search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "work"

    • கூட்டு குடிநீர் திட்ட பணிகளை விரைவாக முடிக்க வேண்டும் என கலெக்டர் ஜெயசீலன் வலியுறுத்தினார்.
    • ரூ.444.71 கோடி மதிப்பில் அருப்புக்கோட்டை, சாத்தூர் மற்றும் விருதுநகர் நகராட்சி களுக்கான கூட்டுக் குடிநீர் திட்டத்தின் கீழ் நடைபெற்று வருகிறது.

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்டம் சாத்தூர், சிவகாசி மற்றும் ஸ்ரீவில்லிபுத்தூர் பகுதிகளில் நடைபெற்று வரும் வளர்ச்சித் திட்டப்பணிகள் குறித்து கலெக்டர் ஜெயசீலன் நேரில் சென்று பார்வை யிட்டு ஆய்வு செய்தார்.

    சாத்தூர் - நென்மேனி - நாகாலாபுரம் சாலையில் நெடுஞ்சாலை துறை மூலமாக பக்தர்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு ரூ.30 கோடி மதிப்பீட்டில், 8 கி.மீ. தொலைவில் பக்தர்கள் சிரமமின்றி இருக்கன்குடி மாரியம்மன் கோவிலுக்கு சென்று தரிசனம் செய்யும் வகையில் நடைபாதை அமைக்கப்பட்டு வருகிறது.இதற்கான பணிகள் மற்றும் அடிப்படை உட்கட்டமைப்பு பணிகளை கலெக்டர் ஆய்வு செய்தார்.

    பின்னர் சாத்தூர் நகராட்சியில் எம்.ஏ.சி பூங்காவில் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் மூலம் ரூ.444.71 கோடி மதிப்பில் அருப்புக்கோட்டை, சாத்தூர் மற்றும் விருதுநகர் நகராட்சி களுக்கான கூட்டுக் குடிநீர் திட்டத்தின் கீழ் நடைபெற்று வருகிறது.

    சாத்தூர் நகராட்சிக்கு புதிதாக கட்டப்பட்டுள்ள நீர் சேகரிப்பு தொட்டி மற்றும் மேல்நிலை நீர் தேக்க தொட்டியினை மாவட்ட கலெக்டர் பார்வையிட்டு ஆய்வு செய்து, பணியினை விரைவாகவும், தரமாகவும் முடித்து, பொது மக்களின் பயன்பாட்டிற்கு கொண்டுவர சம்மந்தப்பட்ட அரசு அலுவலர்களை அறிவுறுத்தினார்.

    தொடர்ந்து சிவகாசி அனுப்பங்குளத்தில் மின்வாரிய பணிகளையும், சிவகாசி ஆணையூர் பகுதிகளில் மகளிர் உரிமைத் தொகை விண்ணப்பங்களையும் கலெக்டர் ஆய்வு செய்தார்.

    தொடர்ந்து ஸ்ரீவில்லி புத்தூர் வட்டம், மல்லியில் அறிவியல் பூங்கா அமைய உள்ள இடத்தினை கலெக்டர் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    இந்த ஆய்வின் போது, கோட்ட பொறியாளர் (தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம்) பாக்கியலட்சுமி, உதவிக் கோட்ட பொறியா ளர்கள்(தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம்) ஆனந்த குமார், அபிநயா, நிர்வாக பொறியாளர்(தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம்) மீனாட்சி சுந்தரம் உள்பட பலர் உடன் இருந்தனர்.

    • அரியலூரில் ரூ.2 கோடியில் வளர்ச்சி திட்ட பணிகளுக்கான தொடக்க விழா நடைபெற்றது
    • பணிகளை அமைச்சர் சிவசங்கர் தொடங்கி வைத்தார்

    அரியலூர்,

    அரியலூர் மாவட்டத்தில் சுமார் ரூ.2 கோடியில் வளர்ச்சித் திட்டப் பணிகள் போக்குவரத்துத்துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர் துவக்கி வைத்தார்.

    இந்நிகழ்ச்சியில் உடையார்பாளையம் வருவாய்கோட்டாட்சியர் பரிமளம், ஊரக வளர்ச்சித் துறை செயற்பொறியாளர் வெங்கடேசன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள்

    பிரபாகரன், ஜாகிர் உசைன், ஊராட்சிமன்றத் தலைவர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் அரசு அலுவலர்கள்உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    • கரூர் கசப்-இன்ஸ்பெக்டரை பணி செய்ய விடாமல் தடுத்தவர் மீது வழக்கு பதியப்பட்டு உள்ளது
    • இ-சலான் மிஷினை சேதப்படுத்தியதாகவும் கொடுக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு

    கரூர்

    கரூர், எல்.ஜி.பி., நகரை சேர்ந்த பாலசுப்பிரமணி என்பவரது மகன் சரவணகுமார் (வயது 28) இவர், தனது இருசக்கர வாகனத்தில் ஹெல்மெட் அணியாமல், மனோகரா கார்னர் பகுதியில் சென்றுள்ளார். அப்போது, பணியில் இருந்த போலீஸ் எஸ்.ஐ., சண்முக வடிவேல், அபராதம் விதித்துள்ளார். இதனால், ஆத்திரமடைந்த சரவண குமார், எஸ்.ஐ., சண்முக வடிவேலுவை, பணி செய்ய விடாமல் தடுத்து, இ-சலான் மெஷினை சேதப்படுத்தியுள்ளார். இதுகுறித்து, எஸ்.ஐ., சண்முகவடிவேல் கொடுத்த புகார்படி, சரவணகுமார் மீது, கரூர் டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

    • பசுமை பரப்பை அதிகரிக்கும் விதமாக மாவட்ட கலெக்டர் உமா அறிவுறுத்தலின்படி, கால்நடை பராமரிப்பு துறை சார்பாக திருச்செங்கோடு துணை இயக்குனர் அலுவலக வளாகத்தில் மரக்கன்றுகள் நடும் பணி தொடங்கப்பட்டது.
    • 5500 மரக்கன்றுகள் நடும் நிகழ்வு தொடங்கி வைக்கப்பட்டது.

    திருச்செங்கோடு:

    நாமக்கல் மாவட்டத்தில் பசுமை பரப்பை அதிகரிக்கும் விதமாக மாவட்ட கலெக்டர் உமா அறிவுறுத்தலின்படி, கால்நடை பராமரிப்பு துறை சார்பாக திருச்செங்கோடு துணை இயக்குனர் அலுவலக வளாகத்தில் மரக்கன்றுகள் நடும் பணி தொடங்கப்பட்டது.

    மண்டல இணை இயக்குனர் நடராஜன் தலைமையில் துணை இயக்குனர் அருண் பாலாஜி மற்றும் பசுமை தமிழகம் இயக்கத்தின் மாவட்ட தொடர்பு அலுவலர் ராஜேஸ் கண்ணன் முன்னிலையில் 5500 மரக்கன்றுகள் நடும் நிகழ்வு தொடங்கி வைக்கப்பட்டது.

    நாமக்கல் மாவட்ட வனத்துறையால் வழங்கப்பட்ட வாகை,சீமை அகத்தி, கொடுக்கா புளி உள்ளிட்ட மரக்கன்றுகளை திருச்செங்கோடு செங்குந்தர் கலை, அறிவியல் கல்லூரியைச் சார்ந்த என்.எஸ். எஸ் மற்றும் என்.சி.சி மாணவர்கள் 50-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு மரக்கன்றுகளை நடவு செய்தனர்.

    இந்நிகழ்வில் கால்நடை மருத்துவர்கள் சசிகுமார், சதீஷ்குமார் ஆகியோரும், கல்லூரியின் என்.சி.சி அலுவலர் ராமசாமி, என்.எஸ். எஸ் திட்ட அலுவலர் மைதிலி மற்றும் கால்நடை மருத்துவத் துறையினரும் கலந்து கொண்டனர்.

    • கர்ப்பிணிகளை தொடர்பு கொண்டு தொடர் பரிசோதனை மேற்கொள்ள அறிவுறுத்தப் படுகிறது.
    • 1,090 கர்ப்பிணிகளில் 600 கர்ப்பிணிகள் அதிக கவனம் தேவைப்படும் கர்ப்பிணிகளாக கண்டறியப்பட்டுள்ளனர்.

    தஞ்சாவூர்:

    தஞ்சை மாநகராட்சிக்குட்பட்ட கல்லுக்குளம், கரந்தை, மானம்புச்சாவடி மற்றும் சீனிவாசபுரம் ஆகிய 4 இடங்களில் உள்ள நகர்புற சுகாதார நிலையங்களில் தற்போது கர்ப்பகால பரிசோதனைகள் செய்து வரும் 1,090 கர்ப்பிணிகளில் 600 கர்ப்பிணிகள் உயர் ரத்த அழுத்தம், சர்க்கரை நோய், ரத்த சோகை, தைராய்டு மற்றும் முந்தைய பிரசவ அறுவை சிகிச்சை போன்ற அதிக கவனம் தேவைப்படும் கர்ப்பிணிகளாக கண்டறியப்பட்டுள்ளனர்.

    இவர்கள் அனைவரும் கடந்த மார்ச் மாதம் முதல் தஞ்சை மாநகராட்சி அலுவலகத்தில் சிறப்பாக இயங்கி வரும் தாய்சேய் நல கண்காணிப்பு மையத்தின் வழியாக கண்காணி க்கப்பட்டு வருகின்றனர்.

    மேலும் நகர்புற ஆரம்ப சுகாதார செவிலியர்களுக்கு சிவப்பு நிறத்தில் குறிக்கப்பட்டிருந்த கர்ப்பிணிகளை தொடர்பு கொண்டு தொடர் பரிசோதனை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டு, அவர்களை ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு வரவழைத்து உரிய பரிசோதனைகள் மேற்கொண்டு சிவப்பு நிறத்தை பச்சை நிறமாக மாற்றிய விவரங்கள் மீண்டும் தாய்சேய் நல கண்காணிப்பு மையத்திற்கு அனுப்பி கண்காணிக்கப்படுகிறது.

    இந்தநிலையில் தாய்சேய் நல கண்காணிப்பு மையத்திற்கு மருத்துவம், மக்கள் நல்வாழ்வுத்துறை அரசு முதன்மை செயலாளர் ககன்தீப் சிங்பேடி திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

    அப்போது இந்த தாய்சேய் நல கண்காணிப்பு மையத்தின் செயல்பாடுகளை பாராட்டினார்.

    ஆய்வின் போது மாவட்ட கலெக்டர் தீபக் ஜேக்கப், மாநகராட்சி ஆணையர் சரவணகுமார், தஞ்சை மருத்துவக்கல்லூரி முதல்வர் பாலாஜிநாதன், இணை இயக்குநர் (சுகாதார பணிகள்) திலகம், துணை இயக்குநர் கலைவாணி ஆகியோர் உடன் இருந்தனர். மாநகர்நல அலுவலர் சுபாஷ் காந்தி, தாய்சேய் நல கண்காணிப்பு மைய செயல்பாடுகளை விளக்கி கூறினார்.

    முன்னதாக தஞ்சை மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரி, ராசாமிராசுதார் அரசு ஆஸ்பத்திரி, கல்லுக்கு ளம் நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்தையும் அரசு முதன்மை செயலாளர் ஆய்வு மேற்கொண்டார்.

    • பெரம்பலூரில் தூய்மை பணி இயக்கம் நடைபெற்றது
    • மாவட்ட கலெக்டர் கற்பகம் தொடங்கி வைத்து ஆய்வு மேற்கொண்டார்

    பெரம்பலூர்,

    பெரம்பலூர் புதிய பேருந்து நிலையத்தில் "என் குப்பை என் பொறுப்பு" என்ற தலைப்பிலான தூய்மை பணி இயக்கத்தை மாவட்ட கலெக்டர் கற்பகம் தொடங்கி வைத்தார். பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் பிரபாகரன்,நகர் மன்றத் தலைவர் அம்பிகா ராஜேந்திரன் ஆகியோர் முன்னிலையில் தூய்மை பணியாளர்கள் உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர். அதனைத்தொடர்ந்து மாவட்ட கலெக்டர் தூய்மை பணிகள் நடைபெற்று வரும் மதரஸா ரோடு, வடக்குமாதவி ரோடு, சாமியப்பா நகர், எளம்பலூர் ரோடு, மதனகோபாலபுரம் ஆகிய இடங்களுக்கு நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். தூய்மைப் பணியினை தினந்தோறும் மேற்கொள்ள வேண்டும். நமது சுற்றுப்புறத் தூய்மையை பேணிக்காப்பது நமது கடமை என்கிற உணர்வு அனைவருக்கும் ஏற்பட வேண்டும். மக்கும் குப்பை மற்றும் மக்காத குப்பை என தரம் பிரித்து அவற்றை சேகரித்து தினசரி வீடு தோறும் வரும் நகராட்சி தூய்மை பணியாளர்களிடம் ஒப்படைக்க வேண்டும். அலுவலர்கள் உள்ளிட்ட பொதுமக்கள் அனைவரும் தன்னார்வமாக இப்பணிகளை மேற்கொள்ள வேண்டும் என மாவட்ட கலெக்டர் தெரிவித்தார். அதனைத்தொடர்ந்து பெரம்பலூர் நகராட்சி பகுதியில் உள்ள வெள்ளந்தாங்கி அம்மன் ஏரிக்கரை பகுதிகளில் சுமார் 75 மரக்கன்றுகள் நடும் பணிகளை மாவட்ட கலெக்டர் தொடக்கி வைத்தார். நிகழ்வுகளில் வருவாய் கோட்டாட்சியர் நிறைமதி, பெரம்பலூர் நகராட்சி ஆணையர் ராமர், நகர்மன்ற துணைத்தலைவர் ஹரிபாஸ்கர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • கறம்பக்குடி பேரூராட்சி வார்டுகளில் ரூ.1.7 கோடியில் பேவர் பிளாக் சாலை அமைக்கும் பணி தொடங்கியது
    • பச்ச நாயகம் குளக்கரை அருகே நடந்த பூமி பூஜையில் பேரூராட்சி தலைவர் முருகேசன் கலந்து கொண்டு தொடங்கி வைத்தார்

    கறம்பக்குடி,

    புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி பேரூராட்சியில் 15 வார்டுகள் உள்ளது. பல்வேறு வார்டுகளில் பிளாக் சாலை அமைப்பது உள்ளிட்ட ரூ.1.7 கோடி திட்டபணிகளுக்கான பூமி பூஜை நடைபெற்றது.கறம்பக்குடி பேரூராட்சி 9வது வார்டு பகுதிக்கு உட்பட்ட பச்சநாயகம் குளக்கரை அருகே நடைபெற்ற பூமி பூஜையில் கறம்பக்குடி தேர்வுநிலை பேரூராட்சி திமுக தலைவர் உ.முருகேசன் கலந்து கொண்டார். விழாவில் செயல் அலுவலர் கார்த்திகேயன் 9வது வார்டு பேரூராட்சி கவுன்சிலர் ராஜா மற்றும் பேரூராட்சி வார்டு கவுன்சிலர்களான வளர்மதி கருப்பையா, செண்பகவள்ளி, முருகேஸ்வரி ராஜசேகர், பேரூராட்சி அலுவலக உதவியாளர் மற்றும் அலுவலக பணியாளர்கள் பேரூராட்சி பொறியாளர் அப்பகுதி பொதுமக்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். 

    • சர்வேயர் மற்றும் சர்தார் பணியிட ங்களுக்கு ஆட்சேர்ப்பு அறிவிப்பை 2022-ம் ஆண்டு டிசம்பர் 1-ந் தேதி வெளியிட்டது.
    • வேலைவாய்ப்பை வழங்குவதில் சிறப்பு கவனம் செலுத்தியதற்காக என்.எல்.சி. நிறுவனத்திற்கு பாராட்டு தெரிவித்தனர்.

    கடலூர்:

    என்.எல்.சி. இந்தியா நிறுவனம், 192 காலியிட ங்களுக்கான ஓவர்மேன், சர்வேயர் மற்றும் சர்தார் பணியிட ங்களுக்கு ஆட்சேர்ப்பு அறிவிப்பை2022-ம் ஆண்டு டிசம்பர் 1-ந் தேதி வெளியிட்டது. முதன்முறையாக, நிலம் கொடுத்து பாதிக்கப்பட்ட நபர்களுக்கு, ஆட்சேர்ப்பு தேர்வில் 20 சலுகை மதிப்பெண்களை என்.எல்.சி. அறிவித்தது. இந்த வகையில் ஆட்சேர்ப்புச் சலுகை மதிப்பெண் காரணமாக, நெய்வேலியைச் சுற்றியுள்ள கிராமங்களில் உள்ள, நெய்வேலி சுரங்கங்களுக்காக நிலம் கொடுத்து பாதிக்க ப்பட்ட 39 பேர், ஓவர்மேன், சர்வேயர் மற்றும் சர்தார் பணியிடங்களுக்கு வேலை வாய்ப்பைப் பெற்றுள்ளனர்.

    தேர்ந்தெடுக்கப்பட்ட 39 பேர்களும் என்.எல்.சி . நிறுவனத்தில் பணியில் சேர்ந்துள்ளனர். புதிதாக பணியில் சேர்ந்த, நிலம் கொடுத்து பாதிக்கப்பட்ட 39 பேர்கள் அனைவரும் தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படு த்தியதோடு, திட்டத்தால் பாதிக்கப்பட்ட நபர்களுக்கு வேலைவாய்ப்பை வழங்குவதில் சிறப்பு கவனம் செலுத்தியதற்காக என்.எல்.சி. நிறுவனத்திற்கு பாராட்டு தெரிவித்தனர். இத் தகவலை என்.எல்.சி. மக்கள் மேம்பாட்டு துறை தலைமை மேலாளர் தெரிவித்துள்ளார்.

    • அறந்தாங்கியில் 23 லட்சத்தில் நலத்திட்ட பணிகள் தொடங்கி வைப்பு
    • எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்

    புதுக்கோட்டை

    தமிழகத்தில் திமுக ஆட்சி பொறுப்பேற்று இரண்டு வருடங்களில் மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை அந்தந்த பகுதிகளில் நிறைவேற்றி வருகிறது. அதன் ஒரு பகுதியாக அறந்தாங்கி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட அரசு ஆண்கள் மற்றும் பெண்கள் மேல்நிலைப் பள்ளிகளில் 15 லட்சம் மதிப்பிலான கலையரங்கம் கட்டுவதற்கு அடிக்கல் நாட்டு விழா ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. விழாவில் கலந்து கொண்ட சட்டமன்ற உறுப்பினர் எஸ்டி ராமச்சந்திரன் அடிக்கல் நாட்டி பணிகளை தொடங்கி வைத்தார்.

    அதே போன்று எல்என்புரம் நடுநிலைப்பள்ளியில் 4 லட்சம் மதிப்பிலான மிதிவண்டி நிறுத்தும் கூடத்தை திறந்தும், அதே பகுதியில் 4 லட்சம் மதிப்பிலான ஆழ்துளை கிணறு அமைக்கும் பணிகளை தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் நகர்மன்றத் தலைவர் ஆனந்த், நகரச் செயலாளர் ராஜேந்திரன், காங்கிரஸ் தெற்கு நகர தலைவர் வீராச்சாமி, கூடலூர் முத்து உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.

    • 60 வார்டுகளில் ஏற்கனவே கொசு ஒழிப்பு பணிக்கும் டெங்கு கொசுக்கள் உற்பத்தியை தடுக்கும் வகை யிலும் 400 ஊழியர்கள் பணியில் உள்ளனர்.
    • அவர்கள் கொசு ஓழிப்பு பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

    சேலம்:

    சேலம் மாநகராட்சியில் 60 வார்டுகள் உள்ளன. இந்த வார்டுகளில் ஏற்கனவே கொசு ஒழிப்பு பணிக்கும் டெங்கு கொசுக்கள் உற்பத்தியை தடுக்கும் வகை யிலும் 400 ஊழியர்கள் பணி யில் உள்ளனர். அவர்கள் கொசு ஓழிப்பு பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

    தென் மேற்கு பருவ மழை

    இந்த நிலையில் தென்மேற்கு பருவ மழை தொடங்கி உள்ள நிலையில் சமீப காலமாக சேலம் மாநகரில் கொசு உற்பத்தி அதிகரித்துள்ளது. இதனால் பொதுமக்கள் கடும் அவ திப்பட்டு வருகிறார்கள். இதையடுத்து கொசு ஒழிப்பு பணியை தீவிரப் படுத்த அதி காரிகள் மற்றும் ஊழியர்கள் ஆலோசனை செய்தனர்.

    தொடர்ந்து கொசுக்களை ஒழிக்கவும் டெங்கு கொசுக்கள் உருவாவதை தடுக்கவும் வீடு, வீடாக சென்று கள ஆய்வு செய்யும் வகையில் 200 ஊழியர்கள் விரைவில் நியமிக்க முடிவு செய்யப்பட்டது. இந்த ஊழியர்கள் விரைவில் நியமிக்கப்பட உள்ளனர்.

    200 ஊழியர்கள்

    புதிதாக நியமிக்கப்படும் ஊழியர்கள் அம்மாப் பேட்டை, அஸ்தம்பட்டி, கொண்ட லாம்பட்டி, சூரமங்கலம் ஆகிய மண்டலங்களில் தலா 30 பேர் பணியாற்றுவார்கள். மீதம் உள்ள 80 ஊழியர்கள் தலா 20 வீதம் 4 குழுக்களாக பிரிக்கப்பட்டு வணிக வளாகங்கள், பள்ளி கூடங்கள், கல்லூரிகள், அரசு ஆஸ்பத்திரிகளுக்கு தேவைக்கு தகுந்தாற்போல அனுப்பி வைக்கப்பட்டு கொசு ஒழிப்பு பணியில் ஈடுபடுவார்கள்.

    புதிதாக நியமிக்கப்படும் ஊழியர்கள் 120 பேர் தினமும் 300 வீடுகளுக்கு சென்று கொசு ஒழிப்பு மற்றும் டெங்கு கொசு ஒழிப்பு தடுப்பு நடவடிக்கை களில் ஈடுபட வேண்டும், குறிப்பாக தண்ணீர் தேங்கும் வகையில், நீண்ட நாட்கள் ஒரே இடத்தில் குவித்து வைக்கப் பட்டுள்ள பொருட்களை அகற்ற வேண்டும்.

    மேலும் டெங்கு கொசுக் கள் நல்ல தண்ணீரில் பரவும் என்பதால் அதில் கொசு ஒழிப்பு மருந்துகள் தெளிப்பது, கொசு வளர்வதை தடுக்க வீட்டு உரிமையாளர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்து தல் ஆகிய பணிகளை மேற்கொண்டு அதற்கான அறிக்கையை சுகாதார துறை அதிகாரிகளிடம் தினமும் அளிக்க வேண்டும்.

    429 ரூபாய் ஊதியம்

    இந்த பணிக்கான ஊழி யர்கள் நியமனம் விரைவில் நடை பெற உள்ளது. தினக்கூலி அடிப்படையில் பணியில் சேர்க்கப்படும் இவர்களுக்கு ஊதியமாக 429 ரூபாய் வழங்கப்பட உள்ளது என அதிகாரிகள் தெரிவித்தனர்.

    • கீழக்கொளத்தூரில் டெங்கு தடுப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது
    • 56 பேருக்கு டெங்கு பரிசோதனை

    அரியலூர்,

    தேசிய டெங்கு மாதத்தையொட்டி அரியலூர் மாவட்டம், திருமானூர் அடுத்த கீழக்கொளத்தூர் கிராமத்தில் இலவச மருத்துவ முகாம் மற்றும் டெங்கு தடுப்பு நடவடிக்கை பணிகள் நடைபெற்றது.மாவட்ட மலேரியா அலுவலர் கிருஷ்ணமூர்த்தி, மருத்துவ அலுவலர், ஃபிர்தெஸ்பானு ஆகியோர் மேற்பார்வையில் நடைபெற்ற முகாமில், 7 கர்ப்பிணிப் பெண்கள் உட்பட 56 பேருக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. 234 பேருக்கு நிலவேம்பு குடிநீர் வழங்கப்பட்டது. 7 பேருக்கு ரத்த மாதிரிகள் மற்றும் 3 இடங்களில் குடிநீர் மாதிரிகள் சேகரிக்கப்பட்டு பொது சுகாதாரத் துறை ஆய்வகத்துக்கு பரிசோதனைக்கு அனுப்பப்பட்டது.தொடர்ந்து, வட்டார சுகாதார மேற்பார்வையாளர் வகீல், சமுதாய சுகாதார செவிலியர் முருகேஸ்வரி, இளநிலை பூச்சியியல் வல்லுநர் சுப்பிரமணி மற்றும் சுகாதார ஆய்வாளர்கள், கிராமப்புற சுகாதார செவிலியர்கள், நடமாடு மருத்துவக் குழுவினர், டெங்கு தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.

    • சுமை தூக்கும் தொழிலாளர்கள் கூலி உயர்வு கேட்டு கடந்த 8 நாட்களாக கால வரையற்ற வேலை நிறுத்தம் மற்றும் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்
    • இதன் காரணமாக சுமார் 800 கோடி மதிப்பிலான சரக்கு பார்சல்கள் குடோன்களில் தேக்க மடைந்தன.

     ஈரோடு:

     ஈரோடு மாநகரில் சுமை தூக்கும் தொழிலாளர்கள் கூலி உயர்வு கேட்டு கடந்த 8 நாட்களாக கால வரையற்ற வேலை நிறுத்தம் மற்றும் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். இதன் காரணமாக சுமார் 800 கோடி மதி ப்பி லான சரக்கு பார்ச ல்கள் குடோ ன்களில் தேக்க மடை ந்தன. இத னைய டுத்து அனைத்து தொழில் சங்கத்தினர் தலைமையில் பேச்சுவா ர்ததை நடத்த ஒரு குழுவும், லாரி டிரா ன்ஸ்போ ர்ட் தரப்பில் பேச்சு வார்த்தை நடத்த ஒரு குழுவும் அமை க்கப்பட்டது. 2 கட்டமாக பேச்சு வா ர்த்தை நட ந்தது . இதனை த்தொடர்ந்து அமைச்சர் முத்துசாமி இரண்டு தரப்பின ரிடமும் தொ லை பேசியில் பேசி பிரச்சி னை க்கு தீர்வு கா ண்ப தாக உறுதி அளி த்தார். இதனை ஏற்று தொழி லாளர்கள் த ங்கள் வேலை நிறுத்த போ ராட்ட த்தை வாபஸ் பெற்று பணிக்கு திரும்பினர்.

    ×