search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கல்வி உதவித்தொகை பெற அழைப்பு
    X

    கல்வி உதவித்தொகை பெற அழைப்பு

    • அரியலூர் மாவட்டத்தில் கல்வி உதவித்தொகை பெற விரும்புபவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டு உள்ளது
    • மாவட்ட கலெக்டர் ஆனிமேரி ஸ்வர்ணா வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு மூலம் அழைத்துள்ளார்

    அரியலூர்,

    அரியலூர் மாவட்ட கலெக்டர் ஆனி மேரி ஸ்வர்ணா வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்,அரியலூர் மாவட்டத்தில், பிரதம மந்திரி கல்வி உதவித் தொகை திட்டத்தில் பயன்பெற விரும்பும், இதர பிற்படுத்தப்பட்டோர், பொருளாதாரத்தில் பின்தங்கியவர்கள், சீர்மரபின பழங்குடியினத்தை சேர்ந்த 9, 10 ஆம் வகுப்பு பயிலும் மாணவ, மாணவிகளுக்கு ரூ.75 ஆயிரமும், 11, 12 ஆம் வகுப்பு மாணவ, மாணவிகளுக்கு ரூ.1 லட்சத்து 25 ஆயிரமும் கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது.அரியலூர் மாவட்டத்தை சேர்ந்த விண்ணப்பதாரர் இணையதள முகவரியில் பட்டியலிடப்பட்டுள்ள பள்ளிகளில் 9 அல்லது 11 ஆம் வகுப்பில் படித்துக்கொண்டு இருக்க வேண்டும்.விண்ணப்பதாரரின் பெற்றோர் அல்லது பாதுகாவலர்களின் ஆண்டு வருமானம் ரூ.2 லட்சத்து 50 ஆயிரத்துக்கு மிகாமல் இருக்க வேண்டும்.விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி ஆகஸ்ட் 10-ம் தேதி ஆகும். விண்ணப்பங்களை திருத்தம் செய்வதற்காக ஆகஸ்ட் 12 -ம் தேதி முதல் 16 ஆம் தேதி வரை கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.இதற்கான எழுத்து தேர்வு செப்டம்பர் மாதம் 29 ஆம் தேதி நடைபெறுகிறது. மாணவ,மாணவிகளின் செயல்பாட்டில் இருக்கும் செல்போண் எண், ஆதார் எண், ஆதார் இணைக்கப்பட்ட வங்கி கணக்கு எண், வருமான சான்றிதழ், சாதி சான்றிதழ் ஆகிய ஆவணங்களுடன் விண்ணப்பிக்க வேண்டும்.

    Next Story
    ×