிபெற காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் இடையே கடும் போட்டி நிலவியது. சட்டமன்றத்தில் நீண்ட அனுபவமுள்ள பல தலைவர்கள் அமைச்சர் பதவி பெற கடுமையாக போராடினர். ஆனாலும் அகில இந்திய தலைமையுடன் நெருக்கத்தில் இருந்த எம்.எல்.ஏக்களுக்கு மட்டுமே அமைச்சர் பதவி வழங்கப்பட்டது.

    இந்நிலையில் அமைச்சர் பதவி கிடைக்காத சில எம்.எல்.ஏக்கள் அதிருப்தியில் இருந்து வருகின்றனர். அவர்கள் பெயரில் கடந்த சில நாட்களுக்கு முன்பு முதலமைச்சர் சித்தராமையாவுக்கு அனுப்பியதாக பரபரப்பு கடிதம் வெளியானது.

    அதில் அமைச்சர்கள் தங்களுக்கு எந்த ஒத்துழைப்பும் வழங்கவில்லை என்றும், தொகுதி வளர்ச்சி குறித்து அமைச்சர்களை சந்திக்க முடியவில்லை என்பது உள்பட பல்வேறு குற்றச்சாட்டுகள் இடம் பெற்றிருந்தது.

    இந்த கடிதத்தை ஒரு சில எம்.எல்.ஏக்கள் மறுத்தனர். ஆனால் பெரும்பாலான எம்.எல்.ஏக்கள் கருத்து தெரிவிக்கவில்லை.

    இதற்கிடையே கடந்த 27-ந் தேதி பெங்களூரில் நட்சத்திர ஓட்டலில் காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் கூட்டம் முதலமைச்சர் சித்தராமையா தலைமையில் நடந்தது. இதில் பல்வேறு பிரச்சினைகள் குறித்து விவாதிக்கப்பட்டது. குறிப்பாக காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் அறிவித்த 5 முக்கிய திட்டங்களை நிறைவேற்ற ரூ.35 ஆயிரம் கோடி தேவை உள்ள நிலையில் ரூ.12,500 கோடி பற்றாக்குறை உள்ளதால் இந்த ஆண்டு எம்.எல்.ஏக்களுக்கு தொகுதி வளர்ச்சி நிதி அளிக்க முடியாத சூழ்நிலை குறித்தும், முக்கிய வளர்ச்சி பணிகள் குறித்தும் விவாதிக்கப்பட்டது.

    பாராளுமன்ற தேர்தல் விரைவில் நடைபெற உள்ள சூழ்நிலையில் கர்நாடக காங்கிரசில் நிலவும் அசாதரண சூழ்நிலையை முடிவுக்கு கொண்டுவர அகில இந்திய காங்கிரஸ் நடவடிக்கை எடுத்துள்ளது.

    அதன்படி முதலமைச்சர் சித்தராமையா, துணை முதலமைச்சர் டி.கே.சிவக்குமார் மற்றும் முக்கிய அமைச்சர்கள் , மூத்த தலைவர்களை காங்கிரஸ் மேலிடம் வருகிற 2-ந் தேதி டெல்லிக்கு அழைத்துள்ளது. அவர்களிடம் அகில இந்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகா அர்ஜூனா கார்கே, முன்னாள் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி ஆகியோர் தனித்தனியாக ஆலோசனை நடத்துகின்றனர்.

    இந்த ஆலோசனையில் அரசுக்கும், கட்சிக்கும் இடையே பாலமாக செயல்படும் வகையில் ஒருங்கிணைப்புகுழு அமைப்பது குறித்து விவாதிக்கப்படுகிறது.

    மேலும் இந்த குழு மூலம் கட்சிக்குள் ஏற்படும் கருத்து வேறுபாடுகளை களையவும் முடிவு செய்யப்படுகிறது. மேலும் சில அமைச்சர்களை தொடர்பு கொள்ள முடியாத சூழல் உள்ளதாக புகார் கூறப்பட்டுள்ள நிலையில் அவர்களை ஒருங்கிணைந்து செயல்பட ஆலோசனைகளும் வழங்கப்படுகிறது.

    மேலும் கட்சியின் கொள்ளை, சித்தாந்தம், ஆட்சி அதிகாரத்தில் இருக்கும்போது எப்படி செயல்பட வேண்டும், அரசு வகுக்கும் திட்டங்களை கட்சியினர், மக்கள் பிரதிநிதிகள் மற்றும் அதிகாரிகள் மூலம் எப்படி மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும், கட்சிக்கு கெட்ட பெயர் வராமல் பாதுகாப்பது எப்படி, அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்யாமல் நீதி, நேர்மையாக நடப்பது, ஊழலற்ற நிர்வாகம் கொடுப்பது உள்பட பல விவகாரங்கள் குறித்து ஆலோசனை வழங்கப்படுகிறது.

    ×