search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மதுரை மாநாட்டுக்கு அ.தி.மு.க.வினர் திரண்டு வர வேண்டும்- புறநகர் மாவட்ட சிறுபான்மை பிரிவு துணைத்தலைவர் அழைப்பு
    X

    மதுரை மாநாட்டுக்கு அ.தி.மு.க.வினர் திரண்டு வர வேண்டும்- புறநகர் மாவட்ட சிறுபான்மை பிரிவு துணைத்தலைவர் அழைப்பு

    • மதுரையில் அ.தி.மு.க எழுச்சி மாநாடு நாளை நடக்கிறது.
    • கோவையில் இருந்து 10 வாகனங்களில் பயணம்

    கோவை,

    கோவை புறநகர் அ.தி.மு.க சிறுபான்மை பிரிவு மாவட்டத் துணைத்தலைவர் செபி செபாஸ்டின் அறிக்கை ஒன்றை வெளியிட்டு உள்ளார். அதில் கூறப்பட்டு இருப்பதாவது:-

    மதுரையில் அ.தி.மு.க எழுச்சி மாநாடு நாளை நடக்கிறது. இதில் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் அனைவரும் திரளாக பங்கேற்று, கழக பொதுசெய லாளரும் முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி பழனிச்சாமியின் கரங்களை வலுப்படுத்த வேண்டும்.

    கோவை புறநகர் தெற்கு மாவட்ட செயலாளரும், எம்.எல்.ஏ.வுமான எஸ்.பி.வேலுமணி தலைமையில் மாவட்ட சிறுபான்மை பிரிவு சார்பில் கோவையில் இருந்து மதுரை மாநாட்டுக்கு செல்வதற்காக 10 வாகனங்கள் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளன.

    எனவே கழக நிர்வாகிகள் அனைவரும் அலைகடலென திரண்டு வந்து, மதுரை மாநாட்டை வரலாற்று வெற்றி பெற செய்ய வேண்டும். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.

    Next Story
    ×