search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தொகை"

    • சம்பவத்தன்று சதீஷ்குமார், மோகன்குமார் ஆகியோர் விக்னேஷின் வீட்டிற்கு சென்று பாக்கி தொகையை கேட்டுள்ளனர்
    • ஆத்திரமடைந்த விக்னேஷ் வீட்டில் இருந்த சூரி கத்தியை எடுத்து வந்து சதீஷ்குமாரை தலை மற்றும் கையில் வெட்டினார்.

    தாரமங்கலம்:

    சேலம் மாவட்டம் தாரமங்கலம் அருகே உள்ள பாப்பம்பாடி கிராமம் நத்தியாம்பட்டி பகுதியை சேர்ந்தவர் பழனிசாமி. இவரது மகன்கள் சதீஷ்குமார் (27), மோகன்குமார் (24). இருவரும் தறிதொழில் செய்து வருகின்றனர்.

    இவர்கள் கடந்த 1 ஆண்டுக்கு முன்பு துட்டம்பட்டி பைபாஸ் அருவங்காடு பகுதியை சேர்ந்த மார்க்கண்டன் மகன் விக்னேஷ் (24) என்பவருக்கு ரூ.10 ஆயிரத்துக்கு சேலை கொடுத்துள்ளனர். அதில் ரூ.8 ஆயிரத்து 500-ஐ பெற்றுக்கொண்டு ரூ.1500 பாக்கி வைத்துள்ளதாக கூறப்படுகிறது.

    சம்பவத்தன்று சதீஷ்குமார், மோகன்குமார் ஆகியோர் விக்னேஷின் வீட்டிற்கு சென்று பாக்கி தொகையை கேட்டுள்ளனர். அப்போது ஆத்திரமடைந்த விக்னேஷ் வீட்டில் இருந்த சூரி கத்தியை எடுத்து வந்து சதீஷ்குமாரை தலை மற்றும் கையில் வெட்டினார். இதை மோகன்குமார் தடுக்க முயன்றபோது அவரையும் கத்தியால் தலை மற்றும் கை பகுதியில் வெட்டி காயப்படுத்தினார்.

    இருவரையும் அக்கம் பக்கத்தினர் மீட்டு ஓமலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர். இதுபற்றி தாரமங்கலம் போலீசில் புகார் அளித்தனர். அதன்பேரில் போலீசார் விக்னேஷ் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.

    • சம்பா சாகுபடி இயற்கை சீற்றங்களால் பாதிக்கப்பட்டது.
    • பாதிக்கப்பட்ட அனைத்து விவசாயிகளுக்கும் முழுமையான பயிர் காப்பீட்டு தொகை வழங்க வேண்டும்.

    திருவாரூர்:

    திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட கலெக்டர் சாருஸ்ரீ தலைமையில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் திருவாரூர் மாவட்டத்திலிருந்து ஏராளமான விவசாயிகள் மற்றும் வேளாண் துறை வருவாய்த்துறை உள்ளிட்ட பல்வேறு துறையைச் சேர்ந்த அதிகாரிகள் கலந்து கொண்டனர். கூட்டம் தொடங்கியவுடன் மறைந்த வேளாண் விஞ்ஞானி எம்.எஸ். சுவாமிநாதன் திருவுருவப்படத்திற்கு மாவட்ட ஆட்சியர் மற்றும் விவசாயிகள் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர் அதனைத் தொடர்ந்து மேட்டூர் அணை ஜூன் மாதம் 12ஆம் தேதி திறக்கப்பட்டதை நம்பி திருவாரூர் மாவட்டத்தில் ஒரு லட்சத்து 74 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் குருவை நெல் சாகுபடி பணிகளில் விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர். இந்த நிலையில் மேட்டூர் அணையில் போதிய நீர் இருப்பு இல்லாத காரணத்தினால் ஆறுகளில் குறைந்த அளவு தண்ணீர் செல்வதன் காரணத்தினால் பயிர்கள் கருகி வருகிறது. ஆகையால் காவிரியில் இருந்து தமிழகத்திற்கு கிடைக்க வேண்டிய தண்ணீரை உடனடியாக தமிழக அரசு மத்திய அரசை வலியுறுத்தி பெற்று தர வேண்டும். மேலும் பாதிக்கப்பட்ட நெல் பயிர்களுக்கு ஏக்கர் ஒன்றுக்கு 30,000 நிவாரணம் வழங்க வேண்டும், மேலும் விவசாயிகள் தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகள் மற்றும் வணிக வங்கிகள் கூட்டுறவு சங்கங்களில் பெற்ற கடன்களை முழுவதுமாக எந்த நிபந்தனையும் இன்றி தள்ளுபடி செய்ய வேண்டும்.

    மேலும் திருவாரூர் மாவட்டத்தில் 2022-23 ஆம் ஆண்டு சம்பா சாகுபடி இயற்கை சீற்றங்களால் பாதிக்கப்பட்டது இதற்கு விவசாயிகள் பயிர் காப்பீடு செய்திருந்த நிலையில் குறைந்த அளவு பயிர் காப்பீடு தொகையை பயிர் காப்பீட்டு நிறுவனம் வெளியிட்டுள்ளது. உடனடியாக பாதிக்கப்பட்ட அனைத்து விவசாயிகளுக்கும் முழுமையான பயிர் காப்பீட்டு தொகை வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி திருவாரூர் கலெக்டர் அலுவலத்தில் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகளுடன் திருவாரூர் சட்டமன்ற உறுப்பினர் பூண்டி கலைவாணன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார். பேச்சுவார்த்தையின் முடிவில் விவசாயிகளின் கோரிக்கைகளை தமிழக அரசிடம் வலியுறுத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என கேட்டுக் கொண்டதன் அடிப்படையில் போராட்டம் கைவிடப்பட்டது.அதனை தொடர்ந்து கூட்டம் நடைபெற்றது.

    • மண்டல மற்றும் மாநில அளவிலான போட்டிகள் நடத்தப்பட்டு பரிசு வழங்கப்படுகிறது.
    • மாணவர்களுக்கு பொது நிதியில் இருந்து, போக்குவரத்து செலவு மற்றும் தினப்படியாக ரூ.125 வரை வழங்கப்பட்டு வருகிறது.

    திருப்பூர்:

    திருப்பூர் மாவட்டத்தில், ஆயிரத்துக்கும் மேற்பட்ட அரசுப்பள்ளிகள் உள்ளன. ஒவ்வொரு பள்ளியிலும், மாணவ, மாணவிகளுக்கு விளையாட்டுப்பயிற்சி அளிக்க உடற்கல்வி ஆசிரியர்கள் உள்ளனர். பள்ளி கல்வித்துறை வாயிலாக குடியரசு தினவிழா மற்றும் பாரதியார் பிறந்த தினவிழா விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்படுகின்றன. இதேபோல, குறுமைய போட்டியைத் தொடர்ந்து மாவட்ட மற்றும் கல்வி மாவட்ட அளவிலான போட்டிகள், மண்டல மற்றும் மாநில அளவிலான போட்டிகள் நடத்தப்பட்டு பரிசு வழங்கப்படுகிறது.

    அந்த வகையில் நடப்பு கல்வியாண்டு, குறுமைய போட்டி துவங்கியுள்ளது. மாணவர்களும், ஆர்வத்துடன் போட்டியில் பங்கேற்க தீவிரம் காட்டி வருகின்றனர். இந்த நிலையில் போட்டியை நடத்தும் பள்ளி நிர்வாகமே, மாணவர்களுக்கான சிற்றுண்டி, தண்ணீர், டீ மற்றும் உடற்கல்வி ஆசிரியர்களுக்கான உணவு செலவினங்களை ஏற்க வேண்டும். ஆனால் அரசால் அப்பள்ளிக்கான நிதியை விடுவிப்பதில் தாமதம் ஏற்படுவதால், அந்தந்த பள்ளித்தலைமையாசிரியர்களே பொது நிதியில் இருந்து செலவுக்கு அளித்து வருகின்றனர். இதனால் விளையாட்டுப்போட்டிகளில் பங்கேற்கும் மாணவ மாணவிகளுக்கு போக்குவரத்து செலவு மற்றும் தினப்படியை உயர்த்தி வழங்க கோரிக்கை எழுந்துள்ளது.

    இது குறித்து பள்ளித்தலைமையாசிரியர்கள் கூறியதாவது:- மாணவர்களுக்கு பொது நிதியில் இருந்து, போக்குவரத்து செலவு மற்றும் தினப்படியாக ரூ.125 வரை வழங்கப்பட்டு வருகிறது. ஒரே நேரத்தில் அதிகப்படியான மாணவர்கள் கலந்து கொண்டால், தலைமையாசிரியர்கள் சொந்த செலவில் மாணவர்களை அனுப்பி வைக்க வேண்டிய நிலை உள்ளது.

    நடப்பாண்டு போட்டிகள் துவங்க உள்ள நிலையில் அதற்கான தொகையை அரசால் உயர்த்தி வழங்க வேண்டும். இதேபோல போட்டி நடத்தும் பள்ளி நிர்வாகம், இதற்கான அனைத்து தொகையையும் செலவிட வேண்டும். நிதி விடுவிக்க தாமதம் ஏற்படுவதால் மாணவர்களுக்கு சிற்றுண்டி மற்றும் பயணப்படி வழங்குவதில் குழப்பம் நிலவுகிறது. இவ்வாறு அவர்கள் கூறினர்.

    • மின் கணக்கீடு செய்யப்பட்டடு தொகை தெரிவிக்கப்பட்டது.
    • முன்வைப்புத் தொகையை செலுத்துவது என்பது அனைத்துத் தரப்பினராலும் முடியாதது.

    அவினாசி :

    அவிநாசி கோட்ட மின்வாரிய அலுவலகத்தில் மாதாந்திர குறைதீா் கூட்டம் நடைபெற்றது. இதில் மின்வாரிய பொது ஒப்பந்த தொமுச மாநில இணைப் பொதுச்செயலாளா் ஈ.பி. அ.சரவணன், மேற்பாா்வை பொறியாளா் சுமதி, கோட்ட செயற்பொறியாளா் பரஞ்சோதி ஆகியோரிடம் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:

    திருப்பூா் மின்பகிா்மான வட்டப் பகுதிகளில் உள்ள மின்நுகா்வோருக்கு இந்த மாதம் மின் கணக்கீடு செய்யப்பட்டடு தொகை தெரிவிக்கப்பட்டது. ஆனால் தொகையை செலுத்த சென்றபோதுதான் கூடுதலாக முன்வைப்புத் தொகை செலுத்த வேண்டும் என்பது தெரியவருகிறது. அதிலும் மின் கட்டணத்துடன் முன்வைப்புத் தொகையை செலுத்துவது என்பது கூலித் தொழிலாளா்கள் உள்பட அனைத்துத் தரப்பினராலும் முடியாதது. ஆகவே, இணையத்தில் உள்ள இரு தொகையை செலுத்தும் குறியீட்டை மாற்றி, தனித்தனியாக செலுத்தவும், முன்வைப்புத் தொகையை செலுத்த கால அவகாசம் வழங்க வேண்டும் எனவும் மனுவில் குறிப்பிட்டிருந்தாா்.

    இக்கோரிக்கையை பரிசீலித்த மின்வாரிய மேற்பாா்வை பொறியாளா் சுமதி, பொதுமக்களின் சிரமத்தை கணக்கில் கொண்டு, முன்வைப்புத் தொகையை ஜூன் 14 முதல் 30 நாள்களுக்கு தனியாக செலுத்தலாம் எனவும், வழக்கம்போல மின் கட்டணத்தை தனியாக செலுத்தலாம் எனவும் தெரிவித்துள்ளாா்.

    • பங்களிப்பு தொகை ரூ. 27 லட்சத்தை சிங்கப்பூர் வாழ் தமிழர்கள் மூலம் வழங்கப்பட்டது.
    • ரூ.54 லட்சம் செலவில் கூடுதலாக 4 வகுப்பறைகள் கட்டுவதற்கு கடந்த மார்ச் மாதம் அடிக்கல் நாட்டப்பட்டது.

    தஞ்சாவூர்:

    தஞ்சை மேம்பாலத்தில் அரசு பார்வைதிறன் குறைபாடுடையோர் பள்ளி செயல்பட்டு வருகிறது.

    இந்த பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கு போது மான வகுப்பறை கட்டிடம் இல்லை.

    இதையடுத்து புதிதாக நமக்கு நாமே திட்டத்தில் கீழ் 4 வகுப்பறை கள் கட்ட முடிவு செய்ய ப்பட்டது.

    இந்தத் திட்டத்திற்கான பங்களிப்பு தொகை ரூ. 27 லட்சத்தை சிங்கப்பூர் வாழ் தமிழர்கள் மூலம் வழங்கப்ப ட்டது.

    அதன்படி ரூ.54 லட்சம் செலவில் கூடுதலாக 4 வகுப்பறைகள் கட்டுவதற்கு கடந்த மார்ச் மாதம் 3-ந் தேதி அப்போது மாவட்ட கலெக்டராக இருந்த தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் இந்த திட்டத்திற்கு அடிக்கல் நாட்டினார்.

    அதன்படி புதிய கட்டிடம் 3 மாதத்தில் கட்டி முடிக்கப்பட்டதையடுத்து திறப்பு விழா நடைபெற்றது.

    இதில் தஞ்சை மாநகராட்சி மேயர் சண்.ராமநாதன் கலந்து கொண்டு வகுப்பறை கட்டிடங்களை திறந்து வைத்தார்.

    பின்னர் பள்ளியில் புதிய கட்டிடத்தில் பொருத்தப்பட்டுள்ள கல்வெட்டை மேயர் திறந்து வைத்து குத்துவிளக்கு ஏற்றினார்.

    இந்த நிகழ்ச்சியில் மாநகராட்சி ஆணையர் சரவணகுமார், துணை மேயர் டாக்டர் அஞ்சுகம் பூபதி, பள்ளி தலைமை ஆசிரியர் சோபனா மாலதி மற்றும் அதிகாரிகள், ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.

    • விபத்தில் உயிரிழந்த ராமனின் வாரிசுதாரரான அவரது மனைவி நீலா என்பவருக்கு காப்பீட்டு தொகை வழங்கப்பட்டது.
    • ரூ.30 லட்சத்துக்கான காசோலையை கலெக்டர் மகாபாரதி வழங்கினார்.

    தரங்கம்பாடி:

    மயிலாடுதுறை மாவட்டம் புதுப்பட்டினம் பாரத ஸ்டேட் வங்கி கிளை சார்பில், விபத்தில் உயிரிழந்த ராமனின் வாரிசுதாரரான அவரது மனைவி நீலா என்பவருக்கு விபத்து காப்பீட்டு தொகை ரூ.30 லட்சத்துக்கான காசோலையை கலெக்டர் மகாபாரதி வழங்கினார்.

    அருகில் பாரத ஸ்டேட் வங்கி நாகை மண்டல மேலாளர் ராதாகிருஷ்ணன், மயிலாடுதுறை முதன்மை மேலாளர் ராமநாதன், புதுப்பட்டினம் கிளை மேலாளர் ஹேம்நாத் மற்றும் பலர் உள்ளனர்.

    • எடப்பாடி அருகே கல்வ டங்கம் காவிரி ஆற்றில் கடந்த 2 தினங்களுக்கு முன்பு மூழ்கி உயிரிழந்தார்.
    • தமிழக அரசு சார்பில் ரூ. 2 லட்சம் நிவாரண நிதி வழங்க அரசு உத்தரவிட்டது.

    மகுடஞ்சாவடி:

    சேலம் மாவட்டம், சங்ககிரி வட்டம், மகுடஞ்சா வடி ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட கன்னந்தேரி ஊராட்சி கோசாரிப்பட்டி காட்டு வளவில் வசித்து வந்த மாது மகன் மணி கண்டன்(வயது20). கல்லூரி மாணவரான இவர் எடப்பாடி அருகே கல்வ டங்கம் காவிரி ஆற்றில் கடந்த 2 தினங்களுக்கு முன்பு மூழ்கி உயிரிழந்தார்.

    அவரது குடும்பத்திற்கு தமிழக அரசு சார்பில் ரூ. 2 லட்சம் நிவாரண நிதி வழங்க அரசு உத்தரவிட்டது. இதை யடுத்து ரூ.2 லட்சத்துக்கான காசோலையை சங்ககிரி கோட்டாட்சியர் (பொறுப்பு) தணிகாசலம் அந்த மாண வன் வீட்டிற்கு நேரில் சென்று அவரது குடும்பத்தி னரிடம் வழங்கினார்.

    இந்நிகழ்ச்சியில் சங்ககிரி தாசில்தார் பானுமதி, எர்ணாபுரம் வருவாய் ஆய்வாளர் செல்வராஜ், கன்னந்தேரி கிராம நிர்வாக அலுவலர் குப்புசாமி உள்ளிட்ட அரசு அலுவ லர்களும், மகுடஞ்சாவடி ஒன்றிய திமுக விவசாய அணி அமைப்பாளர் சுரேஷ்குமார் உள்ளிட்ட தி.மு.க. நிர்வாகிகளும் கலந்து கொண்டனர்.

    • நடப்பு நிதியாண்டில் மீதமுள்ள ரூ.6.01 கோடி திரும்ப செலுத்தப்பட உள்ளது.
    • பயிற்சி பெறுவதற்கான செலவுத்தொகை மாநகராட்சி நிதியில் இருந்து வழங்க ஏற்பாடு செய்யப்படும்.

    தஞ்சாவூர்:

    தஞ்சை மாநகராட்சி அலுவலக கூட்டரங்கில் மாநகராட்சியின் பட்ஜெட் கூட்டம் நடந்தது. மாநகராட்சி மேயர் சண்.ராமநாதன் தலைமை தாங்கினார்.

    துணை மேயர் அஞ்சுகம்பூபதி, ஆணையர் சரவணகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    கூட்டத்தில் 2023-24-ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை கணக்கு குழுத் தலைவரும், மாநகராட்சி கவுன்சிலருமான வெங்கடேஷ் தாக்கல் செய்தார்.

    முன்னதாக மாநகராட்சி மேயர் சண்.ராமநாதன் பேசியதாவது:-

    தமிழகத்திலேயே தஞ்சை மாநகராட்சி முதல் முறையாக அனைத்து கடன்களையும் அரசுக்கு திரும்ப செலுத்தி கடனில்லா மாநகராட்சி என்ற பெருமையை பெற்றுள்ளது.

    மாநகராட்சி பணியாளர்கள் கூட்டுறவு சிக்கன நாணய சங்கத்தில் பெறப்பட்ட கடன் தொகைக்கு தவணை திரும்ப செலுத்தும் விதமாக 2022-23-ம் நிதியாண்டில் ரூ.2.72 கோடி திரும்ப செலுத்தப்பட்டது.

    நடப்பு நிதியாண்டில் மீதமுள்ள ரூ.6.01 கோடி திரும்ப செலுத்தப்பட உள்ளது.

    பொதுமக்களுக்கு கிடைக்க வேண்டிய அனைத்து அடிப்படை வசதிகளும் மாநகராட்சி பொது நிதியில் இருந்து செலவு செய்வதை தவிர்த்து, அரசின் முழு மானியத்துடன் பெறப்படும் திட்டங்களின் கீழ் பணியை மேற்கொள்ள முன்மொழிவுகள் ஒப்புதல் பெறப்பட்டுள்ளது.

    அரசு வழிகாட்டு தலின்படி நமக்கு நாமே திட்டத்தின் கீழ் பொதுமக்கள் பங்கு தொகை மற்றும் அரசு மானியம் சேர்த்து மாநிலத்திலேயே அதிக அளவில் 2022-23-ம் ஆண்டு ரூ.7.96 கோடியில் பணிகள் எடுத்துக் கொள்ளப்பட்டன.

    வருகிற 2023-24-ம் நிதியாண்டில் ரூ.9.94 கோடியில் பணிகள் எடுத்துக் கொள்ளப்பட உள்ளன.

    நடப்பு நிதியாண்டுக்கு (2023-24) ரூ.4.41 கோடிக்கு உபரி பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

    இதில், ரூ.284.70 கோடிக்கு வரவு எதிர்பார்க்கப்பட்டு, ரூ.280.28 கோடிக்கு செலவு செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.

    மாநகராட்சி பள்ளியில் இறுதி ஆண்டு பள்ளி கல்வி முடித்துள்ள மாணவர்கள் உயர்கல்வி பயில ஏதுவாக ஜே.இ.இ., நீட் தேர்வுக்கு பயிற்சி பெறும் வகையில் அரசு மற்றும் தனியார் பயிற்சி மையங்களுடன் இணைந்து பயிற்சி பெறுவதற்கான செலவுத்தொகை மாநகராட்சி நிதியில் இருந்து வழங்க ஏற்பாடு செய்யப்படும்.

    அரசு பணிக்கான போட்டி தேர்வு எழுத விருப்பமுள்ள ஏழை, எளிய மாணவ, மாணவிகளுக்கு பயிற்சி வழங்க மாநகராட்சி நிதியில் இருந்து செலவு செய்யப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும்.
    • ஈட்டிய விடுப்பு சரண்டர் தொகை நிலுவையில் உள்ளதை உடனே வழங்க வேண்டும்.

    சுவாமிமலை:

    பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும், ஈட்டிய விடுப்பு சரண்டர் தொகை நிறுவையில் உள்ளதை உடனே வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள் கும்பகோணம் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    ஆர்ப்பாட்டத்திற்கு கோட்ட பொறுப்பாளர் நீலகண்டன் தலைமை தாங்கினார்.

    மாவட்ட செயலாளர் சுரேஷ் முன்னிலை வகித்தார்.

    இதில் கும்பகோணம் கோட்டத்திற்கு உட்பட்ட திருவிடைமருதூர், கும்பகோணம், பாபநாசம் ஆகிய 3 வட்டங்களை சேர்ந்த பொறுப்பாளர்கள் மற்றும் உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர்.

    முடிவில் மாவட்ட பொருளாளர் தியாகராஜன் நன்றி கூறினார்.

    • நிறுத்தி வைக்கப்பட்ட ஈட்டிப்பு விடுப்பு சரண்டரை உடனே வழங்க வேண்டும்.
    • ரத்து செய்த பட்டப்படிப்பு ஊக்க ஊதியத்தை மீண்டும் வழங்க வேண்டும்.

    சீர்காழி:

    மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி உதவி கலெக்டர் அலுவலகம் முன்பு பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சீர்காழி, தரங்கம்பாடி ஆகிய தாலுக்கா கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் பவளச்சந்திரன் தலைமை தாங்கினார்.

    வட்டத் தலைவர் ராதாகிருஷ்ணன், கோட்ட செயலாளர் கோபாலகி ருஷ்ணன், மாவட்ட துணைத் தலைவர் ஜாகிர் உசேன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    ஆர்ப்பாட்டத்தில் அரசு ஊழியர்களின் ஓய்வு காலத்தை இருட்டாக்கும் சிபிஎஸ் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும்,பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும், நிறுத்தி வைக்கப்பட்ட ஈட்டிப்பு விடுப்பு சரண்டரை உடனே வழங்க வேண்டும், கிராம நிர்வாக அலுவலர்களுக்கு ரத்து செய்த பட்டப்படிப்பு ஊக்க ஊதிய மீண்டும் வழங்க வேண்டும், கிராம நிர்வாக அலுவலர்களுக்கு கூடுதல் பொறுப்பு ஊதியம் வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    இந்த ஆர்ப்பாட்டத்தில் சீர்காழி, தரங்கம்பாடி ஆகிய தாலுகாவை சேர்ந்த கிராம நிர்வாக அலுவலர்கள் சங்க நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    • பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும்.
    • அகவிலைப்படி, சரண்டர் தொகையை வழங்க வேண்டும்

    பாபநாசம்:

    தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் தாலுகா அலுவலகம் முன்பு தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் மாவட்ட இணை செயலாளர் தமிழ்வாணன் தலைமையில் நடைபெற்றது.

    ஆர்ப்பாட்டத்தின் போது கால முறை ஊதியத்தில் காலி பணியிடங்களை நிரப்பிட வேண்டும், சி.பி.எஸ் யை திட்டத்தை ரத்து செய்யவேண்டும். பழைய பென்ஷன் திட்டத்தை அமல்படுத்த வேண்டும். அகவிலைப்படி, சரண்டர் தொகையை வழங்கிட வேண்டும்.

    தமிழக பட்ஜெட்டில் அரசு ஊழியர்களுக்கு வாழ்வாதார கோரிக்கைகள் இடம் பெறாததை கண்டித்து உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    இந்த ஆர்ப்பாட்டத்தில் பாபநாசம் வட்டக்கிளை செயலாளர் ரவிச்சந்திரன், ஊரக வளர்ச்சி துறை அலுவலர் சங்க வட்ட செயலாளர் முரளிதரன், துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சுகுமார், விஜயகுமார், ஓய்வு பெற்ற வருவாய் துறை வட்ட செயலாளர் கலியமூர்த்தி, வருவாய் துறை வட்ட செயலாளர் சுந்தேரேசன், வட்ட பொருளாளர் செல்வராணி, நில அளவை துறை வட்ட சார் ஆய்வாளர் தேவதாஸ், தலைமையிடுத்து துணை வட்டாச்சியர் தமயந்தி, உதவியாளர் பிரதாப், பதிவரை எழுத்தர் ரமேஷ், மற்றும் வருவாய் துறை, ஊரக வளர்ச்சி துறை, நில அளவைத் துறை உள்ளிட்ட ஊழியர்கள் கலந்து கொண்டனர்.

    • பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும்.
    • ஓய்வூதிய தொகை அரசு உத்தரவுபடி வழங்க வேண்டும்.

    நாகப்பட்டினம்:

    நாகை மாவட்டம் திருமருகல் ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தினர் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    ஆர்ப்பாட்டத்திற்கு தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்ட மகளிர் துணைக் குழு அமைப்பாளர் சித்ரா தலைமை தாங்கினார்.வட்டார இணை செயலாளர் சுகுமாறன், சத்துணவு ஊழியர் சங்க ஒன்றிய செயலாளர் தமிழரசன், முன்னாள் வட்ட செயலாளர் தமிழ்வாணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க நாகை மாவட்ட செயலாளர் அன்பழகன் ஆர்ப்பாட்டத்தில் கோரிக்கைகளை விளக்கி பேசினார்.

    இதில் புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும், தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும், சத்துணவு ஊழியர்களுக்கு வரையறுக்கப்பட்ட ஊதியம் வழங்கப்பட வேண்டும்.

    ஓய்வூதிய தொகை அரசு உத்தரவுபடி வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் கோஷங்கள் எழுப்பினர்.முடிவில் சத்துணவு ஊழியர் சங்க திருமருகல் ஒன்றிய தலைவர் உஷாராணி நன்றி கூறினார்.

    ×