என் மலர்
உள்ளூர் செய்திகள்

சப்-இன்ஸ்பெக்டரை பணி செய்ய விடாமல் இடையூறு
- கரூர் கசப்-இன்ஸ்பெக்டரை பணி செய்ய விடாமல் தடுத்தவர் மீது வழக்கு பதியப்பட்டு உள்ளது
- இ-சலான் மிஷினை சேதப்படுத்தியதாகவும் கொடுக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு
கரூர்
கரூர், எல்.ஜி.பி., நகரை சேர்ந்த பாலசுப்பிரமணி என்பவரது மகன் சரவணகுமார் (வயது 28) இவர், தனது இருசக்கர வாகனத்தில் ஹெல்மெட் அணியாமல், மனோகரா கார்னர் பகுதியில் சென்றுள்ளார். அப்போது, பணியில் இருந்த போலீஸ் எஸ்.ஐ., சண்முக வடிவேல், அபராதம் விதித்துள்ளார். இதனால், ஆத்திரமடைந்த சரவண குமார், எஸ்.ஐ., சண்முக வடிவேலுவை, பணி செய்ய விடாமல் தடுத்து, இ-சலான் மெஷினை சேதப்படுத்தியுள்ளார். இதுகுறித்து, எஸ்.ஐ., சண்முகவடிவேல் கொடுத்த புகார்படி, சரவணகுமார் மீது, கரூர் டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.
Next Story






