search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கஞ்சா பொட்டலங்கள் வைத்திருந்த பெண் கைது
    X

    கைது செய்யப்பட்ட தாடக நாச்சியார்.

    கஞ்சா பொட்டலங்கள் வைத்திருந்த பெண் கைது

    • கஞ்சா பொட்டலங்கள் வைத்திருந்த பெண் கைது செய்யப்பட்டார்.
    • அவர் மீது ஏற்கனவே பல வழக்குகள் உள்ளன.

    திருச்சுழி

    விருதுநகர் மாவட்டம் திருச்சுழி அருகே உள்ள கல்லூரணி பகுதியில் கஞ்சா விற்பனை நடந்து வருவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது. அதன் அடிப்படையில் திருச்சுழி துைண போலீஸ் சூப்பிரண்டு ஜெகநாதன் தலைமையிலான தனிப்படை போலீசார் அந்த பகுதிகளில் அதிரடி சோதனை நடத்தினர்.

    அப்போது அங்கு திருச்சுழி அருகே உள்ள மாங்குளம் பகுதியை சேர்ந்த மல்லிகார்ஜூனன் என்பவ ரின் மனைவி தாடக நாச்சி யார் (வயது 36) என்பவர் நின்று கொண்டிருந்தார்.அவர் மீது ஏற்கனவே பல வழக்குகள் இருந்ததால், சந்தேகத்தின்பேரில் அவரிடம் போலீசார் சோதனை நடத்தினர்.

    அப்போது அவர் வைத்திருந்த பையில் கஞ்சா பொட்டலங்கள் இருந்தன. அவற்றை போலீசார் பறி முதல் செய்தனர். மாண வர்கள் மற்றும் இளைஞர்க ளுக்கு விற்பதற்காக கஞ்சா பொட்டலங்களை அவர் வைத்திருந்தது விசாரணை யில் தெரியவந்தது.

    இதையடுத்து தாடக நாச்சியாரை போலீசார் கைது செய்தனர். இவர் கல்லூரணி பகுதியில் தொடர்ந்து கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

    Next Story
    ×