என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    குமரி மாவட்டத்திற்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வருகிற 17-ந்தேதி வருகை
    X

    குமரி மாவட்டத்திற்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வருகிற 17-ந்தேதி வருகை

    தி.மு.க. மூத்த முன்னோடிகளுக்கு பொற்கிழியை வழங்குகிறார்

    நாகர்கோவில் :

    தி.மு.க. இளைஞரணி மாநில செயலாளரும், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம் பாட்டுத்துறை அமைச்சரு மான உதயநிதி ஸ்டாலின் வருகிற 17-ந் தேதி குமரி மாவட்டம் வருகிறார். அவர் குமரி மாவட்டத்தில் நடை பெறும் பல்வேறு நிகழ்ச்சி களில் கலந்து கொள்கிறார். நாகர்கோவிலில் மாலை நடைபெறும் நிகழ்ச்சியில் தி.மு.க. முன்னோடிகளுக்கு பொற்கிழியை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வழங்குகிறார்.

    உதயநிதி ஸ்டாலின் வருகையை முன்னிட்டு கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட தி.மு.க. செயற் குழுக் கூட்டம் நாளை (12-ந்தேதி) மாலை 4 மணிக்கு ஒழுகினசேரியில் உள்ள தி.மு.க. மாவட்ட அலுவலகத்தில் மாவட்டச் செயலாளர் நாகர்கோவில் மாநகராட்சி மேயருமான மகேஷ் தலைமையில் நடக்கிறது. கூட்டத்தில் அமைச்சர் மனோ தங்கராஜ் கலந்து கொண்டு ஆலோசனை வழங்குகிறார்.

    கூட்டத்தில் மாநில, மாவட்ட, மாநகர நிர்வா கிகள், தலைமைச் செயற் குழு, பொதுக்குழு உறுப்பினர்கள், ஒன்றிய, நகர, பகுதி, பேரூர் செயலா ளர்கள், சார்பு அணிகளின் அமைப்பா ளர்கள், மாவட்ட மற்றும் மாநகர இளைஞரணி துணை அமைப்பாளர்கள் அனைவரும் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும் என்று கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட செயலாளர் மகேஷ் அழைப்பு விடுத் துள்ளார்.

    Next Story
    ×