search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அகிலேஷ் யாதவ்"

    • பிற்படுத்தப்பட்ட மக்கள், தலித் மக்கள் மற்றும் சிறுபான்மையினர் ஆகியோருக்கு எதிராக உள்ளே எதிர் குரல் கொடுக்கும் நபர்கள் நமக்கு தெரிந்துவிடும்.
    • விருந்தை புறக்கணிக்கும்போது அவர்கள் எங்களுக்கும் எதிராக திரும்பவார்கள் என்பது தெரியும்.

    உத்தர பிரதேச மாநிலத்தில் 10 இடங்களுக்கான மாநிலங்களை எம்.பி. தேர்தல் நடைபெற்றது. ஏழு இடங்களில் பா.ஜனதா எளிதாக வெற்றி பெறும். 3 இடங்களில் சமஜ்வாடி கட்சி வெற்றி பெறும். ஆனால் பா.ஜனதா சில எம்.எல்.ஏ.க்களை இழுத்துள்ளதாக தகவல் வெளியானது. நேற்று சமாஜ்வாடி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் அளித்த விருந்தை எட்டு எம்.எல்.ஏ.க்கள் புறக்கணித்தனர். இதனால் சமாஜ்வாடி கட்சியின் 3-வது வேட்பாளர் வெற்றி பெறுவது சந்தேகமானது.

    இந்த நிலையில்தான் இன்று காலை உத்தர பிரதேச மாநில சட்டமன்ற கொறடா தனது பதவியை ராஜினாமா செய்தார்.

    இந்த நிலையில் 3-வது வேட்பாளர்ரை நிறுத்தியது கட்சியில் கலகம் விளைவிப்பவர்களை அடையாளம் காண்பதற்காகத்தான் என அகிலேஷ் யாதவ் தெரிவித்துள்ளார்.

    இது தொடர்பாக அகிலேஷ் யாதவ் கூறுகையில் "எங்களுடைய 3-வது இடம் பொதுவாக கட்சியில் உள்ள உண்மையானவர்களை அடையாளம் காண்பதற்கான பரிசோதனை. இதன்மூலம் பிற்படுத்தப்பட்ட மக்கள், தலித் மக்கள் மற்றும் சிறுபான்மையினர் ஆகியோருக்கு எதிராக உள்ளே எதிர் குரல் கொடுக்கும் நபர்கள் நமக்கு தெரிந்துவிடும். இது எங்களுடைய 3-வது சீட்டின் வெற்றி. கட்சியின் வெற்றி உண்மையில் உள்ளது.

    விருந்தை புறக்கணிக்கும்போது அவர்கள் எங்களுக்கும் எதிராக திரும்பவார்கள் என்பது தெரியும். அவர்களுக்கு பல்வேறு பேக்கேஜ் வழங்கப்படும் எனத் தெரிவித்து இருப்பார்கள். கலகம் விளைவித்த அவர்கள் நீக்கப்படுவார்கள்" என்றார்.

    உத்தர பிரதேச மாநிலத்தில் பா.ஜனதாவுக்கு 252 எம்.எல்.ஏ.க்கள் உள்ளனர். சமாஜ்வாடிக்கு 108 எம்.எல்.ஏ.-க்கள் உள்ளனர். பா.ஜனதா ஏழு எம்.பி.க்களை தேர்வு செய்ய முடியும். சமாஜ்வாடி 3 பேரை தேர்வு செய்ய முடியும். ஆனால் பா.ஜனதா 8-வது ஒருவரை நிறுத்தியுள்ளதால் போட்டி நிலவுகிறது.

    • தனிப்பட்ட ஆதாயங்களை விரும்புவோர் பா.ஜ.க.வுக்குச் செல்லலாம் என்றார் அகிலேஷ் யாதவ்.
    • பா.ஜ.க.வின் அழுத்தத்தால் எம்.எல்.ஏ.க்கள் சிலர் கட்சி மாறி வாக்களிக்கும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது என்றார்.

    லக்னோ:

    உத்தர பிரதேசம், கர்நாடகா மற்றும் இமாசல பிரதேசம் என மொத்தம்15 மாநிலங்களவை உறுப்பினர்களுக்கான தேர்தல் இன்று நடந்து வருகிறது.

    தங்கள் கட்சி உறுப்பினர்களுக்கு பாஜக அழுத்தம் கொடுத்து வருகிறது. இதனால் சிலர் கட்சி மாறி வாக்களிக்கும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது என சமாஜ்வாதி கட்சித்தலைவர் அகிலேஷ் யாதவ் குற்றம்சாட்டி இருந்தார்.

    இந்நிலையில் சமாஜ்வாடி கட்சி எம்.எல்.ஏ.வான மனோஜ் குமார் பாண்டே, கட்சியின் தலைமைக் கொறடா பதவியில் இருந்து இன்று ராஜினாமா செய்தார்.

    இதுதொடர்பாக, செய்தியாளர்களைச் சந்தித்த அகிலேஷ் யாதவ் கூறுகையில், தனது கட்சியின் 3 வேட்பாளர்களும் உறுதியாக வெற்றி பெறுவர். தேர்தல் வெற்றிக்காக பா.ஜ.க. அனைத்து உக்திகளையும் பயன்படுத்தும். தனிப்பட்ட லாபத்தை விரும்பும் தலைவர்கள் பா.ஜ.க.வுக்குச் செல்லலாம் என தெரிவித்தார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • உத்தர பிரதேசம், கர்நாடகா, இமாசல பிரதேசத்தில் மாநிலங்களவை தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.
    • வரும் 29-ம் தேதி பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு மாநிலங்களவை தேர்தல் முடிவுகள் வெளியாகிறது.

    புதுடெல்லி:

    வருகிற ஏப்ரல் மாதம் 15 மாநிலங்களில் முடிவடைய உள்ள 56 மாநிலங்களவை உறுப்பினர்கள் பதவிகளுக்கான தேர்தல் அறிவிக்கப்பட்டது.

    இதில் சோனியா காந்தி, ஜே.பி.நட்டா உள்பட 41 பேர் போட்டியின்றி தேர்வாகினர். உத்தர பிரதேசத்தில் 10 இடங்கள், கர்நாடகாவில் 4 இடங்கள் மற்றும் இமாசல பிரதேசத்தில் ஒரு இடம் என மொத்தம் 15 இடங்களுக்கு தேர்தல் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டது.

    இந்நிலையில், கர்நாடகா, உத்தர பிரதேசம், இமாசல பிரதேசத்தில் உள்ள 15 இடங்களுக்கு இன்று தேர்தல் நடைபெறுகிறது. இதற்கான வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. உ.பி.யில் சமாஜ்வாதி கட்சி தலைவரான அகிலேஷ் யாதவ் லக்னோவில் தனது வாக்கைச் செலுத்தினார்.

    காலை 9 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு 4 மணிக்கு நிறைவடையும். வரும் 29-ம் தேதி மாநிலங்களவை தேர்தல் முடிவுகள் வெளியாகிறது.

    • கூட்டணி கட்சியை சேர்ந்த நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
    • ராகுல்காந்தியுடன் இணைந்து கைகோர்த்து ஊர்வலமாக நடந்து சென்றார்.

    உத்தரபிரதேச மாநிலம் அலிகாரில் உள்ள ஜமால்பூரில் நடந்த இந்திய ஒற்றுமை நீதி யாத்திரையில் ராகுல் காந்தியுடன் பிரியங்கா காந்தி இன்று கலந்து கொண்டார்.

    இந்த யாத்திரை நிகழ்ச்சி அம்ரோஹா, சம்பல், புலந்த்ஷாஹர், அலிகார், ஹத்ராஸ் மற்றும் ஆக்ரா வழியாக பதேபூர் சிக்ரி செல்கிறது.

    இதில், ராகுல்காந்தியுடன் திறந்த ஜீப்பில் அவரது சகோதரி பிரியங்கா காந்தியும் அமர்ந்து கொண்டு தொண்டர்களை பார்த்து உற்சாகமாக கையசைத்தவாறு சென்றனர்.

    காங்கிரஸ்- சமாஜ்வாதி கட்சி இடையேயான தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை வெற்றி அடைந்து உள்ளதை தொடர்ந்து யாத்திரை நிகழ்ச்சியில் கூட்டணி கட்சி தலைவர்கள் பங்கேற்பார்கள் என அறிவிக்கப்பட்டது.

    அதை தொடர்ந்து இன்று கூட்டணி கட்சியை சேர்ந்த நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். இந்த யாத்திரை இந்தியா கூட்டணி ஒற்றுமையை வலுப்படுத்தும் வகையில் அமைந்தது.

    இந்திய ஒற்றுமை யாத்திரை உ.பி. ஆக்ரா நோக்கி மாலை 3.30 மணிக்கு வந்தது. அப்போது, சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ்யாதவ், கலந்து கொண்டார்.

    ராகுல்காந்தியுடன் இணைந்து கைகோர்த்து ஊர்வலமாக நடந்து சென்றார். இதனை பார்த்த தொண்டர்கள் உற்சாக கரகோஷமிட்டனர்.

    உத்தரபிரதேசம் ஆக்ராவில் நடந்த பாரத் ஜோடோ நியாய யாத்திரையில் பங்கேற்ற சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் கூறுகையில், " பொதுமக்களுக்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறேன். வரும் நாட்களில், ஜனநாயகத்தையும், அரசியலமைப்பையும் காப்பதே மிகப்பெரிய சவாலாகும். பாஜகவால் சிதைக்கப்பட்ட டாக்டர் பி.ஆர்.அம்பேத்கரின் கனவுகளை நிறைவேற்ற இந்தியா கூட்டணி பாடுபடும்" என்றார்.

    • உத்தர பிரதேசத்தில் கடந்த முறை காங்கிரஸ் ஒரு தொகுதி மட்டுமே வெற்றி பெற்றது.
    • இந்த முறை காங்கிரசுக்கு 17 இடங்களை சமாஜ்வாதி ஒதுக்கியுள்ளது.

    லக்னோ:

    2024 மக்களவை தேர்தலில் பா.ஜ.க.வை தோற்கடிக்க இந்தியா கூட்டணி உருவாக்கப்பட்டது. தேர்தல் நெருங்க நெருங்க இந்தக் கூட்டணி தாக்குப்பிடிக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது. காங்கிரஸ் கட்சிக்கு இடங்கள் ஒதுக்கீடு செய்வதில் தான் சிக்கல்.

    மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ், கெஜ்ரிவாலின் ஆம் ஆத்மி கட்சி ஆகியவை காங்கிரசுக்கு அதிக இடங்கள் கொடுக்க மறுத்துள்ளது.

    இதற்கிடையே, ராகுல் காந்தி தற்போது உத்தர பிரதேசத்தில்நடைபயணம் மேற்கொண்டு வருகிறார்.

    நாங்கள் தரும் இடங்களை ஏற்றுக்கொண்டால் மட்டுமே ராகுல் காந்தி நடைபயணத்தில் கலந்துகொள்வேன் என அகிலேஷ் யாதவ் கண்டிஷன் போட்டதாகத் தெரிகிறது.

    உத்தர பிரதேசத்தில் அகிலேஷ் யாதவின் சமாஜ்வாதி, காங்கிரஸ் இடையே நேற்று தொகுதி பங்கீடு ஒப்பந்தம் ஏற்பட்டது.

    இந்நிலையில், தனது கண்டிஷனுக்கு காங்கிரஸ் கட்சி ஓகே சொன்னதால், ராகுல் காந்தி யாத்திரையில் அகிலேஷ் பங்கேற்கிறார்.

    இதுதொடர்பாக அகிலேஷ் கூறுகையில், ஆக்ராவில் நடைபெறும் யாத்திரையில் நான் பங்கேற்க உள்ளேன் என தெரிவித்துள்ளார்.

    • உத்தர பிரதேசத்தில் சமாஜ்வாதி, காங்கிரஸ் இடையே தொகுதிப் பங்கீடு இறுதி செய்யப்பட்டுள்ளது.
    • பாராளுமன்ற தேர்தலில் உத்தரப் பிரதேசத்தில் காங்கிரசுடன் கூட்டணி உறுதி என்றார் அகிலேஷ் யாதவ்.

    லக்னோ:

    உத்தர பிரதேச மாநிலத்தில் சமாஜ்வாதி, காங்கிரஸ் இடையே இன்று தொகுதிப் பங்கீடு இறுதி செய்யப்பட்டுள்ளது.

    காங்கிரசுக்கு வாரணாசி, ரேபரேலி, அமேதி, பாரபங்கி, ஜான்சி, காசியாபாத் உள்ளிட்ட 17 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. மீதமுள்ல 63 இடங்களில் சமாஜ்வாதி மற்றும் இந்தியா கூட்டணி கட்சிகள் போட்டியிடும் என அக்கட்சி தெரிவித்துள்ளது.

    இதுதொடர்பாக சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் கூறுகையில், எல்லாம் நன்றாகத்தான் முடிந்துள்ளது. காங்கிரசுடன் கூட்டணி உறுதியாகி உள்ளது. எங்களுக்குள் மோதல் இல்லை. தொகுதி பங்கீடு குறித்து விரைவில் அறிவிப்பு வெளிவரும் என தெரிவித்தார்.

    • சமாஜ்வாடி கட்சியில் தேசிய பொதுச்செயலாளர் பதவியில் இருந்தவர்.
    • எம்எல்சி-யாகவும் இருந்த நிலையில், கட்சி உறுப்பினர் பதவி என அனைத்தில் இருந்தும் விலகல்.

    அகிலேஷ் யாதவின் சமாஜ்வாடி கட்சியின் தேசிய பொதுச்செயலாளராக இருந்தவர் சுவாமி பிரசாத் மவுரியா. இவர் கடந்த 13-ந்தேதி தேசிய பொதுச்செயலாளர் பதவியை ராஜினாமா செய்திருந்தார். அப்போது தனக்கு எதிராக பாகுபாடு பார்ப்பதாக குற்றஞ்சாட்டியிருந்தார்.

    இந்த நிலையில் சமாஜ்வாடி கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவி மற்றும் உத்தர பிரதேச மாநில மேல்சபை உறுப்பினர் பதவியையும் ராஜினாமா செய்துள்ளார்.

    அவர் அகிலேஷ் யாதவுக்கு எழுதிய கடிதத்தில் "உங்களுடன் இணைந்து பணிபுரியும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது. ஆனால், கடந்த பிப்ரவரி 12-ந்தேதி உங்களுடன் பேசிய பிறகு, தேசிய பொதுச்செயலாளர் பதவியை 13-ந்தேதி ராஜினாமா செய்தேன். என்னுடன் எந்தப் பேச்சுவார்த்தைக்கும் முன்முயற்சி எடுக்கப்படாததால், கட்சியின் முதன்மை உறுப்பினர் பதவியிலிருந்து நான் விலகுகிறேன்" எனக் குறிப்பிட்டுள்ளார்.

    மற்றொரு கடிதத்தில் "நான் சமாஜ்வாடி கட்சி சார்பில் மேல்சபைக்கு தேர்வு செய்யப்பட்டேன். இந்த நிலையில கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து விலகுகிறேன். மேலும் எம்எல்சி பதவியையும் ராஜினாமா செய்கிறேன்" எனக் குறிப்பிட்டுள்ளார்.

    ராம்சரித்மனாஸ் மற்றும் அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேகம் தொடர்பாக தான் தெரிவித்த கருத்து சர்ச்சையான நிலையில், கட்சி சார்பாக யாரும் குரல் கொடுக்கவில்லை எனத் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • உத்தர பிரதேச மாநிலத்தின் வலுவான கட்சியாக சமாஜ்வாடி திகழ்ந்து வருகிறது.
    • பல மாநிலங்களில் சமாஜ்வாடி கட்சி செயல்பட்டு வருவதால் தேசிய கட்சி அந்தஸ்தை பெற்றுள்ளது.

    உத்தர பிரதேச மாநிலத்தின் முன்னணி கட்சியாக சமாஜ்வாடி கட்சி இருந்து வருகிறது. இந்த கட்சி உத்தரகாண்ட், மத்தயி பிரதேசம் உள்ளிட்ட வட மாநிலங்களிலும் பரந்து விரிந்து காணப்படுகிறது. இதனால் இந்த கட்சி தேசிய கட்சியாக கருதப்படுகிறது. சமாஜ்வாடி கட்சியின் தேசிய தலைவராக அகிலேஷ் யாதவ் உள்ளார்.

    சமாஜ்வாடி கட்சிக்கு தமிழ்நாடு, ஆந்திரா உள்ளிட்ட இடங்களில் அக்கட்சிக்கு அமைப்புகள் உள்ளன. இந்த நிலையில் கட்சியின் தேசிய தலைவர் அகிலேஷ் யாதவின் அறிவுறுத்தலின்படி தலைவர் பதவி உள்பட தமிழ்நாடு பிரிவு கலைக்கப்படுகிறது. இது உடனடியாக அமலுக்கு வருகிறது என அக்கட்சி சார்பில் அறிக்கை வெளியிடப்படடுள்ளது.

    • சண்டிகர் மாநில மேயர் தேர்தலில் முறைகேடு நடந்ததாக எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு.
    • தேர்தல் நடத்திய அதிகாரி ராஜினாமா செய்துள்ள நிலையில், உச்சநீதிமன்றம் கண்டிப்பு.

    சண்டிகர் மாநிலத்தின் மேயர் தேர்தலில் தேர்தல் நடத்தும் அதிகாரி முறைகேடு மூலமாக, பாஜக வேட்பாளரை வெற்றி பெற்றதாக அறிவித்தார் என உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

    இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வர இருந்த நிலையில் தேர்தல் அதிகாரி தனது பதவியை ராஜினாமா செய்தார். இதன் மூலம் தேர்தலில் முறைகேடு நடந்தது உறுதியானது என கெஜ்ரிவால் தெரிவித்திருந்தார்.

    இந்த நிலையில், திருட்டு மூலம் கட்சி எப்படி வெற்றி பெறுகிறது என்பதை பா.ஜனதா ஆதரவாளர்கள் புரிந்து கொள்ள வேண்டும் அகிலேஷ் யாதவ் தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து அகிலேஷ் யாதவ் தனது எக்ஸ் பக்கத்தில் "தேர்தலில் முறைகேடு நடந்ததை அதிகாரி ஒப்புக்கொண்டது, பாஜனதா எவ்வளவு அதிகார பசியில் உள்ளது என்பதை காட்டுகிறது. சட்டப்பூர்வமாகவும், அரசியலமைப்பின் படியும் பா.ஜனதா நாட்டு மக்களிடமும், எங்கெல்லாம் அதிகாரத்தில் இருக்கிறதோ, அங்கெல்லாம் மன்னிப்பு கேட்க வேண்டும்.

    திருட்டு மூலம் கட்சி எப்படி வெற்றி பெறுகிறது என்பதை பா.ஜனதா ஆதரவாளர்கள் புரிந்து கொள்ள வேண்டும். நாடும், அவர்களுடைய குழந்தைகளின் எதிர்காலமும் இது போன்றவர்களின் கைகளில் பாதுகாப்பாக இருக்காது" என்றார்.

    முறைகேட்டில் ஈடுபட்ட அதிகாரி மீது நடவடிக்கை உச்சநீதிமன்றம் வலியுறுத்தியுள்ளது. உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி "அரசாங்கத்தின் அழுத்தத்தின் கீழ் குற்றச் செயல்களை செய்யும் அதிகாரிகளும் இந்த சம்பவத்திலிருந்து பாடம் கற்றுக்கொள்ள வேண்டும். இது அவர்களின் வாழ்க்கையையும் அவர்களின் குடும்பத்தையும் அழித்துவிடும், ஏனெனில் இதுபோன்ற குற்றங்கள் தேசத்துரோகத்திற்கு குறைவானவை அல்ல. மேலும் அவர்கள் கடுமையான தண்டனையை எதிர்கொள்வார்கள்." என்றார்.

    • உத்தர பிரதேசத்தில் கடந்த முறை காங்கிரஸ் ஒரு தொகுதி மட்டுமே வெற்றி பெற்றது.
    • 15 இடங்களுக்கு மேல் வழங்க முடியாது என அகிலேஷ் தெரிவித்துள்ளதாக தகவல்.

    2024 மக்களவை தேர்தலில் பா.ஜனதாவை தோற்கடிக்க இந்தியா கூட்டணி உருவாக்கப்பட்டது. ஆனால், தேர்தல் நெருங்க நெருங்க இந்த கூட்டணி தாக்குப்பிடிக்குமா? என்ற கேள்வி எழுந்துள்ளது.

    அதற்கு முக்கிய காரணம் காங்கிரஸ்- மற்ற கட்சிகள் இடையிலான இடங்கள் பங்கீடு தொடர்பான இடியாப்ப சிக்கல்தான்.

    மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ், கெஜ்ரிவாலின் ஆம் ஆத்மி கட்சி ஆகியவை காங்கிரஸ்க்கு அதிக இடங்கள் கொடுக்க மறுத்துள்ளது.

    உத்தர பிரதேச மாநிலத்தில் அகிலேஷ் யாதவின் சமாஜ்வாடி- காங்கிரஸ் இடையே தொகுதி பங்கீடு ஒப்பந்தம் ஏற்பட்டதாக தெரிகிறது. அம்மாநிலத்தில் உள்ள 80 இடங்களில் 11 இடங்களை காங்கிரஸ்க்கு அகிலேஷ் யாதவ் ஒதுக்கியதாக கூறப்பட்டது.

    ராகுல் காந்தி தற்போது நடைபயணம் மேற்கொண்டு வருகிறார். அவரது நடைபயணம் உத்தர பிரதேச மாநிலத்திற்குள் நுழைகிறது.

    இந்த நிலையில் 15 இடங்களுக்கு மேல் ஒன்று கூட அதிகமாக கொடுக்க முடியாது. இதை ஏற்றுக் கொண்டால்தான் ராகுல் காந்தியின் நடைபயணத்தில் கலந்து கொள்வேன் என அகிலேஷ் யாதவ் கண்டிசன் போட்டதாக தெரிகிறது.

    இதனால் இந்தியா கூட்டணியில் அகிலேஷ் யாதவ் நீடிப்பாரா? என்ற கேள்வி எழுந்துள்ளது.

    காங்கிரஸ் கட்சி 2019-ல் நாடு முழுவதும் 52 இடங்களில்தான் வெற்றி பெற்றது. இந்தி பேசும் மாநிலங்களில் அதன் வெற்றி மிகவும் குறைவாகும். உத்தர பிரதேசத்தில் ஒரு தொகுதியில்தான் வெற்றி பெற்றது. அதுவும் சோனியா காந்தி போட்டியிட்ட ரேபரேலி தொகுதியில் மட்டும்தான். அமேதி தொகுதியில் கூட ராகுல் காந்தி தோல்வயிடைந்தார். இதனால் அகிலேஷ் யாதவ் இறுதியாக 15 இடங்களுக்கு மேல் கொடுக்க மறுத்து வருகிறார்.

    மகாராஷ்டிராவில் சரத் பவார்- உத்தவ் தாக்கரேயின் சிவசேனா- காங்கிரஸ் இடையே தொகுதி பங்கீடு நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

    • சமாஜ்வாதி- ராஷ்டிரிய லோக் தளம் கட்சிகள் இணைந்து போட்டியிடுவதாக அறிவித்தன.
    • சமாஜ்வாதி கட்சி ஆதரவில் ராஷ்டிரிய லோக் தளம் தலைவர் ஜெயந்த் சவுத்ரி மாநிலங்களவை எம்.பி.யாக உள்ளார்.

    உத்தர பிரதேச மாநிலத்தில் பா.ஜனதாவுக்கு எதிராக அகிலேஷ் யாதவ் களம் இறங்குகிறார். இவர் இந்தியா கூட்டணியில் உள்ளார். இந்தியா கூட்டணியில் உத்தர பிரதேசத்தில் உள்ள 80 இடங்களில் 11 இடங்களை காங்கிரஸ் கட்சிக்கு வழங்கியுள்ளது.

    மீதமுள்ள தொகுதிகளில் சமாஜ்வாதி கட்சி அதன் கூட்டணி கட்சிகளுடன் இணைந்து போட்டியிட இருக்கிறது. சமாஜ்வாதி கட்சியில் இருந்து பிரிந்து சென்ற மறைந்த அமர் சிங் ராஷ்டிரிய லோக் தளம் கட்சியை தொடங்கினார். தற்போது அவரது மகன் ஜெயந்த் சவுத்ரி கட்சியை வழிநடத்தி வருகிறார். இவர் சமாஜ்வாதி கட்சி ஆதரவுடன் மாநிலங்களவை எம்.பி.யாக உள்ளார்.

    ராஷ்டிரிய லோக் தளம், சமாஜ்வாதி கட்சிகள் வரும் மக்களவையில் இணைந்து போட்டியிடும் என கடந்த மாதம் 19-ந்தேதி அறிவித்தன.

    இந்த நிலையில் ஜெய்ந்த் சவுத்ரியின் ராஷ்டிரிய லோக் தளம் கட்சி பா.ஜனதா கூட்டணியில் இணைந்து போட்டியிடப் போவதாக தகவல் வெளியாகியுள்ளது. பாஜக-ஆர்எல்டி கூட்டணி இறுதி செய்யப்பட்டு விட்டதாகவும், உத்தர பிரதேச மாநிலத்தில் இரண்டு இடங்களில் ஆர்எல்டி போட்டியிடும் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

    ஆர்எல்டி பாக்பாத், பிஜ்னோர் ஆகிய இரண்டு தொகுதிகளில் போட்டியிடும் எனவும், மாநிலங்களவை மற்றும் உ.பி. மேலவையில் தலா ஒரு இடம் பா.ஜனதா வழங்க இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

    பாக்பாத் தொகுதியில் இரண்டு முறை பா.ஜனதா வெற்றி பெற்றுள்ளது. அந்த கட்சியின் சத்ய பால் சிங் 2014-ல் அமர்சிங்கையும், 2019-ல் ஜெயந்த் சவுத்ரியையும் தோற்கடித்துள்ளார்.

    பிஜ்னோர் தொகுதியில் 2014-ல் பா.ஜனதா வெற்றி பெற்றது. 2019-ல் பகுஜன் சமாஜ் கட்சி வெற்றி பெற்றது. அத்துடன் மத்திய மற்றும் மாநில மந்திரி சபையிலும் இடம் வகிக்கும் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.

    இதுகுறித்து அகிலேஷ் யாதவ் கூறுகையில் "அதுபற்றி பேச்சுவார்த்தை ஏதும் நடைபெறவில்லை. எது நடந்தாலும் அது பத்திரிகையில் செய்தியாக வந்துவிடும். எனக்கு தெரிந்த தகவல்கள் அனைத்தையும் உங்களுக்கு தெரிவிக்கிறேன்" என்றார்.

    • உ.பி.யில் அகிலேஷ் யாதவின் சமாஜ்வாதி கட்சி 69 இடங்களில் போட்டியிடுகிறது.
    • டபுள் என்ஜின் அரசு என்று சொல்லப்பட்ட போதிலும் 10 வருட பட்ஜெட்டில் பணவீக்கம் குறையவில்லை.

    உத்தர பிரதேச மாநிலத்தில் பாஜக தற்போதைய எம்.பி.க்கள் யாரையும் வருகின்ற பாராளுமன்ற தேர்தலில் மீண்டும் களம் இறக்காது என சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் தெரிவித்துள்ளார்.

    இது தொடர்பாக அவர் கூறியதாவது:-

    நான் உங்களுக்கு ஒரு முக்கியமான செய்தியை சொல்ல இருக்கிறேன். உத்தர பிரதேச மாநிலத்தில் வரவிருக்கும் பாராளுமன்ற தேர்தலில், ஏற்கனவே எம்.பி.யாக இருப்பவர்களுக்கு பா.ஜனதா மீண்டும் போட்டியிட வாய்ப்பு வழங்காது. ஆனால் ஒருவரை தவிர்த்து. அவர் தனது தொகுதியை மாற்ற இருப்பதாக கூறப்படுகிறது.

    சமாஜ்வாதி கட்சி வெற்றியை நோக்கி முன்னோக்கி சென்று கொண்டிருக்கிறது. பா.ஜனதா கூட்டணியை PDA (Pichchde, Dalit, Alpsankhyak- பிற்படுத்தப்பட்டோர், தாழ்த்தப்பட்டோர், சிறுபான்மையினர்) வெல்லும் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது. பிடிஏ என்பது ஊழல், பணவீக்கம், வேலைவாய்ப்பின்மையால் துன்புறுத்தப்பட்ட 90 சதவீத மக்கள் பற்றியது.

    டபுள் என்ஜின் அரசு என்று சொல்லப்பட்ட போதிலும் 10 வருட பட்ஜெட்டில் பணவீக்கம் குறையவில்லை. விவசாயிகளை யாராவது ஒருவர் துன்பத்தில் ஆழ்த்தியிருந்தால், அது பா.ஜனதாதான்.

    இவ்வாறு அகிலேஷ் யாதவ் தெரிவித்தார்.

    உத்தர பிரதேசத்தில் பா.ஜனதாவுக்கு எதிரான இந்தியா கூட்டணி களம் இறங்குகிறது. அகிலேஷ் யாதவ் கட்சி 69 இடங்களில் போட்டியிடுகிறது. காங்கிரஸ் 11 இடங்களில் போட்டியிடுகிறது. இரு கட்சிகளுக்கும் இடையிலான இதற்கான ஒப்பந்தம் இறுதி செய்யப்பட்டுள்ளது.

    ×