search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    இலவச முயல் வளர்ப்பு பயிற்சி பெற அழைப்பு
    X

    இலவச முயல் வளர்ப்பு பயிற்சி பெற அழைப்பு

    • இலவச முயல் வளர்ப்பு பயிற்சி நடைபெற உள்ளது
    • 12- ந் தேதி நடைபெறுகிறது

    பெரம்பலூர்:

    பெரம்பலூர் கால்நடை மருத்துவ பல்கலைக்கழக ஆராய்ச்சி மையத்தில் வரும் 12- ந் தேதி நடைபெறும் முயல் வளர்ப்பு குறித்த இலவச பயிற்சி முகாமில் கலந்து கொள்ள அழைப்பு விடுக்கப்பட்டு உள்ளது.

    இது குறித்து அம்மைய தலைவர் டாக்டர் சுரேஷ்கு மார் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், பெரம்ப லூர் அருகே செங்குணம் - கைகாட்டி எதிரே உள்ள கால்நடை மருத்துவ பல்க லைக்கழக ஆராய்ச்சி மைய த்தில் முயல் வளர்ப்பு குறி த்த இலவச நாள் பயிற்சி முகாம் வரும் 12-ந் தேதி நடைபெறுகிறது.

    இதில் முயல் இனங்கள் மற்றும் இனப்பெருக்க மேலாண்மை, தீவன மேலாண்மை, கொட்டகை அமைக்கும் முறை, பராமரி க்கும் முறை மற்றும் நோய்த்த டுப்பு முறைகள் குறித்து பயிற்சி அளிக்கப்பட உள்ளது.

    பயிற்சியில் சேர விரும்பு வோர் கால்நடை மருத்துவ பல்கலைக்கழக பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையத்தி ற்கு நேரிலோ அல்லது செல்பேசி எண்ணில் தொடர்பு கொண்டு பெயர் பதிவு செய்து பயிற்சி பெற்று பயன்பெறலாம். பயிற்சியில் கலந்து கொள்ள வரும் போது ஆதார் அட்டை நகல் எடுத்து வரவேண்டும் என தெரிவித்து உள்ளார்.

    Next Story
    ×