என் மலர்
உள்ளூர் செய்திகள்

கோப்பு படம்.
கூடலூரில் கஞ்சா விற்ற பெண் கைது
- கள்ளர் மண்டபரம் அருகே 2 பெண்கள் கஞ்சா விற்றுக் கொண்டு இருந்தனர்.
- ஒருவரை கைது செய்து அவரிடம் இருந்த கஞ்சாவினை பறிமுதல் செய்தனர்.
கூடலூர்:
கூடலூர் வடக்கு போலீசார் நகர் பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது கள்ளர் மண்டபரம் அருகே 2 பெண்கள் கஞ்சா விற்றுக் கொண்டு இருந்தனர். போலீசாரைக் கண்டதும் ஒருவர் தப்பி ஓடி விட்டார்.
மற்றொரு பெண்ணை பிடித்து விசாரித்த போது அவர் சமயன் மனைவி மல்லிகா (வயது 47) என தெரிய வந்தது. மல்லிகாவை கைது செய்து அவரிடம் இருந்த கஞ்சாவினை பறிமுதல் செய்தனர். மேலும் தப்பி ஓடிய செல்வ ராணி என்பவரை தேடி வருகின்றனர்.
Next Story






