search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அரசு"

    • கடந்த 2 ஆண்டுகளாக தி.மு.க. அரசு மக்களுக்கு எதுவும் செய்து கொடுக்கவில்லை.
    • சாராயத்தால், போலி மதுபானங்களால் இறப்பு அதிகமாக உள்ளது.

    உடுமலை :

    உடுமலை மத்திய பஸ் நிலையம் முன்பு திருப்பூர் மேற்கு மாவட்ட அ.தி.மு.க. சார்பில் முன்னாள் அமைச்சர் உடுமலை கே.ராதாகிருஷ்ணன் எம்.எல்.ஏ. தலைமையில் தி.மு.க. அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    அப்போது உடுமலை கே.ராதாகிருஷ்ணன் பேசியதாவது:- கடந்த 2 ஆண்டுகளாக தி.மு.க. அரசு மக்களுக்கு எதுவும் செய்து கொடுக்கவில்லை. 24 மணி நேரமும் பார் திறந்து வைத்துள்ளது. சாராயத்தால், போலி மதுபானங்களால் இறப்பு அதிகமாக உள்ளது. சட்டம்-ஒழுங்கை பாதுகாக்க தவறியதால் கொலை, கொள்ளை அதிகரித்து உள்ளது. பொதுமக்களுக்கும் அதிகாரிகளுக்கும் பாதுகாப்பு இல்லை. ஒரு அரசு அமைகிறது என்றால் அது மக்களுக்கான அரசாக இருக்க வேண்டும். இந்த அரசு மக்களுக்கான இல்லை. அவர்களுக்கு தேவையான கம்பெனிகளை வைத்துக்கொண்டு வீட்டு வசதி நிலைகளை எடுத்து வியாபாரமாக செய்து வருகிறது. மக்களுக்கு தேவையான திட்டங்களை நிறைவேற்றாத செயல்படாத அரசாக தி.மு.க. அரசு உள்ளது. எனவே தமிழகத்தில் மீண்டும் பொற்கால ஆட்சி எடப்பாடியார் தலைமையில் அமைவதற்கு அனைவரும் இரவு பகல் பாராது அயராது உழைக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

    அதைத்தொடர்ந்து தி.மு.க. அரசை கண்டித்து கண்டன கோஷம் எழுப்பப்பட்டது. இந்தப்போராட்டத்தில் பல்லடம் எம்.எஸ்.ஆனந்தன் எம்.எல்.ஏ. முன்னாள் எம்.எல்.ஏ.பரமசிவம், உடுமலை நகரச்செயலாளர் ஹக்கீம், ஒன்றிய செயலாளர்கள் முருகேசன், அன்பர்ராஜன், பிரனேஷ் உள்பட அ.தி.மு.க. நிர்வாகிகள், பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    • ஒருவர் படுகாயம்
    • இந்த விபத்தில் அரசு பஸ் ஓட்டுநரும், பயணிகளும் சிறிய காயங்களுடன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.

    கன்னியாகுமரி:

    திருநெல்வேலி பகுதியை சேர்ந்தவர் பாண்டியன். லாரி டிரைவர். இவர் இன்று காலை திருவனந்தபுரத்தில் இருந்து திருநெல்வேலி நோக்கி லாரியில் சென்றுக்கொண்டிருந்தார்.

    களியக்காவிளை அருகே பி.பி.எம். சந்திப்பில் அவர் வந்தபோது அவரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி எதிரே நாகர்கோவிலில் இருந்து திருவனந்தபுரம் நோக்கி சென்ற அரசு பஸ்சின் மீது பயங்கரமாக மோதியது. இதில் அரசு பஸ்சின் முன் பக்க கண்ணாடி முற்றுலுமாக நொறுங்கியது.

    இந்த விபத்தில் அரசு பஸ் ஓட்டுநரும், பயணிகளும் சிறிய காயங்களுடன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். லாரி டிரைவர் படுகாயமடைந்தார். அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு குழித்துறை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

    இதுகுறித்து தகவல் அறிந்த களியக்காவிளை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    • மக்கள் தி.மு.க. ஆட்சியின் மீது கடும் அதிருப்தியில் உள்ளனர்.
    • எங்கு பார்த்தாலும் லஞ்சம் தலைவிரித்தாடுகிறது.

    திருப்பூர் :

    அ.தி.மு.க. திருப்பூர் மாநகர் மாவட்டத்தின் சார்பில் காங்கயம் சட்டமன்ற தொகுதி, திருப்பூர் வடக்கு, தெற்கு சட்டமன்ற தொகுதிகளுக்கான பூத் கமிட்டி செயல்வீரர்கள் கூட்டம் காங்கயம், திருப்பூர் அங்கேரிப்பாளையம், திருப்பூரில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகம் ஆகிய 3 இடங்களில் நடைபெற்றது. கூட்டத்திற்கு திருப்பூர் மாநகர் மாவட்ட செயலாளர் பொள்ளாச்சி ஜெயராமன் எம்.எல்.ஏ., தலைமை தாங்கினார். திருப்பூரில் நடந்த கூட்டத்தில் அ.தி.மு.க. தலைமை நிலைய செயலாளரும், கொங்கு மண்டல பொறுப்பாளருமான முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி எம்.எல்.ஏ. பங்கேற்று பேசியதாவது: அ.தி.மு.க. ஆட்சியில் போடப்பட்ட திட்டங்களில் கட்டப்பட்ட கட்டிடங்களைத்தான், தற்போது தி.மு.க. ஆட்சியில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்து வருகிறார். மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை தி.மு.க. அரசு நிறைவேற்றவில்லை. இதனால் மக்கள் தி.மு.க. ஆட்சியின் மீது கடும் அதி–ருப்–தி–யில் உள்ளனர்.

    தி.மு.க. ஆட்சிக்கு வந்ததும் கட்டுமான பொருட்கள் விலை உயர்வு ஏற்பட்டது. எங்கு பார்த்தாலும் லஞ்சம் தலைவிரித்தாடுகிறது. கள்ளச்சாராயம் குடித்து பலியாகி வருகிறார்கள். இதுதான் திராவிட மாடல் அரசு. இந்த ஆட்சியை தூக்கி எறிய வேண்டும் என்று மக்கள் முடிவு செய்து விட்டனர்.

    வருகிற நாடாளுமன்ற தொகுதியில் திருப்பூர், நீலகிரி, கோவை, பொள்ளாச்சி தொகுதி மட்டுமல்ல 40 தொகுதிகளையும் அ.தி.மு.க. கைப்பற்றும். வரும் சட்டமன்ற தேர்தலில் 200 தொகுதிகளில் வெற்றி பெற்று எடப்பாடி பழனிசாமி மீண்டும் தமிழக முதல்-அமைச்சராவது உறுதி. இவ்வாறு அவர் பேசினார்.

    மேற்கண்ட நிகழ்ச்சிகளில் எம்.எல்.ஏ.க்கள் விஜயகுமார், எம்.எஸ்.எம்.ஆனந்தன், முன்னாள் எம்.பி. சிவசாமி, முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் பழனிசாமி, சு.குணசேகரன், என்.எஸ்.என்.நடராஜ், அம்மா பேரவை மாநில துணை செயலாளர் முத்து வெங்கடேஸ்வரன்,மாமன்ற எதிர்க்கட்சி தலைவர் திருப்பதி, இணை செயலாளர் சங்கீதா சந்திரசேகர், துணை செயலாளர் பூலுவப்பட்டி பாலு, அம்மா பேரவை தலைவர் அட்லஸ் லோகநாதன், இணை செயலாளர் ஆண்டவர் பழனிசாமி, திருப்பூர் மாநகர் மாவட்ட வர்த்தக அணி செயலாளர் எஸ்.பி.என்.பழனிசாமி, இணை செயலாளர் விவேகானந்தன், வக்கீல் அணி செயலாளர் முருகேசன், இணை செயலாளர் பா.சு.மணிவண்ணன், அண்ணா தொழிற்சங்க செயலாளர் கண்ணபிரான், காங்கயம் நகர செயலாளர் வெங்கு மணிமாறன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • கடந்த 2 ஆண்டுகளில் மாவட்ட அரசு இசைப்பள்ளி கட்டிடம் கட்டுவதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது.
    • 2 புயல் பாதுகாப்பு மைய கட்டிடம் ரூ.16 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட உள்ளது.

    சீர்காழி:

    மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி பழைய பஸ் நிலையம் அருகில் நகர தி.மு.க சார்பில் இரண்டு ஆண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது.

    கூட்டத்திற்கு மாவட்ட செயலாளர் நிவேதா முருகன் எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார்.

    ஒன்றிய செயலாளர்கள் பிரபாகரன், ரவிக்குமார், மலர்விழி திருமாவளவன், பஞ்சுகுமார், நகர சபை தலைவர் துர்கா ராஜசேகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    சீர்காழி நகர செயலாளர் சுப்பராயன் வரவேற்பு பேசினார். கூட்டத்தில் பன்னீர்செல்வம் எம்.எல்.ஏ கட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து சிறப்புரையாற்றினார்.

    தொடர்ந்து அமைச்சர் மெய்யநாதன் பேசுகையில்,

    சீர்காழி சட்டமன்றத் தொகுதியில் கடந்த இரண்டு ஆண்டுகளில் மாவட்ட அரசு இசைப்பள்ளி கட்டிடம், புதிய நூலக கட்டிடம், உதவி கலெக்டர் அலுவலக கட்டிடம் உள்ளிட்ட கட்டிடங்கள் கட்டுவதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது.

    இதே போல் தொகுதி முழுவதும் வகுப்பறை கட்டிடம், அங்கன்வாடி மைய கட்டிடம், நியாய விலை கட்டிடம் உள்ளிட்ட பல்வேறு கட்டிடங்கள்கட்டப்பட்டு திறக்கப்பட்டுள்ளது.

    கொள்ளிட ஆற்றுக் கரையில் வசிக்கும் மக்களின் கோரிக்கையை ஏற்று இரண்டு புயல் பாதுகாப்பு மைய கட்டிடம் ரூ.16 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட உள்ளது. மக்களைப் பற்றி சிந்திக்கும் ஒரே அரசு தி.மு.க அரசு தான்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    இந்த கூட்டத்தில் சீர்காழி ஒன்றிய குழு தலைவர்கள் கமலஜோதி தேவேந்திரன், ஜெயபிரகாஷ், மாவட்ட பொருளாளர் அலெக்ஸாண்டர், மாவட்ட அறங்காவல் குழு தலைவர் சுவாமிநாதன், நகர நிர்வாகிகள் பந்தல்முத்து, பாஸ்கரன், சங்கர், செல்வமுத்துக்குமார், சரவணன் உள்ளிட்ட மாவட்ட, ஒன்றிய, நகர, கிளைக், பேரூர் கழக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். முடிவில் வார்டு செயலாளர் கவுதமன் நன்றி கூறினார்.

    • சேலம் -சென்னை நான்கு வழிப் பாதையில் 4 -ம் நம்பர் அரசு டவுன் பஸ் சுமார் 50-க்கும் மேற்பட்ட பயணிகளை ஏற்றிக்கொண்டு சென்று கொண்டிருந்தது.
    • அரசு பேருந்தின் டயர் மிகவும் மோசமாக இருந்ததால் டயர் வெடித்தது.

    ஆத்தூர்:

    சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே உள்ள தலைவாசல் பகுதிக்கு ஆத்தூரிலிருந்து தலைவாசலுக்கு சேலம் -சென்னை நான்கு வழிப் பாதையில் 4 -ம் நம்பர் அரசு டவுன் பஸ் சுமார் 50-க்கும் மேற்பட்ட பயணிகளை ஏற்றிக்கொண்டு சென்று கொண்டிருந்தது.

    அப்பொழுது மணி விழுந்தான் என்னும் இடத்தில் அரசு பேருந்தின் டயர் மிகவும் மோசமாக இருந்ததால் டயர் வெடித்தது. இதில் அதிர்ஷ்டவசமாக விபத்துக்கள் எதுவும் இல்லாமல் சாலையின் ஓரமாக பேருந்து நிறுத்தப்பட்டது. அதன் பின்னர் பேருந்தில் பயணிகள் அனைவரும் கீழே இ அந்த பேருந்தில் டயர் மாற்றுவதற்கான ஸ்டெப்னி டயர் இல்லாததால் மாற்று பேருந்து 31 -ம் நம்பர் பேருந்து வரவழைக்கப்பட்டு அதிலிருந்து ஸ்டெப்னி டயரை பயன்படுத்தினார்கள். பின்னர் பயணிகள் அனைவரும் மாற்று பேருந்தின் ஏற்றி தலைவாசலுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அரசு பேருந்தில் ஸ்டெபி டயர் இல்லாததால் சுமார் ஒரு மணி நேரமாக சாலையிலேயே பயணிகள் அனைவரும் நிறுத்தி வைக்கப்பட்டனர்.

    • எடப்பாடி அருகே கல்வ டங்கம் காவிரி ஆற்றில் கடந்த 2 தினங்களுக்கு முன்பு மூழ்கி உயிரிழந்தார்.
    • தமிழக அரசு சார்பில் ரூ. 2 லட்சம் நிவாரண நிதி வழங்க அரசு உத்தரவிட்டது.

    மகுடஞ்சாவடி:

    சேலம் மாவட்டம், சங்ககிரி வட்டம், மகுடஞ்சா வடி ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட கன்னந்தேரி ஊராட்சி கோசாரிப்பட்டி காட்டு வளவில் வசித்து வந்த மாது மகன் மணி கண்டன்(வயது20). கல்லூரி மாணவரான இவர் எடப்பாடி அருகே கல்வ டங்கம் காவிரி ஆற்றில் கடந்த 2 தினங்களுக்கு முன்பு மூழ்கி உயிரிழந்தார்.

    அவரது குடும்பத்திற்கு தமிழக அரசு சார்பில் ரூ. 2 லட்சம் நிவாரண நிதி வழங்க அரசு உத்தரவிட்டது. இதை யடுத்து ரூ.2 லட்சத்துக்கான காசோலையை சங்ககிரி கோட்டாட்சியர் (பொறுப்பு) தணிகாசலம் அந்த மாண வன் வீட்டிற்கு நேரில் சென்று அவரது குடும்பத்தி னரிடம் வழங்கினார்.

    இந்நிகழ்ச்சியில் சங்ககிரி தாசில்தார் பானுமதி, எர்ணாபுரம் வருவாய் ஆய்வாளர் செல்வராஜ், கன்னந்தேரி கிராம நிர்வாக அலுவலர் குப்புசாமி உள்ளிட்ட அரசு அலுவ லர்களும், மகுடஞ்சாவடி ஒன்றிய திமுக விவசாய அணி அமைப்பாளர் சுரேஷ்குமார் உள்ளிட்ட தி.மு.க. நிர்வாகிகளும் கலந்து கொண்டனர்.

    • அமைச்சர் மனோ தங்கராஜ் பேச்சு
    • ஏழைப் பெண்களுக்கு திருமண நிதி உதவி மற்றும் திருமாங்கல்யத்திற்கு தங்கம் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.

    கன்னியாகுமரி:

    குமரி மாவட்ட சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறையின் கீழ் ஏழைப் பெண்களுக்கு திருமண நிதி உதவி மற்றும் திருமாங்கல்யத்திற்கு தங்கம் வழங்கும் நிகழ்ச்சி மாவட்ட கலெக்டர் ஸ்ரீதர், தலைமையில், நாகர்கோவில் மாநகராட்சி மேயர் மகேஷ் முன்னிலையில் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாக பேரூராட்சி அலுவலக கூட்டரங்கில் நேற்று நடைபெற்றது. நிகழ்ச்சியில் தமிழ்நாடு தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சர் மனோ தங்கராஜ் கலந்து கொண்டு ஏழை பெண்களுக்கு திருமண நிதி உதவி வழங்கி பேசியதா வது:-

    தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான தமிழ்நாடு அரசு பொதுமக்களை சார்ந்த அரசாக திகழ்வதால், ஏழை, எளிய மக்களின் நலனில் மிகுந்த அக்கறை கொண்டு பல்வேறு நலத்திட்ட உதவிகள் மற்றும் வளர்ச்சி திட்டப் பணிகளை நிறைவேற்றி வருகிறது. கலைஞர் ஏழை விதவை பெண்களின் நலனை கருத்தில் கொண்டு, ஈ.வெ.ரா.மணியம்மையார் நினைவு ஏழை விதவை மகள் திருமண நிதி உதவி திட்டத்தினை தொடங்கி வைத்தார். மேலும், அன்னை தெரசா நினைவு ஆதரவற்ற பெண்கள் திருமண நிதி உதவி திட்டம், டாக்டர் முத்துலெட்சுமிரெட்டி அம்மையார் நினைவு கலப்பு திருமண நிதிஉதவி திட்டம், டாக்டர் தர்மாம்பாள் அம்மையார் நினைவு விதவை மறுமண நிதி உதவி திட்டம் என நான்கு வகையான திருமண உதவி திட்டங்களுக்கு 2022-2023 நிதி ஆண்டில் 55 பயனாளிகளுக்கு திருமண உதவித்தொகை மற்றும் திரு மாங்கல்யத்திற்கு 8 கிராம் தங்கம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

    அதில் பட்டதாரிகள் 52 நபர்கள் மற்றும் பட்டதாரி அல்லாத 3 நபர்கள் என 55 நபர்களுக்கு தங்க நாணயங்களும், ஒரு பட்டதாரிக்கு ரூ.50 ஆயிரம் வீதம் 52 பட்டதாரிகளுக்கு ரூ.26 லட்சமும், பட்டதாரி அல்லாதவர்களுக்கு ரூ.25 ஆயிரம் வீதம் 3 நபர்களுக்கு ரூ.75 ஆயிரமும் வழங்கப்பட்டுள்ளது. 2021- 2022 நிதியாண்டில் 10-ம் வகுப்பு படித்த 970 ஏழை பெண்களுக்கு தலா ரூ.25 ஆயிரம் வீதம் ரூ. 2.425 கோடி திருமண நிதியுதவியும், பட்டம் மற்றும் பட்டயம் படித்த 2380 ஏழைப்பெண்களுக்கு தலா ரூ.50 ஆயிரம் வீதம் ரூ.11.90 கோடி, திருமண நிதியுதவியும் மற்றும் 8 கிராம் எடையுள்ள 3350 தங்க நாணயங்கள் வழங்கப்பட்டுள்ளது.

    மேலும், பெண்களின் முன்னேற்றத்திற்கு டாக்டர் கலைஞர் மூன்று உன்னதமான திட்டங்களை அறிமுகப்படுத்தி அவற்றை சிறப்பாக செயல்படுத்தி அனைத்துத்தரப்பட்ட மகளிர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்துள்ளார்கள்.

    கலைஞர் வழியில் செயல்படும் தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பெண்களின் முன்னேற்றத்திற்கென இரண்டு உன்னதமான திட்டங்களை அறிவித்துள்ளார். அவற்றில் பெண்கள் இடைநிற்றலை தவிக்கும் வகையிலும், அரசுப்பள்ளிகளில் பயின்று உயர் கல்வி பயிலும் நோக்கிலும் புதுமைப்பெண் என்ற திட்டத்தினை அறிமுகப்படுத்தி மாதந்தோறும் ரூ.1000 வழங்கும் நிகழ்ச்சியினை இரண்டு கட்டங்களாக தொடங்கி வைத்ததின் அடிப்படையில், குமரி மாவட்டத்தில் புதுமைப் பெண் திட்டத்தின் கீழ் 149" கல்வி நிறுவனங்களிலிருந்து 3168 ஏழை, எளிய மாணவியர்கள் ரூ.1000 உதவித்தொகை பெற்று வருகின்றனர்.

    இந்த ஆண்டிற்கான நிதிநிலை அறிவிக்கையில் தேர்தல் நேரத்தில் அளித்த வாக்குறுதியினை நிறைவேற்றும் வகையில் இல்லத்தரசிகளுக்கு ரூ.1000 உரிமை தொகை வரும் செப்டம்பர் மாதம் முதல் வழங்கப்படும் எனவும் அறிவித்துள்ளார்கள். இவ்வாறு பெண்களின் வாழ்வில் ஏற்றம் பெற பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கி வரும் தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசிற்கு பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு நல்குமாறு கேட்டுக்கொள்வதோடு, ஏழை மக்களின் நலன் காக்கும் அரசாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு செயல்படுகிறது என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    மாவட்ட சமூக நல அலுவலர் சரோஜினி, நாகர்கோவில் மாநகராட்சி துணை மேயர் மேரி பிரின்சி லதா, முன்னாள் ஊராட்சி ஒன்றிய குழு உறுப்பினர் பூதலிங்கம் பிள்ளை, மாவட்ட சமூகநல அலுவலக கண்காணிப்பாளர் தேவதாஸ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    • பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையின் கீழ் நாடு முழுவதும் மத்திய அரசால் திறக்கப்பட்டுள்ள 9,000-க்கும் மேற்பட்ட மக்கள் மருந்தகங்கள் மூலம் அனைத்து மக்களுக்கும் சுகாதார வசதிகள் கிடைப்பதற்கு வகை செய்யப்பட்டுள்ளது.
    • இந்த மருந்தகங்களில் கிடைக்கும் 800-க்கும் மேற்பட்ட மருந்துகள் பிரபல நிறுவனங்க ளின் விலையைவிட 50 முதல் 90 சதவீதம் வரை குறைவாக இருக்கின்றன.

    சேலம்:

    மக்களுக்கு குறைவான விலையில் மருந்துகள் கிடைக்க வேண்டும் என்பதை நோக்க மாகக் கொண்டு, நாடு முழுவ தும் மக்கள் நல மருந்தகங்கள் எனும் மலிவு விலை மருந்தகங்களை மத்திய அரசு திறந்துள்ளது. பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையின் கீழ் நாடு முழுவதும் மத்திய அரசால் திறக்கப்பட்டுள்ள 9,000-க்கும் மேற்பட்ட மக்கள் மருந்த கங்கள் மூலம் அனைத்து மக்க ளுக்கும் சுகாதார வசதிகள் கிடைப்பதற்கு வகை செய்யப்பட்டுள்ளது.இந்த மருந்தகங்களில் கிடைக்கும் 800-க்கும் மேற்பட்ட மருந்துகள் பிரபல நிறுவனங்க ளின் விலையைவிட 50 முதல் 90 சதவீதம் வரை குறைவாக இருக்கின்றன. குறைவான விலையில் மருந்து கிடைப்பதால், அதிக விலையுடைய மருந்துகளை வாங்கும் நெருக்கடியில் இருந்து மக்களுக்கு நிவாரணம் அளிக்கிறது.

    சேலத்தில்...

    தமிழகம் முழுவதும் 500-க்கும் மேற்பட்ட மருந்தகங்கள் செயல்பட்டு வருகின்றன. கோவையில் 56, ஈரோட்டில் 29, சேலத்தில் 27, திருப்பூரில் 13, நாமக்கல்- 13, மக்கள் நல மருந்த கங்கள் செயல்படுகின்றன.

    இந்த நிலையில் மத்திய அரசு இவற்றின் எண்ணிக்கையை மேலும் அதிகரிக்க முடிவு செய்துள்ளது. அதன்படி இந்த ஆண்டு இறுதிக்குள் நாடு முழுவ தும் மக்கள் மருந்த கங்களின் எண்ணிக்கையை 10,000-ஆக அதிகரிக்க வேண்டும் என்ற அடிப்படையில் மத்திய அரசு மும்முரமாக பணியாற்றி வருகிறது.

    • தேங்காய் விலையும் குறைந்து ரூ 9 முதல் 10 க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
    • இளநீர் ரூ.15 முதல் 17 வரை குறைந்த விலைக்கு இடைத்தரகர்கள் கொள்முதல் செய்து செல்கின்றனர்.

    உடுமலை :

    உடுமலை சுற்று வட்டாரப் பகுதிகளில் தென்னை சாகுபடி பெருமளவில் செய்யப்படுகிறது. இயற்கை தந்துள்ள வரப்பிரசாதமான இளநீர் ஒரு முழுமையான சத்துள்ள நீராகும். இதில் சோடியம்,பொட்டாசியம், கால்சியம், மக்னிசியம், செலினியம், நார்ச்சத்து, இரும்புச்சத்து உள்ளிட்டவை அடங்கி உள்ளது. இளநீர் குடிப்பதால் உடல் சூடு கட்டுப்படுவதுடன், மலச்சிக்கல், சிறுநீர் எரிச்சல், வாய் மற்றும் வயிற்றுப்புண் குணமாவதுடன், முகப்பருக்கள் கட்டுப்பட்டு சரும பாதிப்பும் சீராகும்.மேலும் ரத்தத்தை சுத்திகரித்து ரத்த கொதிப்பை குறைத்து குழந்தைகளின் மூளை வளர்ச்சி அடையவும் உதவுகிறது.இதில் உள்ள லாரிக் அமிலம் முதுமை ஏற்படாமல் தடுக்கிறது.

    இவ்வளவு சத்துக்கள் சிறப்புகள் வாய்ந்த இளநீரை எப்பொழுது வேண்டுமானலும் குடிக்கலாம். ஆனால் காலையில் வெறும் வயிற்றில் குடிப்பது சிறந்தது என ஊட்டச்சத்து நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.விவசாயிகளின் பிரதான தொழிலாக உள்ள தென்னை சாகுபடியில் தற்போதைய சூழலில் பெரியளவில் வருமானம் கிடைப்பதில்லை.தேங்காய் விலையும் குறைந்து ரூ 9 முதல் 10 க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. கூடவே இளநீர் ஒன்றை ரூ 15 முதல் 17 வரை இடம் குறைந்த விலைக்கு இடைத்தரகர்கள் கொள்முதல் செய்து செல்கின்றனர். ஆனால் கூடுதல் விலைக்கு விற்பனை செய்து லாபம் ஈட்டிக் கொள்கின்றனர். இதனால் விவசாயிகளுக்கு தொடர்ந்து இழப்பு ஏற்பட்டு வருகிறது.இது குறித்து விவசாயிகள் கூறுகையில், நிலைத்து நின்று வருமானத்தை அளிக்கக்கூடிய தென்னை சாகுபடியை பரம்பரை பரம்பரையாக செய்து வருகின்றோம். தேங்காய் மற்றும் இளநீரை பறித்து விற்பனை செய்வதில் ஏற்பட்டுள்ள கூலி உயர்வு, இடுபொருட்கள் ,பராமரிப்பு செலவு அதிகரிப்பு, விலை குறைவு போன்ற காரணங்களால் பெரும் பின்னடைவை சந்தித்து வருகின்றோம். இந்த சூழலில் உடலுக்கு ஆரோக்கியத்தை அளிக்கக்கூடிய கோடைகால பானமான இளநீரை குறைந்த விலைக்கு இடைத்தரகர்கள் கொள்முதல் செய்து செல்கின்றனர்.ஆனால் சில்லறை மற்றும் மொத்த வியாபாரிகளுக்கும் இரண்டு மடங்கு விலைக்கு விட்டு விற்பனை செய்து விடுகின்றனர். இதனால் வியர்வை சிந்தி உழைப்பை கொட்டி இரவு பகல் பாராமல் பாடுபட்டு பொருளை விளைவித்த எங்களுக்கு லாபம் கிடைப்பதில்லை.

    எனவே அரசு விவசாயிகளிடம் நேரடியாக இளநீரை கொள்முதல் செய்து விற்பனை செய்வதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். லாபத்தை விவசாயியும் அரசும் பங்கிட்டு கொள்ளலாம். இதன் மூலமாக விவசாயியும் பயன் அடைவதுடன் வேலையில்லா தொழிலாளர்களுக்கும் புதிய வேலை வாய்ப்புகள் உருவாகும் என்று தெரிவித்தனர்.

    • தளவாய்சுந்தரம் எம்.எல்.ஏ. வலியுறுத்தல்
    • இல்லை என்றால் பொதுமக்களை ஒன்று திரட்டி மாபெரும் போராட்டம் நடத்தப்படும்.

    நாகர்கோவில்:

    முன்னாள் அமைச்சர் தளவாய்சுந்தரம் எம்.எல்.ஏ. வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    கன்னியாகுமரி சட்ட மன்ற தொகுதிக்கு உட்பட்ட பல குக்கிராம ஊராட்சி களிலும், குறிப்பாக ஆத்திக்காட்டு விளை போன்ற பகுதிகளில் செயல்ப டுகின்ற, கிராம ஊராட்சி அரசு பள்ளிகள் அங்கன் வாடிகளில் மின்கட்டணம் செலுத்த வில்லை என்று மின்வாரியத்தின் மூலம் மின் இணைப்புகள் துண்டிக்கப்பட்டுள்ளது. இதனால் அரசுபள்ளிகளில் குடிநீர் மற்றும் கழிப்பிடத்திற்கு தேவை யான தண்ணீர் கிடைக்காமல் சுகாதார கேடு ஏற்படுகின்ற சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

    மேலும் பல கிராம ஊராட்சிகளில் மின் இணைப்பு துண்டிக்கப் பட்டதால் பொது மக்களுக்கு தேவையான குடிநீர் விநியோகிக்க முடியாமல் பொதுமக்களுக்கு குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் நிலை உள்ளது. மின்சார துண்டிப்பின் காரணமாக அழகியபாண்டியபுரம் கூட்டு குடி நீர் திட்டம் மூலம் பயன்பெருகின்ற சுமார் 225 கிராமங்களில் உள்ள பொதுமக்கள் தண்ணீர் கிடைக்காமல் மிகவும் அவதிக்குள்ளாகி யுள்ளனர். இதுபோன்று தோவாளை அரசினர் விருந்தினர் மாளிகையிலும் மின்வாரி யத்தின் மூலம் மின் இணைப்பு துண்டிக்கப் பட்டுள்ளது.

    எனவே கிராம ஊராட்சிகள், பள்ளிகள் மற்றும் அங்கன்வாடி மையங்களில் துண்டிக்கப்பட்ட மின் இணைப்பினை உடனடியாக வழங்க மின்சார வாரியமும், அரசும் நடவ டிக்கை எடுக்க வேண்டும். இல்லை என்றால் பொதுமக்களை ஒன்று திரட்டி மாபெரும் போராட்டம் நடத்தப்படும். இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார்.

    • கொளத்தூர் அருகே கோவிந்தபாடி பகுதியை சேர்ந்த மீனவர் காரவடையான் என்கிற ராஜா கர்நாடக வனத்துறையினரால் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
    • இதனால் கர்நாடக மாநிலத்தில் இருந்து மேட்டூர், சேலம், ஈரோடு பகுதிகளுக்கு இயக்கப்பட்டு வந்த கர்நாடக அரசு பஸ்கள் நிறுத்தப்பட்டன.

    சேலம்:

    சேலம் மாவட்டம் கொளத்தூர் அருகே கோவிந்தபாடி பகுதியை சேர்ந்த மீனவர் காரவடையான் என்கிற ராஜா கர்நாடக வனத்துறையினரால் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனால் கர்நாடக மாநிலத்தில் இருந்து மேட்டூர், சேலம், ஈரோடு பகுதிகளுக்கு இயக்கப்பட்டு வந்த கர்நாடக அரசு பஸ்கள் நிறுத்தப்பட்டன. தற்போது இயல்பு நிலை திரும்பினாலும் 5-வது நாளாக கர்நாடக பஸ்கள் கொளத்தூர் அருகே உள்ள தமிழக- கர்நாடக மாநில எல்லையில் உள்ள பாலாறு சோதனைச்சாவடி வழியாக இயக்கப்படவில்லை.

    • தமிழ்நாடு அரசு ஏழை, எளிய கிராமப்புற மக்களுக்காக பல்வேறு நலத் திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.
    • பொதுமக்கள் அரசு நலத்திட்ட உதவிகளை பெற்று பயன்பெற வேண்டும்.

    நாகர்கோவில்:

    திற்பரப்பு பேரூராட்சிக் குட்பட்ட தும்பக்கோடு பஸ் நிலையத்தில் தமிழ்நாடு அரசின் சாதனைகள் மற்றும் சிறப்பு திட்டங்கள் குறித்து பொதுமக்கள் அறிந்து கொண்டு பயன்பெறும் வகையில் மாவட்ட செய்தி மக்கள் தொடர்புத் துறை யின் சார்பில் புகைப்படக் கண்காட்சி நடைபெற்றது.இதுகுறித்து கலெக்டர் அரவிந்த் தெரிவித்ததாவது:-

    தமிழ்நாடு அரசு ஏழை, எளிய கிராமப்புற மக்களுக்காக பல்வேறு நலத் திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. முதல்-அமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீடு திட்டத்தில் சிகிச்சை அளிக்கும் திட்டம், குமரி மாவட்டத்தில் கனமழை யினால் பாதிக்கப்பட்ட இடங்கள் போர்க்கால அடிப்படை யில் சீரமைக்கப்பட்டதை நேரில் பார்வையிட்டது உள்ளிட்ட பல்வேறு திட்டங் கள் புகைப்பட கண்காட்சியில் இடம் பெற்று இருந்தது. பொதுமக்கள் இதனை பார்வையிட்டு அரசின் திட்டங்களை தெரிந்து கொண்டு அனைத்து திட்டத்தின்கீழ் வழங்கப்படும் அரசு நலத்திட்ட உதவிகளை பெற்று பயன்பெற வேண்டும்.

    இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    ×