search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    அனைத்து மாநில முதல்வர்களும் ஆட்சி பறிபோகும் பயத்தில் உள்ளனர்
    X

    ராஜபாளையத்தில் அ.தி.மு.க. மாநாடு தீர்மான விளக்க பொதுக்கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பேசினார்.

    அனைத்து மாநில முதல்வர்களும் ஆட்சி பறிபோகும் பயத்தில் உள்ளனர்

    • வருகிற பாராளுமன்ற கூட்டத் தொடரில் பிரதமர் மோடி என்ன அறிவிப்பார்? என அனைத்து மாநில முதல்வர் களும் பயத்தில் உள்ளனர்.
    • முடிவில் மாவட்ட டேரவை துணை தலைவர் திருப்பதி நன்றி கூறினார்.

    ராஜபாளையம்

    ராஜபாளையம் ஜவகர் மைதானத்தில் விருதுநகர் மேற்கு மாவட்டம், ராஜ பாளையம் சட்டமன்ற தொகுதி அ.தி.மு.க. சார்பில் பேரறிஞர் அண்ணாவின் 115-வது பிறந்த நாளை முன்னிட்டு மதுரை மாநாட் டில் நிறைவேற்றப்பட்ட தீர்மான விளக்க பொதுக் கூட்டம் நடைபெற்றது.

    மாவட்ட பேரவை செயலாளர் கிருஷ்ணராஜ் தலைமை வகித்தார். மான்ராஜ் எம்.எல்.ஏ. , முன்னாள் எம்.எல்.ஏ. ராஜவர்மன் முன்னிலை வகித்தனர்.

    விருதுநகர் மேற்கு மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான கே.டி. ராஜேந்திர பாலாஜி நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசியதாவது:-

    அ.தி.மு.க. ஆட்சியில் நான் அமைச்சராக இருந்த போது ராஜபாளை யத்திற்கு ெரயில்வே மேம்பாலம் பாதாள சாக்கடை தாமிர பரணி திட்டங்களை கொண்டு வந்தோம்.

    அரசு பஸ்களில் விளம்ப ரங்களை வைத்து விளம்பர பேருந்தாக மாற்றியுள்ளனர். விளம்பரம் நிரந்தரமாகாது. தமிழக அரசு விரைவில் முடிவுக்கு வரும். வருகிற பாராளுமன்ற கூட்டத் தொடரில் பிரதமர் மோடி என்ன அறிவிப்பார்? என அனைத்து மாநில முதல்வர் களும் பயத்தில் உள்ளனர். என்ன அறிவிப்பார் என்பது மோடிக்கு தான் தெரியும். நீட்டை ஒழிக்க முடியாதென தெரிந்தும் நீட்டை ஒழிப்போம் என பொய்யான வாக்குறுதி கொடுத்து ஆட்சிக்கு வந்தது.

    தி.மு.க. தற்போது சனா தானம் என்ற வார்த்தையை கூறி மக்களை திசை திருப்ப தி.மு.க. அரசு முயற்சி செய்து வருகிறது. வருகிற தேர்தலில் மக்கள் பாடம் புகட்டுவார்கள்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    நிகழ்ச்சியில் நகர செயலாளர்கள் துரை முருகேசன், பரமசிவம், மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற செயலாளர் பாபுராஜ், ஒன்றிய செயலாளர்கள் குருசாமி, நவரத்தினம், மாவட்ட இணை செயலாளர் அழகுராணி, எம்.ஜி.ஆர் மன்ற செயலாளர் வனராஜ், ஸ்ரீவில்லிபுத்தூர் ஒன்றிய செயலாளர் மயில்சாமி, செட்டியார்பட்டி அங்கு துரைபாண்டியன், சேத்தூர் பொன்ராஜ்பாண்டியன்,போக்குவரத்துபிரிவு குருசாமி, அ.தி.மு.க. செய்தித் தொடர்பாளர் வழக்கறிஞர் பிரிவு இணை செயலாளர் பாபுமுருகேசன், தலைமை கழக பேச்சாளர் இள முருகன் கலந்து கொண்ட னர். முடிவில் மாவட்ட டேரவை துணை தலைவர் திருப்பதி நன்றி கூறினார்.

    Next Story
    ×