search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    திருமருகலில், அரசு ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
    X

    திருமருகலில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

    திருமருகலில், அரசு ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

    • பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும்.
    • ஓய்வூதிய தொகை அரசு உத்தரவுபடி வழங்க வேண்டும்.

    நாகப்பட்டினம்:

    நாகை மாவட்டம் திருமருகல் ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தினர் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    ஆர்ப்பாட்டத்திற்கு தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்ட மகளிர் துணைக் குழு அமைப்பாளர் சித்ரா தலைமை தாங்கினார்.வட்டார இணை செயலாளர் சுகுமாறன், சத்துணவு ஊழியர் சங்க ஒன்றிய செயலாளர் தமிழரசன், முன்னாள் வட்ட செயலாளர் தமிழ்வாணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க நாகை மாவட்ட செயலாளர் அன்பழகன் ஆர்ப்பாட்டத்தில் கோரிக்கைகளை விளக்கி பேசினார்.

    இதில் புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும், தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும், சத்துணவு ஊழியர்களுக்கு வரையறுக்கப்பட்ட ஊதியம் வழங்கப்பட வேண்டும்.

    ஓய்வூதிய தொகை அரசு உத்தரவுபடி வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் கோஷங்கள் எழுப்பினர்.முடிவில் சத்துணவு ஊழியர் சங்க திருமருகல் ஒன்றிய தலைவர் உஷாராணி நன்றி கூறினார்.

    Next Story
    ×