search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பல்வேறு பணிகளை தொடங்கி வைத்தார் போக்குவரத்துறை அமைச்சர்
    X

    பல்வேறு பணிகளை தொடங்கி வைத்தார் போக்குவரத்துறை அமைச்சர்

    • ஜெயங்கொண்டம் ஆண்டிமடம் ஒன்றியத்துக்கு உட்பட்ட பகுதிகளில் பல்வேறு பணிகளை தொடங்கி வைத்தார்
    • ரூபாய் 12.30 இலட்சம் மதிப்பீட்டில் புதிய நியாய விலைக்கடை கட்டிடம்

    ஜெயங்கொண்டம்,

    அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் ஆண்டிமடம் ஒன்றியத்துக்கு உட்பட்ட உடையார்பா ளையம் அரசு மேல்நிலைப் பள்ளியில், நபார்டு திட்டத்தின் கீழ் ரூபாய் 42.36 இலட்சம் மதிப்பீட்டில் கூடுதல் வகுப்பறை கட்டிடம் கட்டும் பணி,

    இலையூரில், முதலமைச்சரின் கிராம சாலை மேம்பாட்டு திட்டத்தி ன் கீழ் ரூபாய் 151.41 இலட்சம் மதிப்பீட்டில் இலையூர் - கண்டியங்கொல்லை சாலை அமைக்கும் பணி,

    பெரியாத்துக்குறிச்சியில், தேசிய சுகாதார திட்டத்தின் கீழ் ரூபாய் 30.00 இலட்சம் மதிப்பீட்டில் ஆரம்ப துணை சுகாதார நிலையம் கட்டிடம் கட்டும் பணி,

    ஓலையூரில், முதலமைச்சரின் கிராம சாலை மேம்பாட்டு திட்ட த்தின் கீழ் ரூபாய் 225.00 இலட்சம் மதிப்பீட்டில் ஓலையூர் - அழகாபுரம் சாலை அமைக்கும் பணி,

    திருக்கோணத்தில், முதலமைச்சரின் கிராம சாலை மேம்பாட்டு திட்ட த்தின் கீழ் ரூபாய் 222.00 இலட்சம் மதிப்பீட்டில் சிலம்பூர் - திருக்கோணம் சாலை அமைக்கும் பணி,

    விளந்தையில், ஊராட்சி ஒன்றிய துவக்க பள்ளியில் CFSIDS திட்டத்தின் கீழ் ரூபாய் 28.00 இலட்சம் மதிப்பீட்டில் இரண்டு வகுப்பறை கட்டிடம் திறந்து வைக்கும் பணி,

    விளந்தையில், சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூபாய் 12.30 இலட்சம் மதிப்பீட்டில் புதிய நியாய விலைக்கடை கட்டிடம் திறந்து வைக்கும் பணி,

    நாகம்பந்தல் அரசு உயர்நிலைப் பள்ளியில் NPMDMS திட்டத்தின் கீழ் ரூபாய் 5.32 இலட்சம் மதிப்பீட்டில் புதிய சமையலறை கட்டிடம் திறந்து வைக்கும் பணி,

    இடையக்குறிச்சி அரசு உயர்நிலைப் பள்ளியில், சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதி திட்டத்தின் கீழ் ரூபாய் 5.60 இலட்சம் மதிப்பீட்டில் புதிய சமையலறை கட்டிடம் திறந்து வைக்கும் பணி,

    ஆகிய பணிகளை மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி ஜா.ஆனி மேரி ஸ்வர்ணா அவர்கள் தலைமையில், சட்டமன்ற உறுப்பினர் க.சொ.க.கண்ணன் அவர்கள் முன்னிலையில், மாண்புமிகு போக்குவரத்துத்துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர் அவர்கள் துவக்கி வைத்தார்.

    இந்நிகழ்வில் ஊரக வளர்ச்சி துறை திட்ட இயக்குனர் இலக்குவன், சுகாதாரத்துறை துணை இயக்குனர் மரு.அஜித்தா,

    உடையார்பாளையம் கோட்டாட்சியர் சா.பரிமளம், பொதுப்பணித்துறை உதவி செயற்பொறியாளர் அன்பரசி, உதவி பொறியாளர் ஜெயந்தி, வட்டார வளர்ச்சி அலுவலர் ஸ்ரீதேவி (வட்டார ஊராட்சி), ஜெயங்கொண்டம் வட்டாட்சியர் துரை, ஆண்டிமடம் வட்டாட்சியர் இளவரசன், ஆண்டிமடம் வட்டார மருத்துவ அலுவலர் மரு T.கண்ணன், வடக்கு ஒன்றிய கழக செயலாளர் ரெங்க.முருகன், ஆண்டிமடம் தெற்கு ஒன்றிய கழக செயலாளர் ஆர்.கலியபெருமாள் மற்றும் அரசு அலுவலர்கள், மாவட்ட, ஒன்றிய, கிளைக் கழக நிர்வாகிகள், அனைத்து அணி அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள், பொதுமக்கள் கலந்துகொண்டனர்.

    Next Story
    ×