search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அமைச்சர்"

    • தி.மு.க. இளைஞரணி மாநாடு இந்தியாவை திரும்பி பார்க்க வைக்கும் மாநாடாக அமையும்.
    • மேலூரில் நடந்த இளைஞர் அணி செயல்வீரர்கள் கூட்டத்தில் அமைச்சர் மூர்த்தி பேசினார்.

    மேலூர்

    மதுரை வடக்கு மாவட்ட தி.மு.க. சார்பில் மேலூர் நகர், கிழக்கு ஒன்றியம், வடக்கு ஒன்றியம், தெற்கு ஒன்றியம், கொட்டாம்பட்டி கிழக்கு ஒன்றியம், தெற்கு ஒன்றியம், மேற்கு ஒன்றியம், அ.வல்லாளபட்டி பேரூ ராட்சி சார்பில் பூத் கமிட்டி உறுப்பினர்கள் மற்றும் இளைஞர் அணி செயல்வீ ரர்கள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

    கூட்டத்திற்கு மதுரை புறநகர் வடக்கு மாவட்ட செயலாளரும், வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சருமான பி.மூர்த்தி தலைமை தாங்கினார். அப் போது அவர் வருகிற டிசம்பர் 17-ந்தேதி சேலத் தில் நடைபெறவுள்ள தி.மு.க. இளைஞரணி மாநில மாநாடு குறித்து மேலூர் தொகுதி தி.மு.க. இளைஞரணி நிர்வாகிகளி டம் இந்த ஆலோசனை கூட்டம் நடத்தப்பட்டது.

    மேலும் இந்த கூட்டத்தில், இளைஞர் அணி பூத் கமிட்டி பொறுப்பாளர்களை நேரி டையாக அழைத்து சரி பார்ப்பு நடைபெற்றது. இதனைத்தொடர்ந்து, அமைச்சர் மூர்த்தி பேசியதா வது:-

    சேலத்தில் நடைபெற உள்ள இளைஞர் அணி மாநாட்டிற்கு, மதுரை மாவட்டத்தில் இருந்து அதிகப்படியான இளைஞர் கள் கலந்து கொள்ள வேண் டும். அதற்காக மாவட்டத்தில் உள்ள அனைத்து பகுதிகளி லும் செயல்வீரர்கள் கூட்டம் நடத்தப்பட்டு பொறுப்பா ளர்கள் நியமிக்கப்பட்டு வருகின்றனர். சேலத்தில் நடைபெற உள்ள இளைஞர் அணி மாநாடு இந்தியாவை திருப்பி வைக்கின்ற மாநாடாக அமையும்.

    இந்தியா கூட்டணி அமைந்ததற்கு முக்கிய காரணம் நமது தமிழக முதலமைச்சர். அதனால் தான் அதில் பங்கேற்று உள் ளார். வருகின்ற நாடாளு மன்ற தேர்தல் வெற்றி, வரும் சட்டமன்ற தேர்தலுக்கு முன்னோடியாக அமையும். அதனால் கழக நிர்வாகிகள் துடிப்புடன் பணியாற்ற வேண்டும் என்றார்.

    இந்நிகழ்ச்சியில் சோழ வந்தான் சட்டமன்ற உறுப்பினர் வெங்கடேசன், மாநில விவசாய தொழிலாளர் அணி துணைச் செயலாள ரும், மேலூர் பொறுப்பாளர் வ.து.ந.ஆனந்த், மாவட்ட அவைத் தலைவர் பால சுப்பிரமணியன், மாவட்ட கழக பொருளாளர் சோம சுந்தரம், மேலூர் நகர செய லாளரும், நகர்மன்ற தலைவ ருமான முகமது யாசின், மேலூர் வல்லாளபட்டி பேரூராட்சி சேர்மன் குமரன்,

    ஒன்றிய செயலாளர்கள் ராஜேந்திர பிரபு, பால கிருஷ்ணன், ராஜராஜன், கிருஷ்ணமூர்த்தி, பழனி, வல்லாளப்பட்டி கார்த்தி கேயன், மாநில பொதுக்குழு உறுப்பினர்கள் செல்வராஜ், சுபைதா அப்பாஸ், முன் னாள் ஒன்றிய செயலாளர் புகழேந்தி, மாவட்ட தொண் டரணி அமைப்பாளர் நாவி னிபட்டி வேலாயுதம், மாவட்ட கவுன்சிலர் நேரு பாண்டியன், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் அமைப்பாளர் அழகு பாண்டி, கவுன்சிலர் அலாவு தீன், முருகானந்தம் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    • சாலை மற்றும் கட்டுமானப்பணிகளை பார்வையிட்டார்
    • ரூ.31.80 லட்சம் மதிப்பில் 2 கூடுதல் வகுப்பறை கட்டிட பணிகள் ஆகியவற்றை ஆய்வு செய்தாா்.

    ஊட்டி,

    நீலகிரி மாவட்டம், ஊட்டி ஊராட்சி ஒன்றியம், பாலகொலா ஊராட்சிக்கு உள்பட்ட மந்தனை, நஞ்ச நாடு ஊராட்சி கோழிக்கரை ஆகிய பகுதிகளில் அனைத்து கிராம அண்ணா மறுமலா்ச்சி திட்டத்தின் கீழ் தலா ரூ.16.80 லட்சம் மதிப்பில் அங்கன்வாடி மையங்கள் கட்டப்பட்டு உள்ளன.

    இதற்கான திறப்பு விழா நடந்தது. தமிழக சுற்றுலா அமைச்சா் கா.ராமச்சந்திரன் கலந்து கொண்டு அங்கன் வாடி மையங்களை திறந்து வைத்தாா். தொடா்ந்து பெங்காசிக்கல் பகுதியில் 24 வீடுகளுக்கு ஜல்ஜீவன் மிஷன் திட்டத்தின் கீழ் ரூ.3.12 லட்சம் மதிப்பில் குடிநீா் வழங்கும் பணிகளை தொடங்கி வைத்தார்.

    பாலகொலா ஊராட்சியில் முதல்வரின் கிராம சாலைகள் மேம்பாட்டு திட்டத்தின்கீழ், ரூ.62.55 லட்சம் மதிப்பில் மீக்கேரி வரையிலான சாலைப்பணிகள், 15-வது நிதிக்குழு மானியதிட்டத்தின் கீழ் ரூ.6.20 லட்சம் மதிப்பில் ஆழ்துளைகிணறு, எம்.பி தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் ரூ.15 லட்சம் மதிப்பில் பாலகொலா பகுதியில் பல்நோக்கு மைய கட்டிடம் ஆகியவற்றை ஆய்வு செய்தாா்.

    தொடா்ந்து முதல்வரின் கிராம சாலைகள் மேம்பாட்டு திட்டத்தின்கீழ் பாலாடா-நஞ்சநாடு முதல் பெங்காசிக்கல் வரை ரூ.1.26 கோடி மதிப்பில் சாலைப்ப ணிகள், நஞ்சநாடு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் குழந்தைநேய பள்ளி உள்கட்டமைப்பு மேம்பாட்டு திட்டத்தின்கீழ் ரூ.31.80 லட்சம் மதிப்பில் 2 கூடுதல் வகுப்பறை கட்டிட பணிகள் ஆகியவற்றை ஆய்வு செய்தாா்.

    மேலும் நஞ்சநாடு ஊராட்சி, அம்மனட்டி பகுதியில் ரூ. 1.39 கோடி மதிப்பில் வெள்ள தடுப்புச்சுவா் கட்டுமானப் பணிகளும் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டது. தொடர்ந்து இத்தலாா் ஊராட்சி ஒன்றி யத் தொடக்கப்பள்ளியில் குழந்தை நேய பள்ளி உள்க ட்டமைப்பு மேம்பாட்டு திட்டம் சாா்பில் ரூ.31.80 லட்சம் மதிப்பில் 2 கூடுதல் வகுப்பறை கட்டிடங்களையும் அமைச்சர் ஆய்வு செய்தாா். பின்னர் ஊட்டி ஊராட்சி ஒன்றியத்தில் ரூ.36.72 லட்சம் மதிப்பிலான நடைபாதை கழிவுநீா் கால்வாய்ப் பணிகளை தொடங்கி வைத்தாா்.

    நிகழ்ச்சியில் மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் உமாமகேஷ்வரி, ஊட்டி கோட்டாட்சியா் மகராஜ், மாவட்ட ஊராட்சி துணைத் தலைவா் உமாராஜன், ஊட்டி ஊராட்சி ஒன்றியத்தலைவா் மாயன் என்ற மாதன், வட்டாட்சியா்கள் கலைச்செ ல்வி, சரவணக்குமாா், வட்டார வளா்ச்சி அலுவலா் ஸ்ரீதரன், பாலகொலா ஊராட்சி மன்றத் தலைவா் கலையரசி, துணைத் தலைவா் மஞ்சை மோகன் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

    • திருப்பத்தூர், எஸ் புதூர் ஒன்றியங்களில் புதிய மின் மாற்றிகளை அமைச்சர் தொடங்கி வைத்தார்.
    • 37 பள்ளி மாணவர்களுக்கு விலையில்லா சைக்கிள்களை அமைச்சர் பெரிய கருப்பன் வழங்கினார்.

    நெற்குப்பை

    சிவகங்கை மாவட்டம் எஸ் புதியூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட வைரவன்பட்டி, குளத்துப்பட்டி கிராமங்களிலும் திருப்பத்தூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட சின்னாம்பட்டி கிராமத்திலும் சுமார் 27 லட்சம் 26 லட்சம் மதிப் பீட்டில் புதிய மூன்று மின்மாற்றிகளை அமைச்சர் பெரிய கருப்பன் தொடங்கி வைத்தார். இதனால் 650 மின் பயனீட்டாளர்கள் பயன்பெறு வார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    சிவகங்கை மாவட்டத்தில் 68 அரசு பள்ளிகள் உள்பட 105 அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் 470 மாணவர்கள் மற்றும் 6323 மாணவிகளுக்கு இலவச சைக்கிள்கள் வழங்கும் பணி நடைபெற்று வருகிறது. அதன் அடிப்படையில் குன்றக்குடி தருமை கயிலை குருமணி அரசு உதவி பெறும் மேல்நிலைப் பள்ளியில் 100 மாணவர்

    களுக்கும் பிரான்மலை ஊராட்சி வள்ளல் பாரி அரசு உதவி பெறும் மேல்நிலைப் பள்ளியில் 70 மாணவர்களுக்கும் கிருங்கா கோட்டை ஊராட்சி அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் 37 பேருக்கும் விலையில்லா சைக்கிள் களை அமைச்சர் பெரிய கருப்பன் வழங்கினார்.

    இந்த நிகழ்ச்சிகளில் குன்றக்குடி பொன்னம்பல அடிகளார், தேவகோட்டை வருவாய் கோட்டாட்சியர் பால் துரை, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் பாலமுத்து, திருப்பத்தூர் வட்டாட்சியர் வெங்கடேசன், மண்டல துணை வட்டாட்சி யர் செல்லமுத்து, சிங்கம்புணரி வட்டாட்சியர் சாந்தி, மின் செயற் பொறியாளர் செல்லத்துரை, உதவி செயற்பொறியாளர் ஜான் எப் கென்னடி, உதவி மின் பொறியாளர்கள் சையது ஹாசாலி, சுரேஷ், எஸ்.புதூர் ஒன்றிய செயலாளர் செல்வராஜ், திருப்பத்தூர் ஒன்றிய சேர்மன் சண்முக வடிவேல், வடக்கு ஒன்றிய செயலாளர் விராமதி மாணிக்கம், மாவட்ட மாணவர் அணி அமைப்பாளர் ராஜ்குமார், மாவட்ட அயலக அணி துணை அமைப்பாளர் சீமான் சுப்பு, திருப்பத்தூர் ஒன்றிய இளைஞர் அணி துணை அமைப்பாளர் கண்ணன், நெற்குப்பை பேரூராட்சி சேர்மன் கே.பி.எஸ்.பழனியப்பன்.

    சிங்கம்புணரி பேரூராட்சி சேர்மன் அம்பலமுத்து, அவை தலைவர் கணேசன், ஒன்றிய செயலாளர் பூமிநாதன், தலைமை செயற்குழு உறுப்பினர் அஞ்சப்பர் ஜெயராமன், பொதுக்குழு உறுப்பினர் சோமசுந்தரம், நகர கழகச் செயலாளர் கதிர்வேல், துணை ஒன்றிய செயலாளர் சிவபுரி சேகர், முத்துக்குமார், பிரான்மலை ஊராட்சி மன்ற தலைவர் ராமசுப்பிரமணியன், கிருங்கா கோட்டை ஊராட்சி மன்ற தலைவர் அகிலா கண்ணன், துணைத் தலைவர் அமுதாசண்முகநாதன், ஊராட்சி மன்றசெயலர் ஆண்டவர், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் ராசியப்பன், ஊர் அம்பலக்காரர் ஜோதி, ஆர். பாலகுறிச்சி ஊராட்சி மன்ற தலைவர் பொன்னம்மாள் பெரிய பொன்னன், ஆதிமுத்து, குமார் சுப்பிரமணியன், குளத்துப்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் அழகம்மாள் பெருமாள், சேதுராமன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

    • முதுகுளத்தூர் பகுதிக்கு கூடுதலாக 41 பஸ்கள் இயங்க வசதி செய்யப்பட்டுள்ளது.
    • அமைச்சர் ராஜகண்ணப்பன் பேசினார்.

    முதுகுளத்தூர்

    முதுகுளத்தூர் பஸ் நிலையம் எதிரே வாரச் சந்தை ரூ.2 கோடியே 45 லட்சம் மதிப்பில் கட்டப் பட்டுள்ள புதிய வாரச்சந்தையின் திறப்பு விழா நடந்தது. கலெக்டர் விஷ்ணு சந்திரன் தலைமை தாங்கினார். நவாஸ் கனி எம்.பி., முருகேசன் எம்.எல்.ஏ. முன்னிலை வகித்த னர். முதுகுளத்தூர் பேரூராட்சி தலைவர் ஷாஜஹான் வரவேற்றார்.

    அமைச்சர் ராஜ கண்ணப்பன் கலந்து கொண்டு புதிய வாரச் சந்தையை திறந்து வைத்தார். விழாவில் முதுகுளத்தூர் தாசில்தார் சடையாண்டி, மாவட்ட ஊராட்சி துணை சேர்மன் மாவீரன், வேலுச் சாமி, வட்டார வளர்ச்சி அலுவலர் ஜானகி, கூடுதல் வட்டார வளர்ச்சி அலு வலர் அன்புக்கண்ணன், முதுகுளத்தூர் பேரூராட்சி செயல் அலுவலர் மாலதி, பேரூராட்சி துணைத் தலைவர் வயணப் பெரு மாள் ஆகியோர் கலந்து கொண்டனா்.

    பின்னர் முதுகுளத்தூர் அரசு கல்லூரியில் நடந்த சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சியில் 100 பெண்க ளுக்கு சீர்வரிசைகளை வழங்கினார்.

    விழாவில் அமைச்சர் பேசுகையில், முதுகுளத்தூர் பகுதியில் கூடுதலாக 41 பஸ்கள் இயங்க வசதி செய்யப்பட்டுள்ளது. பார்த்திபனூர் பைபாஸ் சாலை பணிகள் முடிவ டைந்து விட்டன. கமுதி- சாயல்குடி பகுதியில் மில் தொடங்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன என்றார்.

    நிகழ்ச்சியில் மாவட்ட மக்கள் தொடர்பு அலுவலர் பாண்டி, உதவி மக்கள் தொடர்பு அலுவலர் விஜயகுமார் சமூக நலத்துறை மற்றும் குழந்தைகள் வள்ரச்சித் துறை அலுவலர்கள் சசிகலா, லாவண்யா உள்பட பலர் கலந்துகொண்டனர்.

    • கமுதியில் மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள் வழங்கப்பட்டது.
    • மாவட்ட கலெக்டர் விஷ்ணு சந்திரன் தலைமையில் பரமக்குடி கோட்டாட்சியர் அப்துல் ரத்தாப் முன்னிலையில் நடைபெற்றது.

    பசும்பொன்

    ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே பேரையூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் மாணவ-மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள் வழங்கும் விழா மாவட்ட கலெக்டர் விஷ்ணு சந்திரன் தலைமையில் பரமக்குடி கோட்டாட்சியர் அப்துல் ரத்தாப் முன்னிலையில் நடைபெற்றது.

    கமுதி தாசில்தார் சேதுராமன் வரவேற்றார். அமைச்சர் ராஜகண்ணப்பன் கலந்து கொண்டு தமிழக அரசின் இலவச சைக்கிள்களை மாணவ, மாணவிகளுக்கு வழங்கி னார்.

    விழாவில் கமுதி ஊராட்சி ஒன்றிய பெரும் தலைவர் தமிழ்செல்வி போஸ், எம்.பி. நவாஸ் கனி, மாவீரன் வேலுசாமி, ஒன்றிய தி.மு.க. செயலாளர் வாசு தேவன், முதுகுளத்தூர் ஒன்றிய செயலாளர்கள் பூபதி மணி, கோவிந்தராஜ், மணலூர் ராமர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    தி.மு.க. மூத்த முன்னோடிகளுக்கு பொற்கிழியை வழங்குகிறார்

    நாகர்கோவில் :

    தி.மு.க. இளைஞரணி மாநில செயலாளரும், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம் பாட்டுத்துறை அமைச்சரு மான உதயநிதி ஸ்டாலின் வருகிற 17-ந் தேதி குமரி மாவட்டம் வருகிறார். அவர் குமரி மாவட்டத்தில் நடை பெறும் பல்வேறு நிகழ்ச்சி களில் கலந்து கொள்கிறார். நாகர்கோவிலில் மாலை நடைபெறும் நிகழ்ச்சியில் தி.மு.க. முன்னோடிகளுக்கு பொற்கிழியை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வழங்குகிறார்.

    உதயநிதி ஸ்டாலின் வருகையை முன்னிட்டு கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட தி.மு.க. செயற் குழுக் கூட்டம் நாளை (12-ந்தேதி) மாலை 4 மணிக்கு ஒழுகினசேரியில் உள்ள தி.மு.க. மாவட்ட அலுவலகத்தில் மாவட்டச் செயலாளர் நாகர்கோவில் மாநகராட்சி மேயருமான மகேஷ் தலைமையில் நடக்கிறது. கூட்டத்தில் அமைச்சர் மனோ தங்கராஜ் கலந்து கொண்டு ஆலோசனை வழங்குகிறார்.

    கூட்டத்தில் மாநில, மாவட்ட, மாநகர நிர்வா கிகள், தலைமைச் செயற் குழு, பொதுக்குழு உறுப்பினர்கள், ஒன்றிய, நகர, பகுதி, பேரூர் செயலா ளர்கள், சார்பு அணிகளின் அமைப்பா ளர்கள், மாவட்ட மற்றும் மாநகர இளைஞரணி துணை அமைப்பாளர்கள் அனைவரும் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும் என்று கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட செயலாளர் மகேஷ் அழைப்பு விடுத் துள்ளார்.

    • திருப்பத்தூர்-சிங்கம்புணரி ஒன்றியங்களில் நடந்த கிராமசபை கூட்டங்களில் அமைச்சர் பெரியகருப்பன் பங்கேற்றார்.
    • துறை அதிகாரிகளும், கிராம மக்களும் கலந்துகொண்டனர்.

    திருப்பத்தூர்

    சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் மற்றும் சிங்கம்புணரி ஒன்றியங்க ளில் காந்தி ஜெயந்தி தினத்தை முன்னிட்டு சிறப்பு கிராம சபை கூட்டங்கள் நடைபெற்றது.முன்னதாக முறையூரில் நடைபெற்ற கிராம சபை கூட்டத்திற்கு கூட்டுறவுத்துறை அமைச்சர் பெரியகருப்பன், மாவட்ட கலெக்டர் ஆஷா அஜித் ஆகியோர் தலைமை தாங்கினர். ஊராட்சி மன்ற தலைவர் சுரேஷ் முன்னிலை வகித்தார்.

    இதில் பெண் குழந்தை களின் கல்வி, பாதுகாப்பு, வளர்ச்சி உள்ளிட்ட வைகளை வலியுறுத்தி கலெக்டடர் உறுதி மொழியை வாசிக்க அமைச்சர், கிராம மக்கள் உட்பட அனைவரும் உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர். இதே போல் மகிபாலன்பட்டியில் ஊராட்சி மன்றத்தலைவர் பாஸ்கரன் தலைமையிலும், கொன்னத்தான்பட்டியில் ஊராட்சி மன்றத்தலைவர் அழகுபாண்டியன் தலைமையிலும் கிராமசபை கூட்டங்கள் நடைபெற்றது.

    இதில் திட்ட இயக்குனர் சிவராமன், கோட்டாட்சியர் பால்துரை, ஊராட்சி உதவி இயக்குனர் குமார், வட்டாட்சியர் சாந்தி, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் லட்சுமண ராஜ், ராஜேந்திர குமார், வட்டார மருத்துவ அலுவலர் நபிஷா பானு, திருப்பத்தூர் ஒன்றிய செயலாளர் சண்முகவடிவேல், வடக்கு ஒன்றிய செயலாளர் விராமதி மாணிக்கம், நெற்குப்பை பேரூராட்சி சேர்மன் பழனியப்பன், சிங்கம்புணரி சேர்மன் அம்பலமுத்து, துணை சேர்மன் செந்தில், நகர அவைத் தலைவர் சிவக்குமார், தெற்கு ஒன்றிய செயலாளர் பாலசுப்பிர மணியன், துணைச் செயலா ளர் ஷீலா ராணி சொக்கநாதன்,மாவட்ட மாணவரணி அமைப்பாளர் ராஜ்குமார், ஒன்றிய இளைஞரணி துணை அமைப்பாளர் கண்ணன், மகிபாலன்பட்டி கால்நடை மருத்துவர் செல்வநாயகி, ஊராட்சிஒன்றிய மேற்பார்வையாளர் பெரியசாமி, ஊராட்சி செயலர்களான மதிவாணன், சிவனேஸ்வரி, உதவி யாளர் குரு, மற்றும் அனைத்து துறை அதிகாரிகளும், கிராம மக்களும் கலந்து கொண்டனர்.

    • வருமுன் காப்போம் திட்ட சிறப்பு மருத்துவ முகாமில் அமைச்சர் ராஜகண்ணப்பன் பங்கேற்றார்.
    • காதர்பாட்ஷா முத்துராம லிங்கம் எம்.எல்.ஏ., மாவட்ட வருவாய் அலுவலர் கோவிந்த ராஜலு ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    பசும்பொன்

    கமுதி பள்ளியில் பொதுசுகாதாரத் துறையின் சார்பில் கலைஞரின் வருமுன் காப்போம் திட்ட மருத்துவ முகாம் நடந்தது. அமைச்சர் ராஜகண்ணப்பன் கலந்து கொண்டு மருத்துவ முகாமை தொடங்கி வைத்தார்.

    காதர்பாட்ஷா முத்துராம லிங்கம் எம்.எல்.ஏ., மாவட்ட வருவாய் அலுவலர் கோவிந்த ராஜலு ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    முகாமில் மருத்துவ பரிசோதனை அரங்கம், இ.சி.ஜி. பிரிவு, எக்ஸ்ரே, ரத்த பரிசோதனை நிலையம், மருந்தகம் உள்ளிட்ட அரங்குகள் அமைக்கப்பட்டிருந்தது.

    இந்த அரங்குகளை அமைச்சர் பார்வையிட்டார். பின்னர் கர்ப்பிணி பெண்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகங்களை அவர் வழங்கினார். இம்முகாமில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

    முகாமில் கலந்து கொண்டவர்களுக்கு சிறப்பு மருத்துவர்களால் பரிசோதனைகள் செய்யப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது. மருந்து, மாத்திரைகள் வழங்கப்பட்டது.

    இதில் பொதுசுகா தாரத்துறைதுணை இயக்குநர் இந்திரா (பரமக்குடி), வட்டார மருத்துவ அலுவலர் ரமீஸ், கமுதி பேரூராட்சி தலைவர் அப்துல் வகாப் சகாராணி, தி.மு.க. மத்திய ஒன்றிய செயலாளர் சண்முகநாதன், ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர் தமிழ்செல்வி போஸ், துணைத்தலைவர் சித்ராதேவி அய்யனார், இல்லம்தேடிக் கல்வி ஒருங்கிணைப்பாளர் கிருஷ்ணமூர்த்தி, ஊராட்சி தலைவர்கள் காவடி முருகன்(ஆனையூர்), பழனி அழகர்சாமி (கீழராமநதி), நாகரத்தினம் (பாக்கு வெட்டி), தி.மு.க. மாவட்ட பிரதிநிதிகள் நாகமணி, முருகேசன், ஒன்றிய துணைச் செயலா ளர் நீதிராஜன், மருத்து வர்கள், செவிலியர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • முன்னாள் பிஷப் பீட்டர் ரெமிஜியூஸ் அடிக்கல் நாட்டினார்
    • மீன் வியாபாரம் செய்வதற்கு மீன் பாத்திரங்கள், நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.

    குளச்சல் :

    தமிழக முன்னாள் அமைச்சர் லூர்தம்மாள் சைமனின் 111-வது பிறந்த நாளை முன்னிட்டு குமரி மாவட்ட விசைப்படகு மீன் பிடிப்பவர் நலச்சங்கம் சார்பில் அலுவலக (குளச்சல்) வளாகத்தில் லூர்தம்மாள் சைமன் சிலை அமைப்பதற்கு அடிக்கல் நாட்டு விழா நடந்தது. கோட்டார் முன்னாள் பிஷப் பீட்டர் ரெமிஜியூஸ் தலைமை வகித்து அடிக்கல் நாட்டினார். குளச்சல் எம்.எல்.ஏ. பிரின்ஸ், குமரி கடலோர அமைதி மற்றும் வளர்ச்சிக்குழு இயக்குனர் டங்ஸ்டன் மற்றும் அருட்பணியாளர்கள் ஸ்டான்லி, ஸ்டீபன், எட்வின், மரிய செல்வன், அமிர்தநாதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    லூர்தம்மாள் சைமன் மகன் பேர்ட்டி சைமன், விசைப்படகு சங்க தலைவர் வர்க்கீஸ், முன்னாள் தலைவர் பிரான்சிஸ், செயலாளர் பிராங்கிளின், பொருளாளர் அந்திரியாஸ், துணைத்தலைவர் ஆன்றனி, குளச்சல் மீனவர் கூட்டுறவு சங்க தலைவர் மரிய ரூபன், துறைமுக வியாபாரிகள் சங்க செயலாளர் ஜஸ்டஸ், மாவட்ட மீனவர் காங்கிரஸ் தலைவர் ஸ்டார்வின், மகிளா காங்கிரஸ் தலைவர் வதனா நிஷா, நகர தலைவர் சந்திரசேகர், நெய்தல் மக்கள் இயக்க தலைவர் பெர்லின் உள்பட மீனவர்கள் பலர் கலந்து கொண்டனர்.

    முன்னதாக மீன் தலை சுமடு பெண்களுக்கு மீன் வியாபாரம் செய்வதற்கு மீன் பாத்திரங்கள், நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.

    • வடக்கு மாவட்ட தி.மு.க. சார்பில் மூத்த முன்னோடிகளுக்கு பொற்கிழி வழங்கப்பட்டது.
    • லின் பங்கேற்று இளைஞர் அணி யினருக்கு பல்வேறு ஆலோச னைகளை வழங்கு கிறார்.

    மேலூர்

    மதுரை வடக்கு மாவட்ட தி.மு.க. சார்பில் வருகிற 20-ந்தேதி காலை 10 மணிக்கு மேலூரில் கலை ஞர் திடலில் முத்தமிழ் அறிஞர் கலைஞரின் நூற் றாண்டு விழா நடைபெறு கிறது. விழாவில் தி.மு.க. இளைஞரணி செயலா ளரும், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சருமான உதய நிதி ஸ்டாலின் பங்கேற்று, தி.மு.க. மூத்த முன்னோடி களுக்கு பொற்கிழி வழங்கி கவுரவிக்கிறார். அதனை தொடர்ந்து மாலை 4 மணிக்கு வண்டியூர் அருகே உள்ள மஸ்தான் பட்டியில் கருணாநிதியின் முழு திருவுருவச் சிலையை திறந்து வைக்கிறார். பின்னர் 100 அடி உயர கொடிக்கம்பத் தில் தி.மு.க. கொடியேற்றுகிறார்.

    இந்த விழாவிற்கான ஏற்பாடுகளை வடக்கு மாவட்ட செயலாளரும், வணிகவரி மற்றும் பதிவுத் துறை அமைச்சருமான பி.மூர்த்தி தலைமையில் மாவட்ட நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.

    இதே போல் கொடியேற்ற நிகழ்ச்சியினை தொடர்ந்து மதுரை விரகனூர் சுற்றுச்சா லையில் அமைந்துள்ள கலைஞர் திடலில் ஒருங்கி ணைந்த மதுரை மாவட்டத் தின் இளைஞர் அணியினர் பங்கேற்கும் இளைஞர் அணி செயல்வீரர்கள் கூம் நடைபெறுகிறது.

    இந்த கூட்டத்தில் அமைச் சர் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்று இளைஞர் அணி யினருக்கு பல்வேறு ஆலோசனைகளை வழங்கு கிறார். விழாவிற்கான ஏற்பா டுகளை அமைச்சர் பி. மூர்த்தி, மாநகர் மாவட்ட செயலாளர் கோ.தளபதி எம்.எல்.ஏ., தெற்கு மாவட்ட செயலாளர் மு.மணிமாறன் மற்றும் மாவட்ட கழகத்தினர், இளைஞர் அணியினர் செய்து வருகின்றனர்.

    • வங்கி மோசடி, குறுஞ்செய்தி குறித்து விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும்.
    • அமைச்சர் பெரியகருப்பன் பேசினார்.

    சிவகங்கை

    சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 வழங்கும் திட்டம் தொடக்க நிகழ்ச்சி நடந்தது. கலெக்டர் ஆஷா அஜீத் தலைமை வகித்தார். எம்.எல்.ஏ.க்கள் தமிழரசி, மாங்குடி ஆகியோர் முன் னிலை வகித்தனர். நிகழ்ச்சி யில் அமைச்சர் பெரிய கருப்பன் கலந்து கொண்டு பயனாளிகளுக்கு மகளிர் உரிமைத்தொகை அட்டையை வழங்கினார்.

    பின்னர் அவர் பேசியதாவது:-

    சிவகங்கை மாவட்டத்தில் 3 கட்டங்களாக நடத்தப்பட்ட முகாம்களின் மூலம் மொத்தம் 3 லட்சத்து 27 ஆயிரத்து 71 விண்ணப் பங்கள் பெறப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் கீழ் பெறப்பட்ட விண்ணப் பங்கள் அனைத்தும், அரசி டம் உள்ள பல்வேறு தகவல் தரவுத் தளங்களில் உள்ள தகவல்களுடன் ஒப்பிட்டுச் சரிபார்க்கப்பட்டு, திட்ட விதிகளைப் பூர்த்தி செய்த மகளிர் பய னாளிகளாக தேர்ந்தெடுக்கப்பட் டுள்ளனர்.

    அரசாணையில் குறிப்பிட்டுள்ள தகுதிகளை பூர்த்தி செய்யாத விண்ணப் பங்களில் முடிவு நிலை குறித்த குறுஞ்செய்தி விண்ணப்பதார்களின் பதிவு செய்யப்பட்ட கைபேசி எண்ணுக்கு செப்டம்பர் 18 முதல் அனுப்பப்படும்.

    இவ்வாறு ஏற்கப்படாத விண்ணப்பதார்கள் மேல்முறையீடு செய்ய விரும்பினால் குறுஞ்செய்தி பெறப்பட்ட நாளில் இருந்து 30 நாட்களுக்குள் இ- சேவை மையம் வழியாக வருவாய் கோட்டாட்சி யருக்கு மேல்முறையீடு செய்யலாம்.

    தற்போது தொலைபேசி வாயிலாக போலியான நபர்கள் தங்களின் வங்கி கணக்கு தொடர்பாகவும், ஓ.டி.பி. குறுஞ்செய்தி குறித்தும் பொது மக்களி டையே கேட்கப்பட்டு மோசடி நடக்கிறது. இதனை கருத்தில் கொண்டு தாங்கள் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    இந்த நிகழ்ச்சியில் பேரூராட்சி தலைவர் சேங்கைமாறன், சிவகங்கை மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி பொது மேலாளர் மாரிச்சாமி, மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் இளவழகன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • வருகிற பாராளுமன்ற கூட்டத் தொடரில் பிரதமர் மோடி என்ன அறிவிப்பார்? என அனைத்து மாநில முதல்வர் களும் பயத்தில் உள்ளனர்.
    • முடிவில் மாவட்ட டேரவை துணை தலைவர் திருப்பதி நன்றி கூறினார்.

    ராஜபாளையம்

    ராஜபாளையம் ஜவகர் மைதானத்தில் விருதுநகர் மேற்கு மாவட்டம், ராஜ பாளையம் சட்டமன்ற தொகுதி அ.தி.மு.க. சார்பில் பேரறிஞர் அண்ணாவின் 115-வது பிறந்த நாளை முன்னிட்டு மதுரை மாநாட் டில் நிறைவேற்றப்பட்ட தீர்மான விளக்க பொதுக் கூட்டம் நடைபெற்றது.

    மாவட்ட பேரவை செயலாளர் கிருஷ்ணராஜ் தலைமை வகித்தார். மான்ராஜ் எம்.எல்.ஏ. , முன்னாள் எம்.எல்.ஏ. ராஜவர்மன் முன்னிலை வகித்தனர்.

    விருதுநகர் மேற்கு மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான கே.டி. ராஜேந்திர பாலாஜி நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசியதாவது:-

    அ.தி.மு.க. ஆட்சியில் நான் அமைச்சராக இருந்த போது ராஜபாளை யத்திற்கு ெரயில்வே மேம்பாலம் பாதாள சாக்கடை தாமிர பரணி திட்டங்களை கொண்டு வந்தோம்.

    அரசு பஸ்களில் விளம்ப ரங்களை வைத்து விளம்பர பேருந்தாக மாற்றியுள்ளனர். விளம்பரம் நிரந்தரமாகாது. தமிழக அரசு விரைவில் முடிவுக்கு வரும். வருகிற பாராளுமன்ற கூட்டத் தொடரில் பிரதமர் மோடி என்ன அறிவிப்பார்? என அனைத்து மாநில முதல்வர் களும் பயத்தில் உள்ளனர். என்ன அறிவிப்பார் என்பது மோடிக்கு தான் தெரியும். நீட்டை ஒழிக்க முடியாதென தெரிந்தும் நீட்டை ஒழிப்போம் என பொய்யான வாக்குறுதி கொடுத்து ஆட்சிக்கு வந்தது.

    தி.மு.க. தற்போது சனா தானம் என்ற வார்த்தையை கூறி மக்களை திசை திருப்ப தி.மு.க. அரசு முயற்சி செய்து வருகிறது. வருகிற தேர்தலில் மக்கள் பாடம் புகட்டுவார்கள்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    நிகழ்ச்சியில் நகர செயலாளர்கள் துரை முருகேசன், பரமசிவம், மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற செயலாளர் பாபுராஜ், ஒன்றிய செயலாளர்கள் குருசாமி, நவரத்தினம், மாவட்ட இணை செயலாளர் அழகுராணி, எம்.ஜி.ஆர் மன்ற செயலாளர் வனராஜ், ஸ்ரீவில்லிபுத்தூர் ஒன்றிய செயலாளர் மயில்சாமி, செட்டியார்பட்டி அங்கு துரைபாண்டியன், சேத்தூர் பொன்ராஜ்பாண்டியன்,போக்குவரத்துபிரிவு குருசாமி, அ.தி.மு.க. செய்தித் தொடர்பாளர் வழக்கறிஞர் பிரிவு இணை செயலாளர் பாபுமுருகேசன், தலைமை கழக பேச்சாளர் இள முருகன் கலந்து கொண்ட னர். முடிவில் மாவட்ட டேரவை துணை தலைவர் திருப்பதி நன்றி கூறினார்.

    ×