search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பொற்கிழி"

    • கழக மூத்த முன்னோடிகளுக்கு அமைச்சர் பெரியகருப்பன் ஏற்பாட்டில் கட்சிக்காக உழைத்த உங்களுக்கு பொற்கிழி வழங்கி கௌரவிப்பதை நான் பெருமையாக கருதுகிறேன்.
    • நீங்கள் இல்லாமல் கலைஞர் இல்லை, கலைஞர் இல்லாமல் நீங்கள் இல்லை.

    திருப்பத்தூர்:

    சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே உள்ள வைரவன்பட்டியில் மாவட்ட தி.மு.க. செயலாளரும், கூட்டுறவுத்துறை அமைச்சருமான கே.ஆர்.பெரியகருப்பன் ஏற்பாட்டில் தி.மு.க. மூத்த முன்னோடிகளுக்கு பொற்கிழி வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

    விழாவில் தி.மு.க. இளைஞரணி செயலாளரும், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் பங்கேற்று பொற்கிழி, பதக்கங்களையும் வழங்கி பேசியதாவது:-

    மக்கள் அனைவரும் என்னை இளையவர் என்றும், சின்னவர் என்றும், அமைச்சர் என்றும் அழைக்கின்றார்கள். ஆனால் உங்கள் மத்தியில் நான் வயதிலும் சரி, அனுபவத்திலும் சரி சின்னவன் தான். நான் அமைச்சராக பதவியேற்று முதன் முதலில் வருகை புரிந்ததும் இந்த சிவகங்கை மண்ணிற்கு தான். இன்று கழக மூத்த முன்னோடிகளுக்கு அமைச்சர் பெரியகருப்பன் ஏற்பாட்டில் கட்சிக்காக உழைத்த உங்களுக்கு பொற்கிழி வழங்கி கௌரவிப்பதை நான் பெருமையாக கருதுகிறேன்.

    நான் பெரியாரையோ, அண்ணாவையோ நேரில் பார்த்ததில்லை. ஆனால் அவர்களோடு சேர்ந்து கட்சிக்கு பாடுபட்ட உங்களை இன்று நேரில் பார்க்கும் நான் அவர்கள் ரூபத்தில் உங்களைப் பார்க்கிறேன். நான் ஒவ்வொரு மாவட்ட கழக நிகழ்ச்சியிலும் கலந்து கொள்வதற்கு முன்பாக அந்தந்த மாவட்ட செயலாளர்களிடம் கேட்டுக்கொள்வது ஒன்றே ஒன்றுதான். நான் பங்கேற்கும் நிகழ்ச்சியில் முதலாவதாக கட்சிக்காக உழைத்த கழக முன்னோடிகளை கௌரவிக்க வேண்டும் என்ற கோரிக்கையை தான் முன் வைப்பேன்.



    அந்த அடிப்படையில் நான் அமைச்சர் பதவியேற்ற ஒரு வருட காலத்தில் கலந்து கொண்ட எந்த ஒரு கழக நிகழ்ச்சியிலும் கழக முன்னோடிகளான உங்களை குறித்து நான் பேசுவதுண்டு. நீங்கள் இல்லாமல் கலைஞர் இல்லை, கலைஞர் இல்லாமல் நீங்கள் இல்லை. அந்த அளவுக்கு உங்களை பார்க்கும் போது பெருமையாகவும், பொறாமையாகவும் கருதுகிறேன். எனவே இளைஞர்களாகிய எங்களை வழிநடத்தும் ஆற்றல் மிகும் சக்தியாக நீங்கள் தான் கழகத்தில் இருக்கிறீர்கள்.

    வரக்கூடிய பாராளுமன்ற தேர்தலிலும் அதே உத்வேகத்தோடு பாடுபட்டு வெற்றியடைய செய்யுங்கள் என்று உங்களை இந்நேரத்தில் கேட்டுக்கொள்கிறேன்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    நிகழ்ச்சியில் சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, மாவட்ட கழக நிர்வாகிகளான மணி முத்து, சேங்கை மாறன் மற்றும் மாவட்ட, ஒன்றிய, பேரூர், நகர கழக, கிளை கழக நிர்வாகிகள், உள்ளாட்சி பிரதிநிதிகள் என பலரும் கலந்து கொண்டனர். 

    • பொற்கிழி வழங்கும் நிகழ்ச்சி நாளை (செவ்வாய்க்கிழமை) ஈரோடு மாவட்டம் பெருந்துறை அடுத்துள்ள சரளை பகுதியில் காலை 10 மணிக்கு நடைபெற உள்ளது.
    • இதைத்தொடர்ந்து ஈரோடு ஒருங்கிணைந்த தி.மு.க. இளைஞரணி செயல்வீரர்கள் கூட்டம் நடைபெற உள்ளது.

    ஈரோடு:

    தமிழகம் முழுவதும் தி.மு.க.வில் உள்ள மூத்த உறுப்பினர்கள், நிர்வாகிகளை கவுரப்படுத்தும் வகையில் பொற்கிழி வழங்கும் நிகழ்ச்சி மாவட்டந்தோறும் நடைபெற்று வருகின்றது.

    அதன்படி ஈரோடு மாவட்ட ஒருங்கிணைந்த தெற்கு, வடக்கு மாவட்ட மூத்த உறுப்பினர்கள் மற்றும் நிர்வாகிகளுக்கு பொற்கிழி வழங்கும் நிகழ்ச்சி நாளை (செவ்வாய்க்கிழமை) ஈரோடு மாவட்டம் பெருந்துறை அடுத்துள்ள சரளை பகுதியில் காலை 10 மணிக்கு நடைபெற உள்ளது.

    இவ்விழாவில் தி.மு.க. மாநில இளைஞரணி செயலாளரும் , தமிழக இளைஞர் நலன், விளையாட்டு மேம்பாட்டு துறை மற்றும் சிறப்பு திட்ட அமலாக்கம் துறை அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு 2,500 மூத்த தி.மு.க. நிர்வாகிகளுக்கு பொற்கிழிகளை வழங்கி கவுரவிக்கிறார். இதே போல கொரோனா தொற்றினால் இறந்த உறுப்பினர்களின் குடும்பத்தினருக்கும் நிதியுதவி வழங்குகிறார்.

    இதைத்தொடர்ந்து ஈரோடு ஒருங்கிணைந்த தி.மு.க. இளைஞரணி செயல்வீரர்கள் கூட்டம் நடைபெற உள்ளது. இக்கூட்டத்தில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு சிறப்புரையாற்றுகிறார். இதைத்தொடர்ந்து பெருந்துறை சிப்காட் பகுதியில் ரூ.40 கோடி மதிப்பில் பொது சுத்திகரிப்பு நிலையம் அமைய உள்ள இடத்தை பார்வையிட்டு ஆய்வு செய்கிறார்.

    அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வருகையை ஒட்டி ஈரோடு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜவகர் தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அதை தொடர்ந்து நிகழ்ச்சிகளை முடித்துக் கொண்டு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மதியம் நாமக்கல் மாவட்டத்திற்கு செல்கிறார்.

    • அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வழங்கினார்
    • பங்கேற்ற நிகழ்ச்சிகள் நடந்த பகுதிகள் உள்ளிட்ட இடங்களில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

    நாகர்கோவில் :

    குமரி கிழக்கு மற்றும் மேற்கு மாவட்ட தி.மு.க. இளைஞரணி செயல்வீரர்கள் கூட்டம், நூலக திறப்பு விழா, மகளிர் உரிமைத் தொகை உள்ளிட்ட நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா, கழகத்தின் மூத்த முன்னோடிகளுக்கு பொற்கிழி வழங்குதல் உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் பங்கேற்ப தற்காக தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேற்று இரவு நாகர்கோவிலுக்கு வந்தார்.

    அவருக்கு குமரி மாவட்ட கலெக்டர் ஸ்ரீதர் உள்ளிட்ட அதிகாரிகள், அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள், தி.மு.க. நிர்வாகிகள் உள்ளிட்டோர் வரவேற்பு அளித்தனர். பின்பு நாகர்கோவிலில் உள்ள அரசு விருந்தினர் மாளிகையில் இரவில் தங்கி ஓய்வெடுத்தார். இன்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் குமரி மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார்.

    முதலில் வேர்க்கிளம்பி க்கு சென்ற அவர், சட்டமன்ற தொகுதிக்கு ஒரு நூலகம் என்ற வகையில் அங்கு அமைக்கப்பட்டிருந்த நூலகத்தை திறந்து வைத்தார். பின்பு அங்கி ருந்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அழகிய மண்டப த்திற்கு சென்றார். அங்கு நடைபெற்ற குமரி கிழக்கு மற்றும் மேற்கு மாவட்ட தி.மு.க. இளைஞரணி செயல் வீரர்கள் கூட்டத்தில் கலந்து கொண்டு சிறப்புரை யாற்றினார்.

    பின்பு நாகர்கோவில் கங்கா கிராண்டியூர் மண்டபத்தில் தி.மு.க. மூத்த முன்னோடிகளுக்கான பொற்கிழி வழங்கும் நிகழ்ச்சியில் கலந்துகொண்டார். இந்த நிகழ்ச்சிக்கு நாகர்கோவில் மாநகராட்சி மேயரும், குமரி கிழக்கு மாவட்ட செயலாளருமான மகேஷ் தலைமை தாங்கினார்.

    அதில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், குமரி கிழக்கு மாவட்டத்தை சேர்ந்த 500 பேர், மேற்கு மாவட்டத்தை சேர்ந்த 500பேர் என கழகத்தின் மூத்த முன்னோடிகள் 1000 பேருக்கு தலா 10ஆயிரம் ரூபாய் வீதம் ரூ1கோடி மதிப்பிலான பொற்கிழிகளை வழங்கினார்.

    இந்த நிகழ்ச்சியில் அமைச்சர் மனோ தங்கராஜ், கழக துணை அமைப்பு செயலாளர் ஆஸ்டின், முன்னாள் அமைச்சர் சுரேஷ்ராஜன், மாவட்ட பொருளாளர் கேட்சன், ஒன்றிய செயலாளர் மதியழகன், ஊராட்சி மன்ற தலைவர் சோமு, மாநகராட்சி மண்டல தலைவர்கள் ஜவகர், அகஸ்டினா கோகிலவாணி உள்பட ஏராளமான நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

    அதனைத் தொடர்ந்து நாகர்கோவிலில் உள்ள அரசு விருந்தினர் மாளிகைக்கு சென்று மதிய உணவு சாப்பிட்டார். அதன்பிறகு மாலையில் ஈத்தாமொழி சந்திப்பில் தி.மு.க. இளைஞரணி சார்பில் அமைக்கப்பட்டுள்ள கலைஞர் நூலகத்தை அமை ச்சர் உதயநிதி ஸ்டாலின் திறந்து வைக்கிறார்.

    பின்பு நாகர்கோவிலில் உள்ள மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு செல்லும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், அங்கு நடக்கும் ஆய்வு கூட்ட த்தில் பங்கேற்கிறார். மாவட்ட கலெக்டர் ஸ்ரீதர் தலைமையில் நடக்கும் இந்த ஆய்வு கூட்டத்தில் அமைச்சர்கள் மற்றும் அனைத்து துறை அதிகாரிகள் கலந்து கொள்கின்றனர்.

    அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வருகையை முன்னிட்டு குமரி மாவட்டத்தில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுந்தரவதனம் தலைமையில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. அவர் தங்கியிருந்த அரசு விருந்தினர் மாளிகை, அவர் பங்கேற்ற நிகழ்ச்சிகள் நடந்த பகுதிகள் உள்ளிட்ட இடங்களில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

    • விருதுநகரில் நடந்த விழாவில் தி.மு.க. முன்னோடிகள் 2 ஆயிரம் பேருக்கு பொற்கிழியை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வழங்கினார்.
    • மாவட்ட தி.மு.க. சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்டத்தில் தி.மு.க.மற்றும் அரசு சார்பில் நடைபெறும் நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக நேற்று இரவு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வருகை தந்தார். மாவட்ட எல்லையில் அவருக்கு வடக்கு, தெற்கு மாவட்ட தி.மு.க. சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

    இதனை தொடர்ந்து அவர் ஆர்.ஆர்.ரோட்டில் உள்ள விடுதியில் தங்கினார். இன்று காலை விருதுநகர் ராமமூர்த்தி ரோடு நகராட்சி மைதானத்தில் வடக்கு, தெற்கு மாவட்ட தி.மு.க இளைஞரணி செயல் வீரர்கள் கூட்டம் நடை பெற்றது. இதில் மாநில இளைஞரணி செயலா ளரான அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு உரையாற்றினார்.

    இதில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த இளைஞரணி நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர். தொடர்ந்து 11.30 மணிக்கு கல்லூரி சாலையில் அமைக்கப் பட்டிருந்த பிரமாண்ட பந்தலில் தி.மு.க. பொதுக்கூட்டம் நடந்தது. இதில் கலந்து கொண்டு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தி.மு.க. முன்னோடிகள் 2 ஆயிரம் பேருக்கு பொற்கிழிகளை வழங்கி பேசினார்.

    இந்த கூட்டத்தில் மாவட்ட செயலாளர்களும், அமைச்சர்களுமான சாத்தூர் ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு மற்றும் எம்.எல்.ஏ.க்கள் தங்க பாண்டியன், சீனிவாசன், முக்கிய நிர்வாகிகள், உள்ளாட்சி பிரதிநிதிகள் என திரளானோர் கலந்து கொண்டனர். மேலும் உதய நிதி ஸ்டாலின் வருகையை முன்னிட்டு திரளான தொண்டர்கள் பொதுக் கூட்ட மேடை முன்பு குவிந்த னர். மதியம் விருதுநகரில் போட்டி தேர்வுக்கான பயிற்சி பூங்காவை அமைச்சர் உதயநிதி ஸ்டா லின் திறந்து வைக்கிறார். அதனை தொடர்ந்து மருத் துவ கல்லூரி கலைய ரங்கத்தில் நடக்கும் அரசு விழாவில் பங்கேற்கும் உதயநிதி ஸ்டாலின் ரூ.88 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்குகிறார்.

    மாலை 4 மணிக்கு கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் ஆலோசனை கூட்டம் நடக்கிறது. இதில் பங்கேற்கும் உதயநிதி ஸ்டாலின் விருதுநகர் மாவட்டத்தில் மேற்கொள் ளப்பட வேண்டிய வளர்ச்சி திட்டப்பணிகள் குறித்து அதிகாரிகளுடன் ஆலோ சனை நடத்துகிறார்.

    • தி.மு.க. முன்னோடிகளுக்கு பொற்கிழியை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வழங்கினார்.
    • மதுரை மாநகர் மாவட்ட தி.மு.க. சார்பில் மதுரை கல்லூரி வளாகத்தில் மாலை 5 மணிக்கு நடைபெற உள்ளது.

    மதுரை

    சேலத்தில் வருகிற டிசம் பர் மாதம் 17-ந்தேதி தி.மு.க. இளைஞரணி மாநாடு பிர மாண்டாக நடைபெற உள் ளது. இதையொட்டி கட்சியி னரை உற்சாகப்படுத்தும் வகையில் தி.மு.க. இளைஞரணி செயலாளரும், தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் அனைத்து மாவட்டங்களிலும் சுற்றுப் பயணம் செய்து செயல் வீரர்கள் கூட்டத்தில் பங் கேற்று வருகிறார்.

    அத்துடன் தி.மு.க. விற்காக உழைத்த மூத்த முன்னோடிகளுக்கு அவர் பொற்கிழி களும் வழங்கி வருகிறார். அந்த வகையில் மதுரை மாவட்டத்தில் நடைபெறும் அரசு மற்றும் கட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக நேற்று இரவு சென்னையில் இருந்து விமானம் மூலம் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மதுரை வந்தார்.

    விமான நிலையத்தில் அவரை வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சரும், வடக்கு மாவட்டச் செயலாள ருமான பி.மூர்த்தி, தெற்கு மாவட்டச் செயலாளர் மு.மணிமாறன், மாநகர் மாவட்டச் செயலாளர் கோ.தளபதி எம்.எல்.ஏ. ஆகியோரது தலைமையில் அனைத்து அணி நிர்வாகிகள் மற்றும் மற்றும் திரளான தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

    பின்னர் இரவில் தனி யார் ஓட்டலில் தங்கிய அவர் இன்று காலை மதுரை பாண்டி கோவில் அருகே உள்ள துவாரகா பேலஸ் மண்டபத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் குடும்பத் தலை விகளுக்கான மாதாந்திர உரிமைத்தொகை ரூ.1,000 பெறும் பயனாளிகள் 500-க்கும் மேற்பட்டோருக்கு உரிமைத் தொகை பெறுவதற் கான வங்கி பரிவர்த்தனை அட்டைகளை வழங்கினார்.

    அதனைத் தொடர்ந்து மதுரை வடக்கு மாவட்ட தி.மு.க. சார்பில் மேலூரில் உள்ள கலைஞர் திடலில் மாவட்டச் செயலாளரும், அமைச்சருமான பி.மூர்த்தி தலைமையில் மூத்த முன் னோடிகளுக்கு பொற்கிழி வழங்கும் விழா நடைெபற் றது. விழாவில் கழக மூத்த முன்னோடிகள் 3 ஆயிரம் பேருக்கு ரூ.10 ஆயிரத்துடன் கூடிய பொற்கிழியை அமைச்சர் உதயநிதி ஸ்டா லின் வழங்கி பேசினார்.

    அப்போது தி.மு.க. அரசின் சாதனைகளை பட்டி யலிட்ட அவர் வரும் பாராளுமன்ற தேர்தலில் 40 தொகுதிகளிலும் தி.மு.க. கூட்டணி வெற்றி பெற அனைவரும் கடுமையாக உழைக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.

    இதையடுத்து மாலை 5 மணிக்கு வண்டியூர் அருகே மஸ்தான்பட்டியில் சுங்கச் சாவடி எதிரில் கலை ஞர் திடலில் அமைக்கப்பட்டுள்ள முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதியின் திருவுரு வச்சிலையை திறந்து வைக் கிறார். மேலும், 100 அடி கொடிக்கம்பத்தில் தி.மு.க. கொடிேயற்றுகிறார்.

    இதையடுத்து விரகனூர் அருகே ரிங் ரோட்டில் அமைந்துள்ள கருணாநிதி திடலில் ஒருங்கிணைந்த மதுரை மாவட்ட தி.மு.க. இளைஞர் அணி சார்பில் நடைபெறும் செயல் வீரர்கள் கூட்டத்தில் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு நிர்வாகிகளுக்கு ஆலோச னைகள் வழங்குகிறார். பின்னர் இரவில் அழ கர்கோவில் ரோட்டில் உள்ள ஓட்டலில் தங்குகிறார்.

    நாளை (21-ந்தேதி, வியாழக்கிழமை) காலை 10 மணிக்கு மதுரை தெற்கு மாவட்ட தி.மு.க. சார்பில் டி.கல்லுப்பட்டி அருகேயுள்ள முத்தப்பன்பட்டி யில் நடைபெறும் மறைந்த முன்னாள் சபாநாயகர் சேடப்பட்டி முத்தையா நினைவேந் தல் நிகழ்ச்சியில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொள்கிறார்.

    தொடர்ந்து அங்கு மாவட்டச் செயலாளர் மு.மணிமாறன் தலைமை யில் நடைபெறும் விழாவில் தி.மு.க. மூத்த முன்னோடிக ளுக்கு பொற்கிழி வழங்கி பேசுகிறார். மாலையில் மதுரை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடை பெறும் அனைத்து துறை அதிகாரிகளுடனான ஆய்வுக்கூட்டத்தில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்துகொள்கி றார்.

    மாலை 5 மணிக்கு மதுரை மாநகர் மாவட்ட தி.மு.க. சார்பில் மதுரை கல்லூரி வளாகத்தில் மாவட்டச் செயலாளர் கோ.தளபதி எம்.எல்.ஏ. தலைமையில் நடைபெறும் விழாவில் அமைச்சர் உதய நிதி ஸ்டாலின் கலந்து கொண்டு தி.மு.க. மூத்த முன்னோடிகளுக்கு பொற் கிழி வழங்குகிறார். அந்த வகையில் மதுரை மாவட்டத் தில் 7,000 மூத்த முன்னோடி களுக்கு ரூ.10 ஆயிரம் வீதம் ரூ.7 கோடி மதிப்பில் பொற்கிழியை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வழங்க உள்ளார்.

    இதற்கான ஏற்பாடுகளை மாவட்டச் செயலாளர்கள் பி.மூர்த்தி, மணிமாறன், தளபதி எம்.எல்.ஏ. மற்றும் இளைஞரணி நிர்வாகிகள் சிறப்பாக செய்துள்ளனர். அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வருகையை முன்னிட்டு மதுரை மாவட்ட தி.மு.க.வினர் உற்சாகம் அடைந்துள்ளனர்.

    • திருமங்கலம் அருகே தி.மு.க. பொற்கிழி-நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சிக்கு பிரமாண்ட ஏற்பாடுகள் நடந்து வருகிறது.
    • மாவட்ட செயலாளர் மணிமாறன் நேரில் சென்று ஆய்வு செய்தார்.

    திருமங்கலம்

    மதுரை தெற்கு மாவட்ட தி.மு.க. சார்பில் மாவட்ட செயலாளர் சேடப்பட்டி மு.மணிமாறன் ஏற்பாட்டில் திருமங்கலம் அருகே உள்ள முத்தப்பன்பட்டியில் உள்ள சேடப்பட்டியார் திடலில் நாளை (21-ந்தேதி) காலை முன்னாள் சபா நாயகர் சேடப்பட்டி முத்தையாவின் முதலா மாண்டு நினைவேந்தல் நிகழ்ச்சி, தி.மு.க. மூத்த முன்னோடிகள் 1500 பேருக்கு தலா ரூ.10 ஆயிரம் பொற்கிழி வழங்கும் நிகழ்ச்சி மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கம் விழா நடைபெற உள்ளது.

    மாவட்ட செயலாளர் மணிமாறன் தலைமை தாங்குகிறார். மாவட்ட செயலாளர்கள் அமைச்சர் மூர்த்தி, தளபதி எம்.எல்.ஏ. ஆகியோர் முன்னிலை வகிக்கிறார்கள். தி.மு.க. இளைஞரணி செயலா ளரும், விளை யாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு தி.மு.க. மூத்த முன்னோடி களுக்கு பொற்கிழி வழங்கி கவுரவிக்கும் நினைவேந்தல் நிகழ்ச்சியில் கலந்து கொண்டும் சிறப்புரை ஆற்றுகிறார். இதில் எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள், மாவட்ட செயலாளர்கள், முக்கிய நிர்வாகிள், தொண்டர்கள் என பல்லாயிரக்கணக்கானோர் கலந்து கொள்கின்றனர். விழா முடிவில் கட்சியினர் அனைவருக்கும் அறுசுவை உணவு வழங்கப்படுகிறது.

    இதனிடையே முத்தப்பன்பட்டியில் பிரமாண்ட பந்தல்கள், முன்னாள் சபாநாயகர் சேடபட்டி முத்தையாவின் வாழ்க்கை வரலாற்றினை சித்தரிக்கும் புகைப்பட கண்காட்சி, வழிநெடுகிலும் வரவேற்பு தோரணங்கள், வாகனங்களை நிறுத்த இடவசதி உள் ளிட்ட ஏற்பாடுகள் இரவு பகலாக நடைபெற்று வருகிறது.

    இந்த இறுதிகட்ட ஏற்பாடுகளை மதுரை தெற்கு மாவட்ட செய லாளர் சேடபட்டி மு.மணிமாறன், தி.மு.க இளைஞரணி துணைச் செயலாளர் இன்பா ரகு, தலைமை செயற்குழு உறுப்பினர் இளமகிழன், கள்ளிக்குடி தெற்கு ஒன்றிய செயலாளர் பா.மதன் குமார், மாவட்ட இளை ஞரணி அமைப்பா ளர் விமல் துணை அமைப்பா ளர் தென்பழஞ்சி சுரேஷ்.அணி அமைப்பாளர் பரமசிவம், ராஜசேகர், மாமன்ற உறுப்பினர் காளிதாஸ் மற்றும் கட்சி நிர்வாகிகள் பார்வை யிட்டனர்.

    இதுகுறித்து மாவட்டச் செயலாளர் மு.மணிமாறன் கூறுகையில்,

    முத்தப்பன்பட்டி விழாவிற்கு வருகை தரும் தி.மு.க. இளைஞரணி செயலாளர்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு திருமங்கலம்-ராஜபா ளையம் மெயின் ரோட்டில் அமைந்துள்ள டி.குன்னத்தூரில் வைத்து நாளை காலை 9 மணிக்கு எழுச்சிமிகு வரவேற்பு அளிக்கப்பட உள்ளது.

    இதில் அமைச்சர்கள், எம்.பி., எம்.எல்.ஏ.க்கள், முக்கிய நிர்வாகிகள், தொண்டர்கள் திரளா னோர் அலை கடலென திரண்டு வந்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு கொடுத்தும் விழாவில் கலந்து கொண்டும் சிறப்பித் திடுமாறு கேட்டுக்கொள்கி றேன் என்றார்.

    தி.மு.க. விழாவை யொட்டி முத்தப்பன்பட்டி யில் திரும்பிய திசையெல் லாம் தி.மு.க. கொடி கள், பிளக்ஸ் பேனர்கள், வரவேற்பு அலங்கார வளைவுகள், மின் விளக்கு அலங்காரங்கள் செய்யப் பட்டு விழாக்கோலம் பூண்டுள்ளது.

    • வடக்கு மாவட்ட தி.மு.க. சார்பில் மூத்த முன்னோடிகளுக்கு பொற்கிழி வழங்கப்பட்டது.
    • லின் பங்கேற்று இளைஞர் அணி யினருக்கு பல்வேறு ஆலோச னைகளை வழங்கு கிறார்.

    மேலூர்

    மதுரை வடக்கு மாவட்ட தி.மு.க. சார்பில் வருகிற 20-ந்தேதி காலை 10 மணிக்கு மேலூரில் கலை ஞர் திடலில் முத்தமிழ் அறிஞர் கலைஞரின் நூற் றாண்டு விழா நடைபெறு கிறது. விழாவில் தி.மு.க. இளைஞரணி செயலா ளரும், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சருமான உதய நிதி ஸ்டாலின் பங்கேற்று, தி.மு.க. மூத்த முன்னோடி களுக்கு பொற்கிழி வழங்கி கவுரவிக்கிறார். அதனை தொடர்ந்து மாலை 4 மணிக்கு வண்டியூர் அருகே உள்ள மஸ்தான் பட்டியில் கருணாநிதியின் முழு திருவுருவச் சிலையை திறந்து வைக்கிறார். பின்னர் 100 அடி உயர கொடிக்கம்பத் தில் தி.மு.க. கொடியேற்றுகிறார்.

    இந்த விழாவிற்கான ஏற்பாடுகளை வடக்கு மாவட்ட செயலாளரும், வணிகவரி மற்றும் பதிவுத் துறை அமைச்சருமான பி.மூர்த்தி தலைமையில் மாவட்ட நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.

    இதே போல் கொடியேற்ற நிகழ்ச்சியினை தொடர்ந்து மதுரை விரகனூர் சுற்றுச்சா லையில் அமைந்துள்ள கலைஞர் திடலில் ஒருங்கி ணைந்த மதுரை மாவட்டத் தின் இளைஞர் அணியினர் பங்கேற்கும் இளைஞர் அணி செயல்வீரர்கள் கூம் நடைபெறுகிறது.

    இந்த கூட்டத்தில் அமைச் சர் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்று இளைஞர் அணி யினருக்கு பல்வேறு ஆலோசனைகளை வழங்கு கிறார். விழாவிற்கான ஏற்பா டுகளை அமைச்சர் பி. மூர்த்தி, மாநகர் மாவட்ட செயலாளர் கோ.தளபதி எம்.எல்.ஏ., தெற்கு மாவட்ட செயலாளர் மு.மணிமாறன் மற்றும் மாவட்ட கழகத்தினர், இளைஞர் அணியினர் செய்து வருகின்றனர்.

    • உதயநிதி ஸ்டாலின் தூத்துக்குடி மற்றும் தென்காசி மாவட்டத்தில் 2 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார்.
    • தி.மு.க. நிர்வாகிகளும், தொண்டர்களும் உற்சாகம் அடைந்துள்ளனர்.

    தென்காசி:

    தி.மு.க. மாநில இளைஞர் அணி செயலாளரும், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் தூத்துக்குடி மற்றும் தென்காசி மாவட்டத்தில் 2 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார்.

    நேற்று மாலை தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடந்த ஆய்வுக்கூட்டத்தில் அவர் கலந்து கொண்டார். பின்னர் தி.மு.க. முன்னோடிகளுக்கு பொற்கிழி வழங்கும் நிகழ்ச்சி மற்றும் இளைஞரணி ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொண்டு பேசினார். தொடர்ந்து நேற்று இரவு காரில் நெல்லை வழியாக தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் உள்ள அரசு சுற்றுலா மாளிகைக்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வந்தடைந்தார்.

    முன்னதாக அவருக்கு தென்காசி மாவட்ட எல்லையான ஆலங்குளத்தில் தெற்கு மாவட்ட பொறுப்பாளர் ஜெயபாலன் தலைமையில் தி.மு.க.வினர் உற்சாக வரவேற்பு அளித்தனர். இந்த வரவேற்பு நிகழ்ச்சியில் மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் கிருஷ்ணராஜா, மகளிர் தொண்டரணி அமைப்பாளரும், ஆலங்குளம் யூனியன் சேர்மனுமான திவ்யா மணிகண்டன், ஆலங்குளம் ஒன்றிய கவுன்சிலரும், தெற்கு மாவட்ட தி.மு.க. மகளிர் அணி அமைப்பாளருமான சங்கீதா சுதாகர் உள்பட ஏராளமான நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    தொடர்ந்து இன்று காலை 10 மணிக்கு தென்காசி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் அனைத்து துறை அலுவலர்களுடன் நடைபெறும் ஆய்வு கூட்டத்தில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்துகொண்டு அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். பின்னர் தென்காசி புதிய பஸ்நிலையம் அருகே சிவந்திநகரில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள தென்காசி தெற்கு மாவட்ட அலுவலக திறப்பு விழாவில் அவர் பங்கேற்றார்.

    தொடர்ந்து மாலை 3 மணிக்கு தென்காசி இசக்கி மகாலில் ஒருங்கிணைந்த தென்காசி தெற்கு மற்றும் வடக்கு மாவட்ட தி.மு.க. சார்பில் கழக மூத்த முன்னோடிகளுக்கு பொற்கிழி வழங்கும் நிகழ்ச்சியில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொள்கிறார். இதில் சுமார் 1,500 முன்னோடிகளுக்கு ரூ.1½ கோடி மதிப்பில் பொற்கிழி வழங்கி பேசுகிறார்.

    இதற்கான ஏற்பாடுகளை தென்காசி மாவட்ட பொறுப்பு அமைச்சரும், வருவாய்த்துறை அமைச்சருமான கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் மற்றும் தென்காசி வடக்கு மாவட்ட செயலாளர் ராஜா எம்.எல்.ஏ. மற்றும் தென்காசி தெற்கு மாவட்ட பொறுப்பாளர் ஜெயபாலன் ஆகியோர் மேற்பார்வையில் நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.

    பின்னர் அதே மகாலில் மாலை 4 மணிக்கு நடைபெறும் தென்காசி மாவட்ட தி.மு.க. இளைஞர் அணி செயல் வீரர்கள் கூட்டத்தில் கலந்து கொண்டு அமைச்சர் உதயநிதி பேசுகிறார். அதனை தொடர்ந்து இரவில் தென்காசியில் இருந்து புறப்பட்டு ராஜபாளையம் வழியாக விருதுநகருக்கு அவர் செல்கிறார்.

    அமைச்சர் உதயநிதி ஸ்டாலினை உற்சாகமாக வரவேற்க தி.மு.க. சார்பில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இதற்காக ஆலங்குளத்தில் தொடங்கி தென்காசி வரையிலும் ஏராளமான வரவேற்பு பேனர்கள் வைக்கப்பட்டு உள்ளன. விழா நடைபெறும் மகால் அருகிலும் ஏராளமான வரவேற்பு பேனர்கள் வைக்கப்பட்டுள்ளன. சாலையின் இருபுறமும் கம்பங்கள் நடப்பட்டு, தி.மு.க. கொடிகள் பறக்க விடப்பட்டு உள்ளன.

    விழா நடைபெறும் பகுதிகளில் அலங்கார வரவேற்பு வளைவுகளும் அமைக்கப்பட்டுள்ளன. அமைச்சரான பிறகு உதயநிதி ஸ்டாலின் முதல் முதலாக தென்காசி மாவட்டத்துக்கு அவர் வருகை தந்துள்ளதால் தி.மு.க. நிர்வாகிகளும், தொண்டர்களும் உற்சாகம் அடைந்துள்ளனர்.

    • தி.மு.க. முன்னோடிகளுக்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பொற்கிழி வழங்கினார்.
    • அலமேலு ஆறுமுகம், கருணாநிதி சிலையை நினைவு பரிசாக வழங்கினார்.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி அருகே மாடூரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் தி.மு.க. முன்னோடிகளுக்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பொற்கிழி வழங்கி னார். இதில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு கள்ளக்குறிச்சி ஒன்றிய சேர்மன் அலமேலு ஆறுமுகம், கருணாநிதி சிலையை நினைவு பரிசாக வழங்கினார்.

    அப்போது அமைச்சர்கள் எ.வ.வேலு, அன்பில் மகேஷ் பொய்யாமொழி, கள்ளக்குறிச்சி வடக்கு மாவட்ட தி.மு.க. செய லாளர் உதயசூரின் எம்.எல்.ஏ., மாநில மகளிர் அணி துணை செயலாளர் அங்கையற்கண்ணி, கள்ளக்குறிச்சி வடக்கு மாவட்ட துணை செயலாளர் வாணியந்தல் ஆறுமுகம், வடக்கு ஒன்றிய செயலாளர் அரவிந்தன், சின்னசேலம் ஒன்றிய துணை சேர்மன் அன்புமணிமாறன், மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் அருள் உள்ளிட்ட நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

    • காலை 9.20 மணிக்கு கருணாநிதி நூற்றாண்டு விழா கொடியேற்றுகிறார்.
    • அனைவரும் வருகை புரிந்து விழாவினை சிறப்பிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி மாவட் டத்தில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு நலத்திட்ட உதவிகள் வழங்குகிறார். இந்த நிகழ்ச்சியில் பொதுமக்கள், பயனாளிகள், தி.மு.க.தொண்டர்கள் திரளாக கலந்து சிறப்பிக்குமாறு பொதுப் பணிகள் (கட்டிடங்கள்), நெடுஞ்சாலைகள் மற்றும் சிறுதுறைமுகங்கள் துறை அமைச்சர் எ.வ.வேலு அழைப்பு விடுத்துள்ளார். இதுகுறித்து அவர் வெளி யிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:-

    கள்ளக்குறிச்சி மாவட்டத்தில், கருணாநிதியின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகளை இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நாளை (19- ந் தேதி) கள்ளக்குறிச்சி மாவட்டம் மணலூர்பேட்டையில் காலை 9.20 மணிக்கு கருணாநிதி நூற்றாண்டு விழா கொடி யேற்றுகிறார். காலை 9.40மணிக்கு கூவனூரில் ரிஷிவந்தியம் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு திட்டநிதி 2022- 2023ன்கீழ் ரூ.25 லட்சம் மதிப்பீட்டில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வசதியுடன் கூடிய பயணியர் நிழற்குடை திறப்பு விழாநடக்கிறது.

    காலை 10 மணிக்கு மாடாம்பூண்டியில் கருணா நிதி நூற்றாண்டு விழா கொடியேற்றியும், காலை 10.30 மணியளவில் லா.கூடலூர் தியாகதுருகத்தில் பால் முகவர்களுடன் கலந்துரை யாடல் நிகழ்ச்சியிலும், தொடர்ந்து மதியம் 12 மணி யளவில் கள்ளக்குறிச்சி ஏ.கே.டி. பள்ளியில் நான் முதல்வன் திட்டத்தின்கீழ் மாணவர்களுடன் கலந்துரையாடுகிறார். பகல் 12.45 மணிக்கு மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட வளர்ச்சிப் பணிகள் குறித்த ஆய்வு கூட்டத்திலும், மாலை 5 மணியளவில் உலகங்காத்தான் கிராமத்தில் நடைபெறும் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில், முடிவுற்ற திட்ட பணிகளை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு தொடங்கி வைத்து 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்குகிறார்.

    பின்னர், மாலை 6.15 மணிக்கு மாடூர் ஏ.என்.பி திருமண மண்டபத்தில் தி.மு.க. முன்னோடி களுக்கு பொற்கிழி மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்குதல், மாலை 7.15 மணியளவில் எலவனாசூர்கோட்டையில் முத்தமிழறிஞர் கலைஞர் நூற்றாண்டு கொடியேற்று விழாவிலும், நிறைவாக மாலை 7.30 மணியளவில் உளுந்தூர்பேட்டை லலிதா திருமண மண்டபத்தில் திமுக சமூக வலைதள செயற்பாட்டாளர்களுடன் கலந்துரையாடலும், தி.மு.க.முன்னோடிகளுக்கு பொற்கிழி வழங்குதல் உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார். இதில் கள்ளக் குறிச்சி மாவட்டதைச் சேர்ந்த பொது மக்கள், பயனாளிகள், தி.மு.க. முன்னோடிகள் உள்ளிட்ட அனைவரும் வருகை புரிந்து விழாவினை சிறப்பிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • ஜூன் 3-ந் தேதி வட சென்னையில் நடைபெறும் நூற்றாண்டு விழாவில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சித் தலைவர்கள் கலந்துகொள்ளும் மாபெரும் பொதுக்கூட்டம்.
    • இளைஞர்கள், கல்லூரி, பள்ளி மாணவ, மாணவிகளின் திறமையை மேம்படுத்தும் வகையில் பேச்சுப் போட்டி, கட்டுரை போட்டி, ஓவியப் போட்டிகளை நடத்தி பரிசுகளை வழங்க வேண்டும்.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரியில் கிழக்கு மாவட்ட தி.மு.க. செயற்குழு கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு மாவட்ட அவைத்தலைவர் தட்ரஅள்ளி நாகராஜ் தலைமை தாங்கினார்.

    கூட்டத்தில் கிழக்கு மாவட்ட தி.மு.க. செயலாளரும், பர்கூர் எம்.எல்.ஏ.வுமான மதியழகன் பங்கேற்று, தீர்மான விளக்கவுரையாற்றினார்.

    கூட்டத்தில், முன்னாள் முதல் அமைச்சர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவையொட்டி, தி.மு.க. தலைவரும், தமிழக முதல் அமைச்சருமான மு.க.ஸ்டாலின், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோரால் கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்டத்தை சேர்ந்த தி.மு.க. மூத்த முன்னோடிகள் 1000 பேருக்கு பொற்கிழி வழங்குவது. நூற்றாண்டு விழாவினை கிழக்கு மாவட்டத்தில் ஆண்டு முழுவதும் கொண்டாடுவது. முன்னாள் முதல்'அமைச்சர் கருணாநிதியின் பிறந்த நாளான ஜூன் 3-ந் தேதியன்று கிழக்கு மாவட்டத்தில் உள்ள கிளை கழகங்கள் முதல் அனைத்து அமைப்புகள் சார்பிலும் கருணாநிதியின் திருவுருவப் படத்திற்கு மாலை அணிவித்து, மலர் தூவி மரியாதை செலுத்தி, திமுக கொடியினை ஏற்றி, பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாடுவது.

    ஜூன் 3-ந் தேதி வட சென்னையில் நடைபெறும் நூற்றாண்டு விழாவில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சித் தலைவர்கள் கலந்துகொள்ளும் மாபெரும் பொதுக்கூட்டத்தில் கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்டத்தில் இருந்து நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் பெருந்திரளாக கலந்து கொள்வது. கிழக்கு மாவட்டத்தில் உள்ள இளைஞர்கள், கல்லூரி, பள்ளி மாணவ, மாணவிகளின் திறமையை மேம்படுத்தும் வகையில் பேச்சுப் போட்டி, கட்டுரை போட்டி, ஓவியப் போட்டிகளை நடத்தி பரிசுகளை வழங்கி ஊக்குவிப்பது.

    ஒவ்வொரு ஒன்றிய அளவிலும் கிரிக்கெட், கால்பந்து, ஹாக்கி உள்ளிட்ட விளையாட்டு போட்டிகளை நடத்தி, ஒன்றியத்தில் வெற்றி பெறும் அணிகளை கொண்டு மாவட்ட அளவிலான போட்டிகளை நடத்தி பரிசுகள் வழங்குவது. ஜூன் 20-ந் தேதி திருவாரூரில் பீகார் மாநில முதல் மந்திரி நிதிஷ்குமார் கலந்துகொண்டு கலைஞர் கோட்டத்தை திறந்து வைக்க உள்ளார்.

    அந்த நிழ்ச்சியில் நடைபெறும் கவியரங்கம், பட்டிமன்றம், பொதுக்கூட்டம் உள்ளிட்ட நிகழ்ச்சியில் பெருந்திரளாக கலந்துகொள்வது என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

    இந்த கூட்டத்தில், மாவட்ட துணை செயலாளர் கோவிந்தசாமி, சாவித்திரி கடலரசு மூர்த்தி, சந்திரன், மாவட்ட பொருளாளர் கதிரவன், தலைமை செயற்குழு உறுப்பினர்கள் செந்தில், பரிதாநவாப், தம்பிதுரை, பொதுக்குழு உறுப்பினர்கள் அஸ்லம், சித்ரா சந்திரசேகர், நகர செயலாளர் நவாப் மற்றும் ஒன்றிய, நகர, பேரூர் கழக செயலாளர்கள், பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.

    • சேலம் மாவட்டத்தில் தி.மு.க. மூத்த தொண்டர்கள் 1,040 பேருக்கு பொற்கிழியை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வழங்கினார்.
    • 1,040 மூத்த தி.மு.க. தொண்டர்களுக்கு தலா ரூ.10 ஆயிரம் மற்றும் நற்சான்றிதழ் அடங்கிய பொற்கிழியை வழங்கி பேசினார்.

    எடப்பாடி:

    சேலம் மாவட்டத்தில் தி.மு.க. மூத்த தொண்டர்கள் 1,040 பேருக்கு பொற்கிழியை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வழங்கினார்.

    பொற்கிழி வழங்கும் விழா சேலம் மேற்கு மாவட்ட தி.மு.க. சார்பில் மூத்த மற்றும் நலிந்த தி.மு.க தொண்டர்களுக்கு பொற்கிழி வழங்கும் விழா எடப்பாடியை அடுத்த குரும்பப்பட்டியில் நேற்று மாலை நடந்தது.

    சேலம் மேற்கு மாவட்ட செயலாளர் டி.எம்.செல்வ கணபதி வரவேற்று பேசி னார். அமைச்சர் கே.என்.நேரு தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர்கள் எஸ்.ஆர்.சிவலிங்கம், வக்கீல் ராஜேந்திரன், எஸ்.ஆர்.பார்த்திபன் எம்.பி. ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    உதயநிதி ஸ்டாலின்

    விழாவில் சிறப்பு அழைப்பாளராக தி.மு.க. மாநில இளைஞர் அணி செயலாளரும், இளைஞர் நலம் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்ச ருமான உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டார். அவர், 1,040 மூத்ததி.மு.க. தொண்டர்களுக்கு தலா ரூ.10 ஆயிரம் மற்றும் நற்சான்றிதழ் அடங்கிய பொற்கிழியை வழங்கி பேசினார். விழாவில் உதயநிதி ஸ்டாலின் பேசும் போது கூறியதாவது:-

    கட்சியின் மூத்த முன்னோடிகளுக்கு எனது கைகளால் பொற்கிழி

    வழங்குவதை நான் பெரு மையாக கருதுகிறேன். காரணம் நான், காண கிடைக்காத அண்ணா வையும், பெரியாரையும் உங்கள் வழியாக காண்கி றேன். தி.மு.க.வின் அனைத்து இன்ப, துன்பங்க ளிலும் கட்சியின் மூத்த நிர்வாகிகளின் பங்கு மிகப்பெரியது. அவர்களை கவுரவிக்கும் வகையில் தமிழக முழுவதும் சுமார் 20 மாவட்டங்களில் தற்போது பொற்கிழி வழங்கும் நிகழ்வு நடத்தப்பட்டு வருகிறது. மீதமுள்ள பகுதிகளிலும் மூத்த நிர்வாகிகளுக்கு பொற்கிழி வழங்கப்படும்.

    மோடிக்கு விசுவாசம்

    அதேபோல் தி.மு.க.வின் மாநில இளைஞரணி செயலாளராக நான் பொறுப்பேற்ற பிறகு இளைஞர் அணி சார்பில் கூடுதலான நிதியாக சுமார் 24 கோடி ரூபாய் வங்கியில் இட்டு வைப்பு தொகையாக சேமிக்கப்பட்டுள்ளது. அந்த தொகையில் இருந்து

    கிடைக்கும் வட்டி தொகையை இரு மாதங்க ளுக்கு ஒரு முறை பெறப்பட்டு கட்சியின் மூத்த முன்னோடிகளுக்கு மருத்துவ உதவி மற்றும் அவர்கள் நலம் சார்ந்த செலவுகளுக்கு பயன்படுத்தப்படும் என தெரிவித்துக் கொள்கிறேன்.

    இத்தொகுதியின் சட்டமன்ற உறுப்பினரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி, அவர் இருந்து வரும் கட்சியின் முதல் எழுத்தான அண்ணாவையே மறந்து, அவர் கருத்துகளுக்கு எதிரான கொள்கை கொண்ட நபர்களுடன் விசுவாசமாக உள்ளார். குறிப்பாக ஜெயலலிதா, சசிகலா, ஓ.பன்னீர்செல்வம் ஆகியோருக்கு விசுவாசம் இல்லாத நிலையில், தற்போது மோடி, அமித்ஷா, கவர்னர் ஆகியோருக்கு மட்டுமே விசுவாசமாக செயல்படுகிறார்.

    சுயமரியாதை

    தற்போது இடைத்தேர்த லுக்காக ஈரோடு பகுதியில் முகாமிட்டு இருக்கும் எடப்பாடி பழனிசாமி, அங்குள்ள பெரியாரின் நினைவு இல்லத்திற்கு சென்று, தனது தன்மானம், சுயமரியாதையும் மேம்படுத்திக் கொள்ள வேண்டும். வருகிற நாடாளு மன்ற தேர்தலில் சேலம் மாவட்டம் தி.மு.க.வின் கோட்டையாக மாற்றிக் காட்ட வேண்டும். அதற்கு உங்கள் மாவட்டத்தின் பொறுப்பு அமைச்சரான நேரு பணியாற்றி வருகிறார். அவருக்கு நீங்கள் உறுதுணையாக இருந்து வெற்றியை ஈட்டித்தர வேண்டும்.

    இவ்வாறு உதயநிதி ஸ்டாலின் பேசினார்.

    ×