search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "work"

    • அரசு அலுவலகங்களை தூய்மை செய்யும் பணியை கலெக்டர் தொடங்கி வைத்தார்
    • தூய்மையே சேவை இயக்கத்தின் சார்பில் தூய்மை பணி செய்வதின் முக்கியத்துவம் குறித்த உறுதிமொழி வாசிக்கப்பட்டது

    பெரம்பலூர்,

    பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள அரசு அலுவலகங்களை தூய்மை செய்யும் சேவைப்பணி ஒரே நாளில் நடத்தப்பட வேண்டும் என்று மாவட்ட கலெக்டர் கற்பகம் அறிவுறுத்தி இருந்தார். அதன்படி கலெக்டர் அலுவலகத்தில் தூய்மை காவலர்களுடன் இணைந்து தூய்மைப்பணிகளை கலெக்டர் தொடங்கி வைத்தார். அதனைத்தொடர்ந்து பெரம்பலூர் நகராட்சிக்குட்பட்ட தூய்மை காவலர்கள், ஊரகப்பகுதிகளில் பணியாற்றும் தூய்மை காவலர்கள் என 100-க்கும் மேற்பட்டவர்கள் நேரு யுவகேந்திராவில் உள்ள தன்னார்வ இளைஞர்கள் இணைந்து கலெக்டர் அலுவலகத்தை சுற்றிலும் உள்ள பகுதிகளில் தூய்மைப்பணிகளை மேற்கொண்டனர். மேலும், அந்தந்த அரசு அலுவலகங்களில் சம்மந்தப்பட்ட துறை அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் தங்கள் அலுவலகத்தை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டனர். முன்னதாக தூய்மையே சேவை இயக்கத்தின் சார்பில் தூய்மை பணி செய்வதின் முக்கியத்துவம் குறித்த உறுதிமொழியை கலெக்டர் வாசித்தார். அதனை தொடர்ந்து அனைவரும் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். பின்னர் கலெக்டர் கூறுகையில், உறுதிமொழி எடுத்துக் கொள்வது மட்டுமல்லாமல் நமது சுற்றுப்புற பகுதிகளையும் தூய்மையாக வைத்துக் கொள்வது நமது கடமை. கிராமப்புறங்களில் நீர் நிலைகள், பொது இடங்களை தூய்மையாக பராமரிக்க வேண்டும். குப்பைகளை மக்கும் குப்பை, மக்காத குப்பை என முறையாக பிரித்தெடுக்க வேண்டும் என்றார். நிகழ்ச்சியில் நகராட்சி ஆணையர் ராமர், மகளிர் திட்ட இயக்குனர் அருணாச்சலம், நேருயுவகேந்திரா ஒருங்கிணைப்பாளர் கீர்த்தனா, தூய்மை இந்தியா இயக்கத்தின் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் பூபதி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • கடந்த ஜூலை 10-ந்தேதி காலை 8.00 மணிக்கு வேலைக்கு செல்வதாக கூறி சென்றவர் இதுவரை வீடு திரும்பவில்லை
    • சரவணலட்சுமியின் தந்தை ரமேஷ், பண்ருட்டி போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார்.

    கடலூர்:

    பண்ருட்டி திருவள்ளுவர் நகரைச் சேர்ந்தவர் பாண்டித்துரை. பெயிண்டர், இவரது மனைவி சரவணலட்சுமி (வயது 27). இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். கடந்த ஜூலை 10-ந்தேதி காலை 8.00 மணிக்கு வேலைக்கு செல்வதாக கூறி சென்றவர் இதுவரை வீடு திரும்பவில்லை. இவரை பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இது குறித்து சரவணலட்சுமியின் தந்தை ரமேஷ், பண்ருட்டி போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். பண்ருட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் கண்ணன் வழக்கு பதிவு செய்து காணாமல் போன சரவணலட்சுமியை தேடி வருகிறார்.

    • கந்தர்வகோட்டை அண்டனூரில் தூய்மை பணியில் ஈடுபட்ட இளைஞர்கள்
    • துப்புரவு பணியாளர்களுடன் இணைந்து தூய்மை பணி மேற்கொண்டனர்

    கந்தர்வகோட்டை,

    புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை ஒன்றியத்தில் தூய்மை பாரத இயக்கம் சார்பில்"குப்பை இல்லா இந்தியா" பிரச்சார இயக்கம் மூலம் தூய்மை பணி நடைபெற்று வருகிறது. இதன் ஒரு பகுதியாக அண்டனூர் ஊராட்சி வேலாடிப்பட்டி துணை சுகாதார நிலையத்தில் ஊராட்சி மன்ற தலைவர் இளங்கோவன் தலைமையில் கிராம இளைஞர்கள், தூய்மை காவலர்கள், துப்புரவு பணியாளர்கள் இணைந்து தூய்மை பணி மேற்கொண்டனர் இதில் ஊராட்சி உறுப்பினர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கலந்து கொண்டனர். ஊராட்சி எழுத்தர் இளவரசன் , வட்டார ஒருங்கிணைப்பாளர் விஜயலட்சுமியும் நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தார்கள்.

    • தனியார் துறை வேலைவாய்ப்பு முகாமில் 297 பேருக்கு பணி நியமன சான்றிதழ் வழங்கப்பட்டது
    • அமைச்சர் சிவசங்கர் வழங்கினார்

      அரியலூர், 

    மறைந்த முன்னாள் முதல்வர் மு.கருணாநிதி நூற்றா ண்டு விழாவை முன்னிட்டு, அரியலூர் மாவ ட்டம், செந்துறை அரசு பெண்கள் மே ல்நிலைப் பள்ளியில், மாவ ட்ட நிர்வாகம் ,மாவட்ட வே லைவாய்ப்பு மற்றும் தொ ழில்நெறி வழிகாட்டல் மை யம் சார்பில் நடைபெற்ற தனியார் துறை வே லைவாய்ப்பு முகாமில் 297 பேருக்கு பணி நியமனச் சா ன்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.முகாமுக்கு கலெக்டர் ஜா.ஆனிமேரி ஸ்வர்ணா தலைமை தாங்கினார். அரி யலூர் எம்.எல்.ஏ கு.சின்ன ப்பா முன்னிலை வகித்தார். இந்த வேலைவாய்ப்பு முகா மை போக்குவரத்து துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர் தொடக்கி வைத்தார். பின்னர் பணி நியமனச் சான்றிதழ்களை வழங்கி பேசுகையில்,இந்த வேலைவாய்ப்பு முகாமுக்கு 102 நிறுவனங்கள் வந்திரு க்கின்றன. முகா முக்கு வந்த 2,063 பேர் வேலை வாய்ப்புக்கு பதிவு செய்து ள்ளனர். அவர்கள் அனைவருக்கும் வே லைவாய்ப்பு வழங்க முடியா து. முகாமில் கலந்து கொ ண்டவர்களில் 297 நபர்க ளுக்கு வேலை வாய்ப்பு க்கான ஆணை வழங்கப்ப டுகிறது. மேலும் 512 நபர்கள் 2-ம் கட்ட நேர்முக தேர்வு க்குகு தேர்வாகி யுள்ளனர். மீதம் இருப்பவர்கள் வேலை கிடைக்கவில்லை என்று வருத்தப்பட தேவையில்லை. அடுத்தடுத்த கட்டங்களில் நடைபெறுகின்ற இதே போன்ற வேலைவாய்ப்பு முகாம்க ளில் நாம் நேர்முகத் தேர்வில் கலந்து கொள்ள நம்மை தயார் செய்ய வே ண்டும. இந்த அனுபவத்தின் மூ லமாக அடுத்த நேர்கா ணலில் கேட்கப்படும் கேள்விகளுக்கு பதில் அளி க்கும் வகையில் நாம் நம்மை தயார் கொள்ள வேண்டும். வரும் ஜனவரி மாதத்தில் மாபெரும் தொழில் முத லீட்டு மாநாடு நடைபெற இரு க்கின்றது. பல நாட்டைச் சேர்ந்த தொழில் நிறு வனங்களை பங்கேற்க செய்து தமிழகத்தில் வேலை வா ய்ப்பு பெறுகின்ற வகை யில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அதற்கான பணிகளை மேற்கொண்டு வருகிறார். குன்னம் தொகுதியில் சிப்காட்டில் தைவான் நாட்டைச் சேர்ந்த கா லனி தயாரிக்கும் தொ ழிற்சாலை வரவுள்ளது. அ தனையொட்டி 5,000 முதல் 10,000 வேலை வாய்ப்பு பணிகள் கிடைக்க உள்ளது என்றார். இம்முகாமில் ஊ ரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் இலக்குவன், மா வட்ட வேலைவாய்ப்பு அலுவலர் அ.க லைச்செ ல்வன், செந்துறை ஊராட்சி மன்றத் தலைவர் செல்லம் கடம்பன், இளநிலை வேலை வாய்ப்பு அலுவலர் மூ.வினோ த்குமார் உள்ளி ட்டோர் கலந்து கொண்டனர்.

    • சின்னச் சின்ன மகிழ்ச்சியை கூட பொறுமையாக அனுபவிக்க முடிவதில்லை.
    • தேநீர் பருகுவது, காலை உணவை சாப்பிடுவது எல்லாமே அவசர கதியில் முடிந்து விடுகிறது.

    இன்றைய காலகட்டத்தில் திருமணத்திற்கு பிறகு பெண்களும் வேலைக்கு சென்றால்தான் செலவுகளை சமாளிக்க முடியும் என்ற நெருக்கடி பல குடும்பங்களில் நிலவுகிறது. அதனால் பெண்களும் வேலைக்கு செல்வதற்கு தங்களை தயார்படுத்திக்கொள்கிறார்கள்.

    குடும்பம், வேலை என இரட்டை குதிரையில் செய்யும் சவாரியால் தங்களின் தனித்துவத்தையும், மகிழ்ச்சியான வாழ்க்கையையும் தொலைத்துக்கொண்டிருக்கும் பெண்கள் பெருகிக்கொண்டிருக்கிறார்கள். அவர்களால் சின்னச் சின்ன மகிழ்ச்சியை கூட பொறுமையாக அனுபவிக்க முடிவதில்லை.

    காலையில் எழுந்ததுமே பரபரப்பாக செயல்பட்டால்தான் வீட்டு வேலைகளை முடித்துவிட்டு அலுவலக பணிக்கு செல்ல முடியும் என்ற நெருக்கடிக்கு ஆளாகிறார்கள். தேநீர் பருகுவது, காலை உணவை சாப்பிடுவது எல்லாமே அவசர கதியில் முடிந்து விடுகிறது.

    கடிகாரத்தின் சுழற்சிக்கு ஈடு கொடுத்து வேலை செய்ய வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார்கள். அலுவலகத்திற்கு செல்ல புறப்பட வேண்டிய நேரம் நெருங்க, நெருங்க ஒருவித படபடப்பு உடலையும், உள்ளத்தையும் ஆட்டிப்படைக்க தொடங்கிவிடும். வீட்டு வேலைகளுக்கு மத்தியில் குழந்தைகளை பள்ளிக்கூடத்திற்கு அனுப்ப தயார்படுத்த வேண்டியிருக்கும். நிறைய குழந்தைகளை படுக்கையை விட்டு எழுப்புவதே சவாலான வேலையாக அமைந்துவிடும்.

    பெற்றோரின் அவசரம் புரியாமல் குழந்தைகள் அடம்பிடிக்கும். எத்தனை முறை உரக்க கத்தினாலும் கூட படுக்கையில் இருந்து எழுவதற்கு மனம் இல்லாமல் சோம்பல் முறித்துக்கொண்டு சலிப்பாக குரல் கொடுக்கும். 'கையைப் பிடித்துக் கொண்டு அம்மா இன்னைக்கு ஆபீசுக்கு போக வேணாம்மா என்று அழும்' குழந்தைகளும் இருக்கிறார்கள்.

    ஆசிரியர்-பெற்றோர் சந்திப்பு கூட்டம் நடக்கும்போதெல்லாம் பள்ளிக்கூடத்திற்கு செல்ல முடியாத நிலைமை ஏற்படும். 'எப்படியாவது அலுவலகத்திற்கு லீவு போட்டுவிட்டு வாம்மா' என்று குழந்தைகள் கோரிக்கை விடுக்கும். கண்டிப்பா வாரேன் என்ற பொய்யான வாக்குறுதியை அளித்துவிட்டு வேகமாக சமையலறை வேலையை கவனிக்க வேண்டும்.

    கணவர் குளித்துவிட்டு வருவதற்குள் டிபன் தயாராக இருக்க வேண்டும். அவர் சாப்பிட்டு முடிப்பதற்குள் குழந்தை பள்ளிக்கூடம் செல்ல தயாராக இருக்க வேண்டும். இருவரையும் அனுப்பிவிட்டு அவசரமாக சாப்பிட்டு முடித்து, கூந்தலை சீவுவதற்குகூட நேரமில்லாமல் விரலால் கோதிவிட்டு 'கிளிப்'போட்டு வேகவேகமாய் வேலைக்கு கிளம்பும் பெண்கள் நிறைய பேர் இருக்கிறார்கள்.

    வீட்டில் இருந்து ஓடோடி சென்று பஸ்சை பிடித்தாலும் கூட்ட நெரிசலால் கால்கடுக்க நிற்க வேண்டி இருக்கும். அலுவலக நேரத்தில் உட்கார்ந்து செல்வதற்கு ஒரு நாளும் இடம் கிடைப்பதில்லை என்று உள்ளுணர்வு விமர்சிக்கும். கூட்ட நெரிசலை சமாளித்து பஸ்சை விட்டு இறங்கி அலுவலகம் சென்றால் அங்கு வேலைகள் மலைக்க வைப்பதாக இருக்கும்.

    முதன் முதலில் வேலைக்கு செல்லும்போது இருந்த மகிழ்ச்சி, நாட்கள் செல்ல செல்ல மறைந்து விடும். குழந்தைகளை பிரிந்திருக்கும் கவலை இளம் தாய்மார்களை ஆட்கொள்ளும். மனதில் பாறாங்கல்லை வைத்து அழுத்துவது போன்ற உணர்வு ஏற்படும். குழந்தைகளின் மன ஓட்டத்திற்கு ஈடுகொடுத்து செயல்பட வேண்டியிருக்கும். 'உனக்காகத்தான் சம்பாதிக்கிறேன்? என்று சொன்னால் அவர்களுக்கு புரியுமா? இந்தப் பருவத்தில் அம்மாவின் அரவணைப்புதான் குழந்தைக்கு தேவை. வீட்டின் வளர்ப்பு பிராணிகளுக்கு கிடைக்கக்கூடிய அன்பு கூட தங்களுக்கு கிடைப்பதில்லை என்ற மனநிலையில் குழந்தைகள் இருப்பது கூட பல அம்மாக்களுக்கு தெரியாது.

    காலையில் எழுந்தால் அலுவலகத்தில் போய் செய்ய வேண்டிய வேலைகள் மட்டுமே மனதில் ஓடிக் கொண்டிருக்கும். மாலையில் வீடு திரும்பும் போது மனம் முழுவதும் வீட்டு வேலை மீது இருக்கும். குழந்தை ஒழுங்காக பள்ளிக்கு சென்று வீடு திரும்பியதா? வீட்டுப்பாடம் படித்ததா? இரவு என்ன உணவு சமைக்க வேண்டும்? காலையில் பாதியில் போட்டுவிட்டு வந்த வேலைகளை முடிக்க வேண்டும். வீட்டிற்கு போவதற்குள் காய்கறி வாங்கிச் செல்ல வேண்டும். இப்படி பல சிந்தனைகள் மனதில் ஓடிக் கொண்டிருக்கும்.

    வீட்டிற்கு வந்தவுடன் எதை முதலில் செய்வது, எதை அடுத்து செய்வது என்ற குழப்பம் சிலருக்கு ஏற்படும். முடிந்தவரை முக்கியமான வேலைகளை செய்த பின்னர் மற்றதை ஒதுக்கி வைத்துவிட்டு மறு நாளைக்கு வேண்டிய விஷயங்களை செய்து முடித்துவிட்டு தூங்குவதற்குள் மனமும், உடலும் சோர்வடைந்துவிடும். கால்வலி, உடல் வலியைக் கூட உணர முடியாமல் தூங்கிப் போய்விடுவார்கள்.

    மறுநாள் காலையில் எழுந்ததும் பரபரப்பு தொற்றிக்கொள்ளும். இப்படிப்பட்ட மன நிலையில் இருப்பவர்கள் குழந்தைகளை பக்குவமாக கையாள பழகிக்கொண்டாலே நிதானமாக எல்லா வேலைகளையும் முடித்துவிடலாம். தங்களையும் தயார்படுத்திக்கொள்ளலாம்.

    சின்னச்சின்ன வேலைகளை குழந்தைகளையே செய்வதற்கு பழக்கப்படுத்த வேண்டும். அடம்பிடிக்கும் குழந்தைகளிடம் வேலையை முடித்தால் பரிசு பொருள் வாங்கித்தருவதாகவோ, அவர்கள் விரும்பியதை செய்து கொடுப்பதாகவோ வாக்குறுதி கொடுத்து அவர்களாகவே பள்ளிக்கு தயாராகிவிடும் சூழலை உருவாக்க வேண்டும். மாலையில் வேலை முடித்து வீடு திரும்பும்போது குழந்தைகளுக்கு கொடுத்த வாக்குறுதியை கண்டிப்பாக நிறைவேற்ற வேண்டும். அப்படி செய்து வந்தால் தாயார் மீது நம்பிக்கை கொண்டு அடம் பிடிக்காமல் தங்களுடைய வேலைகளை தாங்களே செய்து கொள்வதற்கு குழந்தைகள் பழகிவிடுவார்கள்.

    அடம்பிடிக்கும் குழந்தைகளிடம் வேலையை முடித்தால் பரிசு பொருள் வாங்கித்தருவதாகவோ, அவர்கள் விரும்பியதை செய்து கொடுப்பதாகவோ வாக்குறுதி கொடுத்து அவர்களாகவே பள்ளிக்கு தயாராகிவிடும் சூழலை உருவாக்க வேண்டும். மாலையில் வேலை முடித்து வீடு திரும்பும்போது குழந்தைகளுக்கு கொடுத்த வாக்குறுதியை கண்டிப்பாக நிறைவேற்றி விட வேண்டும்.

    • ஜெயங்கொண்டம் ஆண்டிமடம் ஒன்றியத்துக்கு உட்பட்ட பகுதிகளில் பல்வேறு பணிகளை தொடங்கி வைத்தார்
    • ரூபாய் 12.30 இலட்சம் மதிப்பீட்டில் புதிய நியாய விலைக்கடை கட்டிடம்

    ஜெயங்கொண்டம், 

    அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் ஆண்டிமடம் ஒன்றியத்துக்கு உட்பட்ட உடையார்பா ளையம் அரசு மேல்நிலைப் பள்ளியில், நபார்டு திட்டத்தின் கீழ் ரூபாய் 42.36 இலட்சம் மதிப்பீட்டில் கூடுதல் வகுப்பறை கட்டிடம் கட்டும் பணி,

    இலையூரில், முதலமைச்சரின் கிராம சாலை மேம்பாட்டு திட்டத்தி ன் கீழ் ரூபாய் 151.41 இலட்சம் மதிப்பீட்டில் இலையூர் - கண்டியங்கொல்லை சாலை அமைக்கும் பணி,

    பெரியாத்துக்குறிச்சியில், தேசிய சுகாதார திட்டத்தின் கீழ் ரூபாய் 30.00 இலட்சம் மதிப்பீட்டில் ஆரம்ப துணை சுகாதார நிலையம் கட்டிடம் கட்டும் பணி,

    ஓலையூரில், முதலமைச்சரின் கிராம சாலை மேம்பாட்டு திட்ட த்தின் கீழ் ரூபாய் 225.00 இலட்சம் மதிப்பீட்டில் ஓலையூர் - அழகாபுரம் சாலை அமைக்கும் பணி,

    திருக்கோணத்தில், முதலமைச்சரின் கிராம சாலை மேம்பாட்டு திட்ட த்தின் கீழ் ரூபாய் 222.00 இலட்சம் மதிப்பீட்டில் சிலம்பூர் - திருக்கோணம் சாலை அமைக்கும் பணி,

    விளந்தையில், ஊராட்சி ஒன்றிய துவக்க பள்ளியில் CFSIDS திட்டத்தின் கீழ் ரூபாய் 28.00 இலட்சம் மதிப்பீட்டில் இரண்டு வகுப்பறை கட்டிடம் திறந்து வைக்கும் பணி,

    விளந்தையில், சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூபாய் 12.30 இலட்சம் மதிப்பீட்டில் புதிய நியாய விலைக்கடை கட்டிடம் திறந்து வைக்கும் பணி,

    நாகம்பந்தல் அரசு உயர்நிலைப் பள்ளியில் NPMDMS திட்டத்தின் கீழ் ரூபாய் 5.32 இலட்சம் மதிப்பீட்டில் புதிய சமையலறை கட்டிடம் திறந்து வைக்கும் பணி,

    இடையக்குறிச்சி அரசு உயர்நிலைப் பள்ளியில், சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதி திட்டத்தின் கீழ் ரூபாய் 5.60 இலட்சம் மதிப்பீட்டில் புதிய சமையலறை கட்டிடம் திறந்து வைக்கும் பணி,

    ஆகிய பணிகளை மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி ஜா.ஆனி மேரி ஸ்வர்ணா அவர்கள் தலைமையில், சட்டமன்ற உறுப்பினர் க.சொ.க.கண்ணன் அவர்கள் முன்னிலையில், மாண்புமிகு போக்குவரத்துத்துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர் அவர்கள் துவக்கி வைத்தார்.

    இந்நிகழ்வில் ஊரக வளர்ச்சி துறை திட்ட இயக்குனர் இலக்குவன், சுகாதாரத்துறை துணை இயக்குனர் மரு.அஜித்தா,

    உடையார்பாளையம் கோட்டாட்சியர் சா.பரிமளம், பொதுப்பணித்துறை உதவி செயற்பொறியாளர் அன்பரசி, உதவி பொறியாளர் ஜெயந்தி, வட்டார வளர்ச்சி அலுவலர் ஸ்ரீதேவி (வட்டார ஊராட்சி), ஜெயங்கொண்டம் வட்டாட்சியர் துரை, ஆண்டிமடம் வட்டாட்சியர் இளவரசன், ஆண்டிமடம் வட்டார மருத்துவ அலுவலர் மரு T.கண்ணன், வடக்கு ஒன்றிய கழக செயலாளர் ரெங்க.முருகன், ஆண்டிமடம் தெற்கு ஒன்றிய கழக செயலாளர் ஆர்.கலியபெருமாள் மற்றும் அரசு அலுவலர்கள், மாவட்ட, ஒன்றிய, கிளைக் கழக நிர்வாகிகள், அனைத்து அணி அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள், பொதுமக்கள் கலந்துகொண்டனர்.

    • காலியாக உள்ள அனைத்து பணியிடங்களையும் உடன டியாக நிரப்ப வேண்டும் என்பது உள்பட 16 அம்ச கோரிக்கைகள் வலி யுறுத்தப்பட்டு வருகிறது.
    • இன்று( 13-ந் தேதி) முதல் கால வரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட போவதாக ஊரக வளர்ச்சித் துறை அலுவலர்கள் சங்கத் தினர் அறிவித்திருந்தனர்.

    சேலம்:

    தமிழகம் முழுவதும் ஊரக வளர்ச்சி துறையில் காலியாக உள்ள அனைத்து பணியிடங்களையும் உடன டியாக நிரப்ப வேண்டும் என்பது உள்பட 16 அம்ச கோரிக்கைகள் வலி யுறுத்தப்பட்டு வருகிறது. அந்த கோரிக்கைகளை நிறைவேற்றக்கோரி இன்று( 13-ந் தேதி) முதல் கால வரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட போவதாக ஊரக வளர்ச்சித் துறை அலுவலர்கள் சங்கத் தினர் அறிவித்திருந்தனர்.

    வேலை நிறுத்தம்

    அதன்படி தமிழகம் முழு வதும் ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் மற்றும் ஊழியர்கள் பணியை

    புறக்கணித்து இன்று போராட்டத்தை தொடங்கி னர். இந்த போராட்டத்தில் சேலம் புறநகர் பகுதிகளில் ஊராட்சி ஒன்றிய அலுல வலகங்களில் பணிபுரியும் 650 பேர் கலெக்டர் அலு வலகத்தில் பணிபுரியும் 150 ஊழியர்கள் என மொத்தம் 800-க்கும் மேற்பட்ட ஊழி யர்கள் பங்கேற்றுள்ளனர். இதனால் கிராமங்களில் குடிநீர் வினியோகம் மற்றும் ஊரக வளர்ச்சி திட்டப்பணிகள் முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளன. இதனால் பொது மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதால் போராட்டத்தை அரசு உட னடியாக முடிவுக்கு கொண்டு வரவேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

    கோரிக்கைகள்

    மேலும் இந்த போராட்டத்தில் தேர்வு நிலை மற்றும் சிறப்பு நிலை உள்பட அனைத்து உரிமை களையும் ஊராட்சி செயலா ளருக்கு வழங்க வேண்டும், ஊரக வேலை உறுதி திட்ட கணினி உதவியாளர்களை பணி வரன் முறைபடுத்த வேண்டும், மக்கள் தொகை அடிப்படையில் ஊராட்சி மற்றும் ஊராட்சி ஒன்றி யங்களை பிரிக்க வேண்டும் என வலியுறுத்தி வரு கிறார்கள்.

    இன்று வேலை நிறுத்த போராட்டத்தை தொடங்கி உள்ள நிலையில் அதன் ஒரு பகுதியாக நாளை( 14-ந் தேதி) வட்டார தலைநக ரங்களில் ஆர்ப்பாட்டமும், 19-ந் தேதி மாவட்ட தலைநகரங்களில் மறியல் போராட்டம் நடத்தவும், 22-ந் தேதி சென்னையில் இயக்குனர் அலுவலகத்தை முற்றுகை யிட்டு போராட்டம் நடத்த போவ தாகவும் கூறி இருந்தனர்.

    ஆலோசனை

    இதற்கிடையே இன்று காலை ஊரக வளர்ச்சி துறை யினர் அந்தந்த மாவட்டத்தில் செயற்குழு கூட்டத்தை கூட்டியுள்ளனர். அந்த கூட்டத்தில் இந்த போராட்டத்தை தொடர்வதா அல்லது ஒத்தி வைத்து சில நாட்கள் கழிதது மீண்டும் போராட்டத்தில் ஈடுபடுவதா? என்று முடிவு செய்து அறிவிக்கப்படும் என்று ஊரக வளர்ச்சி துறை சங்க நிர்வாகிகள் தெரிவித்தனர்.

    நாமக்கல்

    இேத கோரிக்கையை வலியுறுத்தி நாமக்கல் மாவட்டத்தில் உள்ள 15 ஊராட்சி ஒன்றியங்களிலும் உள்ள 200-க்கும் மேற்பட்ட ஊரக வளர்ச்சித்துறை ஊழி யர்கள் பணியை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அலுவலக பணிகள் பாதிக்கப்பட்டதால் பொதுமக்கள் அவதி அடைந்தனர்.

    • போக்குவரத்து நெரிசலை சரி செய்ய காவல்துறையுடன் இணைந்து பணியாற்ற போக்குவரத்து காப்பாளர்களாக சேர விண்ணப்பிக்கலாம்.
    • 21 வயது முதல் 45 வயதுக்கு உட்பட்டவர்கள் திருப்பூர் மாநகர எல்லைக்குள் வசிக்கும் ஆண்கள் விண்ணப்பிக்கலாம்.

    திருப்பூர்:

    திருப்பூர் மாநகரில் போக்குவரத்து, திருவிழா, ஊர்வலம், பொதுக்கூட்டம் மற்றும் பண்டிகை காலங்களின்போது போக்குவரத்து நெரிசலை சரி செய்ய காவல்துறையுடன் இணைந்து பணியாற்ற போக்குவரத்து காப்பாளர்களாக சேர விண்ணப்பிக்கலாம். 21 வயது முதல் 45 வயதுக்கு உட்பட்டவர்கள் திருப்பூர் மாநகர எல்லைக்குள் வசிக்கும் ஆண்கள் விண்ணப்பிக்கலாம்.

    போக்குவரத்து காப்பாளர்களுக்கான விண்ணப்பங்களை திருப்பூர் மாநகரம் வடக்கு போலீஸ் நிலைய வளாகத்தில் உள்ள வடக்கு போக்குவரத்து போலீஸ் நிலையத்தில் காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரையும், மாலை 5 மணி முதல் இரவு 7 மணி வரையும் பெற்றுக்கொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு 93339 01234 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

    இந்த தகவலை திருப்பூர் மாநகர போலீஸ் கமிஷனர் பிரவீன்குமார் அபினபு தெரிவித்துள்ளார்.

    • போலீஸ் நிலையங்களில் மரக்கன்றுகள் நடும் பணி தொடங்கப்பட்டது.
    • பசுமை போலீஸ் நிலையங்களாக மாற்றும் வகையில்

    அரியலூர்:

    அரியலூர் தாமரைக்குளம்: சுற்றுச்சூழலை மேம்படுத்தவும், தூய்மையான காற்று கிடைக்கவும் அரியலூர் மாவட்டத்தில் அரசு அலுவலகங்கள், பொது இடங்கள், பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் பசுமையை உருவாக்கும் வகையில் மரக்கன்றுகள் நடும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக அரியலூர் மாவட்டத்தில் உள்ள போலீஸ் நிலையங்களை பசுமை போலீஸ் நிலையங்களாக மாற்றும் வகையில் அனைத்து போலீஸ் நிலையங்களிலும் மரக்கன்றுகள் நடும் பணியை அரியலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பெரோஸ்கான் அப்துல்லா தொடங்கி வைத்தார். குறிப்பாக பறவைகளுக்கு உணவு அளிக்கும் வகையில் சப்போட்டா, மாதுளை, கொய்யா, மா உள்ளிட்ட மரக்கன்றுகள் மற்றும் நிழல் தரும் மரங்கள் நடப்பட்டன.

    • கொட்டப்பட்டு குளத்தில் வண்ண விளக்குகள் பொருத்தும் பணி தீவிரம்
    • விரைவில் படகு சவாரி

    திருச்சி,

    திருச்சி சர்வதேச விமான நிலையம் அருகாமையில் புதுக்கோட்டை தேசிய நெடுஞ்சாலையில் கொட்டப்பட்டு பெரிய குளம் அமைந்துள்ளது.

    சுமார் 100 ஏக்கர் பரப்பளவு கொண்ட இந்த குளம் ஒரு காலத்தில் விவசாய தேவைகளை பூர்த்தி செய்து வந்தது. கடந்த இரு ஆண்டுகளுக்கு முன்பு குளத்தின் கரை உடைந்து குடியிருப்புகளுக்குள் வெள்ளம் புகுந்தது.

    அதைத் தொடர்ந்து திருச்சி மாநகராட்சி நிர்வாகம் குளத்தின் நீர் வழித்தட நுழைவுப் பகுதி, மற்றும் வெளியேற்றும் பகுதியில் உள்ள கரையை பலப்படுத்தி பொழுதுபோக்கு இடமாக மேம்படுத்துவதற்கான

    திட்டத்தை செயல்படுத்தியது.

    இந்த திட்டத்தில் இன்பப் படகுச் சேவை, நீர்ப்பறவைகளுக்கான 5 வாழ்விடத் தீவுகள் ஆகியவை அமைக்கப்படுகிறது.

    மேலும் ஜல் ஜீவன் மிஷன் திட்டத்தின் கீழ் ரூ.10 கோடி செலவில் நீரூற்றுகள் கொண்ட பூங்கா போன்ற பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்

    படுகிறது. அதுமட்டுமில்லாமல்

    15-வது நிதி குழுவில் இருந்து கிடைக்கும் நிதியைப் பயன்படுத்தி நீர்நிலையின் ஒரு பகுதியை மாநகராட்சி மீண்டும் சுமார் 500 மீட்டர் நடைபாதை அமைத்து வருகிறது. ஆக்கிரமிப்புகளில் இருந்து குளத்தை பாதுகாக்க இரும்பு வேலிகள் அமைக்கப்பட்டுள்ளன. தற்போது இங்கு அலங்கார விளக்குகள் அமைக்கும் பணி நடந்து வருகிறது. விரைவில் இருக்கைகள் அமைக்கும் பணிகள், பறவைகள் வாழ்விட தீவுகள் அமைக்கும் பணிகள் தொடங்கப்படவுள்ளது.

    சுமார் 80% பணிகள் நிறைவடைந்துள்ளன, அடுத்த மாதம் அனைத்து பணிகளும் நிறைவடையும் என மூத்த மாநகராட்சி அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

    மேலும் அவர் கூறும் போது, சுற்றுச்சூழலுக்கு உகந்த சூழலை உருவாக்க, நடைபாதைகள், இருக்கை இடங்கள், அழகுபடுத்தும் விளக்குகள் மற்றும் அதன் நீளத்தில் மரங்களை நடுதல் ஆகியவற்றுடன் குடியிருப்பாளர்களுக்கான சிறந்த பொழுதுபோக்கு இடமாக மாற்றுவதில் இந்த திட்டம் கவனம் செலுத்துகிறது.

    இதில் ஆண்டு முழுவதும் தண்ணீர் இருப்பதால், இன்ப படகு சவாரி செய்ய முடியும் என்றார்.

    மேலும் நீர்நிலையின் இருப்பிடத்தைக் கருத்தில் கொண்டு பல வசதிகள் சேர்க்கப்படும் என்றும் தெரிவித்துள்ளனர்.

    • நம் உடல் உறுதியாக இருந்தால் தான் பணியை சிறப்பாக செய்ய முடியும்.
    • காவல்துறை பணி கடுமையான சவாலான பணி.

    திருத்துறைப்பூண்டி:

    திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி காவல்நிலையத்தில் பணியில் இருக்கும்போது உயிரிழந்த சிறப்பு சப்-இன்ஸ்பெ்கடர் ரமேஷ்குமார், எடையூர் காவல்நிலையத்தில் பணிபுரிந்து விருப்ப ஒய்வு பெற்று உயிரிழந்த நம்பிராஜன் குடும்பத்தினருக்கு தலா 7 லட்சம் வீதம் 14 லட்சம் வழங்கினர்.

    இந்த நிகழ்வில் கலந்துகொண்ட திருவாரூர் மாவட்ட எஸ்.பி சுரேஷ்குமார் காவல்துறையினர் மற்றும் அவர்களது குடும்பத்தினரிடம் பேசும்போது காவல்துறையில் தங்களது பேட்ஜ் நண்பர்கள் குடும்பத்தினருக்கு தாங்கள் எப்பொழுதும் உறுதுணையாக இருப்போம் என காட்டுவதாக இந்த நிகழ்வு உள்ளது. காவல்துறை பணி கடுமையான சவாலான பணி. மன அழுத்ததை தங்கள் குடும்பத்தினருடன் பகிர்ந்து கொள்ள வேண்டு இனி மாதம் ஒரு முறை குடும்பத்தினருடன் அதிகாரிகளுடன் தங்கள் கஷ்டங்களை பகிர்ந்து கொள்ளும் விதமாகவும் மாதம் ஒரு முறை மருத்துவ முகாம் ஏற்பாடு செய்யப்படும். சுவர் இருந்தால் தான் சித்திரம் என்ற பழமொழிக்கு எடுத்துகாட்டாக நம் உடல் உறுதியாக இருந்தால் தான் பணியை சிறப்பாக செய்ய முடியும். அதனால் மது. புகையிலை பழக்கம் உள்ளவர்கள் அந்த பழக்கத்தை அறவே நிறுத்த வேண்டும் என்றார். இந்நிகழ்வில் திருத்துறைப்பூண்டி டி.எஸ்.பி.சோமசுந்தரம். இன்ஸ்பெக்டர் கழனியப்பன் உடனிருந்தனர்.

    • கூட்டு குடிநீர் திட்ட பணிகளை விரைவாக முடிக்க வேண்டும் என கலெக்டர் ஜெயசீலன் வலியுறுத்தினார்.
    • ரூ.444.71 கோடி மதிப்பில் அருப்புக்கோட்டை, சாத்தூர் மற்றும் விருதுநகர் நகராட்சி களுக்கான கூட்டுக் குடிநீர் திட்டத்தின் கீழ் நடைபெற்று வருகிறது.

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்டம் சாத்தூர், சிவகாசி மற்றும் ஸ்ரீவில்லிபுத்தூர் பகுதிகளில் நடைபெற்று வரும் வளர்ச்சித் திட்டப்பணிகள் குறித்து கலெக்டர் ஜெயசீலன் நேரில் சென்று பார்வை யிட்டு ஆய்வு செய்தார்.

    சாத்தூர் - நென்மேனி - நாகாலாபுரம் சாலையில் நெடுஞ்சாலை துறை மூலமாக பக்தர்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு ரூ.30 கோடி மதிப்பீட்டில், 8 கி.மீ. தொலைவில் பக்தர்கள் சிரமமின்றி இருக்கன்குடி மாரியம்மன் கோவிலுக்கு சென்று தரிசனம் செய்யும் வகையில் நடைபாதை அமைக்கப்பட்டு வருகிறது.இதற்கான பணிகள் மற்றும் அடிப்படை உட்கட்டமைப்பு பணிகளை கலெக்டர் ஆய்வு செய்தார்.

    பின்னர் சாத்தூர் நகராட்சியில் எம்.ஏ.சி பூங்காவில் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் மூலம் ரூ.444.71 கோடி மதிப்பில் அருப்புக்கோட்டை, சாத்தூர் மற்றும் விருதுநகர் நகராட்சி களுக்கான கூட்டுக் குடிநீர் திட்டத்தின் கீழ் நடைபெற்று வருகிறது.

    சாத்தூர் நகராட்சிக்கு புதிதாக கட்டப்பட்டுள்ள நீர் சேகரிப்பு தொட்டி மற்றும் மேல்நிலை நீர் தேக்க தொட்டியினை மாவட்ட கலெக்டர் பார்வையிட்டு ஆய்வு செய்து, பணியினை விரைவாகவும், தரமாகவும் முடித்து, பொது மக்களின் பயன்பாட்டிற்கு கொண்டுவர சம்மந்தப்பட்ட அரசு அலுவலர்களை அறிவுறுத்தினார்.

    தொடர்ந்து சிவகாசி அனுப்பங்குளத்தில் மின்வாரிய பணிகளையும், சிவகாசி ஆணையூர் பகுதிகளில் மகளிர் உரிமைத் தொகை விண்ணப்பங்களையும் கலெக்டர் ஆய்வு செய்தார்.

    தொடர்ந்து ஸ்ரீவில்லி புத்தூர் வட்டம், மல்லியில் அறிவியல் பூங்கா அமைய உள்ள இடத்தினை கலெக்டர் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    இந்த ஆய்வின் போது, கோட்ட பொறியாளர் (தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம்) பாக்கியலட்சுமி, உதவிக் கோட்ட பொறியா ளர்கள்(தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம்) ஆனந்த குமார், அபிநயா, நிர்வாக பொறியாளர்(தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம்) மீனாட்சி சுந்தரம் உள்பட பலர் உடன் இருந்தனர்.

    ×