என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
கடலூர் புதுப்பாளையத்தில் தீபாவளி சீட்டு நடத்தி மோசடி செய்த பெண் கைது
- சீட்டு பணம் கட்டினால் நீங்கள் பணத்தை சேர்த்து வீடு வாங்கலாம் என கூறியுள்ளார்.
- தீபாவளி சீட்டில் லட்சக்கணக்கான ரூபாய் கட்டி வந்தனர்.
கடலூர்:
கடலூர் புதுப்பாளையத்தை சேர்ந்தவர் மாலா என்கிற பத்மினி (வயது 55). இவர் அதே பகுதியை சேர்ந்த அல்லி (வயது 35) என்ற பெண்ணிடம் தீபாவளி சீட்டு பிடித்து வருகின்றேன். என்னிடம் சீட்டு பணம் கட்டினால் நீங்கள் பணத்தை சேர்த்து வீடு வாங்கலாம் என தெரிவித்ததாக கூறப்படுகிறது.
இதனை தொடர்ந்து அல்லி உள்ளிட்ட ஏராளமான பெண்கள் பத்மினி என்கிற மாலாவிடம் கடந்த 2021 முதல் 2022 வரை தீபாவளி சீட்டில் லட்சக்கணக்கான ரூபாய் கட்டி வந்தனர்.
இந்த நிலையில் பணம் கட்டிய பெண்கள் தங்கள் பணத்தை மாலா என்கிற பத்மினியிடம் கேட்டு வந்தனர். இதற்கு பத்மினி சரியான முறையில் பதில் அளிக்காமல் பணம் தராமல் ஏமாற்றிக் வந்ததாக கூறப்படுகிறது.
இதுகுறித்து ஏமாந்த பெண்கள் கடலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் புகார் மனு அளித்தனர். அதன் பேரில் கடலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜாராம் உத்தரவின் பேரில் மாவட்ட குற்றப்பிரிவு துணை போலீஸ் சூப்பிரண்டு தேவராஜ் மேற்பார்வையில் போலீஸ் இன்ஸ்பெக்டர் தேவி, சப்-இன்ஸ்பெக்டர் லிடியா செல்வி மற்றும் போலீசார் புதுப்பாளையம் பகுதியில் இருந்த பத்மினி என்கிற மாலாவை அதிரடியாக கைது செய்து அவரிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்