search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    திருச்சியில் டைடல் பார்க் வடிவமைப்பு தயாரிக்க நிறுவனங்களுக்கு அழைப்பு
    X

    திருச்சியில் டைடல் பார்க் வடிவமைப்பு தயாரிக்க நிறுவனங்களுக்கு அழைப்பு

    • 10 ஆயிரம் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு அளிக்கும் வகையில் திருச்சியில் டைடல் பார்க் வடிவமைப்பு தயாரிக்க நிறுவனங்களுக்கு அழைப்பு
    • 10 ஆயிரம் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு அளிக்கும் வகையில் திருச்சியில் டைடல் பார்க் வடிவமைப்பு தயாரிக்க நிறுவனங்களுக்கு அழைப்பு

    திருச்சி,

    தமிழகத்தின் மையப்பகு தியான திருச்சியில் எளிதாக தொடர்பு மற்றும் இணைப்பு போக்குவரத்து வசதிகள் குறைந்த செலவு ஆகியவறறின் அடிப்படையில் தகவல் தொழில் நுட்ப நிறுவனங்களை வளர்ந்துள்ளன. திருச்சியை பொருளாதார ரீதியாக வளர்ச்சியடைய செய்யும் வகையில் ரூ.600 ேகாடி மதிப்பீட்டில், எல்காட் மற்றும் டிட்கோ நிறுவனங்கள் இணைந்து நடத்தும் தகவல் தொழில்நுட்பம் மற்றும் மென் பொருள் நிறுவனங்கள் மையமான டைடல் பார்க் அமைக்கப்படும் என தமிழக பட்ஜெட்டில் அறிவிக்கப்ப ட்டது. இதைத் தொடர்ந்து திருச்சி யில் டைடல் ப ார்க் அமைக்க வாய்ப்புள்ள இடங்களை சென்னை டைடல் பார்க் நிறுவன அதிகாரிகள் குழுவி னர் பார்வையிட்டனர். அதன்பிறகு திருச்சி- மதுரை சாலையில் 14 ஏக்கர் நிலம் கேட்டு டைடல் பார்க் சார்பில், மாநகராட்சிக்கு கடிதம் அனுப்பப்பட்டது. அதன்பேரில் தற்போது பல்வேறு வளர்ச்சி திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டு வரும் பஞ்சப்பூரிலேயே மாநகராட்சி க்கு சொந்தமான 9 ஏக்கர் நிலத்தை வழங்க மாநகராட்சி கூட்டத்தில் ஒப்புதல் அளிக்க ப்பட்டது. இதைத் தொடர்ந்து, இப்ப ணியின் அடுத்த கட்டமாக 10 லட்சம் சதுர அடியில் டைடல் பார்க் அமைக்க முடிவு செய்யப்பட்டது. இந்த திட்ட வடிவமை ப்புக்கான நிறுவனத்தை தேர்வு செய்யும் பணியை டைடல் பார்க் நிறுவனம் தொடங்கியுள்ளது. இது குறித்து அந்த நிறுவன வட்டாரங்கள் தெரிவிக்கை யில், திருச்சியில் பஞ்சப்பூர் பகுதியில் 10 ஆயிரம் இளை ஞர்களுக்கு வேலை வாய்ப்பு அளிக்கும் வகையில் முதற்க ட்டமாக 5.5 லட்சம் சதுர அடியில் டைடல் பார்க் அமைக்க முடிவு செய்யப்பட்டு அதற்கான பணிகள் தொட ங்கி நடந்து வருகிறது.

    Next Story
    ×