search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கூட்டு குடிநீர்"

    • கழிவு நீர் கால்வாயில் கலக்கிறது
    • நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் வலியுறுத்தல்

    ஆலங்காயம்:

    சேலம் மேட்டூரில் இருந்து விநியோகம் செய்யப்படும் ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி, ஆம்பூர், பள்ளிகொண்டா உள்ளிட்ட பகுதிகளில் வழியாக அரக்கோணம் வரை விநியோகம் செய்யபட்டு வருகிறது.

    வாணியம்பாடி நியூ டவுன் பகுதியில் ஒகேனக்கல் கூட்டு நீர் வந்து செல்ல 12 லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட தேக்க தொட்டி அமைக்கப்பட்டு அங்கிருந்து வாணியம்பாடி சுற்றுவட்டார பகுதிகளுக்கு குடிநீர் வினியோகம் செய்யபட்டு வருகிறது.

    தண்ணீர் செல்லும் பாதையில் அழுத்தம் அதிகரிக்கும் போது குழாய் வெடிக்காமல் இருக்க உபரி நீர் வெளியேறி ஏரியில் கலப்பதற்காக இஸ்லாமிய பெண்கள் கல்லூரி அருகே ராட்சத குழாய் அமைக்கப்பட்டுள்ளது.

    இந்த நிலையில் அடிக்கடி அந்த ராட்சத குழாய் மூலம் ஒகேனக்கல் கூட்டு குடிநீர் வெளியேறி கழிவு நீர் கால்வாயில் கலந்து வீணாக செல்கிறது.

    நேற்று இரவு சுமார் 1 மணி நேரத்திற்கு மேலாக லட்சக்கணக்கான லிட்டர் குடிநீர் வீணாக சென்றது. மக்களுக்கு குடிநீராதாரமாக சென்றடைய வேண்டிய குடிநீர் வீணாக செல்லக்கூடிய அவல நிலை ஏற்பட்டது.

    குடிநீர் வடிகால் வாரியம் இதன் மீது கூடுதல் கவனம் செலுத்தி மக்களின் தாகத்தை தீர்க்க வேண்டிய குடிநீரை வீணாக செல்வதை தடுக்க நடவடிக்கை வேண்டும் என வலியுறுத்தினர்.

    • கூட்டு குடிநீர் திட்ட பணிகளை விரைவாக முடிக்க வேண்டும் என கலெக்டர் ஜெயசீலன் வலியுறுத்தினார்.
    • ரூ.444.71 கோடி மதிப்பில் அருப்புக்கோட்டை, சாத்தூர் மற்றும் விருதுநகர் நகராட்சி களுக்கான கூட்டுக் குடிநீர் திட்டத்தின் கீழ் நடைபெற்று வருகிறது.

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்டம் சாத்தூர், சிவகாசி மற்றும் ஸ்ரீவில்லிபுத்தூர் பகுதிகளில் நடைபெற்று வரும் வளர்ச்சித் திட்டப்பணிகள் குறித்து கலெக்டர் ஜெயசீலன் நேரில் சென்று பார்வை யிட்டு ஆய்வு செய்தார்.

    சாத்தூர் - நென்மேனி - நாகாலாபுரம் சாலையில் நெடுஞ்சாலை துறை மூலமாக பக்தர்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு ரூ.30 கோடி மதிப்பீட்டில், 8 கி.மீ. தொலைவில் பக்தர்கள் சிரமமின்றி இருக்கன்குடி மாரியம்மன் கோவிலுக்கு சென்று தரிசனம் செய்யும் வகையில் நடைபாதை அமைக்கப்பட்டு வருகிறது.இதற்கான பணிகள் மற்றும் அடிப்படை உட்கட்டமைப்பு பணிகளை கலெக்டர் ஆய்வு செய்தார்.

    பின்னர் சாத்தூர் நகராட்சியில் எம்.ஏ.சி பூங்காவில் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் மூலம் ரூ.444.71 கோடி மதிப்பில் அருப்புக்கோட்டை, சாத்தூர் மற்றும் விருதுநகர் நகராட்சி களுக்கான கூட்டுக் குடிநீர் திட்டத்தின் கீழ் நடைபெற்று வருகிறது.

    சாத்தூர் நகராட்சிக்கு புதிதாக கட்டப்பட்டுள்ள நீர் சேகரிப்பு தொட்டி மற்றும் மேல்நிலை நீர் தேக்க தொட்டியினை மாவட்ட கலெக்டர் பார்வையிட்டு ஆய்வு செய்து, பணியினை விரைவாகவும், தரமாகவும் முடித்து, பொது மக்களின் பயன்பாட்டிற்கு கொண்டுவர சம்மந்தப்பட்ட அரசு அலுவலர்களை அறிவுறுத்தினார்.

    தொடர்ந்து சிவகாசி அனுப்பங்குளத்தில் மின்வாரிய பணிகளையும், சிவகாசி ஆணையூர் பகுதிகளில் மகளிர் உரிமைத் தொகை விண்ணப்பங்களையும் கலெக்டர் ஆய்வு செய்தார்.

    தொடர்ந்து ஸ்ரீவில்லி புத்தூர் வட்டம், மல்லியில் அறிவியல் பூங்கா அமைய உள்ள இடத்தினை கலெக்டர் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    இந்த ஆய்வின் போது, கோட்ட பொறியாளர் (தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம்) பாக்கியலட்சுமி, உதவிக் கோட்ட பொறியா ளர்கள்(தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம்) ஆனந்த குமார், அபிநயா, நிர்வாக பொறியாளர்(தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம்) மீனாட்சி சுந்தரம் உள்பட பலர் உடன் இருந்தனர்.

    • கிராமங்களுக்கு குடிநீர் விநியோகம்
    • தண்ணீரை பைப் லைன் வழியாக

    நாகர்கோவில் : ராஜாக்கமங்கலத்தில் எம்.ஆர்.காந்தி எம்.எல்.ஏ. நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    குமரி மாவட்டத்தில் உள்ள கடற்கரை கிராமங்கள் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களுக்கு குடிநீர் விநியோகம் செய்யும் குழித்துறை குடிநீர் திட்டம் கடந்த 18 வருடங்களுக்கு முன்னர் தொடங்கப்பட்டது. தற்போது இந்த குடிநீர் திட்டம் மூலம் குடிநீர் விநியோகிக்கப்பட்டு வருகிறது.

    இந்த குடிநீர் திட்டம் குழித்துறை ஆற்றில் இருந்து தண்ணீரை பைப் லைன் வழியாக கன்னியாகுமரி வரை கொண்டு செல்கிறது. இந்த குடிநீர் திட்ட பைப்புகள் அனைத்தும் சாலையின் நடுவே போடப்பட்டுள்ளது அந்த சாலையில் கனரக வாகனங்கள் செல்வதால் பைப்லைன் அனைத்தும் பல இடங்களில் பழுதடைந்து இருக்கிறது.

    குடிநீர் குழாய்கள் அடிக்கடி வெடித்து தண்ணீர் லீக் ஆவதால் அதில் குழிகள் தோண்டப்பட்டு அந்த சாலைகள் முற்றிலும் நாசமாகி வருகிறது. 18 வருடங்களுக்கு முன்னால் சுமார் ரூ.38 கோடியில் அமைக்கப்பட்ட இந்த பைப் லைனானது பழுதடைந்து குழித்துறை முதல் கன்னியாகுமரி வரை செல்லும் மேற்கு கடற்கரை சாலை குண்டும் குழியுமாக பல இடங்களில் காணப்படுகிறது.

    இச்சாலையை செப்பனிடக்கோரி பொதுமக்கள் மற்றும் அரசியல் கட்சிகள் பலமுறை தமிழக அரசுக்கு கோரிக்கை மனு அனுப்பியும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. கடந்த 4 மாதத்திற்கு முன்னால் ராஜாக்கமங்கலம் துறையில் பள்ளி மாணவி அதில் விழுந்து படுகாயம் அடைந்தவுடன் அதில் மறியல் போராட்டம் நடத்தப்பட்டது.

    இருப்பினும் அந்த சாலை சீராக செப்பனிடவில்லை. இதனால் குண்டு குழிகளில் விழுந்து 500-க்கும் அதிகமான இருசக்கர வாகன ஓட்டிகள் பலியாகி உள்ளனர். அடிக்கடி உயிர்களை பழிவாங்கும் இந்த குடிநீர் குழாய் திட்டத்தை பழுதுகளை செப்பனிடும் பணிக்கே சுமார் ரூ.10 கோடிக்கு மேல் செலவாகி உள்ளதாக தெரிகிறது. தொடர்ந்து இதே பைப் லைனில் தண்ணீர் அனுப்பினால் தொடர்ச்சியாக பல ஆயிரக்கணக்கான பேர் இறக்க நேரிடும்.

    எனவே இந்த திட்டத்தை உடனடியாக அரசு சாலையின் அருகில் புதிய பைப் லைன் அமைத்து தண்ணீர் விட கோரி உள்ளார். மேலும் இந்தத் திட்டத்தை உடனே அரசு அறிவித்து பணிகளை தொடங்காவிட்டால் போராட்டம் நடத்தப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார். 

    • சீரான குடிநீர் வழங்கு வதற்காக மத்திய மற்றும் மாநில அரசு இணைந்து ஜல் ஜீவன் மிஷன் திட்டத்தின் கீழ் கூட்டுக் குடிநீர் திட்டம் செயல்படுத்த முடிவு செய்தது.
    • அனைத்து காலங்களிலும் தண்ணீர் பற்றாக்குறை ஏற்படாதவாறு பேரேஜ் அருகே இத்திட்டம் அமைக்க ப்பட்டுள்ளது.

    மொடக்குறிச்சி:

    ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி ஒன்றியத்தில் மொத்தம் 23 ஊராட்சிகள் உள்ளது. இந்த ஊராட்சி மக்களுக்கு நிரந்தரமாக சீரான குடிநீர் வழங்கு வதற்காக மத்திய அரசு மற்றும் மாநில அரசு இணைந்து ஜல் ஜீவன் மிஷன் திட்டத்தின் கீழ் ரூ.412.12 கோடி மதிப்பீட்டில் கூட்டுக் குடிநீர் திட்டம் செயல்படுத்த முடிவு செய்தது.

    அதன்படி கடந்த 2020-ம் ஆண்டு இத்திட்டத்திற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு நிதி ஒதுக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து கடந்த 2021-ம் ஆண்டு இத்திட்டத்தி ற்கான பணிகள் தொடங்க ப்பட்டது.

    மொடக்குறிச்சி ஒன்றியத்திற்குட்பட்ட நஞ்சைக்காளமங்கலம் ஊராட்சிக்குட்பட்ட மன்ன தாம்பாளையத்தில் உள்ள காவிரி ஆற்றின் நடுவில் கிணறு அமைக்க ப்படுகிறது. அதில் இருந்து குழாய் மூலம் காவிரி ஆற்றின் கரைப்பகுதியில் கூடுதலாக கிணறு அமைக்க ப்படுகிறது.

    அங்கிருந்து புஞ்சைக் காளமங்கலம் ஊராட்சி க்குட்பட்ட கணபதி பாளையத்தில் சுத்திகரிப்பு நிலையம் அமைத்து அங்கு நீரை சுத்திகரிப்பு செய்ய ப்படுகிறது.

    இதன் மூலம் மொடக் குறிச்சி, எழுமாத்தூர், பள்ளியூத்து, கஸ்பாபேட்டை ஆகிய 4 இடங்களில் நீர் உந்து நிலையங்களில் கொண்டு சென்று பின்னர் மொடக்குறிச்சி ஒன்றியத்தில் உள்ள 23 ஊராட்சிகளில் புதிதாக 25 தரை மட்ட நீர் தேக்க தொட்டிகளில் நீர் சேகரிக்கப்பட உள்ளது.

    மேலும் 25 தரை மட்ட நிர் தேக்க தொட்டிகளில் இருந்து சம்பந்தப்பட்ட ஊராட்சிகளில் ஏற்கனவே பயன்பாட்டில் உள்ள 554 மேல்நிலைத் நீர்த்தேக்க தொட்டிகள் மற்றும் புதிதாக அமைக்கப்பட உள்ள 225 மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகளுக்கு தண்ணீ ரைக் கொண்டு சென்று அதன்மூலம் வீட்டு இணைப்பு களுக்கு நேரடி யாக குடிநீர் வழங்க உள்ளனர்.

    இதற்காக நபர் ஒருவருக்கு நாள் ஒன்றுக்கு 55 லிட்டர் வீதம் 2 லட்சத்து 39 ஆயிரம் மக்கள் பயன்பெரும் வகையில் 20.50 மில்லியன் லிட்டர் எடுக்க உள்ளனர். இத்திட்டத்தின் கீழ் 23 ஊராட்சிகளைச் சேர்ந்த 442 குக்கிராமத்தில் வசிக்கும் மக்களுக்கு குடிநீர் வழங்க ப்பட உள்ளது.

    இத்திட்டம் பாசூர் பேரேஜ்க்கு அருகே உள்ள மன்னதாம்பாளையத்தில் கடந்த 2021-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. அனைத்து காலங்களிலும் தண்ணீர் பற்றாக்குறை ஏற்படாதவாறு பேரேஜ் அருகே இத்திட்டம் அமைக்க ப்பட்டுள்ளது.

    இதனால் கோடை காலங்களில் பேரேஜில் தண்ணீர் தேக்கும் போது இத்திட்டத்திற்காக அமைக்கப்பட்ட கிணற்றில் தண்ணீர் இருந்து கொண்டே இருக்கும். இதனால் மொடக்குறிச்சி ஒன்றியத்தில் உள்ள அனைத்து ஊராட்சி மக்களுக்கும் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்படாத வண்ணம் அமைக்கப்பட்டு உள்ளது.

    மேலும் காவிரி ஆற்றில் கிணறு அமைக்கும் பணி நிறைவடைந்துள்ளது. அதிலிருந்து காவிரி ஆற்றின் கரைப்பகுதியான மன்னதாம்பாளையத்தில் கூடுதலான கிணற்றுக்கும் பெரிய குழாய் அமைக்கும் பணியும் நிறைவடைந்து உள்ளது.

    அதேபோல் கணபதி பாளையத்தில் அமைக்க ப்பட்டு வரும் நீர் சுத்திகரிப்பு நிலையம் பணியும், 4 நீர் உந்து நிலையம் அமைக்கும் பணி, புதிதாக ஊராட்சி களில் கட்டப்பட்டு வரும் 225 மேல்நிலை நீர் தேக்கத்தொட்டி அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது.

    மேலும் காவிரி ஆற்றில் அதிக அளவு தண்ணீர் செல்வதால் கூட்டுக் குடிநீர் திட்ட பணிகள் தொய்வ டைந்துள்ளது. கூட்டு குடிநீர் திட்ட பணிகளை விரைந்து முடித்து பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டுமென பொது மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

    • கொள்ளிடம் கூட்டு குடிநீர் திட்ட பிரதான குழாயில் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் நூற்றுக்கணக்கான லிட்டர் ஆற்றில் வீணாக செல்கிறது.
    • இதுவரை எந்த நடவடிக்கை எடுக்கவில்லை என பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

    வேதாரண்யம்:

    வேதாரண்யம் தாலுகா வாய்மேடு கடைத்தெருவில் கொள்ளிடம் கூட்டு குடிநீர் திட்ட குழாயில் உடைப்பு ஏற்பட்டு தினமும் நூற்றுக்கணக்கான லிட்டர் குடிநீர் விணாகிறது இதனை சரிசெய்ய பொதுமக்கள் குடிநீர் வடிகால் வாரியத்திற்கு பொதுமக்கள்கோரிக்கை. விடுத்துள்ளனர்

    வேதாரண்டம் அடுத்த வண்டுவாஞ்சேரியிலிருந்து அண்ணாபேட்டை, வாய்மேடு ,தகட்டூர் , மருதூர், ஆயக்காரன்புலம் வழியாக வேதாரண்யம் செல்லும் கொள்ளிடம் கூட்டு குடி நீர் திட்ட பிரதான குழாயில் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் நூற்றுக்கணக்கான லிட்டர் ஆற்றில் வீணாக செல்கிறது.

    இது குறித்து பல முறை சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் மனுக்கள் மூலமாகவும்,தகவல் தெரிவித்தும் இதுவரை எந்த நடவடிக்கை எடுக்கவில்லை என பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

    எனவே உடனடியாக கொள்ளிடம் கூட்டு குடிநீர் திட்ட குழாயில் ஏற்பட்ட உடைப்பை சரி செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • கூட்டு குடிநீர் குழாயில் ஏற்பட்ட உடைப்பின் காரணமாக அப்பகுதி முழுவதும் குளம் போல் தண்ணீர் தேங்கி கிடக்கிறது.
    • வீணாகும் தண்ணீர், சாக்கடையுடன் கலப்பதால் மாணவர்களுக்கு தொற்றுநோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

    தென்காசி:

    கீழப்பாவூர் யூனியனுக்கு உட்பட்ட குறும்பலாப்பேரி கிராமத்திற்கு தாமிரபரணி கூட்டுக்குடிநீர் திட்டத்தின் மூலம் குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது.

    அங்குள்ள பத்திரகாளியம்மன் கோவில் முன்பு கூட்டு குடிநீர் குழாயில் ஏற்பட்ட உடைப்பின் காரணமாக அப்பகுதி முழுவதும் குளம் போல் தண்ணீர் தேங்கி கிடக்கிறது. மேலும் வீணாகும் தண்ணீர், சாக்கடையுடன் கலக்கிறது.

    இதனால் அதன் அருகில் உள்ள அரசு தொடக்கப்பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கு தொற்றுநோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே சம்பந்தப்பட்ட துறையினர் உடைப்பு ஏற்பட்ட குழாயை சரி செய்ய வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    ×