search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Weather Center"

    நெல்லை, கோவை உள்பட 5 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. #HeavyRain
    சென்னை:

    தமிழகத்தில் கன்னியாகுமரி, நெல்லை, நீலகிரி, கோவை உள்ளிட்ட சில மாவட்டங்களில் தான் தென்மேற்கு பருவமழை அதிகம் பெய்யும். மற்ற மாவட்டங்களில் அதிக அளவில் மழையை எதிர்பார்க்க முடியாது.

    இந்நிலையில் தென்மேற்கு பருவமழை குறித்து சென்னை வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் கூறுகையில், ‘தென்மேற்கு பருவமழை காரணமாக நெல்லை, நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல் ஆகிய 5 மாவட்டங்களில் இன்று (வெள்ளிக்கிழமை) சில இடங்களில் கனமழை பெய்யும். மற்ற மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் வெப்பச்சலனம் காரணமாக மழை பெய்ய வாய்ப்பு உள்ளது’ என்றனர்.

    தமிழகத்தில் நேற்று காலை 8.30 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் பெய்த மழை அளவு வருமாறு:-

    வால்பாறை 17 செ.மீ., சின்னகல்லார் 12 செ.மீ., பெரியாறு 11 செ.மீ., தேவலா 10 செ.மீ., பொள்ளாச்சி 7 செ.மீ., குந்தாபாலம், குழித்துறை தலா 4 செ.மீ, போடிநாயக்கனூர், உத்தமபாளையம், அம்பாசமுத்திரம், திருக்கோவிலூர் தலா 3 செ.மீ., மயிலம், ஊட்டி, பூதப்பாண்டி, தக்கலை, கூடலூர், பாபநாசம், செங்கோட்டை, ராதாபுரம், இரணியல், பண்ருட்டி, வந்தவாசி தலா 2 செ.மீ. மழை பெய்துள்ளது.

    மேலும் 30-க்கும் மேற்பட்ட இடங்களில் தலா 1 செ.மீ. மழை பதிவாகி இருந்தது. 
    தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை தொடங்கி உள்ளது. இதற்கிடையே 4 நாட்களுக்கு லேசான மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
    சென்னை:

    தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை தொடங்கி உள்ளது. இதற்கிடையே 4 நாட்களுக்கு லேசான மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் கூறியதாவது:-

    வெப்பசலனம் காரணமாக தமிழகம், புதுச்சேரியில் அடுத்த 4 நாட்களுக்கு சில இடங்களில் லேசான மழை பெய்யும். சென்னையில் மாலை அல்லது இரவு லேசான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

    இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

    நேற்று காலை 8.30 மணியுடன் முடிவடைந்த 24 மணிநேரத்தில் பெய்த மழை அளவு வருமாறு:-

    தளி 3 செ.மீ., தேன்கனிக்கோட்டை, கேளம்பாக்கம் தலா 2 செ.மீ., கூடலூர் பஜார், மங்களாபுரம், நாமக்கல், தம்மம்பட்டி, காட்டுக்குப்பம், வாழப்பாடி, திருவள்ளூர், ஸ்ரீபெரும்புதூர், பூண்டி, பையூர், அரக்கோணம், சேலம், தாம்பரம், போச்சம்பள்ளி, ஆர்.கே.பேட்டை தலா 1 செ.மீ. மழை பெய்துள்ளது. 
    மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் அடுத்து வரும் 3 நாட்களுக்கு மழை பெய்யும் என்று வானிலை மைய அதிகாரி தெரிவித்தார்.
    சென்னை:

    மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் அடுத்து வரும் 3 நாட்களுக்கு மழை பெய்யும் என்று வானிலை மைய அதிகாரி தெரிவித்தார்.

    சென்னை வானிலை ஆராய்ச்சி மைய இயக்குனர் எஸ்.பாலச்சந்திரன் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:-

    தெற்கு அரபிக்கடல் மற்றும் வங்கக்கடல் பகுதியில் தென்மேற்கு பருவக்காற்று வலுவாக வீசுகிறது. மத்திய வங்கக்கடல் பகுதியில் மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. மேலும், மேற்கு திசை காற்றும், கிழக்கு திசை காற்றும் சந்திக்கும் பகுதி ஆந்திராவில் உள்ளது.

    இதன் காரணமாக தமிழகத்தில் சில இடங்களில் மழை பெய்துள்ளது. அதிகபட்சமாக வேலூரில் 9 செ.மீ. மழை பெய்துள்ளது. விரிஞ்சிபுரம், கேளம்பாக்கம், ஜெயங்கொண்டம் ஆகிய இடங்களில் தலா 7 செ.மீ., அரிமளம், செய்யாறு, காஞ்சீபுரத்தில் 6 செ.மீ., ஆலங்குடி, செம்பரம்பாக்கத்தில் தலா 5 செ.மீ., சென்னை, அரியலூர், வந்தவாசி, தேவக்கோட்டை, நிலக்கோட்டை, சென்னை விமானநிலையம், டி.ஜி.பி. அலுவலகம், திருப்பத்தூர், குமாரபாளையம், திருவாலங்காடு, கடலூர், செய்யூர், காட்டுக்குப்பத்தில் தலா 3 செ.மீ. மழையும் பெய்துள்ளது. மேலும் 50-க்கும் மேற்பட்ட இடங்களில் மழை பெய்துள்ளது.

    வருகிற 11-ந்தேதி வரை தமிழகத்தின் வடமாவட்டங்களில் சில இடங்களில் மழை பெய்யும். ஓரிரு இடங்களில் கனமழை பெய்யும்.

    சென்னையில் வானம் மேகமூட்டமாக இருக்கும். சில பகுதிகளில் மிதமான மழை பெய்யும். மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழ்நாட்டில் அடுத்து வரும் 3 நாட்களுக்கு மழை பெய்யும்.

    இவ்வாறு பாலச்சந்திரன் தெரிவித்தார்

    அந்தமான், நிக்கோபார் தீவுகளில் தென்மேற்கு பருவமழை தொடங்கியது. இதையொட்டி மீனவர்களுக்கு வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
    சென்னை:

    சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் எஸ்.பாலச்சந்திரன் நேற்று பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    தென் மேற்கு பருவ மழை, தெற்கு அந்தமான் மற்றும் நிக்கோபர் தீவுகளில் இன்று(நேற்று) முதல் தொடங்கி உள்ளது. அடுத்து வரும் 48 மணி நேரத்தில் தெற்கு அரபிக் கடலின் சிலப்பகுதிகள், குமரிக் கடல், மாலத்தீவு பகுதிகள், தெற்கு வங்கக் கடலில் சிலபகுதிகளில் தென் மேற்கு பருவ மழை தொடங்குவதற்கு சாதகமான நிலை நிலவுகிறது.

    இதையொட்டி, குமரிக்கடல், கேரளா மற்றும் கர்நாடக கடலோர பகுதிகள், லட்சத்தீவு கடல் பகுதிகளில் பலத்த காற்று வீசுவதுடன், கடல் சீற்றத்துடன் காணப்படும். எனவே, மீனவர்கள் குமரிக் கடல், தெற்கு லட்சத்தீவு பகுதிகள், கேரளா மற்றும் கர்நாடக கடல் பகுதிகளில் வருகிற 30-ந் தேதி வரை கடலுக்குள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.

    தற்போது தமிழக பகுதியில் வளி மண்டலத்தில் மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக கடந்த 24 மணி நேரத்தில் அநேக இடங்களில் இடியுடன் கூடிய கோடை மழை பெய்துள்ளது. அதிகபட்சமாக திருவையாறில் 8 சென்டி மீட்டர் மழை பதிவாகி உள்ளது. அடுத்து வரும் 2 தினங்களில் தென் தமிழகத்தின் அனேக இடங்களிலும், வட தமிழகத்தின் உள் மாவட்டங்களில் ஒரு சில இடங்களிலும் இடியுடன் கூடிய கோடை மழை பெய்யக் கூடும். சென்னை மற்றும் புறநகரை பொறுத்தவரை வானம் மேக மூட்டத்துடன் காணப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    நேற்று காலை 8.30 மணி வரையிலான 24 மணி நேர நிலவரப்படி தமிழகத்தில் பெய்துள்ள மழை அளவு விவரம் வருமாறு:-

    திருவையாறு, சத்திரப்பட்டி ஆகிய இடங்களில் அதிகபட்சமாக தலா 8 சென்டி மீட்டர் மழை பதிவாகி உள்ளது. திருச்சுழி, கமுதி, காரைக்குடியில் தலா 7 செ.மீ. மழையும், திருபுவனம், கடலாடி, பேரையூர், சிவகங்கை தலா 6 செ.மீ. மழையும் பதிவாகி உள்ளது.

    திருக்காட்டுப்பள்ளி, சாத்தூர், திருப்பத்தூர்(சிவகங்கை மாவட்டம்), செங்கம், ராசிபுரம், அரிமளம், மேலூர், பரமத்திவேலூரில் தலா 5 செ.மீ. மழையும், கடவூர், சித்தம்பட்டி, விருதுநகர், பஞ்சப்பட்டி, நீடாமங்கலம், பையூர், சோழவந்தான் தலா 4 செ.மீ. மழையும் மானாமதுரை, நாமக்கல், திருமயம், கே.பரமத்தி, தேவக்கோட்டை, நிலக்கோட்டை, பரமக்குடி, புதுக்கோட்டை, வாழப்பாடி, தோகமலை, வாடிப்பட்டி, பேராவூரணி, அரண்மனைபுதூர், தொண்டி, திருவாடனை, மருங்காபுரி, மேட்டுப்பட்டி, மணப்பாறை, வலங்கைமான், பாலக்கோடு, ராயக்கோட்டையில் தலா 3 செ.மீ. மழையும் பதிவாகி உள்ளது.

    திண்டுக்கல், ஆண்டிப்பட்டி, பெரியகுளம், சேலம், திருமங்கலம்(மதுரை மாவட்டம்), முதுகுளத்தூர், கோவிலன்குளம், பழனி, மன்னார்குடி, கொடைக்கானல், சேரன்மாதேவி, அறந்தாங்கி, தேன்கனிக்கோட்டை, மதுரை விமானநிலையம், தேவலா, கோத்தகிரி, லால்குடி, அருப்புக்கோட்டை, அன்னூர், நாங்குநேரி ஆகிய இடங்களில் தலா 2 செ.மீ. மழையும் பதிவாகி உள்ளது.

    இது தவிர உசிலம்பட்டி, கும்பகோணம், மேட்டூர், பாம்பன் உள்பட அநேக இடங்களில் பரவலாக மழை பெய்துள்ளது. #tamilnews
    கன்னியாகுமரி அருகே மேல் அடுக்கு சுழற்சிகாரணமாக தமிழகத்தில் தென் மாவட்டங்களில் இன்று (திங்கட்கிழமை) ஓரிரு இடங்களில் கனமழை பெய்யும் என்று வானிலை மைய அதிகாரி தெரிவித்தார்.
    சென்னை:

    கன்னியாகுமரி அருகே மேல் அடுக்கு சுழற்சிகாரணமாக தமிழகத்தில் தென் மாவட்டங்களில் இன்று (திங்கட்கிழமை) ஓரிரு இடங்களில் கனமழை பெய்யும் என்று வானிலை மைய அதிகாரி தெரிவித்தார்.

    தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பல மாவட்டங்களில் கோடை மழை பெய்துவருகிறது.

    இது தொடர்பாக சென்னை வானிலை மைய அதிகாரி கூறியதாவது:-

    கன்னியாகுமரி அருகே மேலடுக்கு சுழற்சி உருவாகி இருக்கிறது. மேலும் கிழக்கு திசையில் இருந்து வீசும் காற்றும், மேற்கில் இருந்து வீசும் காற்றும் தமிழகத்தின் வழியாக செல்கிறது. இந்த இரு காரணங்களால் தமிழகத்தில் இன்று (திங்கட்கிழமை) மழை பெய்யும்.

    தென் மாவட்டங்களில் சில இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யும். ஒரு சில இடங்களில் கனமழை பெய்யும். வட மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யும். பெய்வது கோடை மழையாகும்.

    இவ்வாறு வானிலை அதிகாரி தெரிவித்தார்.

    நேற்று காலை 8.30 மணியுடன் முடிவடைந்த 24 மணிநேரத்தில் பெய்த மழை அளவு வருமாறு:-

    சிவகங்கை 8 செ.மீ., பேச்சிப்பாறை 5 செ.மீ., திருப்பூர், கீரனூர், பெரியாறு தலா 4 செ.மீ., தாராபுரம், திண்டுக்கல், தாளவாடி, போடிநாயக்கனூர் தலா 3 செ.மீ., அம்பாசமுத்திரம், பீளமேடு, வால்பாறை, கழுகுமலை, வத்திராயிருப்பு, மாரண்டஹள்ளி, கூடலூர், கொடைக்கானல், நடுவட்டம் தலா 2 செ.மீ., தளி, குழித்துறை, சேரன்மகாதேவி, குளச்சல், கூடலூர் பஜார், சிவகிரி, பூதப்பாண்டி, தேன்கனிக்கோட்டை, கமுதி, தேவலா, நாமக்கல், பரமத்திவேலூர், அன்னூர், சின்னக்கள்ளார், பேரையூர், சேந்தமங்கலம், விளாத்திக்குளம் தலா 1 செ.மீ.மழை பெய்துள்ளது. 
    ×