search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "website"

    • 11ஆயிரம் காலியான அரசு பணியிடங்கள் தேர்வாணையத்தால் நிரப்பப்பட உள்ளது.
    • தேர்வு நடைபெறும் முறை அனைத்தும் இணையதளம் வழியாக நடைபெறும்.

    கடலூர்:

    தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டுவசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் (தாட்கோ) மூலமாக ஆதிதிராவிடர், பழங்குடியின பிரிவினைச் சார்ந்தவர்களுக்கு பல்வேறு திறன் அடிப்படையிலான பயிற்சிகளை வழங்கி வருகிறது. அதன் அடிப்படையில் பணியாளர் அரசு தேர்வு ஆணையம் நடத்தும் பல்வேறு தேர்வுகளுக்கு 2023-ம் ஆண்டிற்கான தேர்வு நாட்காட்டி அதிகாரபூர்வ இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இப்பல்வேறு தேர்வுகளுக்கான 11ஆயிரம் காலியான அரசு பணியிடங்கள் தேர்வாணையத்தால் நிரப்பப்பட உள்ளது. இத்தேர்வில் ஆதிதிராவிடர் , பழங்குடியின மாணவர்கள் பங்கேற்று தேர்ச்சி பெற தாட்கோ மூலமாக இலவச பயிற்சி அளிக்கப்பட உள்ளது. இதில் 18 முதல் 32 வயது வரை உள்ள பத்தாம் வகுப்பு, 12-ம் வகுப்பு ஏதேனும் ஒரு பட்டப்படிப்பு படித்து முடித்த மாணவர்கள் விண்ணப்பிக்கலாம். இத்தேர்விற்கு விண்ணப்பிக்கும் முறை மற்றும் தேர்வு நடைபெறும் முறை அனைத்தும் இணையதளம் வழியாக நடைபெறும்.

    இப்போட்டி தேர்வில் தேர்ச்சி பெற்று பணியாளர் தேர்வாணையத்தில் பல்வேறு பணியிடங்களுக்கு தகுதிகேற்ப ஆரம்ப கால மாத சம்பளமாக ரூ.18 ஆயிரம் முதல் ரூ.22 ஆயிரம் வரை பணியமர்த்தப்படுவார்கள். இத்தேர்வில் ஆதிதிராவிடர், பழங்குடியின மாணவர்கள் பயிற்சி பெற இணையதளத்தில் பதிவு செய்து கொள்ளலாம் இப்பயிற்சிக்கான கட்டணம் முழுவதும் தாட்கோவால் வழங்கப்படும்.இத்திட்டம் தொடர்பான விபரங்கள் மற்றும் பதிவு செய்வதற்கு தாட்கோ இணையதளம் மூலம் கடலூர் மாவட்டத்தில் உள்ள தகுதியான அனைத்து ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மாணவ- மாணவிகள் விண்ணப்பித்து பயனடையலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டு இருந்தது.

    • 2 வயதுக்கு மேற்பட்ட நாய்கள் என மூன்று பிரிவுகளாக பிரிக்கபடும்.
    • பல்வேறு வகையான நாய்கள் உள்ளன, அவற்றை தெரிந்து வைத்துக்கொள்ளவே இந்த கண்காட்சி.

    தஞ்சாவூர்:

    தஞ்சை மாதாக்கோட்டை மிருகவதை தடுப்பு சங்க அலுவலகத்தில் (எஸ்.பி.சி.ஏ) இன்று மாவட்ட கலெக்டர் தினேஷ்பொன்ராஜ் ஆலிவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது ;-

    மிருகவதை தடுப்பு சங்கத்துக்கு புத்துயிர் கொடுக்கப்பட்டு மிருகவதை தொடர்பாக பல்வேறு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

    அதன் அடிப்படையில் தஞ்சாவூர் மாவட்டத்தில் முதல் முறையாக நாய்கள் கண்காட்சி நடத்த வேண்டும் என்று எஸ்.பி.சி.ஏ உறுப்பினர்களால் முடிவு செய்யப்பட்டது.

    அதன்படி வருகிற 11-ந் தேதி (சனிக்கிழமை) எஸ்.பி.சி.ஏ. வளாகத்தில் நாய்கள் கண்காட்சி நடைபெற உள்ளது.

    காலை 10 மணிக்கு தொடங்கி மாலை 6 மணி வரை இந்த கண்காட்சி நடைபெறும்.

    பல்வேறு தரப்பினர், நிறுவனங்கள் கண்காட்சி நடைபெற உறுதுணையாக இருந்தனர்.

    அவர்களுக்கு நன்றியை தெரிவித்து கொள்கிறேன்.

    கண்காட்சியில் 3 பிரிவுகளாக போட்டி நடைபெறும்.

    அதாவது 1 வயது வரை உள்ள நாய்கள் , 1 முதல் 2 வயது வரையுள்ள நாய்கள், 2 வயதுக்கு மேற்பட்ட நாய்கள் என மூன்று பிரிவுகளாக பிரிக்கபடும்.

    இதில் நாய்களின் அணிவகுப்பு, பராமரிப்பு முறைகள் உள்ளிட்டவைகள் குறித்து தெளிவுப்படுத்துவார்கள்.

    செல்ல பிராணிகள் மீது குழந்தைகளுக்கு ஈர்ப்பு வர வேண்டும்.

    மிருகம் வதைக்கபடுவதோ அல்லது கடினமான சூழ்நிலைக்கு உட்படுத்த படுவதோ செய்யக்கூடாது என்ற எண்ணம் சிறு வயதிலே வர வேண்டும்.

    பல்வேறு வகையான நாய்கள் உள்ளன.

    அவற்றை தெரிந்து வைத்து கொள்ள வேண்டும் என்ற நோக்கத்திற்காக நாய்கள் கண்காட்சி நடத்தப்படுகிறது.

    ஏராளமான நாய்கள் இந்த கண்காட்சியில் கலந்து கொள்ள பதிவு செய்யப்பட்டு உள்ளது.

    இதில் கலந்த கொள்ள நாய்களின் உரிமையாளர்கள் என்ற இணையதளத்திலோ அல்லது 7418364555 என்ற தொலைபேசி எண்ணிலோ தொடர்பு கொண்டு பதிவு செய்யலாம்.

    வருகிற 10-ந் தேதி மாலைக்குள் பதிவு செய்ய வேண்டும்.

    பதிவு கட்டணம் ரூ.250 மட்டுமே ஆகும். இதில் நாய்களுக்கு தடுப்பூசி, உணவு ஆகியவையும் அடங்கும்.

    கண்காட்சியை பார்த்து ரசிக்க பார்வையாளர்களுக்கு அனுமதி இலவசம். அனைவரும் கண்காட்சியை பார்க்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுக்கிறேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • கிராமங்களில் இணையதள வசதி தடையின்றி கிடைக்க ஏற்பாடு செய்ய வேண்டும்.
    • பாதாள சாக்கடை வழிந்தோடுவதை தடுக்க விரைவில் ரூ.99 கோடி செலவில் பணிகள் தொடங்கப்படும்.

    தரங்கம்பாடி:

    மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி, கொள்ளிடம், குத்தாலம் ஆகிய ஊராட்சி ஒன்றியங்களில் உள்ள ஊராட்சி மன்ற தலைவர்களுக்கான கலந்தாய்வு கூட்டம் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சிகள் துறையின் சார்பில் செம்பனார்கோவிலில் நடைபெற்றது.

    கூட்டத்திற்கு மாவட்ட கலெக்டர் ஏ.பி. மகாபாரதி தலைமை தாங்கினார்.

    அப்போது அவர் பேசியதாவது:-

    மயிலாடுதுறை மாவட்டம் விவசாயம் சார்ந்த மாவட்டம் ஆகும்.

    விவசாயிகளுக்கு அரசின் திட்டங்களை தெரியப்படுத்த வேண்டும்.

    ஒவ்வொரு ஊராட்சியிலும் ஊராட்சி மன்ற தலைவர்கள் பொதுமக்களுக்கு குடிநீர் தங்கு தடையின்றி வழங்க வேண்டும். தேவைப்படும் இடங்களில் தடுப்பணை கட்ட வேண்டும்.

    வருகிற ஒரு ஆண்டுக்குள் அனைத்து ஊராட்சிகளிலும் அடிப்படை தேவைகளை நிறைவேற்றி தருவதற்கு நாம் அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும்.

    அப்போது தான் தன்னிறைவு பெற்ற மாவட்டமாக உருவாக்கப்–படும்.

    குறிப்பாக சாலை வசதி, குடிநீர் வசதி, மின்சாரம், மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி உள்ளிட்ட அடிப்படை தேவைகளை நிறைவேற்றி தர வேண்டும்.

    கிராமங்களில் இணையதள வசதி தடை–யின்றி கிடைக்க ஏற்பாடு செய்ய வேண்டும்.

    குப்பைகள் இல்லா கிராமத்தை உருவாக்க வேண்டும்.

    மயிலாடு–துறையில் நீண்ட காலமாக பாதாள சாக்கடை வழிந்–தோடுவதை தடுக்க விரைவில் ரூ.99 கோடி செலவில் பணிகள் தொடங்கப்படும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    தொடர்ந்து கூட்டத்தில் கலந்து கொண்ட ஊராட்சி மன்ற தலைவர்கள் தங்களது ஊராட்சிக்கு உட்பட்ட கிராமங்களில் உள்ள குறைபாடுகள் குறித்து கலெக்டரிடம் தெரிவித்தனர்.

    கூட்டத்தில் ஊரக வளர்ச்சித் துறை இணை இயக்குனர் ஸ்ரீலேகா, உதவி இயக்குனர் மஞ்சுளா மற்றும் சீர்காழி, கொள்ளிடம், குத்தாலம் வட்டார வளர்ச்சி அலுவலர் கஜேந்திரன் மற்றும் ஊராட்சி ஒன்றியங்களின் வட்டார வளர்ச்சி அலுவலர்கள், ஊராட்சி மன்ற தலைவர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    பொதுமக்கள் இருக்கும் இடத்தில் இருந்தே https://tamilnilam.tn.gov.in/citizen/ என்ற இணையதள முகவரியை உள்ளீடு செய்து, இணையதளம் மூலமாக பட்டா மாறுதலுக்கு விண்ணப்பிக்கலாம்.

    திருப்பூர்:

    திருப்பூர் மாவட்ட கலெக்டர் வினீத் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    பட்டா மாறுதலுக்கு விண்ணப்பிக்க இனி தாசில்தார் அலுவலகங்களுக்கு நேரில் செல்ல வேண்டாம். இடைத்தரகர்களையும் நம்பி ஏமாற வேண்டாம். பொதுமக்கள் இருக்கும் இடத்தில் இருந்தே https://tamilnilam.tn.gov.in/citizen/ என்ற இணையதள முகவரியை உள்ளீடு செய்து, இணையதளம் மூலமாக பட்டா மாறுதலுக்கு விண்ணப்பிக்கலாம். உட்பிரிவு மற்றும் மனுவிற்கான கட்டணம் ஆகியவற்றை இணையதளம் மூலமாக செலுத்த வசதி செய்யப்பட்டுள்ளது.

    விண்ணப்பத்தின் நிலையை அறிய https://eservices.tn.gov.in/eservicesnew/login/Appstatus.html என்ற இணையதள முகவரியை உள்ளீடு செய்து, பட்டா மாறுதல் மனுவின் நிலையை உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம். பட்டா மாறுதலின் நடவடிக்கையின்போது ஒவ்வொரு நிலையையும் மனுதாரருக்கு குறுஞ்செய்தி மூலமாக தெரிவிக்கப்படும்.

    பட்டா மாறுதல் மனு அங்கீகரிக்கப்பட்ட பின்னர், பொது மக்கள் தங்களது பட்டா மாறுதல் உத்தரவின் நகல், பட்டா, சிட்டா, புலப்பம், அபதிவேடு ஆகியவற்றை https://eservices.tn.gov.in/ என்ற இணையதளம் மூலமாக கட்டணமில்லாமல் பார்வையிட்டு பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

    இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கலெக்டர் கூறியுள்ளார்.

    • உலகிலேயே இணையதளத்தை பயன்படுத்துவதில் இந்தியா 2-வது இடத்தில் இருக்கிறது.
    • பாஸ்வேர்டுகளை 41 சதவீதம் பேர் மட்டுமே பாதுகாப்பாக பயன்படுத்துகிறார்கள்.

    இணையதளம் இரண்டு முகங்களை கொண்டது. நமக்குத் தேவையான அனைத்து தகவல்களையும் உடனடியாக தருவது ஒரு முகம்.

    ஆபாசம், ஹேக்கிங் என்று வக்கிரங்களை காட்டுவது மற்றொரு முகம். இந்தியாவில் இணையதளத்தை பயன்படுத்துவோரில் 48 சதவீதம் பேர் சைபர் கிரைம் குற்றங்களால் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

    இந்தியாவில் 11.3 கோடி மக்கள் சராசரியாக ரூ.15 ஆயிரத்்துக்கும் அதிகமான தொகையை இணையதள திருடர்களிடம் இழக்கிறார்கள், என்று ஒரு ஆய்வு அறிக்கை தெரிவிக்கிறது. இது சர்வதேச அளவில் சராசரியாக ரூ.23,878-ஆக உள்ளது. அப்பாடா நம்மைவிட மற்றவர்கள் கூடுதலாக இழக்கிறார்கள் என்று ஆறுதல்பட்டுக் கொள்ள வேண்டியதுதான்.பொதுவாக சைபர் கிரைம் தொடர்பான குற்றங்களில் கிரெடிட் கார்டு, டெபிட் கார்டு மூலம் இணையதளத்தில் பணபரிமாற்றங்கள் நடக்கும்போது, பாஸ்வேர்டு உள்பட கணக்கு விவரங்களை திருடுவது, பெண்களுக்கு பாலியல் தொல்லைகள் கொடுப்பது, ஆபாச படங்களை வெளியிடுவது போன்றவைதான் தற்போது பெருகி வருகின்றன. 54 சதவீதம் பேர் தங்களுக்கு தெரியாமலேயே கிரெடிட் கார்டு மற்றும் டெபிட் கார்டு தகவல்கள் ஆன்லைனில் திருடப்படுகிறது என்று குற்றம் சாட்டுகின்றனர்.

    40 சதவீதத்தினர் மட்டுமே சைபர் கிரைம் குற்றம் நடந்தால் என்ன செய்வது என்று தெரிந்து வைத்திருக்கிறார்கள். 60 சதவீதத்தினர் ஆன்லைன் குற்றங்கள் குறித்த அச்சத்தில் உள்ளனர்.

    உலகிலேயே இணையதளத்தை பயன்படுத்துவதில் இந்தியா 2-வது இடத்தில் இருக்கிறது. வளர்ச்சி பாதைக்கு அழைத்து செல்ல வேண்டிய இணையதளம், தற்போது பாதை மாறி அழைத்துச் செல்கிறது என்பதைத்தான் தற்போது வெளியாகியுள்ள அறிக்கை காட்டுகிறது. பாஸ்வேர்டுகளை பயன்படுத்தும் போது 41 சதவீதம் பேர் மட்டுமே சரியாக, பாதுகாப்பாக பயன்படுத்துகிறார்கள். இப்படி அடிப்படை பாதுகாப்புகளையே சரியாக செய்யாததன் விளைவுதான் இந்த இணையதள குற்றங்கள் அதிகமானதற்கு காரணம் என்று சொல்லப்படுகிறது. பெரும்பாலானோர் மன உளைச்சலுக்கு ஆளாகின்றனர்.

    இணையதள பயன்பாடு அதிகரிக்க அதிகரிக்க குற்றங்களும் அதிகரித்து வருகின்றன. எதற்காக சுய விவரங்களை கேட்கிறார்கள் என்பது கூடத் தெரியாமல் விறுவிறுவென நம்மை பற்றிய அனைத்து தகவல்களையும் கொடுத்து விடுவதும் நடக்கிறது.. இந்த தகவல்கள் யாரோ ஒரு கும்பலால் திருடப்படுகிறது என்பது நம்மில் பல பேருக்கு தெரிவதில்லை. இதனால் பணத்தை இழக்க நேருகிறது. எனவே நமது தகவல்களை குறைந்தபட்சம் யாரிடமும் பகிர்ந்து கொள்ளாமல் இருந்தாலே இதுபோன்ற பிரச்சினைகளில் இருந்து எளிதாக விடுபடலாம். எனவே சுயவிவரங்களை பகிரும்போது அதிக கவனம் தேவை.

    • சில சமூக விரோதிகள் இணையதளம் உருவாக்கி உள்ளனர்.
    • இந்த இணையதளத்தில் பணம் செலுத்த வேண்டாம்.

    புதுடெல்லி :

    சி.பி.எஸ்.இ. கல்வி வாரியத்தின் பெயரில் போலி இணையதளம் உருவாக்கி நிதி முறைகேடுகளில் ஈடுபடுவதாக அந்த அமைப்பு தெரிவித்து உள்ளது. எனவே இந்த விவகாரத்தில் உஷாராக இருக்குமாறு மாணவர்களுக்கு எச்சரிக்கை விடுத்து இருக்கிறது.

    இது தொடர்பாக சி.பி.எஸ்.இ. வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், 'சி.பி.எஸ்.இ. அதிகாரபூர்வ இணையதளமான www.cbse.gov.in-ஐ போல https://cbsegovt.com என்ற பெயரில் சில சமூக விரோதிகள் இணையதளம் உருவாக்கி உள்ளனர். சி.பி.எஸ்.இ. 10 மற்றும் 12-ம் வகுப்பு தேர்வுகளுக்கான ஹால் டிக்கெட்டை பதிவிறக்குவதற்கு பணம் டெபாசிட் செய்யுமாறு மாணவர்கள் மற்றும் பெற்றோருக்கு செய்திகளை அனுப்பி அப்பட்டமாக ஏமாற்றும் நடவடிக்கைகள் நடைபெறுகின்றன' என கூறியுள்ளது.

    இந்த விவகாரத்தில் மாணவர்கள் மிகுந்த கவனமுடன் இருக்குமாறும், மேற்படி இணையதளத்தில் பணம் செலுத்த வேண்டாம் என்றும் கேட்டுக்கொண்டுள்ள சி.பி.எஸ்.இ., ஹால் டிக்கெட் பதிவிறக்கத்துக்கு நேரடியாக ஒருபோதும் பணம் கேட்பதில்லை என்றும் விளக்கம் அளித்து உள்ளது.

    • போட்டித்தேர்வில் கலந்து கொள்ள ஏதுவாக பிரத்யேக பயிற்சி அளித்திடும் திட்டம்
    • மீனவர் நலவாரிய உறுப்பினர்களின் வாரிசு பட்டதாரி இளைஞர்கள் இப்பயிற்சியில் சேர்ந்து பயன்பெறலாம்.

    தஞ்சாவூர்:

    மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை மற்றும் சென்னை அகில இந்திய குடிமைப்பணி தேர்வு பயிற்சி மையம் இணைந்து ஆண்டுதோறும் 20 கடல் மற்றும் உள்நாட்டு மீனவ பட்டதாரி இளைஞர்களை தேர்ந்தெடுத்து அவர்களுக்கு குடிமைப் பணிகளுக்கு போட்டித்தேர்வில் கலந்து கொள்ள ஏதுவாக பிரத்யேக பயிற்சி அளித்திடும் திட்டத்தினை செயல்படுத்திட தமிழ்நாடு அரசால் ஆணை வழங்கப்பட்டது.

    கடல் மற்றும் உள்நாட்டு மீனவ கூட்டுறவு சங்க உறுப்பினர்கள் மற்றும் மீனவர் நலவாரிய உறுப்பினர்களின் வாரிசு பட்டதாரி இளைஞர்கள் இப்பயிற்சி திட்டத்தில் சேர்ந்து பயன்பெறலாம்.

    இத்திட்டத்தின் கீழ் பயிற்சி பெற விரும்புவோர் விண்ணப்ப படிவம் மற்றும் வழிகாட்டு நெறிமுறைகளை மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறையில் www.fisheries.tn.gov.in என்ற இணையதளத்தில் கட்டணமின்றி பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் அல்லது விண்ணப்ப படிவங்களை தஞ்சாவூர் மாவட்ட மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை உதவி இயக்குநர் அலுவலக வேலை நாட்களில் விலையின்றி பெற்றுக் கொள்ளலாம்.

    விண்ணப்பதாரர் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறையின் இணைய தளத்தில் உள்ள அரசு வழிகாட்டு நெறிமுறைகளின்படி, பூர்த்தி செய்து தஞ்சாவூர் மாவட்டம் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை உதவி இயக்குநர் அலுவலகத்திற்கு பதிவு அஞ்சல் மூலமாகவோ அல்லது நேரடியாகவோ வருகிற 31-ந் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

    மேலும் இத்திட்டம் குறித்த கூடுதல் விபரங்களுக்கு மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை உதவி இயக்குநர் அலுவலகம், 873/4 அறிஞர் அண்ணாசாலை, கீழவாசல் தஞ்சாவூர் - 613001 என்ற முகவரியில் இயங்கும் தஞ்சாவூர் மாவட்ட மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை உதவி இயக்குநர் அலுவலகத்தினை நேரில் தொடர்பு கொள்ள வேண்டும்.

    மேற்கண்ட தகவலை தஞ்சை மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தெரிவித்துள்ளார்.

    • தொழிலாளா்கள் அனைவரும் இ.எஸ்.ஐ. சட்டப்படி இணையதளத்தில் பதிவு செய்து கொள்ள வேண்டும்.
    • மாநில அரசின் கீழுள்ள 58 இ.எஸ்.ஐ. மருந்தகங்கள், 2 நடமாடும் மருந்தகங்கள், இ.எஸ்.ஐ. மருத்துவக் கல்லூரி மூலமாக மருத்துவ உதவிகள் அளிக்கப்பட்டு வருகின்றன.

    திருப்பூர் :

    இ.எஸ்.ஐ. திட்டத்தில் பயனடைய தொழிலாளா்கள் இணையதளத்தில் பதிவு செய்து கொள்ள வேண்டும் என்று திட்ட அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.

    கோவை, திருப்பூா், நீலகிரி மற்றும் ஈரோடு மாவட்டங்களில் 10 அல்லது அதற்கு மேற்பட்ட தொழிலாளா்கள் பணிபுரியம் தொழிற்சாலைகள், நிறுவனங்களில் பணிபுரியும் ரூ.21 ஆயிரம் வரை மாத ஊதியம் பெறும் தொழிலாளா்கள் அனைவரும் இ.எஸ்.ஐ. சட்டப்படி இணையதளத்தில் பதிவு செய்து கொள்ள வேண்டும்.

    இ.எஸ்.ஐ.காா்ப்பரேஷனின் 18 கிளை அலுவலகங்கள் மூலம் இ.எஸ்.ஐ. காப்பீட்டாளா்களுக்கு பணப் பயன்கள் வழங்கப்பட்டு வருகின்றன. இதுதவிர மாநில அரசின் கீழுள்ள 58 இ.எஸ்.ஐ. மருந்தகங்கள், 2 நடமாடும் மருந்தகங்கள், இ.எஸ்.ஐ. மருத்துவக் கல்லூரி மூலமாக மருத்துவ உதவிகள் அளிக்கப்பட்டு வருகின்றன.

    பொதுமக்கள் குறைகேட்பு முகாம்,இஎஸ்.ஐ.காா்ப்பரேஷன் தலைமை அலுவலகம், மண்டல அலுவலகம், சாா் மண்டல அலுவலகம், கிளை அலுவலகம், இ.எஸ்.ஐ.மருந்தகங்கள், மருத்துவமனைகளில் பொதுமக்கள் குறைகேட்பு முகாம் அமைக்கப்பட்டுள்ளது. காப்பீட்டாளா்களின் புகாா்களுக்கு தீா்வு காணும் வகையில் கோவை சாா் மண்டல அலுவலகத்தில் 0422-2314430, 2362329 ஆகிய எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

    புகாா் எண்கள்: பணப் பயன்கள் குறித்த புகாா்களை கோவை, ராமநாதபுரத்தில் உள்ள பொது மக்கள் குறைதீா் அலுவலகத்திலும், 0422-2362329 என்ற எண்ணிலும், இ.எஸ்.ஐ. மருந்தகம் குறித்த புகாா்களை சிங்காநல்லூரில் உள்ள மண்டல நிா்வாக மருத்துவ அதிகாரி அலுவலகத்திலும், 0422-2595078 என்ற எண்ணிலும், இ.எஸ்.ஐ. மருத்துவமனை தொடா்பான புகாா்களை கல்லூரி முதல்வா், கண்காணிப்பாளா் ஆகியோரிடம் நேரிலும் மருத்துவ செலவீடு தொடா்பான புகாா்களை சென்னை, நுங்கம்பாக்கத்தில் உள்ள மாநில மருத்துவ அதிகாரி அலுவலகத்திலும் 044-28267080 என்ற எண்ணிலும் தெரிவிக்கலாம்.

    • விரிவான நில தகவல் இணையதளத்தில் பதிவேற்றம் செய்வது தொடர்பான ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது.
    • தமிழக அரசின் சி.எல்.ஐ.பி. இணையத்துடன் இணைப்பதற்கு இந்த தகவல் பரிமாற்றம் மிகவும் உதவியாக இருக்கும்.

    திருப்பூர் :

    திருப்பூர் மாவட்ட கோர்ட்டில் சொத்துப்பிரச்சினை வழக்கில் நில விவரங்களை, விரிவான நில தகவல் இணையதளத்தில் (சி.எல்.ஐ.பி.) பதிவேற்றம் செய்வது தொடர்பான ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது. கூட்டத்துக்கு முதன்மை மாவட்ட நீதிபதி ஸ்வர்ணம் நடராஜன் தலைமை தாங்கினார்.

    மோட்டார் வாகன விபத்து வழக்குகள் தீர்ப்பாய நீதிபதி ஸ்ரீகுமார், மகளிர் நீதிமன்ற நீதிபதி நாகராஜன், முதலாவது கூடுதல் மாவட்ட நீதிபதி பத்மா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    அனைத்து வழக்கறிஞர்கள் சங்கங்களின் நிர்வாகிகள், அரசு வக்கீல்கள், மூத்த சிவில் வக்கீல்கள், மாவட்ட வருவாய் அதிகாரிகள், காவல்துறை அதிகாரிகள் உள்ளிட்ட பல்துறை அதிகாரிகள் பங்கேற்றனர். வக்கீல்கள் மற்றும் அரசுத்துறை அதிகாரிகள் தங்களது வழக்குகளில் தொடர்புடைய சொத்து விவரங்களை கோர்ட்டு மென்பொருளில் பதிவேற்றம் செய்யும்போது, தானாகவே தமிழக அரசின் சி.எல்.ஐ.பி. இணையத்துடன் இணைப்பதற்கு இந்த தகவல் பரிமாற்றம் மிகவும் உதவியாக இருக்கும்.

    மேலும் வக்கீல்களும், பொது மக்களும் மேற்கூறிய சி.எல்.ஐ.பி. இணையத்தில் ஒரு சொத்து சம்பந்தமாக தற்போது வில்லங்கசான்று பதிவுத்துறையில் இருந்து பெறுவது போலவே, நிலுவை வழக்குகள் பற்றிய விவரங்களை அறிய வசதியாக அமையும். பதிவுத்துறை, வருவாய்த்துறை, காவல்துறை அதிகாரிகள் பங்கேற்று கருத்துக்களை தெரிவித்தனர். மேலும் வழக்குகளில் தொடர்புடைய சொத்து விவரங்களை விரைந்து வழங்குவதாக உறுதி அளித்தனர்.

    • விவசாய தொழிலாளர்கள் நிறைந்த தலைஞாயிறு பேரூராட்சியில் குறும்படம் எடுக்கப்பட்டு வெளியிடபட்டுள்ளது.
    • குறும்படத்தினை சமூக வலைதளங்களில் பதிவிட்டு பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

    வேதாரண்யம்:

    தமிழ்நாடு அரசு திடக் கழிவு மேலாண்மை திட்டத்தை மேம்படுத்த நகரங்களின் தூய்மைக்கான மக்கள் இயக்கத்தை அறிமுகபடுத்தி எனது குப்பை எனது பொறுப்பு என பிரசாரம் செய்து வருகிறது.

    நாகப்பட்டினம் மாவட்டம் தலைஞாயிறு பேரூராட்சியில் காந்தி ஜெயந்தி முன்னிட்டு எனது குப்பை எனது பொறுப்பு விழிப்புணர்வு குறும் படம் வெளியிடப்பட்டது. இந்த குறும்படம் தமிழகத்தில் உள்ள 380 பேரூராட்சிகளில் முதன் முதலாக கிராமபுரத்தில் அமைந்துள்ள விவசாயிகள் விவசாயதொழிலாளர்கள் நிறைந்த தலைஞாயிறு பேரூராட்சியில் எடுக்கபட்டு வெளியிடபட்டுள்ளது. இந்த குறும்படத்திற்காக ஒரு டன் குப்பை முன்னூறு குப்பைதொட்டிகள் நூற்றுக்கு மேற்பட்ட மாணவ மாணவிகள் பயன்படு த்தப்பட்டு குறும்படம் எடுக்கப்பட்டுள்ளது என்று செயல் அலுவலர் குகன் தெரிவித்தார்.

    பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வெளியிடப்பட்டுள்ள. இந்த குறும்படத்தினை சமூக வலைதளங்களில் பதிவிட்டு பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படு த்தப்பட்டு வருகிறது.

    • பேச்சுப்போட்டி மற்றும் வினாடி வினா ஆகிய போட்டிகள் நடத்தப்பட உள்ளது.
    • wlw2020atrtpr@gmail.com என்ற இணையதளத்தில் 28 ந் தேதி மாலை 5:30 மணிக்குள் பதிவேற்ற வேண்டும்.

    உடுமலை :

    வனஉயிரின வார விழா ஆண்டுதோறும் அக்டோபர் முதல் வாரத்தில் (2 முதல் 8 -ந்தேதி வரை) கொண்டாடப்படுகிறது. இதுகுறித்து உடுமலை ஆனைமலை புலிகள் காப்பக உதவி வனப்பாதுகாவலர் மற்றும் உதவி இயக்குனர் க.கணேசராம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    ஆனைமலை புலிகள் காப்பகம் திருப்பூர் வனக்கோட்டத்தில் வன உயிரின வார விழாவினை கொண்டாடும் விதமாக பல்வேறு விதமான போட்டிகள் நடத்துவதற்கு வனத்துறை சார்பில் திட்டமிடப்பட்டு உள்ளது.அதில் ஓவியம், கட்டுரை,பேச்சுப்போட்டி மற்றும் வினாடி வினா ஆகிய போட்டிகள் நடத்தப்பட உள்ளது.ஓவியம் மற்றும் கட்டுரைப் போட்டிகள் இணைய வழி மூலமாகவும், பேச்சுப்போட்டி மற்றும் வினாடி வினா போட்டிகள் நேரடியாகவும் நடத்தப்பட உள்ளது.

    மாணவ- மாணவிகள் தங்களது ஓவியம் மற்றும் கட்டுரை விவரங்களை wlw2020atrtpr@gmail.com என்ற இணைய தளத்தில் வருகின்ற 28 ந் தேதி மாலை 5:30 மணிக்குள் பதிவேற்ற வேண்டும்.வினாடி வினா மற்றும் பேச்சுப் போட்டியானது உடுமலையில் உள்ள ஆர்.ஜி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் இன்று நடைபெறுகிறது. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார். விழாவிற்கான ஏற்பாடுகளை வனத்துறையினர் செய்துள்ளனர்.  

    • பதிவுதாரர்களின் வேலைவாய்ப்பு பதிவு விவரங்கள் மயிலாடுதுறை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்திற்கு மாற்றப்பட்டுள்ளது.
    • பதிவுதாரர்கள் அலுவலக வேலை நாட்களில் தங்களது சான்றிதழ்களுடன் நேரில் வருகை புரிந்து பதிவினை சரிபார்த்துக் கொள்ளலாம்.

    மயிலாடுதுறை:

    மயிலாடுதுறைமாவட்ட கலெக்டர் லலிதா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:-

    நாகப்பட்டினம் மாவட்டம் இரண்டாக பிரிக்கப்பட்டதைத் தொடர்ந்து நாகப்பட்டினம் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறிவழி காட்டும் மையத்திலிருந்து மயிலாடுதுறை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறிவழிகாட்டும் மையம் பிரிக்கப்பட்டு புதியதாக 25.1.22ம் தேதி முதல் 2வது குறுக்குத் தெரு,பாலாஜி நகர் பூம்புகார் சாலை, மயிலாடுதுறை-1 என்றமுகவரியில் செயல்பட்டு வருகிறது.

    மயிலாடுதுறை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலக எல்லைக்குட்பட்ட மயிலா டுதுறை, குத்தாலம், சீர்காழி மற்றும் தரங்கம்பாடி வட்டங்களைச் சார்ந்த நாகப்பட்டினம் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவ லகத்தில் பதிவுசெய்துள்ள பதிவுதாரர்களி ன்வேலை வாய்ப்பு பதிவு விவரங்கள் மயிலாடுதுறை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்திற்கு மாற்றப்பட்டுள்ளது.

    எனவே மயிலாடுதுறை மாவட்டத்தைச் சார்ந்த பதிவுதாரர்கள் தங்கள்வே லைவாய்ப்பு அலுவலக பதிவுமாற்றம் செய்யப்பட்டுள்ளதை வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறையின் இணையதளத்தில் சரிபா ர்த்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறது.

    ஏற்கனவே மயிலாடுதுறை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்திற்கு வருகைப் புரிந்து பதிவு சரிபார்த்தவர்களை தவிர்த்து ஏனைய பதிவுதாரர்கள் அலுவலக வேலை நாட்களில் தங்களது அனைத்து அசல் கல்வி சான்றிதழ்கள், சாதிசான்றிதழ், ஆதார் அட்டை மற்றும்குடும்ப அடையாள அட்டை ஆகியவற்றின் அசல் மற்றும் நகல் சான்றிதழ்களுடன் நேரில் வருகை புரிந்து தங்களது பதிவினை சரிபார்த்துக் கொள்ளலாம்.

    மேலும் அவ்வாறு சரிபார்த்துக் கொள்ளவரும்பட்சத்தில் பயணப்படி ஏதும் வழங்கப்படமாட்டாது.

    மேலும் வேலைவாய்ப்பு அலுவலகங்கள்வழியாக நிரப்பப்படுகின்ற அரசு பணியிடங்களுக்கான முன்னுரிமைகளை பதிவு செய்துகொள்ளதமிழக அரசின் மனிதவள மேலாண்மைதுறை அரசாணையில்கு றிப்பிட்டுள்ள 20 வகையான முன்னுரி மைகளை பதிவு செய்துகொள்ள விருப்பமுள்ளவர்கள்உ ரிய சான்றுகளைப் பெற்று வந்துபதிவு செய்துகொள்ளலாம்.

    மேலும் சந்தேகங்களுக்கு 04364299790 என்ற அலுவலக தொலைபேசி எண்ணை தொடர்புகொண்டு பயன் பெறலாம் என தெரிவித்துள்ளார்.

    ×