search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "website"

    • விவரங்களை வலைதளத்தில் பதிவேற்றம் செய்ய நிறுவன உரிமையாளா்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
    • தொழிலாளா்களின் பெயா், ஆதாா் எண், வங்கிக் கணக்கு எண், கல்வித் தகுதி உள்ளிட்ட விவரங்களை பதிவேற்றம் செய்ய வேண்டும்

    திருப்பூர் :

    திருப்பூா் மாவட்டத்தில் பணியாற்றி வரும் வெளிமாநிலத் தொழிலாளா்கள் குறித்த விவரங்களை வலைதளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும் என்று தொழிலாளா் துறை அறிவுறுத்தியுள்ளது.இதுகுறித்து திருப்பூா் தொழிலாளா் உதவி ஆணையா் (அமலாக்கம்) (பொறுப்பு) க.செந்தில்குமரன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு வருமாறு :- திருப்பூா் மாவட்டத்தில் இயங்கி வரும் உணவு நிறுவனங்கள், மோட்டாா் போக்குவரத்து நிறுவனங்கள், பீடி தொழில் நிறுவனங்கள், முடிதிருத்தும் நிலையங்கள், கோழிப் பண்ணைகள், பின்னலாடை நிறுவனங்கள், அரிசி ஆலைகள், வீட்டு பராமரிப்புப் பணிகள், இதர நிறுவனங்கள், கடைகளில் பணியாற்றும் வெளிமாநிலத் தொழிலாளா்கள் குறித்த விவரங்களை வலைதளத்தில் பதிவேற்றம் செய்ய வேலையளிப்பாா், நிறுவன உரிமையாளா்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    வெளிமாநிலத் தொழிலாளா்களை பணியமா்த்தும் நிறுவன உரிமையாளா்கள், வேலையளிப்பவா்கள் தொழிலாளா் துறையால் வழங்கப்பட்ட பதிவுச் சான்றிதழ் அல்லது உரிமம் எண் ஆகியவற்றைக் கொண்டு இணையதளத்தில் தனியாக ஒரு பயனாளா் குறியீட்டு எண்ணை உருவாக்கி நிறுவனத்தில் பணிபுரிந்து வரும் வெளிமாநிலத் தொழிலாளா்களின் பெயா், கைப்பேசி எண், பிறந்த தேதி, ஆதாா் எண், வங்கிக் கணக்கு எண், முகவரி, கல்வித் தகுதி உள்ளிட்ட விவரங்களை பதிவேற்றம் செய்ய வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • இணையதளம் வழியாக வருகிற 20-ந் தேதி மாலை 5 மணி வரை விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
    • விண்ணப்ப கட்டணம் ரூ.50 இணையதளம் வாயிலாக செலுத்த வேண்டும்.

    தஞ்சாவூர்:

    தஞ்சை மாவட்ட கலெக்டர் தீபக் ஜேக்கப் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது :-

    2023-ஆம் ஆண்டில் தஞ்சாவூர் மாவட்டத்தி லுள்ள தஞ்சாவூர், திருவையாறு, ஒரத்தநாடு ஆகிய அரசு தொழிற்பயிற்சி நிலையங்கள் மற்றும் தனியார் தொழிற்பயிற்சி நிலையங்கள் ஆகியவற்றில் சேர்வதற்கு இணையதளம் வாயிலாக வருகிற 20-ந் தேதி மாலை 5 மணி வரை விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

    இந்த விண்ணப்பங்கள் www.skilltraining.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டும்.

    மேலும் மாணவர்களுக்கு உதவிடும் வகையில் தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள அரசு தொழிற்பயிற்சி நிலையங்கள் மற்றும் மாவட்ட திறன் பயிற்சி அலுவலகம் ஆகியவற்றில் சேர்க்கை உதவி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. பள்ளி மாற்றுசான்றிதழ் , மதிப்பெண் சான்றிதழ் (8-ம் வகுப்பு, 10, 12-ம் வகுப்பு ), சாதிசான்றிதழ் , முன்னுரிமை சான்றிதழ் (மாற்றுதிறனாளிகள்/விதவை/முன்னாள் ராணுவத்தினரின் வாரிசுகள்/ மாநில அளவில் விளையாட்டுப் போட்டிகளில் முதன்மையானவர்/ தாய், தந்தை இழந்த ஆதரவற்ற மாணவர்கள்), புகைப்படம் - 2 , ஆதார் கார்டு ஆகிய அசல் ஆவணங்கள் மற்றும் விண்ணப்பங்களை இலவசமாக பதிவேற்றம் செய்துக் கொள்ளலாம். ஆகஸ்ட்-2023 முதல் தொடங்கும் பல்வேறு பொறியியல் மற்றும் பொறியியல் அல்லாத தொழிற்பிரிவுகளில் சேர்ந்து பயிற்சிபெற 8-ம் வகுப்பு தேர்ச்சி, 10ம் வகுப்புதேர்ச்சி, 12-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களும் விண்ணப்பிக்கலாம். பெண்களுக்கு வயது வரம்பு இல்லை. ஆண்களுக்கு 14 முதல் 40 வயது வரை பயிற்சியில் சேரலாம். முன்னாள் இராணுவத்தினருக்கு 14 முதல் 45 வயது வரை . மாற்று திறனாளிகளுக்கு குறைந்த பட்ச வயது 14 முதல் உட்ச வரம்பு வயது இல்லை. 2020-2021 ஆம் கல்வியாண்டில் 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவர்கள் 9-ஆம் வகுப்பு மதிப்பெண் பட்டியலையும், முந்தைய ஆண்டுகளில் 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு அவர்களது 10-ம் வகுப்பு மதிப்பெண் பட்டியலையும் வைத்து விண்ணப்பிக்க வேண்டும். மேலும் 8-ம் வகுப்பு கல்வித் தகுதிக்குரிய தொழில் பிரிவுகளுக்கு 8-ம் வகுப்பு மதிப்பெண் பட்டியலையும் வைத்து விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்ப கட்டணம் ரூ.50 இணையதளம் வாயிலாக செலுத்த வேண்டும்.

    மதிப்பெண் அடிப்படையில் நடைபெறும் இணையதள கலந்தாய்வுக்கான தரவரிசைப் பட்டியல் மற்றும் குறித்த விவரங்கள் கடைசி தேதிக்கு பிறகு இணையதளத்தில் வெளியிடப்படும். பயிற்சியில் சேரும் மாணவர்களுக்கு விலையில்லா மடிக்கணினி, மிதிவண்டி, சீருடை, காலணி, பாடப்புத்தகம், பஸ்பாஸ், வரைபடகருவிகள் மற்றும் மாதந்தோறும் உதவித்தொகையாக ரூ. 750வழங்கப்படும்.

    அரசுபள்ளியில் பயின்ற மாணவிகளுக்கு மூவலூர் இராமாமிர்தம் உயர்கல்விதிட்டத்தின் கீழ் ரூ.1000 மாதாந்திர கூடுதல் உதவித்தொகை வழங்கப்படும். மேலும் விவரங்களுக்கு துணை இயக்குநர்/முதல்வர், அரசு தொழிற்பயிற்சி நிலையம் தஞ்சாவூர் அல்லது அருகிலுள்ள அரசினர் தொழிற்பயிற்சி நிலையங்களை தொடர்பு கொள்ள வேண்டும்.

    மேலும் விவரங்களுக்கு 9994043023 , 7708709988 , 9840950504 , 9442220049 என்ற எண்களை தொடர்பு கொள்ளலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • சேர்க்கைக்கு விண்ணப்பிக்க வருகிற 20-ந் தேதி வரை கால அவகாசம் நீடிக்கப்பட்டுள்ளது.
    • இணையதளத்தில் உள்ள விளக்க கையேட்டில் தரப்பட்டுள்ளது.

    நாகப்பட்டினம்:

    நாகை மாவட்ட கலெக்டர் ஜானி டாம் வர்கீஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிப்பதா வது:-

    நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள நாகப்பட்டினம், திருக்குவளை மற்றும் செம்போடை அரசு தொழிற் பயிற்சி நிலையம் மற்றும் தனியார் தொழிற்பயிற்சி நிலையங்களில் சேர்க்கைக்கு 20.06.2023 வரை விண்ணப்பிக்க கால அவகாசம் நீடிக்கப்பட்டுள்ளது.

    www.skilltraining.tn.gov.in என்ற இணையதளம் வாயிலாக பதிவு செய்ய வேண்டிய கடைசி நாள்.20.06.2023.

    இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்க மேற்கண்ட அரசு தொழிற்பயிற்சி நிலையங்கள் மற்றும் நாகப்பட்டினம் மாவட்ட திறன் பயிற்சி அலுவலகம் ஆகியவற்றில் சேர்க்கை உதவி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

    கல்வித்தகுதி 8-ம் வகுப்பு தேர்ச்சி, 10-ம் வகுப்பு தேர்ச்சி. விண்ணப்பக் கட்டணம் ரூ.50 - தொழிற் பயிற்சி நிலைய விவரங்கள் தொழிற் பிரிவுகள் இவற்றிற்கான கல்வித் தகுதி வயது வரம்பு இடஒதுக்கீடு ஆகியவை www.skilltraining.tn.gov.in என்ற இணையதளத்தில் உள்ள விளக்க கையேட்டில் தரப்பட்டுள்ளது.

    மேலும் விவரங்களுக்கு நேரிலோ அல்லது தொலைபேசி எண் 04365-250129 04369-276060 9487160168 மற்றும் மின்னஞ்சல் முகவரி govtitinagai@gmail.comதொடர்பு கொள்ளலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • கோவையில் உள்ள பாஸ்போர்ட் அலுவலகத்தில் 1.60 லட்சம் விண்ணப்பங்கள் பெறப்பட்டன.
    • 1.57 லட்சம் பாஸ்போர்ட்டுகள் வழங்கப்பட்டுள்ளன.

    திருப்பூர் :

    பாஸ்போர்ட் விண்ணப்பதாரர்களுக்கு வசதியாக கோவையில் பாஸ்போர்ட் சேவை மையமும் சேலம், ராசிபுரம், குன்னூர் மற்றும் ஈரோடு ஆகிய இடங்களில் தபால் நிலைய பாஸ்போர்ட் சேவை மையங்களும் செயல்படுகின்றன.

    2022-23ம் ஆண்டில் கோவையில் உள்ள பாஸ்போர்ட் அலுவலகத்தில் 1.60 லட்சம் விண்ணப்பங்கள் பெறப்பட்டன. 1.57 லட்சம் பாஸ்போர்ட்டுகள் வழங்கப்பட்டுள்ளன. இது 2021ம் ஆண்டை விட 35 சதவீதம் அதிகம்.நடப்பாண்டு மே மாதம் வரை கோவை மண்டல பாஸ்போர்ட் அலுவலகத்தில் 78 ஆயிரத்து914 விண்ணப்பங்கள் பெறப்பட்டன. 76 ஆயிரத்து 134 பாஸ்போர்ட்கள் வழங்கப்பட்டுள்ளன.

    கோவை மண்டல பாஸ்போர்ட் அலுவலர் பூபதி கணேஷ் கூறுகையில், பாஸ்போர்ட் விண்ணப்பதாரர்கள், அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்.போலி இணையதளங்கள் குறித்து விழிப்புடன் இருக்க வேண்டும். பாஸ்போர்ட் குறித்த சந்தேகங்களுக்கு 1800 258 1800 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என்றார்.

    • ஜூலை 5-ந் தேதி பி.ஏ., தமிழ் இலக்கணம் பிரிவு மாணவர்களுக்கும் கலந்தாய்வு நடைபெற உள்ளது.
    • புகைப்படம், வருமானச் சான்றிதழ் ஆகியவற்றுடன் தனது பெற்றோர்களை கட்டாயம் அழைத்து வரவேண்டும்.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் வட்டம் அரி யலூர் அரசு மேல்நிலை ப்பள்ளி வளாகத்தில் இயங்கி வரும் ரிஷிவந்தியம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி வளாகத்தில் வரும் கல்வி ஆண்டுக்கான மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு வரும் 29-ந் தேதி திங்க ட்கிழமை தொடங்குகிறது. அன்றைய தினம் காலை 10 மணி அளவில் விளையா ட்டு பிரிவு மாணவர்களுக்கு கலந்தாய்வு நடக்கிறது. மற்றும் 30-ந் தேதி நடைபெறும் ராணுவம் உள்ளிட்ட சிறப்பு பிரிவுக்கான கலந்தாய்வில் தரவரிசை பட்டியலில் உள்ள மாணவர்கள் கலந்து கொள்ளலாம். மேலும் ஜூன் 1-ந் தேதி புள்ளியியல் மற்றும் கணினி அறிவியல் பாட பிரிவில் இணை யதளத்தில் வெளியிடப்பட்ட பட்டியலில் உள்ள மாணவர்களுக்கு மட்டும் கலந்தாய்வு நடை பெறும்.

    பின்னர் 2-ந் தேதி வணிகவியல் மற்றும் பொருளி யல் பிரிவு மாணவ ர்களுக்கான கலந்தாய்வும், ஜூலை 5-ந் தேதி பி.ஏ., தமிழ் இலக்கணம் பிரிவு மாணவர்களுக்கும் கலந்தாய்வு நடைபெற உள்ளது. எனவே கலந்தாய்வுக்கு வரும் மாணவர்கள் 10, 11 மற்றும் 12-ம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ், மாற்றுச் சான்றிதழ், வகுப்புச் சான்றிதழ், புகைப்படம், வருமானச் சான்றிதழ் ஆகிய வற்றுடன் தனது பெற்றோர்களை கட்டாயம் அழைத்து வரவேண்டும். மேலும் கல்லூரி இணையதள முகவரியில் வெளியிடப்பட்ட கலந்தாய்வு தரவரிசை பட்டியலை பார்வையிட்டு மாணவர்கள் கலந்தாய்வில் கலந்து கொள்ள வேண்டும் என ரிஷிவந்தியம் அரசு கலைக் கல்லூரி முதல்வர் ரேவதி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • ஊராட்சிகளில் பணிபுரியும் செயலர்களே கம்ப்யூட்டர்களை ஆப்ரேட் செய்கின்றனர்.
    • வரி செலுத்துவோரின் மொபைல்போன் எண்களை பதிவு செய்யும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    உடுமலை :

    ஊராட்சிகளில் சொத்து வரி உள்ளிட்ட கட்டணங்களை, இணைய வழியில் செலுத்தும் வசதி கொண்டு வரப்பட்டுள்ளது. இதையொட்டி மக்களிடம் இருந்து நேரடியாக வரி இனங்களை வசூல் செய்யும் பணி ஊராட்சிகளில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.அவ்வகையில் கிராம மக்கள், vptax.tnrd.tn.gov.in என்னும் இணையதளம் வாயிலாக வரி செலுத்தலாம்.

    இதற்காக வீட்டு உரிமையாளர்கள், பயனாளிகள் செலுத்த வேண்டிய சொத்து வரி, குடிநீர் கட்டணம், தொழில்வரி ஆகியவை இந்த இணையதளத்தில் கிராம ஊராட்சிகளால் உள்ளீடு செய்யப்பட்டுள்ளது.ஆனால் இணையதளத்தில் எடிட் ஆப்சன் கிடையாது. இதனால், வரி வசூல் பதிவை முறைபடுத்த முடியாமல் உடுமலை சுற்றுப்பகுதி கிராமச் செயலர்கள் தவித்து வருகின்றனர்.அவ்வாறு ஆன்லைன் வாயிலாக வரி வசூல் செய்யப்பட்டாலும் பதிவேடுகளை பராமரிக்கும் கட்டாயம் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இது குறித்து அதிகாரிகள் கூறியதாவது:- ஊராட்சிகளில் பணிபுரியும் செயலர்களே கம்ப்யூட்டர்களை ஆப்ரேட் செய்கின்றனர். ஆன்லைன் வாயிலாக வரி இனங்கள் செலுத்தப்பட்டாலும் அந்த விபரங்களை பதிவேட்டில் பராமரிக்க வேண்டியுள்ளது.இதனால் முதற்கட்டமாக வரி செலுத்துவோரின் மொபைல்போன் எண்களை முறையாக பதிவு செய்யும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. குறிப்பாக பதிவேடுகளுடன் கம்ப்யூட்டரிலும், விவரங்களை பதிவு செய்ய அறிவுறுத்தப்படுவதால் கூடுதல் வேலைப்பளு ஏற்படுகிறது.

    அதேபோல இணையதளத்தில் எடிட் ஆப்சன் கிடையாது. அதனால் ஆன்லைன் பதிவில் பிழை ஏற்பட்டால் அதனை சரிபடுத்த முடியாது. தற்போதைய சூழலில் வரி இனங்கள் செலுத்தியதிற்கு ரசீது வழங்க அனுமதி கோரப்பட்டுள்ளது. இக்காரணங்களால் ஊராட்சிகளில் இந்த திட்டத்தை முழுமையாக செயல்படுத்த காலதாமதம் ஏற்படும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

    • விவசாயிகள் இணைந்து பயன்பெறும் வகையில் வேளாண்மை அடுக்குத்திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
    • எளிதில் விண்ணப்பிக்கும் வகையில் கிரைன்ஸ் இணையதளத்தில் பதிவு செய்யலாம்.

     திருப்பூர் :

    தமிழ்நாடு அரசின் பல்வேறு துறை சார்ந்த திட்டங்களில் விவசாயிகள் இணைந்து பயன்பெறும் வகையில் வேளாண்மை அடுக்குத்திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதற்காக கிரைன்ஸ் என்ற இணையதளம் மூலமாக அரசின் நன்மைகள் சரியான பயனாளிகளுக்கு சென்றடைவதை உறுதி செய்யும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த இணையதளத்தில் வருவாய்த்துறை, வேளாண்மை, உழவர் நலத்துறை, தோட்டக்கலைத்துறை, பேரிடர் மேலாண்மைத்துறை, கூட்டுறவுத்துறை, பட்டு வளர்ச்சித்துறை, வேளாண் பொறியியல் துறை, உணவு வழங்கல் துறை, வேளாண் விற்பனை, கால்நடை பராமரிப்புத்துறை, ஊரக வளர்ச்சித்துறை, விதை சான்றளிப்பு, சர்க்கரை துறைகள் இணைக்கப்பட உள்ளது.

    விவசாயிகளின் விவரங்களை ஒற்றை சாளர முறையில் பதிவு செய்வதால் வெவ்வேறு திட்டங்களில் பயன்பெற விண்ணப்பிக்கும் போது தனித்தனியாக ஆவணங்களை சமர்ப்பிக்காமல் எளிதில் விண்ணப்பிக்கும் வகையில் கிரைன்ஸ் இணையதளத்தில் பதிவு செய்யலாம். விவசாயிகள் தங்களின் ஆதார் அடையாள அட்டை, செல்போன் எண், புகைப்படம், வங்கி கணக்கு விவரம், நிலவிவரங்களை தங்கள் கிராம நிர்வாக அலுவலகம், வேளாண்மை உழவர் நலத்துறை, தோட்டக்கலைத்துறை அலுவலகங்களில் தொடர்பு கொண்டு இணையதளத்தில் பதிவேற்றம் செய்து பயன்பெறலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

    • அடுத்த மாதம் 18-ம் தேதி வரை விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
    • அறிவிப்பு பலகையில் அடுத்த மாதம் 21-ம் தேதி பிற்பகல் 5 மணிக்கு தெரிவிக்கப்படும்.

    தஞ்சாவூர்:

    தஞ்சை மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்ப தாவது:-

    குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாயக்கல்வி உரிமைச்சட்டம்-2009 பிரிவு 12(1) ன்படி சிறுபான்மையற்ற தனியார் கயநிதி பள்ளிகளில் நுழைவுநிலை வகுப்பில் (எல்.கே.ஜி) 25 சதவீதம் இடஒதுக்கீட்டின் கீழ் வாய்ப்பு மறுக்கப்பட்ட பிரிவினரான பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர், ஆண்டு வருமானம் ரூ.2 லட்சத்திற்கு குறைவாக வருவாய் ஈட்டும் நலிவடைந்த பிரிவினர் ஆகியோருக்கு சேர்க்கை வழங்கப்படுகிறது.

    வாய்ப்பு மறுக்கப்பட்ட சிறப்பு பிரிவின் கீழ் வகைப்படுத்தப்பட்டு உள்ள ஆதரவற்றோர் , எச்.ஐ.வியால் பாதிக்கப்பட்டவர் , மூன்றாம் பாலினத்தவர் , துப்புரவுத் தொழிலாளியின் குழந்தை , மாற்றுத் திறனாளியாக இருக்கும் குழந்தை ஆகிய சிறப்பு பிரிவின் கீழ் விண்ணப்பிப்பவர்கள் அரசாணை நிலை எண்.60 பள்ளிக்கல்வித்துறை நாள்.01.04.2013-ன்படி உரிய அலுவலரால் வழங்கப்பட்ட சான்றினை இணையதளம் மூலம் விண்ணப்பிக்கும் போது பதிவேற்றம் செய்தல் வேண்டும்.

    தமிழ்நாடு குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமை விதிகள்-2011 விதி எண்.4(1) இன் படி பள்ளியிலிருந்து 1 கி.மீட்டருக்குள் வசிப்பவர்கள் மட்டுமே விண்ணப்பிக்கலாம். இணையதளம் மூலம் அதிக பட்சமாக 5 பள்ளிகளுக்கு விண்ணப்பிக்கலாம். சேர்க்கை கோரும் குழந்தைகளின் பெற்றோர் rte.tnschools.gov.in என்றஇணையதளத்தில் விண்ணப்பிக்க வேண்டும்.

    அனைத்து தனியார் சுயநிதி பள்ளிகள், வட்டாரக்கல்வி அலுவலகங்கள், வட்டார வள மையங்கள், மாவட்ட க்கல்வி அலுவலகங்கள், தஞ்சாவூர் முதன்மைக்கல்வி அலுவலகம் மற்றும்இ-சேவை மையங்களில் பெற்றோர்கள் இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம்.ஒன்றுக்கும் பேற்பட்ட பள்ளிகளில் குலுக்கல் முறையில் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் அவற்றில் ஏதேனும் ஒரு பள்ளியில் மட்டும் சேர்ந்து கொள்ளலாம்.

    தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள சிறுபான்மையற்ற தனியார் சுயநிதி பள்ளிகளில் குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம் 2009-ன் படி, 2023- 24 ஆம் கல்வியாண்டில் வாய்ப்பு மறுக்கப்பட்ட மற்றும் நலிவடைந்த பிரிவினரின் குழந்தைகளுக்கு குறைந்தபட்சம் 25 சதவீதம் இட ஒதுக்கீட்டின்படி நுழைவு நிலை வகுப்பான எல்.கே.ஜி. , முதல் வகுப்பில் தஞ்சாவூர் மாவட்டத்தில் கீழ் கண்டுள்ள அட்டவணை களின் படி மாணவர்கள் சேர்க்கை நடைபெற உள்ளது.

    தஞ்சாவூர் மாவட்டத்தில் 25 சதவீதத்தின் கீழ் 92 மெட்ரிகுலேஷன் பள்ளிகளில் 1468 இடங்களும் 159 நர்சரி மற்றும் பிரைமரி பள்ளிகளில் 1454 இடங்களும் என மொத்தம் தஞ்சை மாவட்டத்தில் 251 பள்ளிகளில் 2922 இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.சிறுபான்மைச்ச தனியார் சுயநிதி பள்ளிகள் தங்கள் பள்ளியில் 25 சதவீத இட ஒதுக்கீட்டில் நிர்ணயம் செய்யப்பட்டுள்ள இடங்களின் எண்ணிக்கையை பள்ளி தகவல் பலகையில் வெளியிட வேண்டும். பெற்றோர்கள் இணையதளம் வழியாக விண்ணப்பிக்கும் பணி தொடங்கி உள்ளது. அடுத்த மாதம் 18ஆம் தேதி வரை விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

    இணையதளம் வழியாக விண்ணப்பித்த மாணவர்களில் 25 சதவீதம் இட ஒதுக்கீட்டின்படி தகுதி உடைய மற்றும் தகுதியற்ற மாணவர்கள் விபரம் பள்ளி அறிவிப்பு பலகையில் அடுத்த மாதம் 21 ஆம் தேதி பிற்பகல் 5 மணிக்கு தெரிவிக்கப்படும்.பள்ளியில் ஒதுக்கீடு செய்யப்பட்ட இடங்களுக்கு மேல் விண்ணப்பம் பெறப்பட்டிருந்தால் குலுக்கல் முறையில் 23-5-23 அன்று மாணவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். எனவே பெற்றோர்கள் இந்த வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ள வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • அரசின் திட்டங்கள் சரியான பயனாளிகளுக்கு சென்றடைவதை உறுதி செய்யும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.
    • கிரைன்ஸ் என்ற இணையதளத்தில் பதிவு செய்து கொள்ளலாம்.

    திருப்பூர் :

    விவசாயிகள் இணைந்து பயன்பெறும் வகையில் வேளாண்மை அடுக்குத்திட்டத்தின் கீழ் கிரைன்ஸ் என்ற இணையதளம் அரசின் திட்டங்கள் சரியான பயனாளிகளுக்கு சென்றடைவதை உறுதி செய்யும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.

    இது குறித்து திருப்பூர் மாவட்ட கலெக்டர் வினீத் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது :- தமிழ்நாடு அரசின் பல்வேறு துறை சார்ந்த திட்டங்களில் விவசாயிகள் இணைந்து பயன்பெறும் வகையில் வேளாண்மை அடுக்குத்திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதற்காக கிரைன்ஸ் என்ற இணையதளம் மூலமாக அரசின் நன்மைகள் சரியான பயனாளிகளுக்கு சென்றடைவதை உறுதி செய்யும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த இணையதளத்தில் வருவாய்த்துறை, வேளாண்மை- உழவர்நலத்துறை, தோட்டக்கலைத்துறை, பேரிடர்மேலாண்மை, கூட்டுறவுத் துறை, பட்டு வளர்ச்சிதுறை, வேளாண் பொறியியல் துறை, உணவு வழங்கல் துறை, வேளாண் விற்பனை, கால்நடை பராமரிப்புத் துறை, ஊரக வளர்ச்சித் துறை, விதைச் சான்றளிப்பு மற்றும் சர்க்கரைத் துறைகள் இணைக்கப்பட உள்ளது.

    விவசாயிகளின் விபரங்களை ஒற்றை சாளர முறையில் பதிவு செய்வதால், வெவ்வேறு திட்டங்களில் பயன்பெற விண்ணப்பிக்கும் போது தனித்தனியாக ஆவணங்களை சமர்ப்பிக்காமல் எளிதில் விவசாயிகள் விண்ணப்பிக்கும் வகையில் கிரைன்ஸ் என்ற இணையதளத்தில் பதிவு செய்து கொள்ளலாம்.

    கிரைன்ஸ் இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டிய ஆவணங்கள் வருமாறு:-ஆதார் அடையாள அட்டை,அலைபேசி எண்,புகைப்படம்,வங்கி கணக்கு விபரம்,நில விபரங்கள்.இத்திட்டத்தில் விவசாயிகள் இணைந்திட ஆவணங்களுடன் தங்களது கிராம நிர்வாக அலுவலர் அலுவலகம், வேளாண்மை உழவர் நலத்துறை, தோட்டக்கலைத்துறை ஆகிய அலுவலகங்களில் கிராம நிர்வாக அலுவலர்-உதவி வேளாண்மை அலுவலர்-உதவி தோட்டக்கலை அலுவலர்களை அணுகி கிரைன்ஸ் இணையதளத்தில் பதிவேற்றம் செய்து பயன்பெறலாம். இவ்வாறு கலெக்டர் வினீத் தெரிவித்துள்ளார்.

    • அலுவலக விவரங்கள் சரியாக உள்ளது.
    • திருவண்ணாமலை நகராட்சியின் தகவல்கள் இடம் பெற்றுள்ளன.

    பல்லடம் :

    பல்லடம் நகராட்சி இணையதளத்தில், வேறு நகராட்சி விவரங்கள் உள்ளதால் பொதுமக்கள் குழப்பம் அடைந்துள்ளனர். இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில்:-

    பல்லடம் நகராட்சி குறித்த விவரங்களை காண இணையதளத்தில் சென்றால், அலுவலக விவரங்கள் சரியாக உள்ளது. ஆனால், நகராட்சியின் எல்லை, வார்டு விவரம், மக்கள் தொகை, உள்ளிட்ட விபரங்களை பார்வையிட்டால் திருவண்ணாமலை நகராட்சியின் தகவல்கள் இடம் பெற்றுள்ளன. இது குழப்பத்தை ஏற்படுத்துகிறது. தற்போது நகராட்சி சொத்து வரி, உள்ளிட்டவற்றை இணையதளம் மூலம் செலுத்தலாம் என நகராட்சி நிர்வாகம் அறிவித்துள்ளது. ஆனால் இணையதளத்திற்கு சென்றால் உரிய விவரங்கள் இல்லை. எனவே நகராட்சி இணையதளத்தை முறையாக பராமரிக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர். இதுகுறித்து நகராட்சி நிர்வாகத்திடம் கேட்டபோது, இணையதளத்தில் ஏற்பட்ட கோளாறால், விவரங்கள் மாறி, மாறி வந்துள்ளது. பொதுமக்களின் புகாரையடுத்து. தற்போது இணையதளம் சரி செய்யப்ப ட்டுள்ளது இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

    • 11ஆயிரம் காலியான அரசு பணியிடங்கள் தேர்வாணையத்தால் நிரப்பப்பட உள்ளது.
    • தேர்வு நடைபெறும் முறை அனைத்தும் இணையதளம் வழியாக நடைபெறும்.

    கடலூர்:

    தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டுவசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் (தாட்கோ) மூலமாக ஆதிதிராவிடர், பழங்குடியின பிரிவினைச் சார்ந்தவர்களுக்கு பல்வேறு திறன் அடிப்படையிலான பயிற்சிகளை வழங்கி வருகிறது. அதன் அடிப்படையில் பணியாளர் அரசு தேர்வு ஆணையம் நடத்தும் பல்வேறு தேர்வுகளுக்கு 2023-ம் ஆண்டிற்கான தேர்வு நாட்காட்டி அதிகாரபூர்வ இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இப்பல்வேறு தேர்வுகளுக்கான 11ஆயிரம் காலியான அரசு பணியிடங்கள் தேர்வாணையத்தால் நிரப்பப்பட உள்ளது. இத்தேர்வில் ஆதிதிராவிடர் , பழங்குடியின மாணவர்கள் பங்கேற்று தேர்ச்சி பெற தாட்கோ மூலமாக இலவச பயிற்சி அளிக்கப்பட உள்ளது. இதில் 18 முதல் 32 வயது வரை உள்ள பத்தாம் வகுப்பு, 12-ம் வகுப்பு ஏதேனும் ஒரு பட்டப்படிப்பு படித்து முடித்த மாணவர்கள் விண்ணப்பிக்கலாம். இத்தேர்விற்கு விண்ணப்பிக்கும் முறை மற்றும் தேர்வு நடைபெறும் முறை அனைத்தும் இணையதளம் வழியாக நடைபெறும்.

    இப்போட்டி தேர்வில் தேர்ச்சி பெற்று பணியாளர் தேர்வாணையத்தில் பல்வேறு பணியிடங்களுக்கு தகுதிகேற்ப ஆரம்ப கால மாத சம்பளமாக ரூ.18 ஆயிரம் முதல் ரூ.22 ஆயிரம் வரை பணியமர்த்தப்படுவார்கள். இத்தேர்வில் ஆதிதிராவிடர், பழங்குடியின மாணவர்கள் பயிற்சி பெற இணையதளத்தில் பதிவு செய்து கொள்ளலாம் இப்பயிற்சிக்கான கட்டணம் முழுவதும் தாட்கோவால் வழங்கப்படும்.இத்திட்டம் தொடர்பான விபரங்கள் மற்றும் பதிவு செய்வதற்கு தாட்கோ இணையதளம் மூலம் கடலூர் மாவட்டத்தில் உள்ள தகுதியான அனைத்து ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மாணவ- மாணவிகள் விண்ணப்பித்து பயனடையலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டு இருந்தது.

    • 2 வயதுக்கு மேற்பட்ட நாய்கள் என மூன்று பிரிவுகளாக பிரிக்கபடும்.
    • பல்வேறு வகையான நாய்கள் உள்ளன, அவற்றை தெரிந்து வைத்துக்கொள்ளவே இந்த கண்காட்சி.

    தஞ்சாவூர்:

    தஞ்சை மாதாக்கோட்டை மிருகவதை தடுப்பு சங்க அலுவலகத்தில் (எஸ்.பி.சி.ஏ) இன்று மாவட்ட கலெக்டர் தினேஷ்பொன்ராஜ் ஆலிவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது ;-

    மிருகவதை தடுப்பு சங்கத்துக்கு புத்துயிர் கொடுக்கப்பட்டு மிருகவதை தொடர்பாக பல்வேறு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

    அதன் அடிப்படையில் தஞ்சாவூர் மாவட்டத்தில் முதல் முறையாக நாய்கள் கண்காட்சி நடத்த வேண்டும் என்று எஸ்.பி.சி.ஏ உறுப்பினர்களால் முடிவு செய்யப்பட்டது.

    அதன்படி வருகிற 11-ந் தேதி (சனிக்கிழமை) எஸ்.பி.சி.ஏ. வளாகத்தில் நாய்கள் கண்காட்சி நடைபெற உள்ளது.

    காலை 10 மணிக்கு தொடங்கி மாலை 6 மணி வரை இந்த கண்காட்சி நடைபெறும்.

    பல்வேறு தரப்பினர், நிறுவனங்கள் கண்காட்சி நடைபெற உறுதுணையாக இருந்தனர்.

    அவர்களுக்கு நன்றியை தெரிவித்து கொள்கிறேன்.

    கண்காட்சியில் 3 பிரிவுகளாக போட்டி நடைபெறும்.

    அதாவது 1 வயது வரை உள்ள நாய்கள் , 1 முதல் 2 வயது வரையுள்ள நாய்கள், 2 வயதுக்கு மேற்பட்ட நாய்கள் என மூன்று பிரிவுகளாக பிரிக்கபடும்.

    இதில் நாய்களின் அணிவகுப்பு, பராமரிப்பு முறைகள் உள்ளிட்டவைகள் குறித்து தெளிவுப்படுத்துவார்கள்.

    செல்ல பிராணிகள் மீது குழந்தைகளுக்கு ஈர்ப்பு வர வேண்டும்.

    மிருகம் வதைக்கபடுவதோ அல்லது கடினமான சூழ்நிலைக்கு உட்படுத்த படுவதோ செய்யக்கூடாது என்ற எண்ணம் சிறு வயதிலே வர வேண்டும்.

    பல்வேறு வகையான நாய்கள் உள்ளன.

    அவற்றை தெரிந்து வைத்து கொள்ள வேண்டும் என்ற நோக்கத்திற்காக நாய்கள் கண்காட்சி நடத்தப்படுகிறது.

    ஏராளமான நாய்கள் இந்த கண்காட்சியில் கலந்து கொள்ள பதிவு செய்யப்பட்டு உள்ளது.

    இதில் கலந்த கொள்ள நாய்களின் உரிமையாளர்கள் என்ற இணையதளத்திலோ அல்லது 7418364555 என்ற தொலைபேசி எண்ணிலோ தொடர்பு கொண்டு பதிவு செய்யலாம்.

    வருகிற 10-ந் தேதி மாலைக்குள் பதிவு செய்ய வேண்டும்.

    பதிவு கட்டணம் ரூ.250 மட்டுமே ஆகும். இதில் நாய்களுக்கு தடுப்பூசி, உணவு ஆகியவையும் அடங்கும்.

    கண்காட்சியை பார்த்து ரசிக்க பார்வையாளர்களுக்கு அனுமதி இலவசம். அனைவரும் கண்காட்சியை பார்க்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுக்கிறேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ×