search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    போலீஸ் நிலையங்களில் மரக்கன்றுகள் நடும் பணி
    X

    போலீஸ் நிலையங்களில் மரக்கன்றுகள் நடும் பணி

    • போலீஸ் நிலையங்களில் மரக்கன்றுகள் நடும் பணி தொடங்கப்பட்டது.
    • பசுமை போலீஸ் நிலையங்களாக மாற்றும் வகையில்

    அரியலூர்:

    அரியலூர் தாமரைக்குளம்: சுற்றுச்சூழலை மேம்படுத்தவும், தூய்மையான காற்று கிடைக்கவும் அரியலூர் மாவட்டத்தில் அரசு அலுவலகங்கள், பொது இடங்கள், பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் பசுமையை உருவாக்கும் வகையில் மரக்கன்றுகள் நடும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக அரியலூர் மாவட்டத்தில் உள்ள போலீஸ் நிலையங்களை பசுமை போலீஸ் நிலையங்களாக மாற்றும் வகையில் அனைத்து போலீஸ் நிலையங்களிலும் மரக்கன்றுகள் நடும் பணியை அரியலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பெரோஸ்கான் அப்துல்லா தொடங்கி வைத்தார். குறிப்பாக பறவைகளுக்கு உணவு அளிக்கும் வகையில் சப்போட்டா, மாதுளை, கொய்யா, மா உள்ளிட்ட மரக்கன்றுகள் மற்றும் நிழல் தரும் மரங்கள் நடப்பட்டன.

    Next Story
    ×