என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
கரூர் மாவட்டத்தில் உதவி மையங்கள் அமைப்பு
- கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டம் கரூர் மாவட்டத்தில் உதவி மையங்கள் அமைப்பு
- பொதுமக்கள் பயன்படுத்திக்கொள்ள கலெக்டர் பிரபுசங்கர் அழைப்பு
கரூர்,
கரூர் மாவட்ட கலெக்டர் பிரபு சங்கர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம் தொடர்பான சந்தேகங்கள் மற்றும் விண்ணப்பத்தின் நிலை ஆகியவற்றினை பின்வரும் அலுவலகங்களில் வழங்கப்பட்டுள்ள தொலைபேசி எண்களை அழைத்து பொதுமக்கள் தெரிந்து கொள்ளலாம்.மாவட்ட ஆட்சியர் அலுவலகம் - 9489984960, கரூர் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகம்- 9489984961, குளித்தலை வருவாய் கோட்டாட்சியர் அலுவலகம்- 9489984962, கரூர் வட்டாட்சியர் அலுவலகம்- 9489984963, அரவக்குறிச்சி - 9489984964, மண்மங்கலம் - 9489984965-, புகளூர் - 9489984966, கிருஷ்ணராயபுரம் - 9489984967, குளித்தலை - 9489984968, கடவூர் - 9489984969.
மேலும் சம்மந்தப்பட்ட வட்டாட்சியர் அலுவலகங்கள் மற்றும் இ-சேவை மையத்தில் தங்களது குடும்ப அட்டை எண்ணை அளித்து, தங்களின் விண்ணப்பத்தின் நிலையினை அறிந்து கொள்ளலாம். பொதுமக்கள் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்ட விண்ணப்பங்களின் பேரில் மேல்முறையீடு செய்ய விரும்பும் பட்சத்தில் தங்களது குடியிருப்புகளுக்கு அருகில் உள்ள இ-சேவை மையத்தின் வாயிலாக மேல்முறையீடு செய்து கொள்ளலாம். இதற்கு எவ்வித கட்டணம் செலுத்த வேண்டிய அவசியமில்லை. இச்சேவை முற்றிலும் இலவசமாக அளிக்கப்படுகிறது. மேலும் பொதுமக்கள் தங்கள் வீட்டில் இருந்தவாறே https://kmut.tn.gov.in என்ற இணையதளத்தில் தங்களது ஆதார் எண்ணை உட்செலுத்தி விண்ணப்பத்தின் நிலையினை தெரிந்து கொள்ளலாம். இதுமட்டுமின்றி முதல்வரின் முகவரி திட்டத்தின் இலவச அழைப்பேசி எண் 1100–ல் அழைத்து தங்களது கோரிக்கைகளை தெரிவித்து விபரங்களை அறிந்து கொள்ளலாம். கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் மேல்முறையீடு விண்ணப்பங்கள் அனைத்தும் இ-சேவை மையத்தில் இணையதளம் மூலமாக மட்டுமே மேற்கொள்ள இயலும். இச்சேவைகளை முற்றிலும் இலவசமாக வழங்க தமிழ்நாடு அரசின் ஆணையின்படி கரூர் மாவட்டத்தில் அனைத்து ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்று அவர் தெரிவித்துள்ளார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்