தி.மு.க. பொற்கிழி-நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சிக்கு பிரமாண்ட ஏற்பாடுகள்

திருமங்கலம் அருகே தி.மு.க. பொற்கிழி-நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சிக்கு பிரமாண்ட ஏற்பாடுகள் நடந்து வருகிறது. மாவட்ட செயலாளர் மணிமாறன் நேரில் சென்று ஆய்வு செய்தார்.
விழா நடைபெறும் இடத்தில் மாவட்ட செயலாளர் மணிமாறன் ஆய்வு செய்தார்.
விழா நடைபெறும் இடத்தில் மாவட்ட செயலாளர் மணிமாறன் ஆய்வு செய்தார்.
Published on

திருமங்கலம்

மதுரை தெற்கு மாவட்ட தி.மு.க. சார்பில் மாவட்ட செயலாளர் சேடப்பட்டி மு.மணிமாறன் ஏற்பாட்டில் திருமங்கலம் அருகே உள்ள முத்தப்பன்பட்டியில் உள்ள சேடப்பட்டியார் திடலில் நாளை (21-ந்தேதி) காலை முன்னாள் சபா நாயகர் சேடப்பட்டி முத்தையாவின் முதலா மாண்டு நினைவேந்தல் நிகழ்ச்சி, தி.மு.க. மூத்த முன்னோடிகள் 1500 பேருக்கு தலா ரூ.10 ஆயிரம் பொற்கிழி வழங்கும் நிகழ்ச்சி மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கம் விழா நடைபெற உள்ளது.

மாவட்ட செயலாளர் மணிமாறன் தலைமை தாங்குகிறார். மாவட்ட செயலாளர்கள் அமைச்சர் மூர்த்தி, தளபதி எம்.எல்.ஏ. ஆகியோர் முன்னிலை வகிக்கிறார்கள். தி.மு.க. இளைஞரணி செயலா ளரும், விளை யாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு தி.மு.க. மூத்த முன்னோடி களுக்கு பொற்கிழி வழங்கி கவுரவிக்கும் நினைவேந்தல் நிகழ்ச்சியில் கலந்து கொண்டும் சிறப்புரை ஆற்றுகிறார். இதில் எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள், மாவட்ட செயலாளர்கள், முக்கிய நிர்வாகிள், தொண்டர்கள் என பல்லாயிரக்கணக்கானோர் கலந்து கொள்கின்றனர். விழா முடிவில் கட்சியினர் அனைவருக்கும் அறுசுவை உணவு வழங்கப்படுகிறது.

இதனிடையே முத்தப்பன்பட்டியில் பிரமாண்ட பந்தல்கள், முன்னாள் சபாநாயகர் சேடபட்டி முத்தையாவின் வாழ்க்கை வரலாற்றினை சித்தரிக்கும் புகைப்பட கண்காட்சி, வழிநெடுகிலும் வரவேற்பு தோரணங்கள், வாகனங்களை நிறுத்த இடவசதி உள் ளிட்ட ஏற்பாடுகள் இரவு பகலாக நடைபெற்று வருகிறது.

இந்த இறுதிகட்ட ஏற்பாடுகளை மதுரை தெற்கு மாவட்ட செய லாளர் சேடபட்டி மு.மணிமாறன், தி.மு.க இளைஞரணி துணைச் செயலாளர் இன்பா ரகு, தலைமை செயற்குழு உறுப்பினர் இளமகிழன், கள்ளிக்குடி தெற்கு ஒன்றிய செயலாளர் பா.மதன் குமார், மாவட்ட இளை ஞரணி அமைப்பா ளர் விமல் துணை அமைப்பா ளர் தென்பழஞ்சி சுரேஷ்.அணி அமைப்பாளர் பரமசிவம், ராஜசேகர், மாமன்ற உறுப்பினர் காளிதாஸ் மற்றும் கட்சி நிர்வாகிகள் பார்வை யிட்டனர்.

இதுகுறித்து மாவட்டச் செயலாளர் மு.மணிமாறன் கூறுகையில்,

முத்தப்பன்பட்டி விழாவிற்கு வருகை தரும் தி.மு.க. இளைஞரணி செயலாளர்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு திருமங்கலம்-ராஜபா ளையம் மெயின் ரோட்டில் அமைந்துள்ள டி.குன்னத்தூரில் வைத்து நாளை காலை 9 மணிக்கு எழுச்சிமிகு வரவேற்பு அளிக்கப்பட உள்ளது.

இதில் அமைச்சர்கள், எம்.பி., எம்.எல்.ஏ.க்கள், முக்கிய நிர்வாகிகள், தொண்டர்கள் திரளா னோர் அலை கடலென திரண்டு வந்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு கொடுத்தும் விழாவில் கலந்து கொண்டும் சிறப்பித் திடுமாறு கேட்டுக்கொள்கி றேன் என்றார்.

தி.மு.க. விழாவை யொட்டி முத்தப்பன்பட்டி யில் திரும்பிய திசையெல் லாம் தி.மு.க. கொடி கள், பிளக்ஸ் பேனர்கள், வரவேற்பு அலங்கார வளைவுகள், மின் விளக்கு அலங்காரங்கள் செய்யப் பட்டு விழாக்கோலம் பூண்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com