search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    உளுந்தூர்பேட்டை எறையூரில் தீபாவளி சீட்டு நடத்தி ரூ.5 லட்சம் ஏமாற்றிய வாலிபர் கைது: தந்தைக்கு வலைவீச்சு
    X

    உளுந்தூர்பேட்டை எறையூரில் தீபாவளி சீட்டு நடத்தி ரூ.5 லட்சம் ஏமாற்றிய வாலிபர் கைது: தந்தைக்கு வலைவீச்சு

    • இவர்களுக்கு தீபாவளிக்கு தேவையான பொருட்கள் அல்லது பணம் வழங்கப்படுமென கூறியிருந்தனர்.
    • கடந்த 2021 முதல் 2022 வரை தீபாவளி சீட்டு கட்டியுள்ளனர். இ

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகேயுள்ள எறையூர் கிராமத்தை சேர்ந்தவர் மரியதாஸ் (வயது 51). இவரது மகன் அந்தோணி செல்வராஜ் (32). இருவரும் தீபாவளி சீட்டு நடத்தி வந்தனர். அதே ஊரைச் சேர்ந்தவர்கள் இவர்களிடம் தீபாவளி சீட்டு கட்டினர். இவர்களுக்கு தீபா வளிக்கு தேவையான பொருட்கள் அல்லது பணம் வழங்கப்படுமென கூறியிருந்தனர். இதனை நம்பி அதே ஊரைச் சேர்ந்த பீட்டர் பவுல் (61), அவரது அண்ணன் ஆரோன் (65) ஆகியோர் கடந்த 2021 முதல் 2022 வரை தீபாவளி சீட்டு கட்டியுள்ளனர். இதற்கான பொருட்களையோ, பணத்தையோ மரியதாஸ், அந்தோணி செல்வராஜ் தரவில்லை.

    இது தொடர்பாக கள்ளக்குறிச்சி மாவட்ட குற்றப்பிரிவில் பீட்டர் பவுல், ஆரோன் ஆகியோர் புகார் கொடுத்தனர். இது தொடர்பாக விசாரணை நடத்தியபோது, தீபாவளி சீட்டு பிடித்தவர்கள் ரூ.5 லட்சத்து 19 ஆயிரத்து 500 ஏமாற்றியது தெரியவந்தது. இதையடுத்து மரியதாஸ், அந்தோணி செல்வராஜ் மீது வழக்கு பதிவு செய்து, அவர்களை கைது செய்ய எலவனா சூர்கோட்டை போலீ சாருக்கு பரிந்துரைக்கப் பட்டது. அதன்படி வழக்கு பதிவு செய்த போலீசார், அந்தோணி செல்வராஜை கைது செய்தனர். தலை மறைவாக உள்ள மரிய தாசை போலீசார் தேடி வருகின்றனர்.

    Next Story
    ×