search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Pressure"

    • நம் உடல் உறுதியாக இருந்தால் தான் பணியை சிறப்பாக செய்ய முடியும்.
    • காவல்துறை பணி கடுமையான சவாலான பணி.

    திருத்துறைப்பூண்டி:

    திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி காவல்நிலையத்தில் பணியில் இருக்கும்போது உயிரிழந்த சிறப்பு சப்-இன்ஸ்பெ்கடர் ரமேஷ்குமார், எடையூர் காவல்நிலையத்தில் பணிபுரிந்து விருப்ப ஒய்வு பெற்று உயிரிழந்த நம்பிராஜன் குடும்பத்தினருக்கு தலா 7 லட்சம் வீதம் 14 லட்சம் வழங்கினர்.

    இந்த நிகழ்வில் கலந்துகொண்ட திருவாரூர் மாவட்ட எஸ்.பி சுரேஷ்குமார் காவல்துறையினர் மற்றும் அவர்களது குடும்பத்தினரிடம் பேசும்போது காவல்துறையில் தங்களது பேட்ஜ் நண்பர்கள் குடும்பத்தினருக்கு தாங்கள் எப்பொழுதும் உறுதுணையாக இருப்போம் என காட்டுவதாக இந்த நிகழ்வு உள்ளது. காவல்துறை பணி கடுமையான சவாலான பணி. மன அழுத்ததை தங்கள் குடும்பத்தினருடன் பகிர்ந்து கொள்ள வேண்டு இனி மாதம் ஒரு முறை குடும்பத்தினருடன் அதிகாரிகளுடன் தங்கள் கஷ்டங்களை பகிர்ந்து கொள்ளும் விதமாகவும் மாதம் ஒரு முறை மருத்துவ முகாம் ஏற்பாடு செய்யப்படும். சுவர் இருந்தால் தான் சித்திரம் என்ற பழமொழிக்கு எடுத்துகாட்டாக நம் உடல் உறுதியாக இருந்தால் தான் பணியை சிறப்பாக செய்ய முடியும். அதனால் மது. புகையிலை பழக்கம் உள்ளவர்கள் அந்த பழக்கத்தை அறவே நிறுத்த வேண்டும் என்றார். இந்நிகழ்வில் திருத்துறைப்பூண்டி டி.எஸ்.பி.சோமசுந்தரம். இன்ஸ்பெக்டர் கழனியப்பன் உடனிருந்தனர்.

    ரிசர்வ் வங்கியின் மூலதன கட்டமைப்பை வரையறுப்பதில் தற்போது அவசரம் காட்டுவதேன்? என மத்திய அரசுக்கு ப.சிதம்பரம் கேள்வி எழுப்பியுள்ளார். #Chidambaram #RBI
    புதுடெல்லி:

    மத்திய அரசு நிதி பற்றாக்குறையில் சிக்கி தவிப்பதாகவும், இதை சமாளிப்பதற்காக ரிசர்வ் வங்கியில் இருந்து ரூ.3.6 லட்சம் கோடி நிதி கேட்டு இருப்பதாகவும் சமீபத்தில் தகவல் வெளியானது. ஆனால் அரசிடம் போதுமான நிதி கையிருப்பு உள்ளதாக கூறிய மத்திய அரசு, ரிசர்வ் வங்கியின் பொருத்தமான பொருளாதார மூலதன கட்டமைப்பை வரையறுப்பது தொடர்பான பரிந்துரை மட்டுமே தற்போது விவாதிக்கப்பட்டு வருவதாக தெரிவித்தது.

    இந்த விவகாரத்தில் முன்னாள் நிதி மந்திரி ப.சிதம்பரம் மத்திய அரசுக்கு பல்வேறு கேள்விகளை எழுப்பி உள்ளார். இந்த நிதியாண்டில் மத்திய அரசுக்கு நிதி தேவைப்படவில்லை என்றால், அரசின் பதவிக்காலம் இன்னும் 4 மாதமே இருக்கும் நிலையில் ரிசர்வ் வங்கி மீது அழுத்தத்தை கொடுப்பது ஏன்? என அவர் வினவினார்.

    இது தொடர்பாக தனது டுவிட்டர் தளத்தில் மேலும் அவர் கூறுகையில், ‘தேசிய ஜனநாயக கூட்டணி அரசு 4½ ஆண்டுகளை கடந்து விட்டது. அதற்கு மேலும் 4 மாதங்கள் மட்டுமே உண்மையான பதவிக்காலம் உள்ளது. அப்படியிருக்க ரிசர்வ் வங்கியின் மூலதன கட்டமைப்பை வரையறுப்பதில் தற்போது அவசரம் காட்டுவதேன்? இந்த விவகாரத்தில் 4½ ஆண்டுகள் அமைதியாக இருந்தது ஏன்?’ என கேட்டுக்கொண்டு உள்ளார். 
    ×