search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "woman arrested"

    • எர்ணாகுளம் மகாராஜாஸ் கல்லூரியில் பணி செய்ததாக போலி அனுபவ சான்றிதழை வித்யா சமர்ப்பித்ததாக தெரிகிறது.
    • வித்யா அளித்துள்ள ஜாமீன் மனு மீதான விசாரணை நாளை நடக்கிறது.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலம் காசர்கோட்டை சேர்ந்தவர் வித்யா (வயது26). இவர் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் ஆதரவு அமைப்பான எஸ்.எப்.ஐ. அமைப்பின் முன்னாள் நிர்வாகி ஆகும். தற்போது காலடி சம்ஸ்கிருத பல்கலைக்கழகத்தில் பி.எச்டி. படித்து வருகிறார்.

    இந்த நிலையில் வித்யா சமீபத்தில் பாலக்காடு அட்டப்பாடி ராஜீவ் காந்தி நினைவு கலை அறிவியல் கல்லூரியில் விரிவுரையாளர் பணிக்கு நடைபெற்ற நேர்முக தேர்வில் கலந்து கொண்டார். அப்போது எர்ணாகுளம் மகாராஜாஸ் கல்லூரியில் பணி செய்ததாக போலி அனுபவ சான்றிதழை வித்யா சமர்ப்பித்ததாக தெரிகிறது. இதுதொடர்பான புகாரின் அடிப்படையில் எர்ணாகுளம் மத்திய போலீசார் கடந்த 6-ந் தேதி வித்யா மீது வழக்குப்பதிவு செய்தனர். பின்னர் இந்த வழக்கு பாலக்காடு அகழி போலீசுக்கு மாற்றப்பட்டது.

    இதைதொடர்ந்து வித்யாவை போலீசார் தேடி வந்தனர். இந்த நிலையில் நேற்று முன்தினம் கோழிக்கோடு மேப்பயூர் அருகே தோழி வீட்டில் பதுங்கி இருந்த வித்யாவை போலீசார் கைது செய்தனர். தொடர்ந்து மருத்துவ பரிசோதனை செய்து இரவு 12.30 மணிக்கு அகழி போலீஸ் நிலையத்துக்கு கொண்டு வந்தனர். அவர் நேற்று மண்ணார்காடு மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டார். அவரை 14 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார். மேலும் 2 நாட்கள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்கவும் கோர்ட்டு அனுமதி அளித்து உள்ளது. இதனிடையே வித்யா அளித்துள்ள ஜாமீன் மனு மீதான விசாரணை நாளை (சனிக்கிழமை) நடக்கிறது.

    • கஞ்சா பொட்டலங்கள் வைத்திருந்த பெண் கைது செய்யப்பட்டார்.
    • அவர் மீது ஏற்கனவே பல வழக்குகள் உள்ளன.

    திருச்சுழி

    விருதுநகர் மாவட்டம் திருச்சுழி அருகே உள்ள கல்லூரணி பகுதியில் கஞ்சா விற்பனை நடந்து வருவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது. அதன் அடிப்படையில் திருச்சுழி துைண போலீஸ் சூப்பிரண்டு ஜெகநாதன் தலைமையிலான தனிப்படை போலீசார் அந்த பகுதிகளில் அதிரடி சோதனை நடத்தினர்.

    அப்போது அங்கு திருச்சுழி அருகே உள்ள மாங்குளம் பகுதியை சேர்ந்த மல்லிகார்ஜூனன் என்பவ ரின் மனைவி தாடக நாச்சி யார் (வயது 36) என்பவர் நின்று கொண்டிருந்தார்.அவர் மீது ஏற்கனவே பல வழக்குகள் இருந்ததால், சந்தேகத்தின்பேரில் அவரிடம் போலீசார் சோதனை நடத்தினர்.

    அப்போது அவர் வைத்திருந்த பையில் கஞ்சா பொட்டலங்கள் இருந்தன. அவற்றை போலீசார் பறி முதல் செய்தனர். மாண வர்கள் மற்றும் இளைஞர்க ளுக்கு விற்பதற்காக கஞ்சா பொட்டலங்களை அவர் வைத்திருந்தது விசாரணை யில் தெரியவந்தது.

    இதையடுத்து தாடக நாச்சியாரை போலீசார் கைது செய்தனர். இவர் கல்லூரணி பகுதியில் தொடர்ந்து கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

    • போலீசார் ரோந்து பணி மேற்கொண்டனர்.
    • சாராயத்தை பறிமுதல் செய்தனர்.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் சப்-இன்ஸ்பெக்டர் ஜெய மணி தலைமையிலான போலீசார் சேஷசமுத்திரம் பகுதியில் ரோந்து பணி மேற்கொண்டனர். அப்போது வீட்டின் பின்புறம் சாராயம் விற்பனை செய்து கொண்டிருந்த அதே கிரா மத்தை சேர்ந்த பச்சை யம்மாள் (35) என்பவரை கைது செய்தபோலீசார் அவரிடம் இருந்து 55 லிட்டர் சாராயத்தை பறிமுதல் செய்தனர்.

    • பொன்முருகன் ஆர்.எஸ்.புரம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.
    • மீதமுள்ள தங்க நகைகள் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கோவை,

    கோவை ஆர்.எஸ்.புரம் சர்ச் ரோடு பகுதியை சேர்ந்தவர் பொன்முருகன் (வயது46). தொழில் அதிபர். இவரது வீட்டில் கோவை ஒண்டிபுதூரை சேர்ந்த ஜோதி (46) என்ற பெண் வீட்டு வேலை பார்த்து வந்தார்.

    சம்பவத்தன்று பொன்முருகன் வீட்டில் இருந்து வெளியே சென்றார். அப்போது இவரது வீட்டில் பீரோவில் இருந்த 150 கிராம் தங்க கட்டி திருட்டு போய் இருந்தது. இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த பொன்முருகன் ஆர்.எஸ்.புரம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

    விசாரணையில் அவரது வீட்டில் தங்க கட்டியை கொள்ளையடித்து சென்றது, அவரது வீட்டில் வேலை பார்த்து வந்த ஜோதி என்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் ஜோதியை கைது செய்து அவரிடம் இருந்து 93 கிராம் எடையுள்ள தங்க கட்டியை பறிமுதல் செய்தனர். மீதமுள்ள தங்க நகைகள் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • கள்ளர் மண்டபரம் அருகே 2 பெண்கள் கஞ்சா விற்றுக் கொண்டு இருந்தனர்.
    • ஒருவரை கைது செய்து அவரிடம் இருந்த கஞ்சாவினை பறிமுதல் செய்தனர்.

    கூடலூர்:

    கூடலூர் வடக்கு போலீசார் நகர் பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது கள்ளர் மண்டபரம் அருகே 2 பெண்கள் கஞ்சா விற்றுக் கொண்டு இருந்தனர். போலீசாரைக் கண்டதும் ஒருவர் தப்பி ஓடி விட்டார்.

    மற்றொரு பெண்ணை பிடித்து விசாரித்த போது அவர் சமயன் மனைவி மல்லிகா (வயது 47) என தெரிய வந்தது. மல்லிகாவை கைது செய்து அவரிடம் இருந்த கஞ்சாவினை பறிமுதல் செய்தனர். மேலும் தப்பி ஓடிய செல்வ ராணி என்பவரை தேடி வருகின்றனர்.

    • சொத்து வரியை வசூலிக்க ஊழியர்களும், பணியாளர்களும் ஒவ்வொரு வீட்டு உரிமையாளரிடமும் பலமுறை சென்று வரியை கேட்டு வசூலித்து வந்தனர்.
    • புகார் மனு மீது ஆரணி போலீசார் விசாரணை செய்து நாகலட்சுமி கைது செய்து காவல் நிலையம் கொண்டு வந்தனர்.

    பெரியபாளையம்:

    திருவள்ளூர் மாவட்டம், பெரியபாளயம் அருகே உள்ள ஆரணி பேரூராட்சியில் மார்ச் மாதம் 31-ந் தேதிக்குள் 100 சதவீத சொத்து வரியை வசூலிக்க வேண்டும் என்று திருவள்ளூர் மாவட்ட பேரூராட்சிகளின் உதவி இயக்குனர் உத்தரவிட்டிருந்தார்.

    இந்த நிலையில், ஆரணி பேரூராட்சி செயல் அலுவலர் கலாதரன் தலைமையில் ஊழியர்கள் பல்வேறு பிரிவுகளாக வீடு வீடாக சென்று சொத்து வரி வசூலிக்கும் பணியில் ஈடுபட்டு வந்தனர்.

    சொத்து வரியை வசூலிக்க ஊழியர்களும், பணியாளர்களும் ஒவ்வொரு வீட்டு உரிமையாளரிடமும் பலமுறை சென்று வரியை கேட்டு வசூலித்து வந்தனர்.

    கடந்த 19-ந்தேதி ஆரணி அத்திக்குளம் பகுதியில் வசித்து வரும் கம்யூனிஸ்டு கட்சி மற்றும் மாதர் சங்கத்தை சேர்ந்த, ஆரணி அரசினர் ஆண்கள் மேல் நிலைப்பள்ளி மேலாண்மை குழு தலைவர் நாகலட்சுமி (வயது37) என்பவரது வீட்டில் ரூ.500 சொத்து வரியை செலுத்துமாறு பேரூராட்சி அலுவலக ஊழியர்களும், பணியாளர்களும் அவர்களிடம் நாகலட்சுமி பேரூராட்சி சார்பாக என்ன வசதியை இப்பகுதிக்கு செய்தீர்கள் என்று கூறி தகாத வார்த்தைகளால் திட்டி பேரூராட்சி பணியாளர்களை அரசு பணி செய்யவிடாமல் தடுத்து மிரட்டல் விடுத்தார்.

    இந்தச் சம்பவம் குறித்து பேரூராட்சி செயல் அலுவலர் கலாதரன் நாகலட்சுமி மீது ஆரணி காவல் நிலையத்தில் புகார் செய்தார்.

    இந்த நிலையில், புகார் மனு மீது ஆரணி போலீசார் விசாரணை செய்து நாகலட்சுமி கைது செய்து காவல் நிலையம் கொண்டு வந்தனர். பின்னர், அவர் மீது 3 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்தனர். ஊத்துக்கோட்டை மகளிர் போலீஸ் நிலைய சிறப்பு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஜெயந்தி, மகளிர் காவலர் சுமித்ரா ஆகியோர் தலைமையில் போலீசார் நாகலட்சுமியை பொன்னேரி முதல் நிலை குற்றவியல் நீதிமன்ற மாஜிஸ்ரேட்டு முன்னிலையில் ஆஜர் செய்து புழல் சிறையில் அடைத்தனர்.

    • வேலை முடிந்து அரசு மருத்துவமனைக்கு வந்த அர்ஜூன்குமார் குழந்தையை கேட்டுள்ளார்.
    • திருப்பூர் அரசு ஆஸ்பத்திரியில் இருந்து மாயமான உமா கள்ளக்குறிச்சியில் இருப்பது தனிப்படை போலீசாருக்கு தெரிய வந்துள்ளது.

    திருப்பூர்:

    ஒடிசாவை சேர்ந்தவர் அர்ஜூன்குமார் (26). பனியன் நிறுவன தொழிலாளி. இவரது மனைவி கமலினி (24). இவர்கள் பல்லடம் கே.அய்யம்பாளையம் பகுதியில் உள்ள நிறுவனத்தில் தொழிலாளியாக வேலை செய்து வருகிறார்கள். கர்ப்பிணியான கமலினி கடந்த 22-ந் தேதி பிரசவத்திற்காக திருப்பூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில் அவருக்கு அன்றைய தினமே ஆண் குழந்தை பிறந்தது.

    இந்நிலையில் வார்டில் அனுமதிக்கப்பட்டிருந்த கமலியின் அருகில் கருச்சிதைவு ஏற்பட்டு சிகிச்சைக்காக எஸ்தர் ராணி என்ற பெண் அனுமதிக்கப்பட்டிருந்தார். அவருக்கு உதவியாக உமா என்ற பெண் ஒருவரும் இருந்துள்ளார். அருகருகே இருந்ததால் உமா, கமலினியின் குழந்தைகளை கவனித்து வந்து அவருக்கு உதவி செய்துள்ளார்.

    இந்நிலையில் உமா உதவி செய்து வந்ததால், அர்ஜூன்குமார் நேற்று வேலைக்கு சென்றுள்ளார்.

    இதற்கிடையே மாலை வேலை முடிந்து அரசு மருத்துவமனைக்கு வந்த அர்ஜூன்குமார் குழந்தையை கேட்டுள்ளார். அப்போது உமா இன்குபேட்டரில் சிகிச்சை அளிக்க குழந்தையை கேட்டதாக கூறி வாங்கி சென்றுள்ளார் என தெரிவித்துள்ளார். அருகில் சிகிச்சை பெற்று வந்த எஸ்தர் ராணியும் காணவில்லை. இதனால் சிகிச்சை அளிக்கும் இடத்திற்கு சென்று அர்ஜூன்குமார் பார்த்தபோது அங்கு உமாவும் இல்லை. இதனால் அதிர்ச்சியடைந்த அர்ஜூன்குமார் இதுகுறித்து செவிலியர்கள் மற்றும் அங்கிருந்தவர்களிடம் குழந்தையை காணவில்லை எனவும், அருகில் இருந்தவர்கள் கடத்தி சென்று விட்டனர் எனவும் தெரிவித்துள்ளார்.

    தொடர்ந்து குழந்தை கடத்தல் குறித்து திருப்பூர் தெற்கு போலீசில் புகார் கொடுக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். மேலும், அங்கு கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகள் குறித்தும் விசாரணை நடத்தி வருகிறார்கள். அருகில் இருந்தவர்கள் குழந்தையை கடத்தி சென்றிருக்கலாம் என சந்தேகித்த போலீசார் அவர்கள் கொடுத்திருந்த செல்போன் எண்ணிற்கு தொடர்புகொண்டனர். அப்போது அது சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது.

    மேலும், விழுப்புரத்தில் அந்த எண் கடைசியாக சுவிட்ச் ஆப் ஆகியுள்ளது. இதனால் அவர்கள் தான் குழந்தையை கடத்தி சென்றிருக்க வேண்டும் என போலீசார் தீவிர விசாரணை நடத்தி வந்தனர்.

    இதற்கிடையே குழந்தை கடத்திச் சென்றதாக பெண் ஒருவர் புகைப்படத்தை போலீசார் வெளியிட்டு தேடி வந்தனர். மேலும், கடத்தலில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் பெண்களை பிடிக்க 3 தனிப்படையும் அமைக்கப்பட்டு திருப்பூர் அரசு ஆஸ்பத்திரியில் இருந்து மாயமான இரண்டு பெண்களையும் தேடினர்.

    இந்த நிலையில் திருப்பூர் அரசு ஆஸ்பத்திரியில் இருந்து மாயமான உமா கள்ளக்குறிச்சியில் இருப்பது தனிப்படை போலீசாருக்கு தெரிய வந்துள்ளது. இதனையடுத்து கள்ளக்குறிச்சி விரைந்த தனிப்படை போலீசார், உமாவை கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்த குழந்தையை மீட்டு கள்ளக்குறிச்சி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர்.

    கைது செய்யப்பட்ட உமாவிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • சீட்டு பணம் கட்டினால் நீங்கள் பணத்தை சேர்த்து வீடு வாங்கலாம் என கூறியுள்ளார்.
    • தீபாவளி சீட்டில் லட்சக்கணக்கான ரூபாய் கட்டி வந்தனர்.

    கடலூர்:

    கடலூர் புதுப்பாளையத்தை சேர்ந்தவர் மாலா என்கிற பத்மினி (வயது 55). இவர் அதே பகுதியை சேர்ந்த அல்லி (வயது 35) என்ற பெண்ணிடம் தீபாவளி சீட்டு பிடித்து வருகின்றேன். என்னிடம் சீட்டு பணம் கட்டினால் நீங்கள் பணத்தை சேர்த்து வீடு வாங்கலாம் என தெரிவித்ததாக கூறப்படுகிறது.

    இதனை தொடர்ந்து அல்லி உள்ளிட்ட ஏராளமான பெண்கள் பத்மினி என்கிற மாலாவிடம் கடந்த 2021 முதல் 2022 வரை தீபாவளி சீட்டில் லட்சக்கணக்கான ரூபாய் கட்டி வந்தனர்.

    இந்த நிலையில் பணம் கட்டிய பெண்கள் தங்கள் பணத்தை மாலா என்கிற பத்மினியிடம் கேட்டு வந்தனர். இதற்கு பத்மினி சரியான முறையில் பதில் அளிக்காமல் பணம் தராமல் ஏமாற்றிக் வந்ததாக கூறப்படுகிறது.

    இதுகுறித்து ஏமாந்த பெண்கள் கடலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் புகார் மனு அளித்தனர். அதன் பேரில் கடலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜாராம் உத்தரவின் பேரில் மாவட்ட குற்றப்பிரிவு துணை போலீஸ் சூப்பிரண்டு தேவராஜ் மேற்பார்வையில் போலீஸ் இன்ஸ்பெக்டர் தேவி, சப்-இன்ஸ்பெக்டர் லிடியா செல்வி மற்றும் போலீசார் புதுப்பாளையம் பகுதியில் இருந்த பத்மினி என்கிற மாலாவை அதிரடியாக கைது செய்து அவரிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • உளுந்தூர்பேட்டை அருகே மாடு திருடிய பெண் உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
    • மேய்ச்சலுக்கு அழைத்து சென்று விட்டு வீட்டில் கட்டி வைப்பார்.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர் பேட்டை அருகே உள்ள ஆசனூரை சேர்ந்தவர் விஜய். விவசாயி. இவருக்கு சொந்தமாக மாடுகள் உள்ளது.அதனை மேய்ச்சலுக்கு அழைத்து சென்று விட்டு வீட்டில் கட்டி வைப்பார். அதன்படி பசுமாடு ஒன்றை கட்டி வைத்து இருந்தார். அதனை அதெ பகுதியை சேர்ந்த பூமாலை (72), மடப்பட்டு நாகவள்ளி (47) செம்பானந்தல் அல்லி முத்து (57) ஆகியோர் திருடி சென்றனர்.இதனை பார்த்த பொதுமக்கள் அவர்களை பிடித்து எைடக்கல் போலீசில் ஒப்படைத்தனர். சப்-இன்ஸ்பெக்டர் சேட்டு வழக்கு பதிவு செய்து அவர்கள் 3 பேரையும் கைது செய்தார். பின்னர் அவர்கள் உளுந்தூர் பேட்டை கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். 

    • கைதான பெண்ணிடம் இருந்து குழந்தைகளிடம் திருடப்பட்ட 2 தங்க தாயத்துகள் பறிமுதல் செய்யப்பட்டது.
    • வேறு பகுதியில் கைவரிசை காட்டி உள்ளாரா? என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டது.

    வாடிப்பட்டி:

    மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அருகே 4 நாட்களுக்கு முன் அங்கன்வாடி மையத்தில் பெண் ஒருவர் அதிகாரி போல் சென்று அங்கிருந்த 2 குழந்தைகள் கழுத்தில் அணிந்திருந்த தங்க தாயத்துகளை திருடி சென்றார். இது தொடர்பாக வாடிப்பட்டி போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது.

    அதன்பேரில் அந்த பெண்ணை பிடிக்க சப்-இன்ஸ்பெக்டர்கள் முருகேசன், உதயகுமார் மற்றும் போலீசார் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டு மர்ம பெண்ணை தேடி வந்தனர். இந்த நிலையில் வாடிப்பட்டி ஆரோக்கிய அன்னை தேவாலய பஸ் நிறுத்தம் முன்பாக சந்தேகப்படும்படியாக பெண் ஒருவர் நின்றிருந்தார்.

    போலீசார் அந்த பெண்ணை பிடித்து விசாரித்தனர். அப்போது அந்த பெண் முன்னுக்குப்பின் முரணாக பதிலளித்தார். சந்தேகமடைந்த போலீசார் அவரை போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரித்தனர்.

    அப்போது அந்த பெண் மதுரை மாவட்டம் சாப்டூர் கரிசல்பட்டி கிழக்கு தெருவை சேர்ந்த சங்கர பாண்டி மகள் காவியா (வயது 29) என்பதும், 4 நாட்களுக்கு முன்பு வாடிப்பட்டி அங்கன்வாடி மையத்தில் அதிகாரி போல் சென்று குழந்தைகளிடம் நைசாக தங்க தாயத்துகளை திருடி சென்றதும் தெரியவந்தது.

    இதையடுத்து போலீசார் அவரை கைது செய்தனர். அவரிடம் இருந்து குழந்தைகளிடம் திருடப்பட்ட 2 தங்க தாயத்துகள் பறிமுதல் செய்யப்பட்டது. அவர் இதேபோன்று வேறு பகுதியில் கைவரிசை காட்டி உள்ளாரா? என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டது.

    • ராம் பாலாஜி, திருமணம் செய்ய போகும் பெண்தானே என நினைத்து வித்யா ஸ்ரீ கேட்கும் போதெல்லாம் பணத்தை வாரி இறைத்துள்ளார்.
    • வித்யா ஸ்ரீ -அஜித்குமார் இருவரையும் வாடிப்பட்டி கோர்ட்டில் ஆஜர்படுத்தி போலீசார் சிறையில் அடைத்தனர்.

    சென்னை:

    சென்னை போரூர் முகலிவாக்கம் பகுதியில் வசித்து வருபவர் ராம் பாலாஜி. தொழில் அதிபரான இவர், ரியல் எஸ்டேட் தொழிலிலும் ஈடுபட்டு வருகிறார்.

    மனைவியை பிரிந்து தனியாக வாழ்ந்து வரும் ராம் பாலாஜி மதுரையில் திருமணம் ஒன்றில் பங்கேற்பதற்காக சென்றிருந்தார். அப்போது வித்யா ஸ்ரீ என்ற 31 வயது இளம்பெண்ணின் அறிமுகம் கிடைத்தது. வித்யா ஸ்ரீ தன்னைப் பற்றி அறிமுகப்படுத்திக் கொண்டு இனிக்க இனிக்க பேசினார்.

    இதையடுத்து ராம் பாலாஜியின் செல்போன் எண்ணையும் அவர் வாங்கிக் கொண்டார். திருமண நிகழ்ச்சியை முடித்துக் கொண்டு ராம்பாலாஜி சென்னை திரும்பிய பின்னர் செல்போனில் தொடர்பு கொண்டு வித்யா ஸ்ரீ பேசி வந்தார். அப்போது உங்களை எனக்கு மிகவும் பிடித்து இருக்கிறது என்று ஆசை வார்த்தைகளை அள்ளி வீசி காதலில் வீழ்த்தினார்.

    நாம் இருவரும் திருமணம் செய்து கொள்ளலாம் என்று வித்யா ஸ்ரீ கூறினார். இதற்கு ராம் பாலாஜியும் சம்மதித்தார்.

    ராம் பாலாஜியிடம் பணம் இருப்பதை தெரிந்து கொண்ட வித்யா ஸ்ரீ கொஞ்சம் கொஞ்சமாக பணம் பறித்துள்ளார். தனது செலவுகளை கூறி வங்கி கணக்கையும் வித்யா ஸ்ரீ அனுப்பி வைத்துள்ளார்.

    இதையடுத்து ராம் பாலாஜி, திருமணம் செய்ய போகும் பெண்தானே என நினைத்து வித்யா ஸ்ரீ கேட்கும் போதெல்லாம் பணத்தை வாரி இறைத்துள்ளார். இப்படி ராம் பாலாஜியிடம் இருந்து வித்யா ஸ்ரீ ரூ.50 லட்சம் பணத்தை சுருட்டினார்.

    ராம் பாலாஜி திருமணம் பற்றி பேசும்போதெல்லாம் வித்யா ஸ்ரீ சாக்கு போக்கு சொல்லி காலம் தாழ்த்தி வந்தார். இந்த நிலையில் கடந்த சில நாட்களாக வித்யா ஸ்ரீயை ராம் பாலாஜியால் தொடர்பு கொள்ள முடியவில்லை. அவரது செல்போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த ராம் பாலாஜி இதுபற்றி விசாரித்தார். அப்போது அவருக்கு அதிர்ச்சி காத்திருந்தது. மதுரை அலங்காநல்லூரை அடுத்த சிக்கந்த சாவடி பகுதியில் வசித்து வந்த வித்யா ஸ்ரீ வீட்டை காலி செய்துவிட்டு ஓட்டம் பிடித்திருப்பது தெரிய வந்தது. இதையடுத்து ராம் பாலாஜி தான் ஏமாற்றப்பட்டது குறித்து அலங்காநல்லூர் போலீசில் புகார் அளித்தார்.

    போலீசார் வழக்குப் பதிவு செய்து வித்யா ஸ்ரீயை தேடி கண்டுபிடித்து கைது செய்தனர். அவரது நண்பரான அஜித்குமாரும் பிடிபட்டார். ராம்பாலாஜி இடமிருந்து ரூ.50 லட்சம் பணத்தை சுருட்டியதற்கு அஜித்குமார் உடந்தையாக இருந்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

    வித்யா ஸ்ரீ -அஜித்குமார் இருவரையும் வாடிப்பட்டி கோர்ட்டில் ஆஜர்படுத்தி போலீசார் சிறையில் அடைத்தனர். வித்யா ஸ்ரீ இதுபோன்று வேறு யாரையும் ஏமாற்றி உள்ளாரா? என்பது பற்றியும் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • மரக்காணம் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் அடகு கடையில் போலி நகைகளை வைத்து பணத்தை கொள்ளையடித்து செல்வது கடந்த ஒரு வருடமாகநடந்து வருகிறது
    • 10 பவுன் போலி நகையை அடகு வைத்து மர்மப் பெண் ஒருவர் அதற்கான பணத்தை வாங்கி சென்று விட்டார்,

    விழுப்புரம்:

    மரக்காணம் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் அடகு கடையில் போலி நகைகளை வைத்து பணத்தை கொள்ளையடித்து செல்வது கடந்த ஒரு வருடமாக தொடர்கதையாகி வருகிறது.இதுபோல் போலி நகையை அடகு வைத்து பணம் பறிக்கும் பெண் ஒருவரை கடந்த வாரம் போலீசார் கைது செய்தனர். மரக்காணம்- புதுவை சாலையில் ஒரு நகைக்கடை உள்ளது. இந்த நகை கடையில் கடந்த 6மாதத்திற்கு முன் 10 பவுன் போலி நகையை அடகு வைத்து மர்மப் பெண் ஒருவர் அதற்கான பணத்தை வாங்கி சென்று விட்டார். இதனைத் தொடர்ந்து நேற்று இரவு மீண்டும் அதே கடைக்கு ஒரு கும்பல் சென்று நகையை கொடுத்து பணம் கேட்டுள்ளனர்

    .அந்த கடைக்காரர் ஏற்கனவே பல லட்சங்களை இழந்திருந்ததால் மர்ம நபர்கள் கொடுத்த நகையை முறையாக சோதனை செய்துள்ளார். அப்போது அந்த கும்பல் கொடுத்த நகைகள் போலியானவை என தெரியவந்துள்ளது. இதனால் அந்த நகைக்கடையின் உரிமையாளர் மரக்காணம் போலீஸ் நிலையத்திற்கு தகவல் கொடுத்தார். போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று அக் கும்பலை கைது செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விசாரணையில் அந்த கும்பல் யார் இவர்களுடன் எந்தெந்த கும்பல் தொடர்பில் உள்ளது. இதுபோல் இவர்கள் எந்தெந்த இடங்களில் போலி நகைகளை அடகு வைத்து பணம் பறித்து சென்றுள்ளனர் என்ற முழு விவரமும் தெரியவரும் என போலீசார் கூறினர்.இதனால் அவர்களடம் போலீசார் தொடர்ந்து ரகசிய விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×