search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    அரசு தொழிற் பயிற்சி நிலையங்களில் நேரடி மாணவர் சேர்க்கை
    X

    அரசு தொழிற் பயிற்சி நிலையங்களில் நேரடி மாணவர் சேர்க்கை

    • அரசு தொழிற் பயிற்சி நிலையங்களில் நேரடி மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது
    • முதலில் வருபவருக்கு முன்னுரிமை என்று அறிவிப்பு

    அரியலூர்,

    அரியலூர் மற்றும் ஆண்டிமடம் ஆகிய பகுதியிலுள்ள அரசு தொழிற் பயிற்சி நிலையங்களில் நேரடி மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது. ஏற்கனவே பயிற்சியாளர்கள் சேர்க்கை நடைபெற்றதில் மீதமுள்ள காலியிடங்களுக்கு மட்டும் இந்த நேரடி சேர்க்கை நடைபெறுகிறது. முதலில் வருபவருக்கு முன்னுரிமை அடிப்படையில் நேரடி சேர்க்கை நடைபெறுகிறது.கல்வித்தகுதி 8 ஆம் வகுப்பு தேர்ச்சி அல்லது பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். விண்ணப்பக் கட்டணமாக ரூ.50-ம், சேர்க்கை கட்டணமாக ஒரு ஆண்டு தொழிற்பிரிவு பயிற்சி கட்டணம் ரூ.185-ம், இரண்டாண்டு தொழிற்பிரிவு பயிற்சி கட்டணம் ரூ.195-ம் செலுத்த வேண்டும்.இணையதளம் வாயிலாக நேரடி சேர்க்கை வரும் 16-ந் தேி வரை நடைபெறுகிறது.

    Next Story
    ×