search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Fishermen Warning"

    குறைந்த காற்றழுத்தம் வரும் 18ம் தேதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெறும் என வானிலை ஆய்வு மைய தென்மண்டல தலைவர் பாலச்சந்திரன் தெரிவித்தார்.
    சென்னை:

    அந்தமானை ஒட்டி உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி வடக்கு அந்தமான் கடல் மற்றும் அதையொட்டிய தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் நிலைகொண்டுள்ளது. இதன் காரணமாக தமிழகத்தில் பரவலாக மழைக்கு வாய்ப்பு உள்ளது. குறைந்த காற்றழுத்தம் வலுப்பெறுவதால் கடல் கொந்தளிப்புடன் காணப்படுகிறது.

    கேரள கடலோர பகுதிகள், கர்நாடக கடலோர பகுதிகள், மத்திய கிழக்கு மற்றும் தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் அடுத்த மூன்று நாட்களுக்கு சூறாவளிக் காற்று வீசும் என்பதால் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

    நவம்பர் 17 மற்றும் 19 ஆகிய நாட்களில் மத்திய மேற்கு மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக் கடல் பகுதிகள், தெற்கு ஆந்திரா மற்றும் வட தமிழக கடலோர பகுதிகளில் சூறாவளி காற்று வீசும் என்பதால் மீனவர்கள் இப்பகுதிக்கு செல்ல வேண்டாம் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

    வானிலை ஆய்வு மைய தென்மண்டல தலைவர் பாலச்சந்திரன் கூறியதாவது:-

    குறைந்த காற்றழுத்தம் வரும் 18ம் தேதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெறும். இதன் காரணமாக ஈரோடு, நீலகிரி, கோவை, திண்டுக்கல் உள்ளட்ட மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது.  சென்னையில் வரும் 17, 18 ஆம் தேதி கனமழை முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. மீனவர்கள் 17,18,19ஆம் தேதி கடல் பகுதிக்கு செல்ல வேண்டாம். வடகிழக்கு பருவமழை இதுவரை இயல்பை விட 54 சதவீதம் அதிகம் பெய்துள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.
    தென்கிழக்கு வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த மண்டலம் நாளை புயலாக மாறுவதால் வருகிற 15, 16-ந்தேதிகளில் சென்னை உள்ளிட்ட வடதமிழக கடலோர பகுதியில் மிக பலத்த மழை பெய்யும். #Rain #IMD
    சென்னை:

    தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதையொட்டிய இந்தியப் பெருங்கடல் பகுதியில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி மண்டலமாக வலுவடைந்துள்ளது.

    இது மேலும் வலுவடைந்து ஆழ்ந்த காற்றழுத்த மண்டலமாக (புயலாக) மாறி நாளை சென்னை மற்றும் வடதமிழகம் நோக்கி நகரத் தொடங்கும்.

    அடுத்த 48 மணி நேத்தில் இது வடதமிழகம் மற்றும் தெற்கு ஆந்திரா கடற்கரை பகுதியை நெருங்கும்.

    இதன் காரணமாக வருகிற 15-ந்தேதியும், 16-ந்தேதியும் 2 நாட்களுக்கு சென்னை உள்ளிட்ட வடதமிழக கடலோர பகுதியிலும், தெற்கு ஆந்திராவிலும் பலத்த மழையும், ஒரு சில இடங்களில் மிக பலத்த மழையும் பெய்யும். குறைந்த நேரத்தில் அதிக அளவில் மழை கொட்டும் என்று இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.

    இன்று காலை முதல் தமிழகம் மற்றும் புதுவை கடலோர பகுதியில் மணிக்கு 45 முதல் 55 கி.மீ. வரையும் அதிகபட்சமாக 65 கி.மீ. வேகத்திலும் கடல் காற்று வீசும்.

    தென்மேற்கு மற்றும் மேற்கு மத்திய வங்கக்கடலில் மணிக்கு 60 முதல் 70 கி.மீ. வரையும், அதிகபட்சமாக 80 கி.மீ. வேகத்தில் கடல் காற்று வீசும். கடல் கொந்தளிப்புடன் காணப்படும். கடல் அலைகள் பல மீட்டர் உயரத்துக்கு எழும்பும்.

    எனவே மீனவர்கள் இந்த பகுதிக்கு மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.



    இன்றைய நிலவரப்படி ஆழ்ந்த காற்றழுத்தமானது நாளை புயலாகவும், பின்னர் தீவிர புயலாகவும் மாற வாய்ப்பு உள்ளது.

    15-ந்தேதி காலை சென்னையை நெருங்கும், 16-ந்தேதி ஆந்திரா நோக்கி நகரும். 17-ந்தேதி அதிகாலை நெல்லூருக்கும், விசாகபட்டினத்துக்கும் இடையே மசூலிப்பட்டனம் அருகே கரையை கடந்து வலுவிழந்து காற்றழுத்த மண்டலமாக மாறும் என்று தனியார் வானிலை இணைய தளங்கள் தெரிவித்துள்ளன.

    அதன்பிறகு தென்கிழக்கு வங்கக்கடலில் வருகிற 19-ந்தேதி புதிதாக ஒரு குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி தமிழக கடற்கரை பகுதியில் நிலவும் என்றும், இதன் மூலம் தமிழகத்துக்கு பரவலாக மழை கிடைக்கும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது. என்றாலும் காற்றின் போக்கால் வானிலையில் மாற்றம் ஏற்பட வாய்ப்பு உள்ளது. #Rain #IMD
    கோவை, நீலகிரி, தேனி, திண்டுக்கல், நெல்லை ஆகிய 5 மாவட்டங்களில் அடுத்த 24 மணி நேரத்துக்கு கனமழை நீடிக்கும் என்று சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
    சென்னை:

    தென் மேற்கு பருவமழை கேரளாவிலும் மேற்கு தொடர்ச்சி மலையையொட்டியுள்ள தமிழக மாவட்டங்களிலும் பெய்து வருகிறது.

    பருவமழை தீவிரம் அடைந்து கோவை, நீலகிரி, தேனி, திண்டுக்கல், நெல்லை ஆகிய 5 மாவட்டங்களில் கடந்த 2 நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இந்த 5 மாவட்டங்களில் கனமழை அடுத்த 24 மணி நேரத்துக்கு நீடிக்கும் என்று சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

    மற்ற இடங்களில் வெப்பச் சலனம் காரணமாக லேசாக மழை பெய்யும் வாய்ப்பு உள்ளது. சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும்.

    கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக சின்னக் கல்லாரில் (கோவை) 10 செ.மீ., தேவலா (நீலகிரி) வால்பாறை, பெரியார் (தேனி) ஆகிய இடங்களில் 6 செ.மீ. மழையும், நீலகிரியின் கேபிரிட்ஜ், நடுவட்டத்தில் 3 செ.மீ., கோத்தகிரி, கேத்தி, குன்னூரில் 1 செ.மீ. மழையும் பெய்துள்ளது.

    தென் மேற்கு திசையில் இருந்து மணிக்கு 55 கி.மீ. வேகத்தில் காற்று வீசக் கூடும் என்பதால் மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க செல்ல வேண்டாம் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    கடல் அலை 3.5 மீ முதல் 3.7 மீ. உயரம் வரை வீசும் என்பதால் தென் கடலோர மாவட்ட மீனவர்கள் மட்டுமின்றி, வடகடலோர மாவட்ட மீனவர்களும் வங்ககடல், அரபிக்கடலுக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என்று கூறியுள்ளது.
    அந்தமான், நிக்கோபார் தீவுகளில் தென்மேற்கு பருவமழை தொடங்கியது. இதையொட்டி மீனவர்களுக்கு வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
    சென்னை:

    சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் எஸ்.பாலச்சந்திரன் நேற்று பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    தென் மேற்கு பருவ மழை, தெற்கு அந்தமான் மற்றும் நிக்கோபர் தீவுகளில் இன்று(நேற்று) முதல் தொடங்கி உள்ளது. அடுத்து வரும் 48 மணி நேரத்தில் தெற்கு அரபிக் கடலின் சிலப்பகுதிகள், குமரிக் கடல், மாலத்தீவு பகுதிகள், தெற்கு வங்கக் கடலில் சிலபகுதிகளில் தென் மேற்கு பருவ மழை தொடங்குவதற்கு சாதகமான நிலை நிலவுகிறது.

    இதையொட்டி, குமரிக்கடல், கேரளா மற்றும் கர்நாடக கடலோர பகுதிகள், லட்சத்தீவு கடல் பகுதிகளில் பலத்த காற்று வீசுவதுடன், கடல் சீற்றத்துடன் காணப்படும். எனவே, மீனவர்கள் குமரிக் கடல், தெற்கு லட்சத்தீவு பகுதிகள், கேரளா மற்றும் கர்நாடக கடல் பகுதிகளில் வருகிற 30-ந் தேதி வரை கடலுக்குள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.

    தற்போது தமிழக பகுதியில் வளி மண்டலத்தில் மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக கடந்த 24 மணி நேரத்தில் அநேக இடங்களில் இடியுடன் கூடிய கோடை மழை பெய்துள்ளது. அதிகபட்சமாக திருவையாறில் 8 சென்டி மீட்டர் மழை பதிவாகி உள்ளது. அடுத்து வரும் 2 தினங்களில் தென் தமிழகத்தின் அனேக இடங்களிலும், வட தமிழகத்தின் உள் மாவட்டங்களில் ஒரு சில இடங்களிலும் இடியுடன் கூடிய கோடை மழை பெய்யக் கூடும். சென்னை மற்றும் புறநகரை பொறுத்தவரை வானம் மேக மூட்டத்துடன் காணப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    நேற்று காலை 8.30 மணி வரையிலான 24 மணி நேர நிலவரப்படி தமிழகத்தில் பெய்துள்ள மழை அளவு விவரம் வருமாறு:-

    திருவையாறு, சத்திரப்பட்டி ஆகிய இடங்களில் அதிகபட்சமாக தலா 8 சென்டி மீட்டர் மழை பதிவாகி உள்ளது. திருச்சுழி, கமுதி, காரைக்குடியில் தலா 7 செ.மீ. மழையும், திருபுவனம், கடலாடி, பேரையூர், சிவகங்கை தலா 6 செ.மீ. மழையும் பதிவாகி உள்ளது.

    திருக்காட்டுப்பள்ளி, சாத்தூர், திருப்பத்தூர்(சிவகங்கை மாவட்டம்), செங்கம், ராசிபுரம், அரிமளம், மேலூர், பரமத்திவேலூரில் தலா 5 செ.மீ. மழையும், கடவூர், சித்தம்பட்டி, விருதுநகர், பஞ்சப்பட்டி, நீடாமங்கலம், பையூர், சோழவந்தான் தலா 4 செ.மீ. மழையும் மானாமதுரை, நாமக்கல், திருமயம், கே.பரமத்தி, தேவக்கோட்டை, நிலக்கோட்டை, பரமக்குடி, புதுக்கோட்டை, வாழப்பாடி, தோகமலை, வாடிப்பட்டி, பேராவூரணி, அரண்மனைபுதூர், தொண்டி, திருவாடனை, மருங்காபுரி, மேட்டுப்பட்டி, மணப்பாறை, வலங்கைமான், பாலக்கோடு, ராயக்கோட்டையில் தலா 3 செ.மீ. மழையும் பதிவாகி உள்ளது.

    திண்டுக்கல், ஆண்டிப்பட்டி, பெரியகுளம், சேலம், திருமங்கலம்(மதுரை மாவட்டம்), முதுகுளத்தூர், கோவிலன்குளம், பழனி, மன்னார்குடி, கொடைக்கானல், சேரன்மாதேவி, அறந்தாங்கி, தேன்கனிக்கோட்டை, மதுரை விமானநிலையம், தேவலா, கோத்தகிரி, லால்குடி, அருப்புக்கோட்டை, அன்னூர், நாங்குநேரி ஆகிய இடங்களில் தலா 2 செ.மீ. மழையும் பதிவாகி உள்ளது.

    இது தவிர உசிலம்பட்டி, கும்பகோணம், மேட்டூர், பாம்பன் உள்பட அநேக இடங்களில் பரவலாக மழை பெய்துள்ளது. #tamilnews
    ×