search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கால்நடை பராமரிப்பு துறை சார்பில் மரக்கன்றுகள் நடும் பணி
    X

    கால்நடை பராமரிப்பு துறை சார்பில் மரக்கன்றுகள் நடும் பணி

    • பசுமை பரப்பை அதிகரிக்கும் விதமாக மாவட்ட கலெக்டர் உமா அறிவுறுத்தலின்படி, கால்நடை பராமரிப்பு துறை சார்பாக திருச்செங்கோடு துணை இயக்குனர் அலுவலக வளாகத்தில் மரக்கன்றுகள் நடும் பணி தொடங்கப்பட்டது.
    • 5500 மரக்கன்றுகள் நடும் நிகழ்வு தொடங்கி வைக்கப்பட்டது.

    திருச்செங்கோடு:

    நாமக்கல் மாவட்டத்தில் பசுமை பரப்பை அதிகரிக்கும் விதமாக மாவட்ட கலெக்டர் உமா அறிவுறுத்தலின்படி, கால்நடை பராமரிப்பு துறை சார்பாக திருச்செங்கோடு துணை இயக்குனர் அலுவலக வளாகத்தில் மரக்கன்றுகள் நடும் பணி தொடங்கப்பட்டது.

    மண்டல இணை இயக்குனர் நடராஜன் தலைமையில் துணை இயக்குனர் அருண் பாலாஜி மற்றும் பசுமை தமிழகம் இயக்கத்தின் மாவட்ட தொடர்பு அலுவலர் ராஜேஸ் கண்ணன் முன்னிலையில் 5500 மரக்கன்றுகள் நடும் நிகழ்வு தொடங்கி வைக்கப்பட்டது.

    நாமக்கல் மாவட்ட வனத்துறையால் வழங்கப்பட்ட வாகை,சீமை அகத்தி, கொடுக்கா புளி உள்ளிட்ட மரக்கன்றுகளை திருச்செங்கோடு செங்குந்தர் கலை, அறிவியல் கல்லூரியைச் சார்ந்த என்.எஸ். எஸ் மற்றும் என்.சி.சி மாணவர்கள் 50-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு மரக்கன்றுகளை நடவு செய்தனர்.

    இந்நிகழ்வில் கால்நடை மருத்துவர்கள் சசிகுமார், சதீஷ்குமார் ஆகியோரும், கல்லூரியின் என்.சி.சி அலுவலர் ராமசாமி, என்.எஸ். எஸ் திட்ட அலுவலர் மைதிலி மற்றும் கால்நடை மருத்துவத் துறையினரும் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×