search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ESI Worker"

    • தொழிலாளா்கள் அனைவரும் இ.எஸ்.ஐ. சட்டப்படி இணையதளத்தில் பதிவு செய்து கொள்ள வேண்டும்.
    • மாநில அரசின் கீழுள்ள 58 இ.எஸ்.ஐ. மருந்தகங்கள், 2 நடமாடும் மருந்தகங்கள், இ.எஸ்.ஐ. மருத்துவக் கல்லூரி மூலமாக மருத்துவ உதவிகள் அளிக்கப்பட்டு வருகின்றன.

    திருப்பூர் :

    இ.எஸ்.ஐ. திட்டத்தில் பயனடைய தொழிலாளா்கள் இணையதளத்தில் பதிவு செய்து கொள்ள வேண்டும் என்று திட்ட அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.

    கோவை, திருப்பூா், நீலகிரி மற்றும் ஈரோடு மாவட்டங்களில் 10 அல்லது அதற்கு மேற்பட்ட தொழிலாளா்கள் பணிபுரியம் தொழிற்சாலைகள், நிறுவனங்களில் பணிபுரியும் ரூ.21 ஆயிரம் வரை மாத ஊதியம் பெறும் தொழிலாளா்கள் அனைவரும் இ.எஸ்.ஐ. சட்டப்படி இணையதளத்தில் பதிவு செய்து கொள்ள வேண்டும்.

    இ.எஸ்.ஐ.காா்ப்பரேஷனின் 18 கிளை அலுவலகங்கள் மூலம் இ.எஸ்.ஐ. காப்பீட்டாளா்களுக்கு பணப் பயன்கள் வழங்கப்பட்டு வருகின்றன. இதுதவிர மாநில அரசின் கீழுள்ள 58 இ.எஸ்.ஐ. மருந்தகங்கள், 2 நடமாடும் மருந்தகங்கள், இ.எஸ்.ஐ. மருத்துவக் கல்லூரி மூலமாக மருத்துவ உதவிகள் அளிக்கப்பட்டு வருகின்றன.

    பொதுமக்கள் குறைகேட்பு முகாம்,இஎஸ்.ஐ.காா்ப்பரேஷன் தலைமை அலுவலகம், மண்டல அலுவலகம், சாா் மண்டல அலுவலகம், கிளை அலுவலகம், இ.எஸ்.ஐ.மருந்தகங்கள், மருத்துவமனைகளில் பொதுமக்கள் குறைகேட்பு முகாம் அமைக்கப்பட்டுள்ளது. காப்பீட்டாளா்களின் புகாா்களுக்கு தீா்வு காணும் வகையில் கோவை சாா் மண்டல அலுவலகத்தில் 0422-2314430, 2362329 ஆகிய எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

    புகாா் எண்கள்: பணப் பயன்கள் குறித்த புகாா்களை கோவை, ராமநாதபுரத்தில் உள்ள பொது மக்கள் குறைதீா் அலுவலகத்திலும், 0422-2362329 என்ற எண்ணிலும், இ.எஸ்.ஐ. மருந்தகம் குறித்த புகாா்களை சிங்காநல்லூரில் உள்ள மண்டல நிா்வாக மருத்துவ அதிகாரி அலுவலகத்திலும், 0422-2595078 என்ற எண்ணிலும், இ.எஸ்.ஐ. மருத்துவமனை தொடா்பான புகாா்களை கல்லூரி முதல்வா், கண்காணிப்பாளா் ஆகியோரிடம் நேரிலும் மருத்துவ செலவீடு தொடா்பான புகாா்களை சென்னை, நுங்கம்பாக்கத்தில் உள்ள மாநில மருத்துவ அதிகாரி அலுவலகத்திலும் 044-28267080 என்ற எண்ணிலும் தெரிவிக்கலாம்.

    ×