search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    போக்குவரத்து காப்பாளர்களாக பணியாற்ற விண்ணப்பிக்கலாம்
    X

    கோப்பு படம்.

    போக்குவரத்து காப்பாளர்களாக பணியாற்ற விண்ணப்பிக்கலாம்

    • போக்குவரத்து நெரிசலை சரி செய்ய காவல்துறையுடன் இணைந்து பணியாற்ற போக்குவரத்து காப்பாளர்களாக சேர விண்ணப்பிக்கலாம்.
    • 21 வயது முதல் 45 வயதுக்கு உட்பட்டவர்கள் திருப்பூர் மாநகர எல்லைக்குள் வசிக்கும் ஆண்கள் விண்ணப்பிக்கலாம்.

    திருப்பூர்:

    திருப்பூர் மாநகரில் போக்குவரத்து, திருவிழா, ஊர்வலம், பொதுக்கூட்டம் மற்றும் பண்டிகை காலங்களின்போது போக்குவரத்து நெரிசலை சரி செய்ய காவல்துறையுடன் இணைந்து பணியாற்ற போக்குவரத்து காப்பாளர்களாக சேர விண்ணப்பிக்கலாம். 21 வயது முதல் 45 வயதுக்கு உட்பட்டவர்கள் திருப்பூர் மாநகர எல்லைக்குள் வசிக்கும் ஆண்கள் விண்ணப்பிக்கலாம்.

    போக்குவரத்து காப்பாளர்களுக்கான விண்ணப்பங்களை திருப்பூர் மாநகரம் வடக்கு போலீஸ் நிலைய வளாகத்தில் உள்ள வடக்கு போக்குவரத்து போலீஸ் நிலையத்தில் காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரையும், மாலை 5 மணி முதல் இரவு 7 மணி வரையும் பெற்றுக்கொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு 93339 01234 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

    இந்த தகவலை திருப்பூர் மாநகர போலீஸ் கமிஷனர் பிரவீன்குமார் அபினபு தெரிவித்துள்ளார்.

    Next Story
    ×