search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தமிழகம், புதுச்சேரியில் 4 நாட்களுக்கு லேசான மழை பெய்யும் - வானிலை மையம் தகவல்
    X

    தமிழகம், புதுச்சேரியில் 4 நாட்களுக்கு லேசான மழை பெய்யும் - வானிலை மையம் தகவல்

    தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை தொடங்கி உள்ளது. இதற்கிடையே 4 நாட்களுக்கு லேசான மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
    சென்னை:

    தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை தொடங்கி உள்ளது. இதற்கிடையே 4 நாட்களுக்கு லேசான மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் கூறியதாவது:-

    வெப்பசலனம் காரணமாக தமிழகம், புதுச்சேரியில் அடுத்த 4 நாட்களுக்கு சில இடங்களில் லேசான மழை பெய்யும். சென்னையில் மாலை அல்லது இரவு லேசான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

    இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

    நேற்று காலை 8.30 மணியுடன் முடிவடைந்த 24 மணிநேரத்தில் பெய்த மழை அளவு வருமாறு:-

    தளி 3 செ.மீ., தேன்கனிக்கோட்டை, கேளம்பாக்கம் தலா 2 செ.மீ., கூடலூர் பஜார், மங்களாபுரம், நாமக்கல், தம்மம்பட்டி, காட்டுக்குப்பம், வாழப்பாடி, திருவள்ளூர், ஸ்ரீபெரும்புதூர், பூண்டி, பையூர், அரக்கோணம், சேலம், தாம்பரம், போச்சம்பள்ளி, ஆர்.கே.பேட்டை தலா 1 செ.மீ. மழை பெய்துள்ளது. 
    Next Story
    ×