என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
ரிஷிவந்தியம் அரசு கலைக்கல்லூரியில் மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு: திங்கட்கிழமை தொடங்குகிறது
- ஜூலை 5-ந் தேதி பி.ஏ., தமிழ் இலக்கணம் பிரிவு மாணவர்களுக்கும் கலந்தாய்வு நடைபெற உள்ளது.
- புகைப்படம், வருமானச் சான்றிதழ் ஆகியவற்றுடன் தனது பெற்றோர்களை கட்டாயம் அழைத்து வரவேண்டும்.
கள்ளக்குறிச்சி:
கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் வட்டம் அரி யலூர் அரசு மேல்நிலை ப்பள்ளி வளாகத்தில் இயங்கி வரும் ரிஷிவந்தியம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி வளாகத்தில் வரும் கல்வி ஆண்டுக்கான மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு வரும் 29-ந் தேதி திங்க ட்கிழமை தொடங்குகிறது. அன்றைய தினம் காலை 10 மணி அளவில் விளையா ட்டு பிரிவு மாணவர்களுக்கு கலந்தாய்வு நடக்கிறது. மற்றும் 30-ந் தேதி நடைபெறும் ராணுவம் உள்ளிட்ட சிறப்பு பிரிவுக்கான கலந்தாய்வில் தரவரிசை பட்டியலில் உள்ள மாணவர்கள் கலந்து கொள்ளலாம். மேலும் ஜூன் 1-ந் தேதி புள்ளியியல் மற்றும் கணினி அறிவியல் பாட பிரிவில் இணை யதளத்தில் வெளியிடப்பட்ட பட்டியலில் உள்ள மாணவர்களுக்கு மட்டும் கலந்தாய்வு நடை பெறும்.
பின்னர் 2-ந் தேதி வணிகவியல் மற்றும் பொருளி யல் பிரிவு மாணவ ர்களுக்கான கலந்தாய்வும், ஜூலை 5-ந் தேதி பி.ஏ., தமிழ் இலக்கணம் பிரிவு மாணவர்களுக்கும் கலந்தாய்வு நடைபெற உள்ளது. எனவே கலந்தாய்வுக்கு வரும் மாணவர்கள் 10, 11 மற்றும் 12-ம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ், மாற்றுச் சான்றிதழ், வகுப்புச் சான்றிதழ், புகைப்படம், வருமானச் சான்றிதழ் ஆகிய வற்றுடன் தனது பெற்றோர்களை கட்டாயம் அழைத்து வரவேண்டும். மேலும் கல்லூரி இணையதள முகவரியில் வெளியிடப்பட்ட கலந்தாய்வு தரவரிசை பட்டியலை பார்வையிட்டு மாணவர்கள் கலந்தாய்வில் கலந்து கொள்ள வேண்டும் என ரிஷிவந்தியம் அரசு கலைக் கல்லூரி முதல்வர் ரேவதி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்