search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "West Bengal"

    • கூட்டத்தினரை கலைப்பதற்காக போலீசார் தண்ணீர் பீய்ச்சி அடித்தனர்.
    • வன்முறை தொடர்பான புகைப்படங்கள், வீடியோ வைரலாகி வருகின்றன.

    புதுடெல்லி:

    மேற்கு வங்காள மாநிலம் கொல்கத்தாவில், திரிணாமுல் காங்கிரஸ் ஆட்சியை கண்டித்து பாஜக சார்பில் தலைமை செயலகத்தை முற்றுகையிடும் போராட்டம் நடைபெற்றது. இதற்காக கொல்கத்தாவின் பல்வேறு பகுதிகளில் இருந்து பாஜகவினர் தலைமைச் செயலகம் நோக்கி பேரணியாக சென்றனர். இதனால் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. போராட்டக்காரர்களை போலீசார் ஆங்காங்கே தடுத்து நிறுத்தினர். தலைமைச் செயலகம் பகுதியை நெருங்கிய சுவேந்து அதிகாரி உள்ளிட்ட பாஜக தலைவர்கள் கைது செய்யப்பட்டனர்.

    தடுப்புகளை மீறி பாஜகவினர் முன்னேறியதால், கூட்டத்தினரை கலைப்பதற்காக போலீசார் தண்ணீர் பீய்ச்சி அடித்தனர். கண்ணீர் புகை குண்டுகளை வீசினர். இதனால் அங்கு வன்முறை ஏற்பட்டது. வன்முறை தொடர்பான புகைப்படங்கள், வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன.

    அதேபோல், தள்ளுமுள்ளு ஏற்பட்டபோது பாஜக தலைவர் சுவேந்து அதிகாரி, கூட்டத்தை கட்டுப்படுத்த முயற்சிக்கும் பெண் காவலரைப் பார்த்து பேசிய வார்த்தை சமூக வலைத்தளங்களில் டிரெண்டாகி வருகிறது. 'என்னை தொடாதீர்கள், நீங்கள் பெண், நான் ஆண்' என சுவேந்து அதிகாரி பேசும்போது பதிவு செய்யப்பட்ட வீடியோவை திரிணாமுல் காங்கிரஸ் டுவிட்டரில் பகிர்ந்து கிண்டல் செய்துள்ளது.

    போலீஸ் வேனில் அழைத்துச் செல்ல முயன்ற பெண் காவலரிடம் சுவேந்து இவ்வாறு பேசியதாக தெரிகிறது. நான் சட்டத்தை மதிக்கும் குடிமகன் என்று கூறும் அவர் ஆண் காவலரை அழைக்கிறார். அதன்பின்னர் மூத்த அதிகாரி ஒருவர் வந்து சுவேந்துவை வேனுக்கு அழைத்து சென்றார். 

    • மேற்கு வங்காளத்தில் மம்தா பானர்ஜி அரசைக் கண்டித்து பாஜக பேரணி நடத்தியது
    • தலைமைச் செயலகம் பகுதியை நெருங்கியதும் போலீசார் தடுத்து நிறுத்தி கைது செய்தனர்.

    கொல்கத்தா:

    மேற்கு வங்காளத்தில் மம்தா பானர்ஜி அரசில் ஊழல் மலிந்து விட்டதாகவும் திரிணாமூல் காங்கிரஸ் ஆட்சியை கண்டித்து தலைமை செயலகத்தை முற்றுகையிடும் போராட்டம் நடைபெறும் என்றும் பாஜக அறிவித்து இருந்தது. அதன்படி, போராட்டத்தில் பங்கேற்க மாநிலத்தின் பல இடங்களில் இருந்து பாஜகவினர் குவியத்தொடங்கினர். ஒவ்வொரு பகுதியில் இருந்தும் தலைமைச் செயலகம் நோக்கி பேரணியாக சென்றனர். இதனால் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

    பல இடங்களில் ரெயில் நிலையங்களில் வைத்தே பாஜகவினர் தடுக்கப்பட்டதாக அக்கட்சி போலீசார் மீது குற்றம் சாட்டினர். சட்டசபை எதிர்க்கட்சி தலைவர் சுவேந்து அதிகாரி, பாஜக தேசிய துணைத்தலைவர் திலீப் கோஷ் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் மற்றும் ஏராளமான தொண்டர்கள் போராட்டத்தில் பங்கேற்றனர்.

    போராட்டக்காரர்கள் தலைமைச் செயலகம் பகுதியை நெருங்கியதும் போலீசார் தடுத்து நிறுத்தி கைது செய்தனர். ஹவ்ரா பகுதியில் பாஜகவினர் பேரணியாக வந்தபோது அவர்களை தடுத்து நிறுத்துவதற்காக தடுப்புகள் அமைக்கப்பட்டிருந்தன. அதனை மீறி பாஜகவினர் முன்னேறினர். கூட்டத்தினரை கலைப்பதற்காக, பேரணியாக வந்தவர்கள் மீது போலீசார் தண்ணீர் பீய்ச்சி அடித்தனர். கண்ணீர் புகை குண்டுகளை வீசினர். அங்கு ஏற்பட்ட வன்முறையில் காவல் துறை வாகனத்திற்கு தீ வைக்கப்பட்டது.

    வன்முறையின்போது போலீஸ்காரர்கள் சிலர் காயமடைந்துள்ளனர். காவலர் ஒருவரை போராட்டக்காரர்கள் விரட்டி விரட்டி தாக்கியது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இது தொடர்பான வீடியோ காட்சிகள் வெளியாகின. போராட்டம் வன்முறையாக மாறிய நிலையில், சுவேந்து அதிகாரி உள்ளிட்ட பல தலைவர்களை போலீசார் கைது செய்தனர்.

    • விபத்து குறித்து அறிந்த பிரதமர் மோடி வேதனை தெரிவித்துள்ளார்.
    • உயிரிழந்தவர் குடும்பத்தினருக்கு தலா ரூ.2 லட்சம் நிவாரண உதவி.

    மேற்கு வங்காள மாநிலம் பீர்பூம் மாவட்ட மல்லர்பூர் காவல் நிலையப் பகுதியில் ஆட்டோ மீது பேருந்து ஒன்று நேருக்கு நேர் மோதியது. இந்த கோர விபத்தில் 9 பேர் உயிரிழந்துள்ளனர். பலர் காயமடைந்தனர்.

    இந்த கோர விபத்து குறித்து அறிந்த பிரதமர் மோடி வேதனை தெரிவித்துள்ளார். மேற்கு வங்காளத்தின் பிர்பூம் மாவட்டத்தில் நடந்த ஒரு கோர விபத்தினால் ஏற்பட்ட உயிர் இழப்புகளால் வேதனை அடைகிறேன். காயமடைந்தவர்கள் நலம் பெற பிரார்த்திக்கிறேன என்று தமது டுவிட்டர் பதிவில் அவர் கூறியுள்ளார்.

    மேலும், உயிரிழந்தவர்களின் குடும்பத்தாருக்கு தலா ரூ.2 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு தலா ரூ.50,000 ரூபாயும் நிவாரண உதவியாக வழங்கப்படும் என்றும் மோடி அறிவித்தார்.

    முன்னதாக கடந்த ஞாயிற்றுக்கிழமை, மேற்கு வங்காள மாநிலம் கூச் பெஹாரில் உள்ள ஜல்பேஷ் கோயிலுக்கு பயணிகளை ஏற்றிச் சென்ற பிக்கப் வேன்னில் மின்சாரம் தாக்கி 10 பேர் உயிரிழந்தனர். அந்த வேனில் இருந்த 27 பேரில் 16 பேர் சிகிச்சைக்காக ஜல்பைகுரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். 

    • மந்திரி பார்த்தா சட்டர்ஜியிடம் நேற்று 11 மணி நேரம் அமலாக்கத்துறையினர் விசாரணை நடத்தினர்.
    • இரண்டாவது நாளாக இன்றும் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்துகின்றனர்.

    கொல்கத்தா:

    மேற்குவங்காள ஆசிரியர் நியமணம் மற்றும் அதில் நடைபெற்ற முறைகேடுகள் தொடர்பாக விசாரிக்க சிபிஐக்கு கோர்ட் உத்தரவிட்டது. இந்த விவகாரத்தில் பணமோசடிகள் நடைபெற்றுள்ளதாக புகார்கள் எழுந்த நிலையில் அமலாக்கத்துறையும் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தது.

    அந்த வகையில், வர்த்தகம் மற்றும் தொழில்துறை மந்திரி பார்த்தா சாட்டர்ஜி, கல்வித்துறை மந்திரி பரீஷ் சந்திர அதிகாரி தொடர்புடைய இடங்கள் மற்றும் மாநில கல்வித்துறையில் முக்கிய பொறுப்புகளில் இருந்த அதிகாரிகளின் வீடுகள் என 13 இடங்களில் அமலாக்கத்துறையில் நேற்று அதிரடி சோதனை நடத்தினர். மந்திரி பார்த்தா சட்டர்ஜியிடம் நேற்று 11 மணி நேரம் அமலாக்கத்துறையினர் விசாரணை நடத்தினர்.

    அமலாக்கத்துறை நடத்திய சோதனையின்போது, மந்திரி பார்த்தா சாட்டர்ஜியின் நெருங்கிய உதவியாளர் அர்பிதா முகர்ஜியின் வீட்டில் இருந்து கட்டுக்கட்டாக 20 கோடி ரூபாய் பணம் கைப்பற்றப்பட்டுள்ளது. 10 சொத்து ஆவணங்கள், ரூ.50 லட்சம் மதிப்பிலான நகைகள் ஆகியவற்றையும் அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். அர்பிதா பானர்ஜி வங்காளம், ஒடிசா ஆகிய மொழிப்படங்களில் நடித்துள்ளார்.

    நடிகை அர்பிதாவின் வீட்டில் இருந்து ரூ.21 கோடி பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ள சம்பவம் மேற்குவங்காளத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. நடிகை அர்பிதாவின் வீட்டில் இரண்டாவது நாளாக இன்றும் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்துகின்றனர்.

    இதுஒருபுறமிருக்க தீவிர விசாரணைக்குப் பிறகு மந்திரி பார்த்தா சட்டர்ஜியை அமலாக்கத்துறையினர் கைது செய்துள்ளனர். அவரை கொல்கத்தா பேங்ஷால் கோர்ட்டில் ஆஜர்படுத்த உள்ளனர். இதேபோல் விசாரணை வளையத்தில் உள்ள அர்பிதாவையும் கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

    • உள்ளூர் கவுன்சிலர் ஆதரவாளர்களுக்கும் அமைச்சரின் ஆதரவாளர்களுக்கும் இடையே மோதல்
    • அமைச்சரின் தொகுதியில் உள்கட்சி மோதல்கள் பதிவாகியுள்ளதால், மம்தா பானர்ஜி அதிருப்தி

    கொல்கத்தா:

    மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையில் நேற்ற அம்மாநில அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது. இதில் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் ஜாவேத் அகமதுகான் பங்கேற்கவில்லை. அவரை மம்தா புறக்கணித்துள்ளதாக திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தகவல்கள் தெரிவித்துள்ளன.

    தெற்கு கொல்கத்தாவில் உள்ள அமைச்சர் ஜாவேத் அகமது கானின் சொந்த தொகுதியான கஸ்பாவில் உள்கட்சி மோதல்கள் அண்மையில் பதிவாகியுள்ளன. அந்த பகுதி உள்ளூர் கவுன்சிலர் சுஷாந்த் கோஷின் ஆதரவாளர்களுக்கும் அமைச்சரின் ஆதரவாளர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது.

    இரு தரப்பினரும் தாக்குதல் நடத்தி நிலையில், பல வீடுகள் சூறையாடப்பட்டன. இதனால் அப்பகுதியில் பதற்றம் நிலவுவதாக கொல்கத்தா போலீசார் தெரிவித்தனர். இந்நிலையில் சுஷாந்த் கோஷ் ஆதரவாளர்களுக்கு எதிராக அமைச்சர் ஜாவேத் அகமதுகான் கருத்து தெரிவித்திருந்தார்.

    இதனால் அதிருப்தி அடைந்த மம்தா பானர்ஜி, அமைச்சரை அழைத்து வாய் மூடி பேசாமல் இருங்கள் என்று தெரிவித்தாக கூறப்படுகிறது. அமைச்சரவை கூட்டத்தில் பங்கேற்க அமைச்சர் ஒருவருக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது மேற்கு வங்க அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    மேற்கு வங்காளத்தில் மக்களை பிரித்து ஆள பா.ஜனதா முயற்சி செய்கிறார்கள் என்று மம்தா பானர்ஜி குற்றம் சாட்டியுள்ளார்.
    கொல்கத்தா:

    மேற்கு வங்காள மாநிலத்தில் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி பாராளுமன்றத் தேர்தலில் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. இந்த நிலையில் தேர்தல் முடிவுக்கு பின்னர் நேற்று அந்த கட்சியின் சார்பில் நைஹட்டியில் ஏற்பாடு செய்து இருந்த பேரணியில் முதல்-மந்திரி மம்தா பானர்ஜி கலந்து கொண்டு பேசினார். அப்போது, பா.ஜனதா போன்ற கட்சியை நான் ஆதரிக்கப் போவதில்லை. அவர்கள் மாநிலத்தில் உள்ள மக்களை மொழி அடிப்படையில் பிரித்து ஆள முயற்சி செய்கிறார்கள்.



    சில போலீஸ் அதிகாரிகளும் பா.ஜனதா கட்சிக்கு ஆதரவாக செயல்படுகின்றனர். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் பேசினார்.
    பாஜகவிற்கு சற்று பின்னடைவாக உள்ள மேற்கு வங்காளம், ஒடிசா, கேரளா ஆகிய 3 மாநிலங்களுக்கு கூடுதலாக மத்திய மந்திரி பதவிகளை வழங்க பிரதமர் மோடி தீர்மானித்துள்ளார்.
    புதுடெல்லி:

    பாராளுமன்ற தேர்தலில் பா.ஜனதா கூட்டணி 353 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. பா.ஜனதா மட்டும் தனியாக 303 இடங்களில் வென்றிருக்கிறது.

    மேற்குவங்காளம், ஒடிசா போன்ற மாநிலங்களில் பா.ஜனதா கடந்த காலங்களில் மிகவும் பின்தங்கிய நிலையில் இருந்தது. ஆனால் இப்போது அங்கு ஆழமாக காலூன்றி இருக்கிறது.

    மேற்குவங்காளத்தில் 18 எம்.பி. தொகுதிகளை கைப்பற்றி உள்ளது. அதேபோல ஒடிசாவிலும் 8 இடங்களில் வென்றுள்ளது. அங்கு இதற்கு முன்பு 2-வது இடத்தில் இருந்த காங்கிரஸ் கட்சி பின்னுக்கு தள்ளப்பட்டுள்ளது.

    இந்த வெற்றியின் மூலம் அந்த இரு மாநிலங்களிலும் இன்னும் ஆழமாக காலூன்றி வரும்காலத்தில் மாநில ஆட்சியை கைப்பற்ற வேண்டும் என்பது பா.ஜனதாவின் திட்டமாக உள்ளது.



    அதேபோல கேரள மாநிலத்திலும் பா.ஜனதா வலுவாக காலூன்ற முடியும் என்று நம்புகிறது. இந்த தேர்தலில் பா.ஜனதாவுக்கு அங்கு ஒரு இடமும் கிடைக்கவில்லை. ஆனாலும் பல தொகுதிகளில் கணிசமான ஓட்டுக்களை பெற்றுள்ளது.

    எனவே இன்னும் அதிக கவனம் செலுத்தினால் கேரளாவிலும் ஒரு காலத்தில் மிகப்பெரிய கட்சியாக வளர முடியும் என்று பா.ஜனதா நம்புகிறது.

    இதன் காரணமாக மேற்கு வங்காளம், ஒடிசா, கேரளா ஆகிய 3 மாநிலங்களுக்கு இந்த தடவை கூடுதல் மத்திய மந்திரிகளை வழங்க பிரதமர் மோடி முடிவு செய்துள்ளார். தற்போது மேற்குவங்காளத்தை சேர்ந்த பாபுல்சுப்ரியோ, எஸ்.எஸ். அலுவாலியா ஆகியோர் மத்திய மந்திரிகளாக உள்ளனர். இப்போது 18 இடங்களை கைப்பற்றி இருப்பதால் அங்கு கூடுதலாக மந்திரி பதவி வழங்கப்பட இருக்கிறது.

    2021-ல் மேற்கு வங்காளத்தில் சட்டசபை தேர்தல் நடக்க இருக்கிறது. கூடுதல் மத்திய மந்திரிகளை வழங்கி மாநிலத்தில் அதிக கவனம் செலுத்தினால் ஆட்சியை கைப்பற்ற முடியும் என்று பா.ஜனதா கருதுகிறது.

    ஒடிசாவில் இந்த தடவை பாராளுமன்ற தேர்தலுடன் சட்டசபை தேர்தலும் சேர்ந்து நடந்தது. இதில் பாராளுமன்ற தேர்தலில் 8 இடங்களை கைப்பற்றி மாநிலத்தின் 2-வது பெரிய சக்தி என்பதை பா.ஜனதா நிரூபித்துள்ளது.

    இனிவரும் காலங்களில் சட்டசபை தேர்தலில் ஆட்சியை பிடிக்க முடியும் என்று கருதுகிறது. இதனால் அங்கும் கூடுதல் மந்திரிகள் நியமிக்கப்பட இருக்கிறார்கள்.

    கேரளாவில் கடந்த 2014 தேர்தலிலும் ஒரு இடமும் பா.ஜனதாவுக்கு கிடைக்கவில்லை. ஆனால் கேரளாவை சேர்ந்த அல்போன்ஸ் கன்னன் தானத்தை ராஜஸ்தான் மேல்சபை எம்.பி. ஆக்கி மந்திரி பதவி வழங்கினார். இன்னும் அவருடைய எம்.பி. பதவி காலம் உள்ளது. எனவே அவருக்கு மீண்டும் மந்திரி பதவி வழங்கப்பட இருக்கிறது.

    இவர் தவிர இன்னும் ஒருவரை மந்திரியாக்கலாம் என்ற திட்டம் பா.ஜனதாவுக்கு உள்ளது. கேரள மாநில பா.ஜனதா தலைவர் முரளிதரன் மகாராஷ்டிர மாநில மேல்சபை எம்.பி.யாக ஏற்கனவே தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார். அவருக்கு மந்திரி பதவி வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இல்லை என்றால் வேறு ஒரு நபரை மந்திரியாக்கி பின்னர் ஏதாவது ஒரு மாநிலத்தில் மேல்சபை எம்.பி. ஆக்கும் திட்டமும் உள்ளது.

    2021-ல் கேரளாவில் சட்டசபை தேர்தல் நடக்க உள்ளது. மத்திய மந்திரி பதவியை அதிகமாக வழங்கி கூடுதல் கவனம் செலுத்தினால் சட்டசபை தேர்தலில் பா.ஜனதா சில இடங்களை கைப்பற்ற முடியும் என்று கருதுகிறார்கள்.

    கடந்த மந்திரிசபையில் சிவசேனாவுக்கு ஒரு இடம் வழங்கப்பட்டிருந்தது. இப்போது 2 மந்திரி பதவி வழங்க திட்டமிட்டுள்ளனர். அதேபோல ஐக்கிய ஜனதா தளம் கட்சிக்கு 2 மந்திரி பதவி வழங்க உள்ளனர்.

    தற்போது உள்ள மந்திரி சபையில் லோக் ஜனசக்தி தலைவர் ராம்விலாஸ் பஸ்வான் மந்திரியாக உள்ளார். ஆனால் இந்த தேர்தலில் அவர் போட்டியிடவில்லை. அவருக்கு பதிலாக அவரது மகன் ஜிராக் பஸ்வானுக்கு மந்திரி பதவி வழங்க வேண்டும் என்று ராம்விலாஸ் பஸ்வான் கேட்கிறார்.

    ஆனால் ராம்விலாஸ் பஸ்வானே மந்திரி பதவியில் தொடர வேண்டும் என்று பா.ஜனதா விரும்புகிறது. அசாம் மாநிலத்தில் விரைவில் 2 எம்.பி. இடங்கள் காலியாக உள்ளன. அதில் பா.ஜனதாவுக்கு வெற்றி வாய்ப்பு உள்ளது. எனவே அங்கு ஒரு எம்.பி. பதவியை ராம்விலாஸ் பஸ்வானுக்கு கொடுத்து அதன் மூலம் அவரை மந்திரியாக தொடர வைக்க பா.ஜனதா திட்டமிட்டிருக்கிறது.
    மேற்கு வங்காள மாநிலத்தில் பா.ஜ.க.வினர் நடத்திய வெற்றிப் பேரணியில் கையெறி குண்டு வீசப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
    கொல்கத்தா:

    ஏழு கட்டங்களாக நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலில் பதிவான வாக்குபதிவு கடந்த 23ம் தேதி நடைபெற்றது. அதில் பாஜக 303 இடங்களை பெற்று தனி பெரும்பான்மை மிக்க கட்சியாக ஆட்சியை மீண்டும் கைப்பற்றி அசத்தியது.

    கடந்த தேர்தலில் மேற்கு வங்காளத்தில் 2 தொகுதிகளை மட்டுமே பெற்ற பா.ஜ.க., இந்தத் தேர்தலில் 18 இடங்களை கைப்பற்றியது.

    இதையடுத்து, மாநில பாஜக சார்பில் வெற்றி பேரணி நடத்த முடிவானது. இந்நிலையில், பிர்பும் மாவட்டம் மயூரேஸ்வர் என்ற இடத்தில் பா.ஜ.க. சார்பில் வெற்றி பேரணி நடைபெற்றது. அப்போது பேரணியில் சென்றவர்கள் மீது கையெறி குண்டு வீசப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இதில் யாருக்கும் காயமில்லை.

    ஆனால், திரிணாமுல் காங்கிரஸ் கட்சியினர்தான் கையெறி குண்டு வீசியதாக பாஜகவினர் குற்றம்சாட்டி வருகின்றனர். இதுதொடர்பாக, போலீசார் விசாரித்து வருகின்றனர்.
    மேற்கு வங்காளத்தில் பாஜக 18 தொகுதிகளில் முன்னிலை பெற்றுள்ளது. மம்தா பானர்ஜி பின்னடைவை சந்தித்துள்ளார்.
    பாராளுமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கை தொடங்கியதும் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பில் கூறியதுபோல் பா.ஜனதா கூட்டணி 300-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் முன்னிலைப் பெற்றுள்ளது.



    மேற்கு வங்காளத்தில் பிரசாரத்தின்போது திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜிக்கும் பா.ஜனதா தலைவர்களான அமித் ஷா, பிரதமர் மோடிக்கும் இடையில் கடுமையான வார்த்தை போர் நடைபெற்றன.

    கடந்த முறை 2 இடங்கள் மட்டுமே பிடித்திருந்த பா.ஜனதா இரட்டை இலக்க இடங்களை பிடிக்க தீவிரம் காட்டியது. அதேபோல் வாக்கு எண்ணிக்கை தொடங்கியதில் இருந்து பா.ஜனதா கடும் சவாலாக விளங்கியது.

    42 தொகுதிகளில் 18 தொகுதிகளில் பா.ஜனதா முன்னிலைப் பெற்றுள்ளது. கடந்த முறை 34 இடங்கள் பிடித்திருந்த திரிணாமுல் காங்கிரஸ் 23 இடங்களில் முன்னிலைப் பெற்றுள்ளது.
    மேற்கு வங்காளத்தில் என்னை ‘வெளிநபர்’ என்று சொன்னால், டெல்லிக்கு வரும்போது மம்தா பானர்ஜியை வெளிநபர் என்று சொல்லலாமா? என்று அமித் ஷா கேட்டுள்ளார்.
    கொல்கத்தா:

    பிரதமர் மோடி, பா.ஜனதா தலைவர் அமித் ஷா ஆகியோருக்கும், மேற்கு வங்காள மாநில முதல்-மந்திரி மம்தா பானர்ஜிக்கும் இடையே அடிக்கடி வார்த்தைப்போர் நடந்து வருகிறது.

    “வெளிநபரான அமித் ஷா மேற்கு வங்காளத்துக்கு வந்து, மக்களிடையே பிளவை உண்டாக்க முயற்சிக்கிறார்” என்று மம்தா அடிக்கடி கூறி வருகிறார்.

    இந்நிலையில், கொல்கத்தாவில் சிந்தனையாளர்கள் கூட்டம் ஒன்றில் பங்கேற்ற அமித் ஷா அதற்கு பதில் அளித்தார்.

    அவர் கூறியதாவது:-

    நான் ஒரு தேசிய கட்சியின் தலைவர். பிரசாரம் செய்வதற்காக இங்கு வந்துள்ளேன். இந்தியாவின் அங்கமான மேற்கு வங்காளத்துக்கு வரும்போது என்னை ‘வெளிநபர்’ என்று சொல்கிறார்கள். என்ன பேச்சு இது?

    அப்படியானால், மேற்கு வங்காளத்தைச் சேர்ந்த ஒருவர் மும்பைக்கோ, பெங்களூருவுக்கோ போகும்போது அவரை ‘வெளிநபர்’ என்று சொல்லலாமா? மம்தா பானர்ஜி டெல்லிக்கு செல்லும்போது அவரையும் ‘வெளிநபர்’ என்று சொல்லலாமா?

    மேற்கு வங்காள சட்டசபை தேர்தலில் பா.ஜனதா வெற்றி பெற்றால், ஒரு வங்காளியைத்தான் முதல்-மந்திரி ஆக்குவோம். நானோ அல்லது இந்த மாநில பா.ஜனதா மேலிட பொறுப்பாளர் கைலாஷ் விஜய்வர்கியாவோ முதல்-மந்திரி ஆக மாட்டோம்.

    நான் வாகன பேரணி சென்றபோது தாக்கப்பட்டேன். இதை சில ஊடகங்கள், நாங்கள்தான் மோதலை ஆரம்பித்ததுபோல் செய்தி வெளியிட்டுள்ளன. திரிணாமுல் காங்கிரஸ் குண்டர்கள்தான் எங்கள் வாகன அணிவகுப்பை தாக்கினர். ஆனால், இதை வேறுமாதிரி திசைதிருப்ப பார்க்கிறார்கள்.

    இவ்வாறு அமித் ஷா பேசினார்.
    பாஜக இளைஞரணி பிரமுகரை விடுவிக்க தாமதப்படுத்திய மேற்கு வங்காளம் அரசுக்கு சுப்ரீம் கோர்ட் கண்டனம் தெரிவித்துள்ளது.
    புதுடெல்லி:

    மேற்கு வங்காளம் மாநில முதல் மந்திரியும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தலைவருமான மம்தா பானர்ஜியை மிகவும் விகாரமாக சித்தரித்து சில நாட்களாக பேஸ்புக், டுவிட்டர், வாட்ஸ்அப் உள்ளிட்ட  சமூக வலைத்தளத்தில் ஒரு புகைப்படம் வைரலாக பரவியது.
     
    இந்த புகைப்படத்தை பகிர்ந்ததாக பா.ஜ.க. இளைஞரணியான யுவ மோர்ச்சாவை சேர்ந்த ஹவுரா மாவட்ட ஒருங்கிணைப்பாளர் பிரியங்கா சர்மா என்ற பெண்ணை தாஸ்நகர் காவல் நிலைய போலீசார் கைது செய்தனர். நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவர் 14 நாள் நீதிமன்ற காவலில் அடைத்து வைக்கப்பட்டுள்ளார். 

    இதற்கிடையே, பிரியங்கா சர்மாவை ஜாமினில் விடுதலை செய்ய வேண்டும் என சுப்ரீம் கோர்ட்டில் அவரது வழக்கறிஞர் என்.கே.கவுல் தாக்கல் செய்தார்.



    இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் இந்திரா பானர்ஜி, சஞ்சீவ் கண்ணா ஆகியோர் அவருக்கு நிபந்தனை ஜாமின் வழங்கி உத்தரவிட்டனர்.

    இந்நிலையில், பா.ஜ.க. இளைஞரணி பிரமுகரை விடுவிக்க தாமதப்படுத்திய மேற்கு வங்காளம் அரசுக்கு சுப்ரீம் கோர்ட் கண்டனம் தெரிவித்துள்ளது.

    பிரியங்கா ஷர்மாவின் வழக்கறிஞர் தாக்கல் செய்து மனு மீதான விசாரணை இன்று நடைபெற்றது. மனுவை விசாரித்த நீதிமன்றம், பா.ஜ.க. பிரமுகரை விடுவிப்பதில் கால தாமதம் செய்வது ஏன் என மாநில அரசுக்கு கேள்வி எழுப்பியது, அத்துடன் தனது கண்டனத்தையும் தெரிவித்தது. 
    போட்டோ ஷாப் முறையில் மம்தாவின் மார்பிங் புகைப்படத்தை சமூக வலைதளத்தில் பகிர்ந்ததாக கைதான பெண்ணுக்கு சுப்ரீம் கோர்ட் நிபந்தனை ஜாமின் வழங்கி உத்தரவிட்டது.
    புதுடெல்லி:

    மேற்கு வங்காளம் மாநில முதல் மந்திரியும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தலைவருமான மம்தா பானர்ஜியை மிகவும் விகாரமாக சித்தரித்து சில நாட்களாக பேஸ்புக், டுவிட்டர், வாட்ஸ்அப் உள்ளிட்ட  சமூக வலைத்தளத்தில் ஒரு புகைப்படம் வைரலாக பரவியது.
     
    இந்த புகைப்படத்தை பகிர்ந்ததாக பாஜக இளைஞரணியான யுவ மோர்ச்சாவை சேர்ந்த ஹவுரா மாவட்ட ஒருங்கிணைப்பாளர் பிரியங்கா சர்மா என்ற பெண்ணை தாஸ்நகர் காவல் நிலைய போலீசார் கைது செய்தனர். நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவர் 14 நாள் நீதிமன்ற காவலில் அடைத்து வைக்கப்பட்டுள்ளார். 



    இதற்கிடையே, பிரியங்கா சர்மாவை ஜாமினில் விடுதலை செய்ய வேண்டும் என சுப்ரீம் கோர்ட்டில் அவரது வழக்கறிஞர் என்.கே.கவுல் தாக்கல் செய்தார்.

    இந்த மனு விடுமுறைக்கால நீதிபதிகள் இந்திரா பானர்ஜி, சஞ்சீவ் கண்ணா ஆகியோரை கொண்ட அமர்வின் முன்னர் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், பாஜக பெண் நிர்வாகி பிரியங்கா சர்மா மன்னிப்பு கேட்க வேண்டும் என தெரிவித்ததுடன், எழுத்துப்பூர்வமாக மன்னிப்பு கேட்க வேண்டும் என்ற நிபந்தனையுடன் ஜாமின் வழங்கி உத்தரவிட்டனர்.
    ×