search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கட்டுரைப்போட்டி"

    • கட்டுரைப்போட்டி, கடந்த மாதம் திருநள்ளாறு மற்றும் காரைக்கால் என இரு பிரிவுகளில் நடை பெற்றது.
    • கலெக்டர் குலோத்துங்கன் பரிசுகளை வழங்கி பாராட்டினார்.

    புதுச்சேரி:

    காரைக்காலில் கடந்த மாதம் நடைபெற்ற தீயணைப்பு தடுப்பு வார கட்டுரைப்போட்டியில், வெற்றி பெற்ற மாணவர் களுக்கு, கலெக்டர் குலோத்துங்கன் பரிசளித்து பாராட்டினார். காரைக்கால் மாவட்ட தீயணைப்புத்துறை சார்பில், ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 14 முதல் 21-ந் தேதி வரை தீயணைப்பு தடுப்பு வாரம் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த ஆண்டுக் கான தீயணைப்பு தடுப்பு வார கட்டுரைப்போட்டி, கடந்த மாதம் திருநள்ளாறு மற்றும் காரைக்கால் என இரு பிரிவுகளில் நடை பெற்றது. இதில் ஏராளமான பள்ளி மாணவர்கள் கலந்து கொண்டார்கள். போட்டி யில் வெற்றி பெற்ற 4 மாணவ, மாணவிகளுக்கு, காரைக்கால் மாவட்ட கலெக்டர் அலுவல கத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியின் போது, கலெக்டர் குலோத்துங்கன் பரிசுகளை வழங்கி பாராட்டினார்.

    இதில் திருநள்ளாறு பிரிவில் முதல் பரிசு பெற்ற சேத்தூர் அரசு பள்ளியைச் சேர்ந்த கிரிஷ் என்ற மாணவனுக்கு ரூ.900, 2-ம் பரிசு பெற்ற சக்தி என்ற மாணவனுக்கு ரூ.600 வழங்கப்பட்டது. மேலும் காரைக்கால் பிரிவில் கோவில்பத்து அரசு பள்ளியைச் சேர்ந்த முகம்மது இப்ராஹிம் என்ப வருக்கு ரூ.900, ஹரிஷ் ராகவா என்ற மாணவனுக்கு ரூ.600 ரொக்கம் மற்றும் சான்றிதழும் வழங்கப் பட்டது. இந்நிகழ்ச்சியில், துணை கலெக்டர் பாஸ்கரன், கலெக்டரின் செயலர் பக்கிரிசாமி மற்றும் சுரக்குடி தீயணைப்பு அதிகாரி ஹென்றிடேவிட், காரைக்கால் தீயணைப்பு அதிகாரி மாரிமுத்து மற்றும் பலர் கலந்துகொண்டனர்.

    • பேச்சுப்போட்டி மற்றும் வினாடி வினா ஆகிய போட்டிகள் நடத்தப்பட உள்ளது.
    • wlw2020atrtpr@gmail.com என்ற இணையதளத்தில் 28 ந் தேதி மாலை 5:30 மணிக்குள் பதிவேற்ற வேண்டும்.

    உடுமலை :

    வனஉயிரின வார விழா ஆண்டுதோறும் அக்டோபர் முதல் வாரத்தில் (2 முதல் 8 -ந்தேதி வரை) கொண்டாடப்படுகிறது. இதுகுறித்து உடுமலை ஆனைமலை புலிகள் காப்பக உதவி வனப்பாதுகாவலர் மற்றும் உதவி இயக்குனர் க.கணேசராம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    ஆனைமலை புலிகள் காப்பகம் திருப்பூர் வனக்கோட்டத்தில் வன உயிரின வார விழாவினை கொண்டாடும் விதமாக பல்வேறு விதமான போட்டிகள் நடத்துவதற்கு வனத்துறை சார்பில் திட்டமிடப்பட்டு உள்ளது.அதில் ஓவியம், கட்டுரை,பேச்சுப்போட்டி மற்றும் வினாடி வினா ஆகிய போட்டிகள் நடத்தப்பட உள்ளது.ஓவியம் மற்றும் கட்டுரைப் போட்டிகள் இணைய வழி மூலமாகவும், பேச்சுப்போட்டி மற்றும் வினாடி வினா போட்டிகள் நேரடியாகவும் நடத்தப்பட உள்ளது.

    மாணவ- மாணவிகள் தங்களது ஓவியம் மற்றும் கட்டுரை விவரங்களை wlw2020atrtpr@gmail.com என்ற இணைய தளத்தில் வருகின்ற 28 ந் தேதி மாலை 5:30 மணிக்குள் பதிவேற்ற வேண்டும்.வினாடி வினா மற்றும் பேச்சுப் போட்டியானது உடுமலையில் உள்ள ஆர்.ஜி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் இன்று நடைபெறுகிறது. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார். விழாவிற்கான ஏற்பாடுகளை வனத்துறையினர் செய்துள்ளனர்.  

    • கலெக்டர் அம்ரித் வழங்கினார்
    • பொதுமக்களிடமிருந்து 108 மனுக்களை பெற்றுக் கொண்டாா்.

    ஊட்டி :

    நீலகிரி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீா் நாள் கூட்டம் நடைபெற்றது.கூட்டத்தில் மாவட்ட கலெக்டர் அம்ரித் தலைமை தாங்கி பொதுமக்களிடமிருந்து பல்வேறு கோரிக்கைகள் தொடா்பாக 108 மனுக்களை பெற்றுக் கொண்டாா்.

    மாணவர்களுக்கு பரிசு

    இதைத் தொடா்ந்து, தமிழ் வளா்ச்சித் துறை சாா்பில் நடைபெற்ற பேச்சுப் போட்டியில் முதல் இடத்தைப் பிடித்த கூடலூா் அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளியின் 11 -ம் வகுப்பு மாணவி கி ஸ்ருதி கிருஷ்ணாவுக்கு ரூ.5,000, இரண்டாம் இடம் பிடித்த அம்பலமூலா அரசு மேநிலைப் பள்ளியைச் சோ்ந்த 12 -ம் வகுப்பு மாணவன் பிரியதா்ஷனுக்கு ரூ.3,000,மூன்றாம் இடத்தைப் பிடித்த கோத்தகிரி புனித மரியன்னை பெண்கள் மேல்நிலைப் பள்ளி 12-ம் வகுப்பு மாணவி ஜெ.பூமிகாவுக்கு ரூ.2,000 மற்றும் கக்குச்சி அரசு மேல்நிலைப் பள்ளி மாணவி வைஷ்ணவி, பந்தலூா் அரசு மேல்நிலைப் பள்ளி மாணவி பிரித்தா ஆகியோருக்கு சிறப்பு பரிசுத் தொகையாக தலா ரூ.2,000-த்துக்கான காசோலை மற்றும் பாராட்டு சான்றிதழ்களை கலெக்டர் வழங்கினாா்.

    மேலும், கல்லூரி அளவில் நடைபெற்ற பேச்சுப் போட்டியில் முதல் இடத்தைப் பிடித்த ஊட்டி அரசு கலைக் கல்லூரி மாணவன் சி.சுதிருக்கு ரூ.5,000, இரண்டாம் இடத்தைப் பிடித்த ஊட்டி எமரால்டு ஹைட்ஸ் மகளிா் கல்லூரி மாணவி து.சவுந்தா்யாவுக்கு ரூ.3,000, குன்னூா் பிராவிடன்ஸ் கல்லூரி மாணவி ம.கீா்த்தனாவுக்கு ரூ.2,000-த்துக்கான காசோலை மற்றும் பாராட்டு சான்றிதழ்களை வழங்கினாா்.

    பேச்சுப்போட்டி

    அதேபோல, முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதியின் பிறந்தநாளை முன்னிட்டு நடைபெற்ற கல்லூரி மாணவ, மாணவிகளுக்கான பேச்சுப் போட்டியில் முதலிடத்தைப் பிடித்த ஊட்டி அரசு கலைக் கல்லூரி மாணவன் அ.முகமது இலியாஸுக்கு ரூ.5,000, குன்னூா் பிராவிடன்ஸ் மகளிா் கல்லூரி மாணவி பா.சோபிகாவுக்கு ரூ.3,000, மூன்றாம் இடத்தைப் பிடித்த ஊட்டிஅரசு கலைக் கல்லூரி மாணவி ச.கல்பனா சாவ்லாவுக்கு ரூ.2,000த்துக்கான காசோலையை கலெக்டர் வழங்கினாா்.

    நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலா் கீா்த்தி பிரியதா்ஷினி, மாவட்ட ஊரக வளா்ச்சி முகமைத் திட்ட இயக்குநா் ஜெயராமன், தமிழ் வளா்ச்சித் துறை உதவி இயக்குநா் மு.சம்சுதீன் உள்பட அரசுத் துறை அலுவலா்கள் பலா் கலந்துகொண்டனா். 

    ×