search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Diwali ticket"

    • இவர்களுக்கு தீபாவளிக்கு தேவையான பொருட்கள் அல்லது பணம் வழங்கப்படுமென கூறியிருந்தனர்.
    • கடந்த 2021 முதல் 2022 வரை தீபாவளி சீட்டு கட்டியுள்ளனர். இ

    கள்ளக்குறிச்சி: 

    கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகேயுள்ள எறையூர் கிராமத்தை சேர்ந்தவர் மரியதாஸ் (வயது 51). இவரது மகன் அந்தோணி செல்வராஜ் (32). இருவரும் தீபாவளி சீட்டு நடத்தி வந்தனர். அதே ஊரைச் சேர்ந்தவர்கள் இவர்களிடம் தீபாவளி சீட்டு கட்டினர். இவர்களுக்கு தீபா வளிக்கு தேவையான பொருட்கள் அல்லது பணம் வழங்கப்படுமென கூறியிருந்தனர். இதனை நம்பி அதே ஊரைச் சேர்ந்த பீட்டர் பவுல் (61), அவரது அண்ணன் ஆரோன் (65) ஆகியோர் கடந்த 2021 முதல் 2022 வரை தீபாவளி சீட்டு கட்டியுள்ளனர். இதற்கான பொருட்களையோ, பணத்தையோ மரியதாஸ், அந்தோணி செல்வராஜ் தரவில்லை.

    இது தொடர்பாக கள்ளக்குறிச்சி மாவட்ட குற்றப்பிரிவில் பீட்டர் பவுல், ஆரோன் ஆகியோர் புகார் கொடுத்தனர். இது தொடர்பாக விசாரணை நடத்தியபோது, தீபாவளி சீட்டு பிடித்தவர்கள் ரூ.5 லட்சத்து 19 ஆயிரத்து 500 ஏமாற்றியது தெரியவந்தது. இதையடுத்து மரியதாஸ், அந்தோணி செல்வராஜ் மீது வழக்கு பதிவு செய்து, அவர்களை கைது செய்ய எலவனா சூர்கோட்டை போலீ சாருக்கு பரிந்துரைக்கப் பட்டது. அதன்படி வழக்கு பதிவு செய்த போலீசார், அந்தோணி செல்வராஜை கைது செய்தனர். தலை மறைவாக உள்ள மரிய தாசை போலீசார் தேடி வருகின்றனர்.

    • சீட்டு பணம் கட்டினால் நீங்கள் பணத்தை சேர்த்து வீடு வாங்கலாம் என கூறியுள்ளார்.
    • தீபாவளி சீட்டில் லட்சக்கணக்கான ரூபாய் கட்டி வந்தனர்.

    கடலூர்:

    கடலூர் புதுப்பாளையத்தை சேர்ந்தவர் மாலா என்கிற பத்மினி (வயது 55). இவர் அதே பகுதியை சேர்ந்த அல்லி (வயது 35) என்ற பெண்ணிடம் தீபாவளி சீட்டு பிடித்து வருகின்றேன். என்னிடம் சீட்டு பணம் கட்டினால் நீங்கள் பணத்தை சேர்த்து வீடு வாங்கலாம் என தெரிவித்ததாக கூறப்படுகிறது.

    இதனை தொடர்ந்து அல்லி உள்ளிட்ட ஏராளமான பெண்கள் பத்மினி என்கிற மாலாவிடம் கடந்த 2021 முதல் 2022 வரை தீபாவளி சீட்டில் லட்சக்கணக்கான ரூபாய் கட்டி வந்தனர்.

    இந்த நிலையில் பணம் கட்டிய பெண்கள் தங்கள் பணத்தை மாலா என்கிற பத்மினியிடம் கேட்டு வந்தனர். இதற்கு பத்மினி சரியான முறையில் பதில் அளிக்காமல் பணம் தராமல் ஏமாற்றிக் வந்ததாக கூறப்படுகிறது.

    இதுகுறித்து ஏமாந்த பெண்கள் கடலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் புகார் மனு அளித்தனர். அதன் பேரில் கடலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜாராம் உத்தரவின் பேரில் மாவட்ட குற்றப்பிரிவு துணை போலீஸ் சூப்பிரண்டு தேவராஜ் மேற்பார்வையில் போலீஸ் இன்ஸ்பெக்டர் தேவி, சப்-இன்ஸ்பெக்டர் லிடியா செல்வி மற்றும் போலீசார் புதுப்பாளையம் பகுதியில் இருந்த பத்மினி என்கிற மாலாவை அதிரடியாக கைது செய்து அவரிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×