என் மலர்
உள்ளூர் செய்திகள்

கோவையில் தொழில் அதிபர் வீட்டில் தங்க கட்டி திருடிய வேலைக்கார பெண் கைது
- பொன்முருகன் ஆர்.எஸ்.புரம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.
- மீதமுள்ள தங்க நகைகள் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோவை,
கோவை ஆர்.எஸ்.புரம் சர்ச் ரோடு பகுதியை சேர்ந்தவர் பொன்முருகன் (வயது46). தொழில் அதிபர். இவரது வீட்டில் கோவை ஒண்டிபுதூரை சேர்ந்த ஜோதி (46) என்ற பெண் வீட்டு வேலை பார்த்து வந்தார்.
சம்பவத்தன்று பொன்முருகன் வீட்டில் இருந்து வெளியே சென்றார். அப்போது இவரது வீட்டில் பீரோவில் இருந்த 150 கிராம் தங்க கட்டி திருட்டு போய் இருந்தது. இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த பொன்முருகன் ஆர்.எஸ்.புரம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
விசாரணையில் அவரது வீட்டில் தங்க கட்டியை கொள்ளையடித்து சென்றது, அவரது வீட்டில் வேலை பார்த்து வந்த ஜோதி என்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் ஜோதியை கைது செய்து அவரிடம் இருந்து 93 கிராம் எடையுள்ள தங்க கட்டியை பறிமுதல் செய்தனர். மீதமுள்ள தங்க நகைகள் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.






